-
கதவுகள்
மரத்தால் ஆனவை எனில்
பிறந்த இட த்தை விட
புகுந்த இட த்தில்
நன்மதிப்புடன் இருக்கும்...
**
வாசற்கதவுகள்
மூடியிருக்கும் போது
முறைத்தே நிற்கும்..
திற ந்திருந்தால் சிரித்திருக்கும்..
*
புதிதாய்த்திருமணமான
இளஞ்ஜோடிகளின்
படுக்கையறைக் கதவுகள்
குறுஞ்சிரிப்புடன் நின்றிருக்கும்..
*
குடும்பஸ்தரின் படுக்கையறைக் கதவுகளுக்கு
தொலைக்காட்சி இல்லாமலேயே
நன்றாய்ப் பொழுது போகும்..
வால்கள் இருந்தால்
கஷ்டம் தான்..
ஓடி ஆடி விளையாடுகையில்
டொம்மென்று
சாத்தப் பட்டு அடிவாங்கும்..
**
பீரோ லாக்கரில் இருக்கும் கதவுகள்
பெரும் பாலும் பூட்டுக் கணவனுடன்
இணைந்தே இருக்கும்..
*
துணிஅலமாரிக் கதவுகள்
பெண்களுடையது எனில்
சுமையுடனும்
குதூகலத்துடனும் இருக்கும்..
அதுவே
ஆண்களுடைய அலமாரி எனில்
கொஞ்சம்
சுவாரஸ்யமில்லாமல்
சோம்பியே நிற்கும்..
**
குளியலறைக் கதவுகள்
பெரும்பான்மை
சற்றே அழுக்குடனும்
கண்கள் மூடி
வெட்கத்துடனும் நின்றிருக்கும்
**
ஜன்னல் கதவுகள்
காற்றைக் கண்டாலோ
படபடவென
தன்னையே தட்டி மகிழும்..
*
புத்தக் அலமாரிக் கதவுகள்
உள்ளே இருக்கும் பொக்கிஷத்தைப்
படிக்கமுடியாத்தை எண்ணி
சோர்ந்தே இருக்கும்..
**
கண்ணாடிக் கதவுகள்
கிட் ட த்தட்ட
குழந்தை மனம் கொண்டவை..
உள்ளிருப்பதை வெளிக்காட்டும்..
*
சமையலறைக் கதவுகள்
வாசனையை மட்டும் உண்டு
ஏங்கியே நிற்கும்
*
அடுக்குமாடிக் குடியிருப்பின்
கதவுகள்
நகரத்தின் குணம் கொண்டவை..
தான், தன்னுள் இருப்பவரின்
சுகம்மட்டும் நினைவில் கொண்டு
முக்கால்பொழுது
மூடியே இருக்கும்
**
புதிய இளமையான
கதவுகளை விட
பழங்காலக் கதவுகள்
வேலைப்பாட்டில்
சிறந்தும் பொலிவுடனும் இருக்கும்..
**
பெண்களின் மனக்கதவு மட்டும்
ஆண்களுக்கு
எப்போதுமே புரியாதவிஷயம்
எப்போது திறக்கும்;
எப்போது படபடக்கும்;
எப்போது மூடியிருக்கும்;
எனத் தெரியவே தெரியாது...
எந்தக் காலத்திலும்....!
**
-
எந்தக் காலத்திலும்
மேற்கே சூரியன் உதிப்பதில்லை
கோழி கூவப் பழகியதில்லை
கருப்பை ஆணுக்குள் வளர்வதில்லை
பருவம் தப்பி பூத்தலில்லை
மாறாத அமைப்பிதில் பிழையில்லை
-
பிழையில்லை தான்..
இருந்தாலும் ஏதோ குறை..
நிதானமாய் மறுபடி பார்க்கையில்...
நெடுநாள் பிரிந்திருந்தவள் அவள்..
திடீரென
அவன் நட்டநடு காய்கறி மார்க்கெட்டில்
கார் நிறுத்தி இறங்கி
அவளை நோக்கி
வருவான் என எதிர்பார்க்கவில்லை..
கண்கள் நீருடன் சிரிக்க..
வெளிர் சிகப்பு உதடுகள் துடிக்க
கருநீல மேலும் வெளிர்மஞ்சள் கீழுமான
சுடிதாரில்..
அழகிய செருப்பணிந்த ஒருகால் உயர்த்தி.
ஒருகால் தரையிலென நிற்க..
சிகப்புக் கட்டம் போட்ட சட்டை
நீல நிற ஜீன்ஸ் ; கறுப்பு ப்ரேம் கண்ணாடியில்
கண்கள் தெளிவாய்த் தெரிய
அழகிய மீசையும் நான்கு நாள் தாடியும்
சிவந்த உதட்டில் முறுவலுமாய் அவன் நிற்க...
பின்புலத்தில் சாம்பல் வண்ண கார்
கறிகாய்க் கடைகள்;
ஓரிரண்டு பேர் குறுக்கே செல்வது போல...
அழகாய்த் தான் இருக்கிறது..
இருந்தும் இன்னும் கொஞ்சம்
செதுக்கியிருக்கலாமோ..
அவளது முக உணர்ச்சிகளை...
வாவ்..ரொம்ப அழகு...த்த்ரூபம்...!~
பின்னால் குரல் வர
திரும்பினால் இவள்..
‘ஏய்..நிஜமாகவா...’
‘பின்னே’
‘எனக்கு ஏதோ குறைவது போல..’
அருகில் வந்து கிள்ளினாள்..
‘உன் ஓவியம் வெகு அழகு..
உனக்குத் தெரியுமா..
எந்த ஒரு கலைஞனுக்கும்
எளிதில் வராத விஷய்ம்..
தன் படைப்பில் முழு திருப்தி...”
***
-
திருப்தி கடையில் விற்பதில்லை
வரிசையில் நின்று வாங்கிச் செல்ல
வரமாய் வாங்கி வரவேண்டுமதை
வளமாய் வாழ்ந்து விடை பெற்றிட
-
விடைபெற் றிட வே போகுது பார்..
..வாழ்வில் உந்தன் துன்பமெலாம்..
தடைகள் எல்லாம் தான் தகரும்..
,,,தானாய்க் கவிதை அகம்மலரும்..
மடையைத் திறந்து விட்டாற்போல்
..மன துள் மகிழ்ச்சி பொங்கிவரும்
கடைக்கண் பார்வை திருமகளும்
..கனிவாய் அருள்வாள் அழகாக..
-
அழகாய் அரங்கேறும்
ஆழமாய் சிந்தித்து
அகலமாய் கணித்து
அதிகமாய் திட்டமிட்டு
அர்த்தமுடன் உழைத்து
அருமையாய் அடைகாத்தது
-
அடைகாத் த்து அழகாகவே மரக்கூட்டிலே காகம்
தடையாய்வரும் அரவம் தனை தய ங்காமலே எதிர்த்தே
விடையாகவே பொரிந்தேநடம் புரியும்குயிற் குஞசும்
கடைப்பார்வையில் சிறைப்பட் ட தால் கலங்கித்தின மழுமே...
-
அழுமே அந்த வானம்
ஐப்பசி கார்த்திகையில்
அதிரடியாய் கொட்டி
ஆவணி புரட்டாசியில்
ஆலங்கட்டியாய் சித்திரையில்
ஆண்டு முழுக்க மாரி
அவதாரம் மட்டும் மாறி
அதிலே செழிக்குது பூமி
-
பூமித் தாயே..
உன்னிடம் ஒரு கேள்வி..
எது வெல்லும்.. தர்ம்மா அதர் ம மா...
கேட்டான் பாமரன்
சிரித்துச் சொன்னாள்..
தர்ம்ம்
நீள்விடுப்பில் சென்று
பல காலம் ஆகிறது..
இப்போது இருப்பது இரண்டு..
சின்ன அதர்ம்ம்
பெரிய் அதர்ம்ம்..
சின்ன அதர்ம்ம் இன்று ஜெயித்து
நாளை மிகப் பெரிய அதர்ம்மாய் மாறும்..
நாளை பெரிய அதர்ம்ம் ஜெயிக்கும்..!
இது தான் உன் தலைவிதி..
பாமரனுக்கு வந்த்து மயக்கம்...
-
மயக்கம் சூழ்ந்தது சுகமாய்
மறந்தது வெயில் சுத்தமாய்
மணலில் கால் புதைய அலையில்
மனமகிழ்ந்து நின்றிருந்தபோது
மக்கள் கூட்டம் ஆரவாரிக்க
மொத்தமாய் கவலைகள் பறக்க
மாறாத ஈர்ப்பினை மறுபடியும்
மறக்காமலுணர்த்திய மெரினா