வாசு,
எஸ்பிபி பாடல்கள் தொடரை படித்துக் கொண்டு வருகிறேன். சில நேரங்களில் உடனே. சில நேரங்களில் தாமதமாக. ஆதலினால் உடனே அதை பற்றி எழுத முடிவதில்லை. .
வீட்டுக்கு வீடு படத்தில், அங்கம் புது விதம் பாடலை நீங்கள் அலசிய விதம் நன்றாக் இருந்தது. பிற்காலத்தில் எஸ்பிபியின் முத்தரையாக கருதப்பட்ட சில improvisations இந்தப் பாடலில்தான் தொடங்கியதோ என்று யோசிப்பேன். அவர் அங்கம் என்று சொல்லும் ஸ்டைலைதான் குறிப்பிடுகிறேன். 1970 மே மாதம் வந்த படம். இதுவும் மதுரை தங்கத்தில்தான். நன்றாக போனது. பிற்காலத்தில் [அதாவது 3,4 வருடங்களுக்கு பிறகு] என் கஸின் படித்த் மதுரை கல்லூரியில் [Madura College] மாணவர் யூனியன் சார்பில் திரையிட்டபோது பார்த்தேன்.
மங்கையரில் மகாராணி அருமையான பாடல். நீங்கள் குறிப்பிட்ட மாதிரி சில வரிகளில் எஸ்பிபி கிளப்பியிருப்பார்.
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
தீராத ஆசை கோடானு கோடி
போன்ற வரிகளை சொல்ல வேண்டும்.
ஆயிரம் நினவு பாடலை விட உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் பாடலும் மலர் எது பாடலும் ரொம்பவே பிடிக்கும். அதிலும் மலர் எது படமாக்கம் சூப்பர். [ஆனால் ஸ்ரீதரின் சிஷ்யன் சிவிஆர் இதற்கு முன்னரே நில் கவனி காதலி படத்தில் ஜில்லென்று காற்று வந்ததோ பாடலில் underwater ஒளிப்பதிவை அருமையாக பண்ணியிருப்பார். என்ன அது பிளாக் & ஒயிட், இது கலர்].
அவளுக்கென்று ஒரு மனம் படத்தை நினைக்கும்போது எனக்கு எப்போதும் இரண்டு சிந்தனைகள் வரும். ஒன்று அந்த படத்தின் விளம்பரங்களிளெல்லாம் எரிந்துக் கொண்டிருக்கின்ற மூன்று மெழுகுவர்த்திகள். ஒரொரு மெழுகுவர்த்தியிலும் படத்தின் தலைப்பிலிருந்து ஒரொரு வார்த்தையை எழுதியிருப்பார்கள்
இரண்டாவது, அவளுக்கென்று ஓர் மனம் 1971 ஜூன் 18 அன்று ரிலீஸ் ஆனது. மதுரை சென்ட்ரலில். 71 ஏப்ரல் 14 வெளியாகி 10-வது வாரமாக பிராப்தம் ஓடிக் கொண்டிருந்தது. அதை எடுத்து விட்டுத்தான் அவளுகென்று ஓர் மனம் வெளியானது. இந்த படத்தை ஓபனிங் ஷோ பார்த்து விட்டு படம் தேறாது என்று என் கஸின் சொல்லி விட்டான். கடுப்பாக வந்தது. இந்த படத்தை ஏன் இங்கே கொண்டு போட வேண்டும், விட்டிருந்தால் பிராப்தம் ஓடியிருக்குமே என்ற எண்ணம் எப்போதும் வரும்.
ஒரு சந்தேகம். 1977 வரை அனைத்து எஸ்பிபி பாடல்களும் இடம் பெறும் என சொல்லியிருந்தீர்கள். ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த் பாடல் ஒன்று. இங்கே இடம் பெறவில்லையா அல்லது நான் கவனிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை. 1970-ல் வந்த பாடல். சங்கர் கணேஷ் இசை. சுறுசுறுவென தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட், (உங்கள் பாஷையில்) அதம் பதமாக லட்சுமி.
"மின்னுகின்ற கண்ணிரண்டும் வேலாயுதம்" என்று சற்றே மூக்கால் பாடுவார் எஸ்பிபி. அதில் "நாள் மணநாள் நெருங்கினால்" என்ற இடம் அள்ளிக் கொண்டு போகும். எந்த பாடல் என்று உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன். இந்த பாடல் போட்டு விட்டீர்களா?
அப்புறம் எனக்கு இரண்டு மூன்று எஸ்பிபி பாடல்கள் இருக்கின்றன. 1973-ல் G.K வெங்கடேஷ் இசையில் வந்த பாடல், 1974-ல் விஜயபாஸ்கர் இசையில் வந்த பாடல். எல்லாவற்றிருக்கும் மேலாக 1974-ல் மெல்லிசை மன்னர் இசையில் எஸ்பிபி உங்கள் ராட்சசியுடன் இணைந்த பாடல் (எனக்கு பிடித்த சுறுசுறு ஹீரோவும், எனக்கு பிடிக்காத நடிகரும் நடித்தது).அதெல்லாம் வருமல்லவா?
நன்றி! தொடருங்கள். நேரம் கிடைக்கும்போது கலந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
கண்ணா, சென்னை வந்துவிட்டு மதுஜியை பார்க்கவில்லை எனபதை விட சக மதுரைக்காரனை பார்க்கவில்லை என்பது பெரிய குற்றம். அப்புறம், உல்லாச பறவைகள் அலங்காரில் ரிலீஸ். சினிப்ரியா அல்ல. 1980 மார்ச்..