Originally Posted by SPB
ஒரு பூவுக்கு என்று ஒரு தனி மணம் இருக்கும். ஒரு இன்ஸ்ட்ருமென்டல் இசையைக்கேட்டாலே இது எம்.எஸ்.வி., இது மஹாதேவன், இது இளையராஜா, குமார் என்று சொல்லிவிட முடியும். இப்ப முடியாது.
...
...
வைரமுத்து சார் ஒலிப்பதிவுக்கு வந்தால் எத்தனையோ டேக்ஸ் அவருக்காகப்பாடியிருக்கிறோம். அவருக்கு க்,ச்,ப் எல்லாம் கூட சுத்தமாக இருக்கணும். அதே போல ராஜா சார், விஸ்வநாதன் சார் எல்லோருமே மொழியில், அதன் உச்சரிப்பில் மிகவும் அக்கறை கொண்டிருப்பார்கள். இப்போது பாடலாசிரியர்கள் இதுபோன்று ஏதாவது சொல்கின்றனர் என்பதால் ஒலிப்பதிவுக்கு அவர்கள் அழைக்கப்படுவதில்லை.