http://i59.tinypic.com/9u0suh.jpg
Printable View
முரளி சார், சில விளக்கங்களை நான் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
வேதனை அளித்தாலும் உண்மை அது தான். இங்கு என்ன நடந்த்து என்று தெரியாமல் தான் வதந்திகளை நம்பி நடிகர் திலகத்தைப் பற்றிய தவறான தகவல்களின் அடிப்படையில் மன்றங்கள் கலைக்கப்பட்டது. நான் வெறும் யூகங்களின் அடிப்படையில் கருத்து அலசல்களின் அடிப்படையிலும் எதையும் கூறவில்லை. பெருந்தலைவருடன் நேருக்கு நேராக மாணவர் காங்கிரஸில் இருந்து கருத்து விவாதங்களை நடத்தியவன். மாணவர் காங்கிரஸுக்கு அரசியல் தேவையில்லை என்று கூறினாலும் பரவாயில்லை, அலட்சியமாக பதில் சொன்னார்கள். விவசாயிகள் போராட்டத்தின் போது பெரும்பாலான விவசாயிகளுக்காக காவல் நிலையங்களுக்குச் சென்று முறைப்படியான சட்ட நடவடிக்கைகளை எடுத்து அவர்களை விடுவிக்க முயற்சி எடுத்த்து சிவாஜி மன்றங்கள் தானே தவிர உள்ளூர் காங்கிரஸ் அமைப்புகளல்ல. பெருந்தலைவர் காமராஜர் மேல் உங்கள் எல்லாரையும் விட அதிகமாகவே மதிப்பு வைத்திருப்பவன் நான். நான் சொல்வதை ஏற்காத்தும் ஏற்க மறுப்பதும் அவரவர் இஷ்டம். ஆனால் வரலாறு பதிவு செய்யப்பட வேண்டும். காமராஜரைப் பற்றி நான் எதுவும் தாழ்த்திப் பேசவில்லையே. காமராஜர் ஏன் நடிகர் திலகத்தை இன்னும் பயன்படுத்தவில்லை என்கிற ஆதங்கத்தைத் தான் கூறுகிறேன். எனக்கு ஏதோ காமராஜர் விரோதி போல சித்தரிக்க நினைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் அன்றைய கால கட்டத்துக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு நடிகர் திலகத்தின் பலத்தை சரியான முறையில் பயன்படுத்தியிருந்தால் 1971லேயே ஆட்சியைப் பிடித்திருக்கலாம்.Quote:
இன்றைய தினம் மாலையிலும் இரவிலும் பாஸ்கருக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் நீங்கள் எழுதியிருக்கும் பல விஷயங்களோடு நான் மாறுபடுகிறேன். ஆனால் அவற்றை பற்றி நான் பேசி விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். வெளியூரில் இருந்தவர்கள் அனைவரும் அந்த காலக்கட்டத்தில் பள்ளி மாணவர்கள் விஷயம் தெரியாதவர்கள் அறியாமையில் ஊறியவர்கள் அதனால் நடிகர் திலகம் எடுத்த முடிவை எதிர்த்தார்கள் என்று நீங்கள் சொல்வது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.
இன்னும் கூட சொல்லலாம்.
பெருந்தலைவர் மறைந்த போது ஒரு விநியோகஸ்தரை வைத்து நடிகர் திலகத்தை தரக்குறைவாக சித்தரித்து போஸ்டர் அடித்த்து யார். திராவிடக் கட்சிகளா.
அதே போல அதே விநியோகஸ்தர் திரும்பிப்பார் படத்தின் மறு வெளியீட்டின் போது விளம்பரத்தில் வேண்டுமென்றே நடிகர் திலகத்தின் விதவிதமான போஸ்களை போட்டு பெண் பித்தன், ஸ்த்ரீ லோலன் என்றேல்லாம் போஸ்டர் அடித்தது. இதற்கு காரணமாக இருந்தது யார், திராவிடக் கட்சிகளா. எதுவுமே தெரியாமல் காமராஜர் மேல் இருக்கும் அபிமானத்துக்காக கேள்விப்பட்ட விஷயங்களையெல்லாம் வைத்து, நடிகர் திலகத்தைக் குறை கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா.
மற்றவர்களிடம் ஒரு விரலை சுட்டிக்காட்டும் முன் நம்மை மூன்று விரல்கள் காட்டுவதை பார்க்க வேண்டும். திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்கும் தொடர் வெற்றிக்கும் காரணம், இங்குள்ள தேசிய இயக்கங்களின் தவறான அணுகுமுறையே அன்றி மக்களல்ல.
மக்கள் செய்த தவறு என்றால் நடிகர் திலகம் என்கிற உத்தமமான மனிதரைப் புறக்கணித்தது தான்.
களத்தில் பணியாற்றியவர்களுக்குத் தான் அந்த வலி புரியும். கேள்விப்பட்ட விஷயங்களை வைத்து ஏதோ சிந்தனைப் போக்கில் லாஜிகல் அனாலிஸிஸ் அடிப்படையில் கூறப்படும் விஷய.மல்ல இது நேரடியாக அனுபவித்ததன் மன வலி. உங்கள் எல்லோரையும் விட அதிகமாகவே காமராஜரைப் போற்றியவன் நான். தெருத்தெருவாய் ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளருக்காக சுற்றி வாக்குக் கேட்டு படிப்பை விட்ட சிவாஜி ரசிகனுக்குத் தான் தெரியும். அதனுடைய கஷ்டம். மேம்போக்காக விமர்சனம் எழுதுவது சுலபம். அதை என்னாலும் செய்ய முடியும்.
இதில் தனிப்பட்ட சர்ச்சை என்று என்னைக் குறை கூறாதீர்கள். நான் என்னுடைய கருத்து எழுதவில்லை. அன்றைய சூழலிீல் நடிகர் திலகத்திற்கு ஏற்பட்ட கஷ்டங்கள் சொல்லப்படாமலேயே போய் விடக்கூடாது என்கிற நியாயமான காரணத்தில் எழுதப்பட்டது. இதில் தனிப்பட்ட நபர்களுக்கிடையே சண்டை என்பது எங்கிருந்து வந்தது.
முத்தையன் சார்
புதிய பறவை நிழற்படங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள். ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது.