-
http://i59.tinypic.com/dyxcol.jpg
http://i1087.photobucket.com/albums/..._005384921.jpg
நடிப்புக்கு மட்டுமல்ல
வாழ்வியல் நெறிமுறைகளுக்கும்
ஆசானே!
இன்று உன் நினைவு நாள்.
நினைவிலேயே கலந்தவருக்கு
நினைவு நாளா?
இறைவனுக்கு ஏது இறப்பு?
நீ தெய்வத்தின் பிறப்பு
எம் அகம் புறம் அத்தனையும்
ஆண்டதால்
என் ஆண்டவன் நீ
நான் தொழும் முழு முதற் கடவுளே
கணேச நாமம் தவிர வேறு ஒன்றும் நானறியேன்
என் ஐம்புலன்களும் என் வசமில்லை
அது நான் பிறந்த போதே உன் வசமானது
மாதா பிதா குரு தெய்வம் உலகிற்கு
அனைத்தும் நீ ஒருவனே எனக்கு
அங்க அசைவுகள் மூலம் அமிர்ததைத்
தெளித்தவனே
அழகு எதுவென உலகிற்கு அடையாளம்
காட்டியவனே
உன்னால் அகிலம் அன்பைக் கற்றது
பாசத்தைப் பயின்றது
காலன் உன்னை அழைத்துக் கொண்டாலும்
காலம் உன்னை மறவாது
என் தேவனே என்னைப் பாருங்கள்
பாவிகளின் பாவங்களை வாங்கிக் கொள்ளுங்கள்
உன்னை இயக்கிய இயக்குனர்கள்
எத்தனையோ பேர் இருக்க
என்னை இயக்குபவன் நீ மட்டுமே
என் உயிரின் அணு ஒவ்வொன்றும்
உனக்கு மட்டுமே
சிவ பூஜை சிவனடியார்களுக்கு
சிவாஜி பூஜை இந்த அடியேனுக்கு
துன்பம் நேர்கையில் யாழ் நீ எனக்கு
இன்பம் தருவதில் இன்னிசை நீ எனக்கு
இன்பதுன்பம் எது வந்தாலும்
எனக்கு நீதான் உலகம்
வினாடி கூட உன்னை மறவாத
விந்தைக் கூட்டத்தில் நானும் ஒருவன்
என்றும் நீதான் என் இறைவன்.
உடலால் மட்டுமே நீ மறைந்த
இந்நாளில்
உயிராய் உணர்வாய் உன்னை
என்றும் போல் இன்றும் வணங்குகிறேன்.
எங்களைக் காத்தருள்வாய்.
-
அன்பின் முரளி சார்!
பாலா தொடரை தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி! நேரம் கிடைக்காவிடினும் எப்படியும் தாங்கள் வாசித்து விடுவீர்கள் என்று தெரியும். பாராட்டுதல்களுக்கும் நன்றி!
//ஒரு சந்தேகம். 1977 வரை அனைத்து எஸ்பிபி பாடல்களும் இடம் பெறும் என சொல்லியிருந்தீர்கள். ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த் பாடல் ஒன்று. இங்கே இடம் பெறவில்லையா அல்லது நான் கவனிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை//
இல்லை முரளி சார். இன்னும் இடம் பெறவில்லை. 1969 லேயே இன்னும் சில பாடல்கள் பதிவிடுவதற்கு இருக்கின்றன. என்னிடம் இருக்கும் பழைய படங்களின் டிவிடி க்களை முழுதும் மீண்டும் ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டுத்தான் இத்தொடரை நான் எழுதுகிறேன். முடிந்தவரை படத்தின் கதை, பங்கு கொண்ட நடிகர்கள், டெக்னீஷியன்கள் என்று விவரங்களை அளிக்க வேண்டுமென்றுதான் இப்படி. மறந்த, பார்க்காத அல்லது இல்லாத படங்களை பார்த்து விட்டுத்தான் எழுத வேண்டும் என்பதால் சில பாடல்கள் விடுபட்டுப் போகின்றன. ஆனால் நிச்சயம் மிஸ் ஆகாது. படம் கிடைத்து பார்த்த பின் கண்டிப்பாக வரும்.
நீங்கள் சொன்ன சின்னப்பரின் ஸ்டூடன்ட் நிச்சயம் கல்யாண ராமனாய் லஷ்மிகரமாக விரைவில் வருவார்.
அதே போல உங்களுக்குப் பிடித்த சுறுசுறு ஹீரோவும், பிடிக்காத நடிகரும் நடித்த படத்தில் நிச்சயம் பிடிக்காத நடிகர்:) உங்களுக்குப் பிடித்த பாடல் பாடி சைக்கிளில் ஊர்கோலம் வருவார் அதே சட்டக்காரியுடன். ஒரு கோடி இன்பங்களை ஒன்றாக அள்ளித்தரும் ராட்சஸி பாலா இணைவு. அந்தக் க(றை)ரையும் பச்சைதான். பிரகாசத்தின் பச்சை. சரிதானே அல்லது தவறா?
அதே போல 73 ன் வானம் சிந்திய தேனும், 74 ன் விதுபாலா, ஜெயசித்ராவின் அம்மா போட்ட சபதத்தின் விளைவாக ஓடி வரும் அன்பு மேகமும் விடுபட்டால் பாலாவின் தொடருக்கு அர்த்தம் எது?
இதற்கெல்லாம் மேலே அனைத்திற்கும் டாப்பாக விஜயா 1971ல் முன்னமேயே போட்ட சபதம் ஒன்று உண்டே. அதே gkv மலர்களாய் தென்றலாய் நம் மனதை தொட்ட பனித்துளிப் பாடல்.
எல்லாமே வருகிறது முரளி சார்.
தங்கள் நினைவூட்டல்களுக்கும், உயரிய ரசனைக்கும் என் வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.
-
சின்னா!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அந்தாதி..
கண்களில் அருவி.
-
1000 பதிவுகள் அள்ளி வழங்கிட்ட செந்தில்வேல் சாருக்கு என் மனப்பூரவமான வாழ்த்துக்கள்.
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் கலந்து கொண்ட நடிகர் திலகம் பட விழா பற்றிய அண்ணா நாளிதழில் வெளிவந்த ஆவணம் - இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாளில் மலரும் நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்
http://i58.tinypic.com/2uymzad.jpg
-
டியர் வாசு சார்,
பேசும் தெய்வம் பாடலில் ஆடுவது கீதாஞ்சலி அல்ல சாந்தா என்று தெளிவு படுத்தியதற்கு நன்றி. நான்தான் சற்று குழம்பி விட்டேன்.
மற்றபடி சாந்தா பற்றிய மற்ற விவரங்கள் நாம் ஏற்கெனவே பேசியதுதான். பாகம் இரண்டில் என்று நினைக்கிறேன்.
ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான (துணை) நடிகை. 'அவளுக்கென்ன அழகிய முகம்' பாடலில் மட்டுமல்ல, 'சிலையெடுத்தான்' பாடலிலும் அவர் ஆடுவார். 'அவளுக்கென்ன' பாடலில் அணிந்த அதே உடையில்.
ஏ.வி.எம்.படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்திருக்கிறார். அவருக்கு மாஸ்ட்டர் சாந்தா, இன்ஸ்பெக்டர் சாந்தா, டெர்ரர் சாந்தா என பல பெயர்கள் உண்டு (இரண்டுமுறைக்கு மேல் சொல்லிக் கொடுத்தும் சரியாக ஆடாத குரூப் டான்சர்களுக்கு 'பளார்' என்று விடுவாராம்). நம்ப முடியவில்லை அல்லவா. சரவணன் சார் கொடுத்திருந்த சுதந்திரம் அப்படி. அவரிடம் அறைவாங்கிய ஒரு ஜூனியர் நடிகை சில ஆண்டுகளுக்கு முன் டி.வி.யில் சொன்னார். சாந்தாவால்தான் முன்னுக்கு வந்தேன் என்றும் சொல்லிக்கொண்டார்.
ஏ.வி.எம்.மில் எஸ்.பி.எம். நுழைந்ததும் சாந்தாவை மாஸ்ட்டர் பதவியிலிருந்து ஓரம் கட்டி தனது ஆஸ்தான புலியூரை முன்னிலைப் படுத்தினார்.
அரசகட்டளையில் ஜெயலலிதாவும் சாந்தாவும் குழாயடியில் நனையும் காட்சி ஓவர் விரசம். அதோடு ஒப்பிடுகையில் நீங்கள் சொன்ன 'என்ன சொல்ல என்ன சொல்ல' எல்லாம் ஒன்றுமில்லை.
சாந்தா அழகாக இருந்ததால் அன்றைய கதாநாயகிகள் அவரைத் தனது தோழியாக நடிக்கவைக்க தயங்கினார்கள் என்ற தங்கள் கூற்றைப் படித்ததும், பலகாலம் முன்பு ஒரு வாரப் பத்திரிகையில் படித்த ஜோக் நினைவுக்கு வருகிறது....
ஒருவர் தன நண்பரிடம்: "கருப்பான, குள்ளமான, அழகில்லாத இளம்பெண்கள் ஒரு ஐந்தாறு பேரை அழைத்து வர ஏற்பாடு செய்"
நண்பர் : "எதற்கு?"
முதலாமவர் : "இன்றுமாலை என் மகளை பெண்பார்க்க வருகிறார்கள். அவளைச்சுற்றி தோழிகளாக நிறுத்தத்தான்"
சாந்தா இடம்பெற்ற பாடல்களின் வீடியோக்களை தேடியெடுத்து பதித்த உங்கள் சுறுசுறுப்பான உழைப்பு அசர வைக்கிறது. பர்ரட்டுக்கள்.
-
நடிகர்திலகத்தின் நினைவு நாளையொட்டி கோபால் சார், வாசு சார் மற்றும் நண்பர்களின் அஞ்சலிக்கவிதைகள் மனதை கனக்க வைக்கின்றன.
அவற்றுக்கு நிகராக நான் எதுவும் எழுதிவிட முடியாதென்பதால் அந்த அஞ்சலியில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.
வாழ்க நடிகர்திலகத்தின் மாண்பு, பெருமை, சாதனை.
-
டியர் வாசு சார்,
பாலா தொடரில் மாணவன், அக்கரைப்பச்சை, சபதம், பொண்ணுக்கு தங்க மனசு, எங்கம்மா சபதம் படப்பாடல்கள் தொடரவிருப்பது மகிழ்ச்சி (உங்கள் மனசாட்சி: "நான் மூடு மந்திரமாக எழுதினால் இப்படிப் போட்டு உடைக்கிறானே")
முரளி சாருக்குப் பிடித்து கோபால் சாருக்குப் பிடிக்காத நடிகரும், கோபால் சாருக்குப் பிடித்து முரளி சாருக்குப் பிடிக்காத நடிகரும் இணைந்து நடித்த "ஓ.. மைனா" பாடலை ஏற்கெனவே வேறொரு தலைப்பில் பதிவிட்டிருக்கிறீர்கள். இருப்பினும் பாலாவுக்காக மீள்பதிவு செய்வீர்கள் அல்லவா?.
'பொட்டுவைத்த முகமோ', 'இரண்டில் ஒன்று', 'எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது', 'யமுனா நதியிங்கே' பாடல்களையெல்லாம் கிளைமாக்ஸில் வைத்துக்கொள்ள திட்டமா?.
-
ஆதிராம்.. நலமா :) ஆஹா..இப்படி போட்டு உடைத்ததற்கு மிக்க நன்றி..சின்ன மூளை ( நான் தான்) ரொம்ப கன்ஃப்யூஸ் ஆகிட்டுக் குழம்பிக்கிட்டு இருந்தேன்!
கல் நாயக் எங்கே ஆளையே காணோம்..
-
வந்து மறுபடியும் வேலை..லீவ் முடிந்து போச்..
ஊர் சுற்றலில் கண்ட மழை, பனி எல்லாம்கனவு தான்..இதோ இதோ இங்கே சுடும் வெயில் மட்டும் நிஜம்..
ம்ம் பாட் கேக்கலாம்..வேறென்னசொல்ல..
https://youtu.be/9ZOCSLL261w