Originally Posted by
RavikiranSurya
ஒரு விஷயத்தை நினைத்து பார்க்கும்போது மகிழ்ச்சி மற்றும் பெருமை கொள்ளலாம் நமக்கு.
நடிப்பை பற்றி ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாதவர்களைஎல்லாம் மிகை நடிப்பு, இயற்க்கை நடிப்பு, மித நடிப்பு என்று பேசுகிற அளவிற்காவது நடிப்பின் தரத்தை பிரித்து பார்க்கும் நிலைமைக்கு உயர்த்திய பெருமை நமது நடிகர் திலகத்தையே சாரும்.
என்ன..... அப்படி எழுதுபவர்கள் அறிந்தாலும் அறியாதது போல, புரிந்தாலும் புரியாதது போல பாசாங்கு செய்வது ஒரு விஷயம்... அது என்னவென்றால், நடிகர் திலகம் மிகை நடிப்பு, மித நடிப்பு, இயற்க்கை நடிப்பு, ஆக்ரோஷ நடிப்பு, அமைதி நடிப்பு இப்படி இன்னும் இவர்கள் என்ன வகையை கண்டுபிடிக்கிறார்களோ அவை அத்தனையும் செய்து காட்டியவர் என்பதுதான் !
ஆனால் பல இயற்க்கை நடிகர்கள் அந்த இயற்கையை விட்டால் ஒன்றும் தெரியாத காரணத்தால்தான் உலக மக்களிடையே நடிப்புக்கு பெயர் பெற்று விளங்க முடியவில்லை.
ஒருவன் மற்றவர்களுக்கு இடையில் பாசாங்கு செய்தால் அதை மற்றவர் கண்டுபிடிக்கும்போது......ஏண்டா இப்புடி நடிக்கற ...மனசுல பெரிய சிவாஜின்னு நெனப்ப என்று பாமரன் கேட்கும் அளவுக்கு நடிப்பு என்றால் அது சிவாஜி ஒருவர் தான் என்பது என்றும் உள்ள உலக நியதி...!
தமிழருவி மணியன் ஒன்றை உணரவேண்டும்...இவர் கூறிய படங்கள் மற்றவர் செய்தால் அப்படியே எடுத்திருக்க மாட்டார்கள்...கதையில் நிறைய மாற்றம் நிகழ்ந்திருக்கும். காஞ்சி தலைவன் நடிகர் திலகம் நடித்திருந்தால் emotional காட்சிகள் இன்னும் ஒரு படி கூட இருந்திருக்கும் நடிகர் திலகத்திற்கு ஏற்றவாறு...போர்கள காட்சி மட்டுமே இருந்திருக்கும் ! அதே போல மதுரை வீரன் படத்திலும் நடிப்புக்கு scope இன்னும் அதிகபடுத்த பட்டிருக்கும் ! நடிகர் திலகத்தின் நடிப்பு மிகவும் பேசப்பட்டிருக்கும் ஒரு படத்தினை பற்றி பேச்சை விட ஒரு படி மேல் அந்த பேச்சு எழுந்திருக்கும்...
ஆகவே...இவர் அதை செய்திருக்க முடியாது...அவர் இதை செய்திருக்க முடியாது என்பது ஒரு தவறான வாதம். நடிகர் திலகத்தால் சண்டைகாட்சியில் சோபிக்க முடியாது என்றொரு காலத்தில் கூறினார்.
அவர் அதை பல படங்களில் அந்த எண்ணம் தவறு என்று நிரூபித்துள்ளார். உதாரணம் தங்கச்சுரங்கம், சிவந்த மண், ராஜா இன்னும் பல படங்கள்...அவை அனைத்தும் சிறந்த வெற்றிப்படங்களாக உலா வந்தன !
நடிப்பு என்ற வட்டத்தில் மட்டும் நடிகர் திலகம் இருந்ததில்லை...! அனைத்து விஷயங்களையும் செய்துள்ளது பலர் இன்றும் மறைக்க பார்ப்பது தவறான ஒரு செய்கையாகும் !
தமிழருவி மணியன் இதையும் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம் !