kochukkaLai oziththuvittaal
மின்னாற்றல் பயன்படுத்தி,
குளிரூட்டிய அறைக்குள்ளே,
கொசுக்கள் வருவதில்லை;
குறைவில்லா நல்லுறக்கம்!
கொசுக்களையே ஒழித்துவிட்டால்,
குவலயத்தில் உண்டாகும்,
மின்னாற்றல் கால்பங்கு
மிச்சமன்றோ தோழியரே?
வரும், வராது என்பதற்கான விளக்கங்கள்:
மேறகண்ட இடுகையில் வரும், வராது என்பதற்கான விளக்க-
ங்கள்:
இந்தக் கொசு ஒழிப்புத் தொழில் நுட்பம், அதற்கான விலையைச்
செலுத்த நீங்கள் தயாரானால், நிச்சயம் வரும். ஆகவே
வருமென்றேன்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகத் தெரிகின்றது. மரபணு
மாற்றம் செய்யப்பட்ட கொசு மனிதனைக் கடித்து,
ஆடவர்பெண்டிர் இரு பாலாரும் கரு தொடர்பான
கோளாறுகளால் பாதிக்கப்பட்டு, குழந்தைப்பேற்றுத் திறனை
இழந்துவிட்டால் என்செய்வது ? ் அப்படி நடக்காது என்பதற்கு
மலேசிய அரசு என்ன உறுதிமொழி (உத்தரவாதம்) தரமுடியும் ? ....
என்றெல்லாம் எதிர்ப்பு.......
இயற்கையில் இப்படித் தலையிடுவது எப்படித் தகும்? என்றும்
கேள்வி எழுந்துள்ளது.
ஆகவே, வராது என்றேன்.
இப்போது நேயர்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று
நினைக்கின்றேன்.
வேறு அரசுகள், இதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை...