That is truly remarkable :notworthy:
Printable View
மோகன் சார்,
தங்கள் வாழ்த்துக்கு நன்றி! நிச்சயமாக கர்ணன் 100ஆவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் பற்றி நமது திரியில் பதிவிடப்படும். கண்டிப்பாக நம் அன்பு ராகவேந்திரன் சார் மற்றும் அன்பு பம்மலார் சார் நூறாவது நாள் விழா எப்போது, எங்கே என்பதை நிச்சயம் தெரிவிப்பார்கள். எனக்குத் தெரிந்தால் கண்டிப்பாக நானும் பதிவிடுகிறேன். நன்றி!
Trichy srinivasan and girija madam articles about KARNAN boteworthy but they also maintain the stand that it has not run to the expected levels. our own people are not accepting the facts sometimes however proof was given which we can say only CURSE and nothing else. being a senior member and follower since sixties I can say it is a box office hit those days.
anyway DIGITAL KARNAN has broken all the records and no one can make any circastic comment.
LONG LIVE NADIGARTHILAGAM
அனைவரது வேண்டுகோளையும் ஏற்று பத்தாவது பாகத்தை கலக்கலாக துவக்கியிருக்கும் திரு வாசு சாருக்கு நன்றிகள் பல கோடி .இந்த பாகத்தை துவக்க உங்களை விட சிறந்தவர் வேறு யார் ?தொடரட்டும் தங்கள் திருப்பணி .
திரு பம்மல் சார்,
கட்டபொம்மன் பொக்கிஷங்கள் காலாகாலத்துக்கும் பாதுகாக்கப்படவேண்டியவை .அவைகளை இங்கு தரவேற்றி அவைகள் அழியாமல் காலத்தை வென்று நிற்பதற்கு வழி செய்து விட்டீர்கள் .அதற்காக தங்கள் பொற்பாதங்களை மானசீகமாக தொட்டு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
திரு முரளி சார்,
இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நாங்கள் உங்களை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .இந்த திரியின் முக்கிய தூண் போன்ற நீங்கள் இத்தனை நாட்களாக இங்கு வராமல் இருப்பது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது தயவு செய்து மிக விரைவில் இங்கு வரவும்.
our hearty condolences to the bereaved family of Kaka Radhakrishnan, a contemporary of NT. Regarding VPKB rerelease, certain sort of editing is absolutely necessary if it is to surpass the records of Karnan. Certain song sequences with comedians and the pathos song of Padmini when Gemini leaves for battlefield are some speed breakers of the otherwise dynamic movie with dynamite dialogue deliveries by NT.A re-editing of this movie released much earlier to Karnan should be done along with color enhancement and 3D formatting. After VPKB instead of Thiruvilayadal or thillana mohanambal, Vasantha Maaligai or Pudhiya Paravai may break the monotony enjoying the histrionics of our NT as a mythological or raja-rani movie hero image. For this younger generation, Pudhiya Paravai with a bit of editing on Nagesh comedy portions will certainly make a terrific impact in their minds as regards the three dimensional acting presentation compared to any other movies of himself.
I wish Vasantha Maaligai(Minus Comedy scenes), Raja to be re released because NT will not die it will be a happy ending.
NT's classic Karnan has created waves in its rerelease. NT fans are already in the look out of a sequence of NT classics like Pudhiya Paravai, thiruvilayadal, kattabomman......Sure in the coming years, at least one NT movie in redefined color format and 3D is getting released to break his own records.
BUT
Also I wish to suggest that negative of old classic movies must be preserved . I saw Thangapadakam in Chennai woodlands theatre but print was not upto the mark.
It is not a day dream but an indigestible reality if efforts are not made to restore and reformat the negatives It was pathetic at Delite theatre that Rajapart Rangadurai print was just ok. I recently saw Mayabazar colour movie it was just awesome
Atleast certain films of NT must be taken care and preserved this will be the only tribute to NT and it will pave way to carry forward NT legacy to younger generations. VPKB is in pune film institute so its negative is well preserved. Even Thalapathy movie negative is extinct , think about movies released in 1960s.
First step is to identify movies to preserved
Second: Identify best prints available
Third: Identify copyright holder
Fourth: Reformat the movie
I know its easier said than done but I felt like giving my view . I hope every fan will support this initiative if steps are undertaken by concerned person
உயர்திரு, வாசுதேவன் அவர்களே,
இந்தப் பத்தாவது திரியின் துவக்கம் 'கர்ணன்' நூறாவது நாளை நோக்கி ஓடிகொண்டிருக்கும் போது அரமபிக்கப்பட்டிடுப்பது ஒரு நல்ல ஆரம்பம். அதுவும் தங்கள் கைகளால் ஆரம்பிக்கப்பட்டிருப்பது இன்னும் கூடுதல் சந்தோசம்.
'வாசுகி' இதழில் வெளியாகியுள்ள கட்டுரை அருமையானதொன்று. உண்மை, நடிகர் திலகம், சரஸ்வதி தேவியின் அவதாரமே, இதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.
உயர்திரு, பம்மலார் அவர்களே,
"வீரபாண்டிய கட்டபொம்மனின்' ஆவணங்கள் அருமையிலும் அருமை!!!!
தங்கள் இருவரின் உழைப்பிற்கு ஈடு இணையே இல்லை.
Anm
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுப் பதிவுகளுக்கு எனது இருகரம் கூப்பிய, சிரம் தாழ்த்திய பணிவான நன்றிகள்..!
தங்களின் எல்லையில்லா அன்புக்கும், பொங்கிவரும் பாசத்துக்கும் அடியேன் தலைவணங்குகிறேன்..!
ஆனந்தக்கண்ணீருடன்,
பம்மலார்.
டியர் mr_karthik,
தங்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
"எந்த ஒரு ஆவணத்திலும் Watermarkஐ அவசியம் பதியுங்கள்" என்ற தங்களின் அன்புக்கட்டளையை எனது மூத்த சகோதரர் கூறிய அறிவுரையாகவே சிரமேற்கிறேன்.
தங்களின் அபரிமிதமான அன்பில் அடியேன் கட்டுண்டு கிடப்பது எனது பெரும் பேறு..!
பாசத்துடன்,
பம்மலார்.
டியர் செந்தில் சார்,
தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்கு எனது இதயங்கனிந்த நன்றிகள்..!
தங்களின் எல்லையில்லா அன்புக்கு தலைவணங்குகிறேன்..!
தவிர்க்க இயலாத காரணங்களினால், நமது முரளி சாரால் ஒரு மாத காலத்திற்கும் மேலாக பதிவுகளை அளிக்க இயலவில்லை. இன்னும் சில தினங்களில் தமது சீரிய பங்களிப்பை நல்க அவர் அவசியம் வருவார்..!
அன்புடன்,
பம்மலார்.
பாராட்டுக்கு நன்றி, சந்திரசேகரன் சார்..!
Thank You Very Much, sivajisenthil Sir..!
உயரிய பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி, ஆனந்த் சார்..!
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
[16.5.1959 - 16.5.2012] : 54வது ஜெயந்தி
பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்
வரலாற்று ஆவணம் : நடிகன் குரல் : ஆகஸ்ட் 1962
['நடிகன் குரல்' வெளியிட்ட 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலக வெற்றி உலா மலரிலிருந்து'...]
தேசிய திலகம் பற்றி தயாரிப்பாளர்-இயக்குனர் திரு.பி.ஆர்.பந்துலு
http://i1110.photobucket.com/albums/...GEDC5905-1.jpg
வரலாற்று ஆவணம் : 'தேவி' வார இதழ் : 17.3.2010
நடிகர் திலகம் குறித்து இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.
http://i1110.photobucket.com/albums/...GEDC5912-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5913-1.jpg
http://i1110.photobucket.com/albums/...GEDC5914-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
அன்பு பம்மலார் சார்,
அமரர் 'காகா' ராதாகிருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு 'பொம்மை' ஆவணத்தை வெளியிட்டு தாங்கள் அஞ்சலி செலுத்திய விதம் கண்களைக் குளமாக்கி விட்டது. தலைவரின் சிறு வயதுத் தோழராக அவருடைய சகல இன்ப, துன்பங்களிலும் பங்கு கொண்ட நல் இதயம் கொண்டவர் 'காகா' ராதாகிருஷ்ணன் அவர்கள்.
"கட்டபொம்மன்" நாடகம் குறித்து நடிகர் திலகம் அவர்களுடைய கவின்மிகு கட்டுரையை வெளியிட்டு உணர்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். என்ன ஒரு உணர்வு பூர்வமான கட்டுரை! தான் சிறு வயதில் பார்த்த கட்டபொம்மன் கூத்தை தன்னுடைய நடிப்பில் நாடகமாக்க வேண்டும் என்ற வெறி அவருடைய கட்டுரையில் மட்டுமல்ல அவருடைய இதயம் முழுதும் வியாபித்துக் கிடக்கிறது. ஆலவிருட்சம் போல் வளர்ந்த அந்த ஆசையை தக்க சமயம் பார்த்து அவர் தீர்த்துக் கொண்டதைப் பார்க்கையில் தலைவரின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் என்னவென்று பாராட்டுவது. அதே தலைவர் வழியை தாங்களும் கடைப்பிடித்து வருவது தலைவர் புகழுக்கு பெருமை சேர்ப்பதாகும். தலைவர் போலவே அந்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை தங்களிடம் பரிபூரணமாக இருப்பதை கண்கூடாகக் காண முடிகிறது.
மற்றும் தன் நாடகக் குழுவினரின் நல்வாழ்விற்கு கட்டபொம்மன் மூலம் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தது போல, தங்கள் ஒப்பற்ற ஆவணங்களினால் இந்த நடிகர் திலகம் திரிக்கு புதிய முறையில் அடித்தளமிட்டுக் கொடுத்து, திரியின் ஆணிவேராக தாங்கள் திகழ்வது நாங்கள் செய்த பூஜாபலன் தான்.
நடிகர் திலகம் கட்டபொம்மன் நாடகத்தைப் பற்றி கூறியுள்ள கருத்துக்களைத் தொடர்ந்து அவர் கட்டபொம்மன் திரைப் படத்தைப் பற்றி கூறியுள்ள கருத்துக்களை மிக அழகாக, மிகப் பொருத்தமாக பதித்துள்ளீர்கள். ஒரு காரியத்தை எடுத்து விட்டால் அதை வெற்றிகரமாக, சிறப்பாக முடித்து உலகப் புகழ் அடைய வேண்டும் என்ற நடிகர் திலகத்தின் கொள்கை வென்று வெற்றிவாகை சூடியது. அவருக்கு கட்டபொம்மன் உலகளாவிய அங்கீகாரத்தையும், அந்தஸ்தையும் பெற்றுத் தந்தான் என்று கூறுவதை விட கட்டபொம்மனுக்கு தலைவர் காலத்தால் அழியாத புகழை உலக அரங்கில் உருவாக்கிக் கொடுத்து விட்டார் என்பதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.
அதே போலத்தான் தாங்களும் உலக அரங்கில் நடிகர் திலகத்தின் அருமை, பெருமைகளை அற்புத ஆவணங்கள் மூலம் பறை சாற்றிக் கொண்டிருக்கீறீர்கள். இந்த தன்னலமற்ற அரிய சேவைக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமும், உலகம் போற்றும் புகழும் கிடைக்கக் கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
அன்பு பம்மலார் சார்,
தேசிய திலகம் பற்றி தயாரிப்பாளர்-இயக்குனர் திரு.பி.ஆர்.பந்துலு அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உணர்வுபூர்வமானவை. உண்மை. நடிகர் திலகத்தின் ஊண், உறக்கம் மறந்த உழைப்பை பந்துலு அவர்கள் கட்டுரையில் தெரிவித்திருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது.
உன்னதமான பதிவுகளுக்கு உயிரினும் மேலான நன்றிகள் சார்!
அதே போல இலட்சிய நடிகர் திரு எஸ்.எஸ்.ஆர். அவர்கள் தன்னால் VPKB படத்தில் நடிக்க முடியாமல் போனதிற்கான காரணத்தை அழகாகக் கூறியிருந்தார். திரு எஸ்.எஸ்.ஆருக்கு பதிலாக வெள்ளையத் தேவனாக நடிக்க திரு ஜெமினி கணேசன் ஒப்பந்தம் செய்யப் பட்டார். ஆனால் "எஸ்.எஸ்.ஆர். அவர்கள் தன்னால் VPKB படத்தில் நடிக்க இயலவில்லை என்பதை அவரே உறுதி செய்து கூறினால்தான் நான் (திரு ஜெமினி கணேசன்) அந்த வேடத்தில் நடிக்க முடியும்", என ஜெமினி கணேசன் உறுதியாகக் கூறி விட்டார். எஸ்.எஸ்.ஆர்.அவர்களும் 'தான் நடிக்க இயலவில்லை' என்ற உத்திரவாதக் கடிதம் கொடுத்து, திரு ஜெமினி அவர்களுடன் பேசிய பிறகுதான் ஜெமினி வெள்ளயத்தேவனாக நடிக்க ஒப்புக் கொண்டார். இது சம்பந்தமாக 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் வெளிவந்த எஸ்.எஸ்.ஆர். அவர்களின் பேட்டியில் இருந்து....
http://i1087.photobucket.com/albums/...n31355/SSR.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/SSR2.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-59.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் ராகவேந்திரன் சார்,
http://blogs.sbschools.org/strusz/fi.../great-job.gif
சமீபத்தில் சென்னை சென்றிருந்த போது வழக்கமான விசிட்டாக 'சாந்தி' திரையரங்கிற்கு சென்று வந்தேன். அங்கு நடிகர் திலகம்.காம் மற்றும் சாந்தி திரையரங்கு நிர்வாகம் சார்பில், அன்பு ராகவேந்திரன் சாரின் அளப்பரிய டிசைனில் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் மிகப் பெரிய, நீண்ட பேனர் ஒன்று காண்போர் அனைவரின் கருத்தைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பார்த்ததும் மலைத்துப் போய் விட்டேன். சுப்பிரமணியன் ராமஜெயம் சார் கூட இதைப் பற்றிய ஒரு பதிவை நமது திரியில் அளித்திருந்தார். 'தினமலர்' (வாரமலர்) செப்டம்பர 27, 2009 இதழில் வெளிவந்த நடிகர் திலகம் பற்றிய article மெருகேற்றப்பட்டு, அந்த article க்கான online feedback-க்கும் தொகுக்கப்பட்டு ராகவேந்திரன் சார் அவர்களால் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. காமிரா வேறு கொண்டு செல்லவில்லை. இருந்தாலும் செல்லில் 'கிளிக்' செய்தேன். மிகப் பெரிய பேனராக இருப்பதால் முழுமையாக கவர் செய்ய முடிய வில்லை. முடிந்தவரை சிறு பகுதிகளாக படம் பிடித்து பதிவிட்டுள்ளேன். Nadigarthilagam.com, 'சாந்தி' தியேட்டர் நிர்வாகம் மற்றும் தினமலர் வாரமலருக்கு நம் திரியின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும்.
அன்பு ராகவேந்திரன் சாருக்கு ஸ்பெஷல் நன்றிகள்.
இடம்: சாந்தி தியேட்டர் வளாகம், சென்னை.
http://i1087.photobucket.com/albums/...12-1352001.jpg
http://i1087.photobucket.com/albums/...40612-1349.jpg
http://i1087.photobucket.com/albums/...12-1349001.jpg
http://i1087.photobucket.com/albums/...40612-1348.jpg
http://i1087.photobucket.com/albums/...12-1348003.jpg
http://i1087.photobucket.com/albums/...12-1348002.jpg
http://i1087.photobucket.com/albums/...-1348001-1.jpg
http://i1087.photobucket.com/albums/...612-1347-1.jpg
http://i1087.photobucket.com/albums/...12-1351001.jpgடியர் ராகவேந்திரன் சார்,
இந்த பேனர் பற்றிய மேலதிக விவரங்களை முடிந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
அன்புடன்,
வாசுதேவன்.
The Hindu - 16-06-2012
http://www.thehindu.com/todays-paper...cle3534768.ece
The Hindu - 16-06-2012 article- க்கு நன்றி திரு.சந்திரசேகரன் சார்.
வருடம் 2012 உலகத்துக்கு எப்படியோ, நமது நடிகர் திலகம் பக்தர்களுக்கு ,1952 , 1959 ,1960 ,1961 ,1964 ,1972 ஆகியவற்றை போல் மறக்க முடியாத வருடம்.(மறக்க வேண்டியது 2001 ,வணங்க வேண்டியது 1928 )
பம்மலார் சாரின் வீரபாண்டிய கட்டபொம்மன் விருந்து கெய்ரோ விருதுக்கு ஒப்பான பங்களிப்பு. உங்களுக்கு நன்றி சொல்ல நிஜமாக வார்த்தையில்லை.
ராக(வேந்தர்) சாந்தி திரையரங்கு பேனருக்கு மிக்க நன்றிகள்.
அத்தனை பேரின் பங்களிப்பும் அமர்க்களம்.இந்த திரி கர்ணன் பெற்ற வெற்றியை பெரும்.(துவக்கி வாய்த்த கை மோதிர கையாயிற்றே??)
அன்புள்ளம் கொண்ட திரு.Anm அவர்களே!
தங்கள் பாசப் பதிவுக்கு என்னுடைய இமாலய நன்றிகள். கர்ணன் நூறாவது நாள் வெற்றியை அனைவரும் சுவைக்கத் தயாராவோம்.
டியர் ஹரிஷ் சார்,
நான்தான் தங்களுக்கெல்லாம் நன்றி கூற வேண்டும். நடிகர் திலகம் திரியின் பத்தாவது பாகத்தை துவக்கி வைக்கும் அரியதொரு வாய்ப்பை எனக்கு அளித்த தங்களைப் போன்ற அன்புள்ளங்களின் அன்பு மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். தங்கள் அன்பிற்கு என் மனமுவந்த நன்றி!
டியர் ராகுல்,
பாராட்டுக்கள். தலைவர் படங்களைப் போற்றி பாதுகாக்கவேண்டும் என்ற தங்களின் அக்கறை மிக நியாயமானது. தங்கள் கருத்தே நம் எல்லோருடைய கருத்துமாகும். தங்கள் உயரிய எண்ணம் தலைவரின் ஆசியினால் கண்டிப்பாக நிறைவேறும்.
வாழ்த்தும்
நெய்வேலி வாசுதேவன்.
கட்டபொம்மனின் கர்ஜனைக் கோலங்கள்.
http://i1087.photobucket.com/albums/...1355/1-107.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/3-60.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-82.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/6-36.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/5-40.jpg
http://i1087.photobucket.com/albums/...yakattabom.jpg
http://i1087.photobucket.com/albums/...1355/sdfgh.jpg
thanks for the background informations on VPKB casting problems, dear pammalar sir,
In my view, Gemini Ganesan was the apt choice to play vellayathevan compared to SSR. In the words of SSR even though GG selection was not satisfactory to NT, one must remember that it was GG's magnanimity and generosity to consult SSR before he accepted the role. GG's role is also a memorable one particularly relief we get through the song sequence Inbam Pongum Vennila. Imagine SSR with PBS voice? when you close your eyes and listen to PBS songs, only Gemini strikes to our mind and nobody else including MT or Balaji o Muthuraman or Nagesh or others. Even as NTs kattabomman dominates the proceedings of VPKB. The King or romance GG has done perfect justice to his role, Compared to NT-SSR combo, NT-GG combo was always successful. Even NTs die hard fans like me will accept the fact that in Parthal Pasi Theerum GG had an edge over NT storywise and the film is regarded as a Gemini dominated movie on par with NT. We the NT fans shall always be thankful to the generosity shown by GG, one of the trinity of Tamil Cinema, to have acted alongside our NT, making his presence a sweet contribution (like Kalangalil aval vasantham in Pavamannippu).
3-டியில் ரிலீஸாகிறது சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மன்...!
http://cinema.dinamalar.com/tamil-ne...mman-in-3D.htm
டியர் வாசுதேவன் சார்,
தங்களின் உயர்ந்த பாராட்டுதல்களுக்கும், உன்னத பதிவுகளுக்கும் எனது உச்சமான நன்றிகள்..!
தங்களின் இணையில்லா அன்புக்கூண்டில் என்றென்றும் பாசக்கிளியாக அடைபட்டவன் இந்த எளியவன் என்று எண்ணும்போது பேரானந்தத்தால் பேச இயலாமல் தவிக்கிறேன்..!!!
'வெள்ளையத் தேவனாக நடிக்க முடியவில்லை' என்ற தலைப்பில் 'சினிமா எக்ஸ்பிரஸ்' இதழில் எஸ்.எஸ்.ஆர் கூறியுள்ள விஷயம் ஒரு முக்கியமான வரலாற்றுத் தகவல்..!
நமது திரியின் 'பாயும் புலி' ராகவேந்திரன் சார், சென்னை 'சாந்தி'யின் 'பதாகைப் புலி'யாகவும் இருப்பதில் நமக்கெல்லாம் பெருமைதானே. அவரது பதாகையை உலக ரசிகர்களின் உள்ளங்களில் நிரந்தரமாக்கிய உங்களுக்கு உயர்வான நன்றிகள்..!
(ராக)வேந்தரும், (வாசு)தேவனும், வாழ்வியல் திலகத்தின் இரு கண்மணிகள் என 'சிவாஜி வரலாறு' என்றென்றும் ஆணித்தரமாகச் சொல்லும்..!
[ராகவேந்திரன் சார், இப்படி ஒரு பதாகை வைக்கப்பட்டிருக்கும் தகவலை 'தினமலர்' நாளிதழின் கவனத்துக்கு கொண்டு சென்றால், அதை அவர்கள் ஒரு சிறந்த செய்தியாக தங்களின் நாளிதழில் அவசியம் வெளியிடுவார்கள்..!]
பாசத்துடன்,
பம்மலார்.
பாராட்டுக்கு நன்றி, சிவாஜிசெந்தில் சார்..!
"கட்டபொம்மன்" காவியத்தில் 'வெள்ளையத் தேவன்' வேடம் குறித்த தங்களது கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்..!
ஜெமினி கணேசன் அவர்கள், 'வெள்ளையத் தேவ'னாக சிறப்பாகவே செய்திருப்பார். குறிப்பாக பத்மினியுடனான காதல் காட்சிகளிலும், 'இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே' பாடலிலும் தானே என்றென்றும் 'காதல் மன்னன்' என்பதனை நிரூபிப்பார். வீரம் செறிந்த காட்சிகளிலும், ஒரு மாவீரனுக்கே உரிய ஆர்ப்பரிப்போடும், மிகுந்த கம்பீரத்தோடும் குறைகூற முடியாத வண்ணம் செவ்வனே செய்திருப்பார்.
Gemini-Padmini Chemistry worked out very well in VPKB. SSR-Padmini Pairஐ என்னைப் பொறுத்தவரையில் 'வீட்டு ரோஜா' என்று கூறமுடியவில்லை, அது ஒரு "காட்டு ரோஜா" தான்..!
ஜெமினி-பத்மினி கெமிஸ்ட்ரிக்காக 'இனபம் பொங்கும் வெண்ணிலா'வை ஒரு முறை பார்ர்ப்போமே:
http://www.youtube.com/watch?v=HKMNzG8HcVo
எஸ்.எஸ்.ஆர்.-பத்மினி comboவில் "காட்டு ரோஜா(1963)"விலிருந்து 'சின்ன சின்ன கண்ணனுக்கு என்ன வேண்டும்':
http://www.youtube.com/watch?v=rvv94aGI_zs
Ultimate & Evergreen Pairன் Most Handsome & Ultimate Chemistry, நடிகர் திலகத்துடன் நாட்டியப் பேரொளி:
"மரகத(1959)"த்திலிருந்து 'எந்தன் கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு':
[இப்பாடலை YOUTUBEல் தரவேற்றிய வாசு சாருக்கு நமது நன்றிகள்..!]
http://www.youtube.com/watch?v=z7110AGgpb0
அன்புடன்,
பம்மலார்.
பத்து. நடிகர் திலகத்தைப் பற்றிய திரிக்கு பாகம் எண் பத்து. என் நினைவு ஆறு வருடங்களுக்கு முன் உள்ள காலத்திற்கு ஓடுகிறது. அன்று நான் முதல் முதலில் பதிவிட்டது இந்த திரியின் முதல் பாகம் பக்கம் எண் 60-ல். இன்று அந்த திரி ஆறு வருடங்களில் ஆயிரக்கணக்கான பக்கங்களை கடந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கொண்டுள்ள ஒரு திரியாக, இணையத்தை பொறுத்தவரை நடிகர் திலகத்தைப் பற்றிய ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணப்பூர்வமான ஒரு திரியாக வளர்ந்து, நான் பல முறை குறிப்பிட்டுள்ளது போல the thread of the Hub என்று சொல்லக்கூடிய வகையில் விளங்குகிறது. இதற்கு காரணமான அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் திரியின் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த பத்தாம் பகுதியை மிக மிக பொருத்தமாக துவக்கி வைத்திருக்கும் வாசுதேவன் அவர்களைப் பற்றி நான் சொல்லி மற்றவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ரசிகர் என்றால் அப்படி ஒரு ரசிகர். அந்த ரசிப்பு தன்மைக்காக தான் ரசித்ததை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த காட்சிகளை இங்கே தரவேற்றுவதில் அவரின் உழைப்பு அசாத்தியமானது. வாழ்த்துக்கள் வாசு சார். தொடர்ந்து கலக்குங்கள்.
மற்றொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். நீங்கள் தரவேற்றியுள்ள தங்கை சண்டைக் காட்சி. அதிலும் நீங்கள் சொன்னது போல தன்னை அடித்த ரவுடியின் முகத்திற்கு நேரே இரண்டு கைகளையும் நீட்டி கை தட்டி விட்டு அவர் கொடுக்கும் பன்ச்கள் இருக்கிறதே, பல முறை தியேட்டரிலும் டிவிடியிலும் நான் ரசித்துப் பார்த்து, நமது இந்த திரியில் தங்கை படத்தைப் பற்றிய விமர்சன பதிவிடும் போதும் ரசித்து எழுதிய அந்த காட்சியை தரவேற்றியதற்கு நன்றிகள் பல.
அது போல் நீங்கள் சாந்தியில் கண்ட பதாகையைப் பற்றியும் சொல்ல வேண்டும். ராகவேந்தர் சாரால் உருவாக்கப்பட்டு சாந்தியில் வைக்கப்பட்டிருக்கும் இந்த பதாகையில் நமது திரியின் ஆரம்ப கால சாரதியும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகருமான ஜோ அவர்களின் பின்னூட்டமும் இடம் பெற்றிருக்கிறது.
ஜோ,
சாந்தி வளாகத்தில் உங்கள் பெயர் இடம் பெற்று விட்டது. நடிகர் திலகம் வெள்ளை பாண்ட்டும் நீளமும் சிவப்பும் கலந்த டி- ஷர்ட்டும் அணிது நிற்கும் அந்தப் புகைப்படத்திற்கு அருகில் " சிவாஜி அய்யா புகழ் வாழ்க" என்று நீங்கள் எழுதியுள்ள பின்னூட்டம் பதியப்பட்டிருகிறது. வாழ்த்துக்கள்.
நமது திரியின் பங்களிப்பாளரும் நடிகர் திலகத்தின் மூத்த ரசிகருமான சுப்ரமணியன் ராமஜெயம் அவர்களின் பின்னூட்டமும் அந்த பதாகையில் இடம் பெற்றிருக்கிறது.
கடந்த ஒரு மாதமாக என் பதிவுகள் இடம் பெறாததால் அதை பற்றி விசாரித்து என்னை திரிக்கு அழைத்த கார்த்திக் மற்றும் கோபால் அவர்களுக்கு நன்றி.
எனக்கு தனிப்பட்ட அன்பு வேண்டுகோள் விடுத்த சகோதரர் செந்தில் [ஹரிஷ்] அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள். கணினியில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு மற்றும் வேலைப்பளு காரணமாக இங்கே வர முடியவில்லை.
திரியின் புதிய வரவுகளான சிவாஜி செந்தில் மற்றும் [பாரிஸ்டர்] சுப்ரமணியனுக்கு நல்வரவு.
நடிகர் திலகத்தின் சாதனை செப்பேடுகளின் ஆவண காப்பாளரும் இந்த திரியின் நெடுந்தூண்களில் ஒருவருமான அருமை சகோதரர் சுவாமிக்கு நன்றிக்கு எல்லாம் அப்பாற்பட்ட நன்றி.
அன்புடன்
Welcome Back, Murali Sir..!
Thanks For Your Compliments..!
நயாகரா நகர மேயரின் மே மாத நற்காவியங்கள்
பொக்கிஷப் புதையல்
புண்ணிய பூமி [12.5.1978 - 12.5.2012] : 35வது உதயதினம்
அரிய நிழற்படம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5921-1.jpg
எமனுக்கு எமன் [16.5.1980 - 16.5.2012] : 33வது ஜெயந்தி
'இன்று முதல்' விளம்பரம் : முரசொலி : 16.5.1980
http://i1110.photobucket.com/albums/...GEDC5915-1.jpg
வசந்தத்தில் ஓர் நாள் [7.5.1982 - 7.5.2012] : 31வது ஆரம்பதினம்
பட விளம்பரம் : தினத்தந்தி : 1.11.1978
http://i1110.photobucket.com/albums/...GEDC5919-1.jpg
சரித்திர நாயகன் [26.5.1984 - 26.5.2012] : 29வது ஜெயந்தி
'இன்று முதல்' விளம்பரம் : The Hindu : 26.5.1984
http://i1110.photobucket.com/albums/...GEDC5916-1.jpg
நேர்மை [3.5.1985 - 3.5.2012] : 28வது உதயதினம்
பட விளம்பரம் : பொம்மை : அக்டோபர் 1984
http://i1110.photobucket.com/albums/...GEDC5920-1.jpg
அன்புள்ள அப்பா [16.5.1987 - 16.5.2012] : 26வது ஜெயந்தி
'இன்று முதல்' விளம்பரம் : தினமணி : 16.5.1987
http://i1110.photobucket.com/albums/...DC5917-1-1.jpg
சின்ன மருமகள் [23.5.1992 - 23.5.2012] : 21வது துவக்கதினம்
முதல் வெளியீட்டு விளம்பரம் : தினகரன் : __.5.1992
http://i1110.photobucket.com/albums/...GEDC5918-1.jpg
பக்தியுடன்,
பம்மலார்.
"பாசமலர்",
அதற்கடுத்து mr_karthik அவர்களின் அன்புக்கட்டளையின்படி "ராஜா",
அதன் பின்னர் ஒரு சர்ப்ரைஸ் பதிவு,
Then Golden Actor's GOLD MEDAL & Other June Treasures.
Dear Pammalar Sir,,, I used to really wonder how these things are possible from your side! thanks for the feast to the eyes! Certain observations regarding the on-screen 'chemistry' of our heroines with NT:
Only in NT movies heroines Saroja Devi or Savithri or Sowcar or Jayalalitha or Manjula were not just used a glamorous show-pieces to attract crowds aiming at collections. For instance, NT realized the acting potentials of Padmini or Devika or Saroja Devi and one can feel the difference in her acting with MT and NT or GG. In most of the MT movies Saroja Devi was just used as a glamour girl, without any scope for exhibiting her acting potentials. With NT she paraded her full geared talents of acting in Palum Pazhamum., Bagappirivinai, Pudhiya Paravai, and what not! With GG can anyone ever forget her ace performance in Kalyana Parisu? NTs magnanimity and generosity had always helped polish the latent talents of our heroines. In Padukappu movie NT allowed JJ to showcause all her talents. Manjula's acting in avanthan manithan, mannavan vanthanadi and Uthaman are needless to mention compared to her glamour exposures in Rikshawkaran and a couple of MT movies. Sowcar's performance in Uyarndha Manithen, Pudiya Paravai, Iru Kodugal.... compared to her wasted performance in Olivilakku where she was just used to praise the hero's popularity! Padmini's peformance in Uthamaputhiran, thillana mohanambal, vietnam veedu... Devika's acting calibre in Neelavanam, Karnan, andavan kattalai, bale pandiya.... Can one quote a single movie with MT in which these actresses were allowed to enjoy their freedom of good acting? NT never cared for who was his heroine but cared only to carve their acting skills to match his inimitable sphere of acting like a sculptor carving a stone into a statue!
The title should be slightly changed: NT never cared for exposing his heroines but for bringing out the latent talents of them!
sorry for the oversight mistake I did!
http://magickalgraphics.com/Graphics...comeback46.gif
"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே!"
என்ற தாயுமானவர் வாக்குக்கேற்ப தன் அன்பால் எங்கள் எல்லோரது மனங்களிலும் நிறைந்து குடியிருக்கும் முத்தான முரளி சார் அவர்களே! வருக! வருக!
முத்தான முரளி சார்,
சற்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு தாங்கள் திரிக்குத் திரும்பியுள்ளது பெரும் மனமகிழ்ச்சியை அளிக்கிறது. நீங்கள் இல்லாமல் ஏதோ கை உடைந்து போனது போல ஆயிற்று. இப்போது எல்லாமே சரியாயிற்று. பத்தாவது பாகத் துவக்கத்திற்கு தாங்கள் அளித்துள்ள வாழ்த்துக்களுக்கும் , பாராட்டுக்களுக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றி!
'தங்கை' சண்டைகாட்சி தங்களைக் கவர்ந்தது போலவே என்னையும் சுண்டி இழுத்த ஒரு அற்புதம். அந்தக் காட்சியின் மூலம் தங்களை சந்தோஷப்படுத்த முடிந்தது என்னுடைய பாக்கியம். தங்களைப் போன்ற திரியின் சீனியர்கள் வழங்கும் ஆசிர்வாதங்கள் தலைவரின் ஆசிர்வாதங்களுக்கு இணையானவை.
தாங்கள் வந்த உற்சாகத்தில் குதூகலிக்கும்
நடிகர் திலகத்தின் பக்தன்,
வாசுதேவன்.
முரளிசார்,
உங்கள் மீள்வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது .
ராகவேந்திரர் ஐயா அமைத்த பதாகையில் என்னுடைய அந்த ஒரு வரி கருத்தை அவதானித்து பகிர்ந்தது எதையும் உற்று நோக்கி மனதில் பதிந்து கொள்ளும் உங்கள் சிறப்பான ஆற்றலுக்கும் , குறிப்பாக என் மீது நீங்கள் காட்டும் பரிவுக்கும் சான்று .நன்றி
http://i1087.photobucket.com/albums/...12-1349001.jpg
செல்வா,
இதில் மேலேயுள்ள படத்தில் நடிகர் திலகத்தின் இடது கையருகே என்னுடைய எந்த சிறிய பின்னூட்டம் தெரிகிறது
Welcome back mr murali sir. We need more contributions from younsters like you in the thread.
hearty welcome to senthil barrister subramaniam. seniors mr joe mr raghavendran and kartik are also giving their contributions regularly. sarada madam sill absent.
we will make this NADIGAR THILAGAM THIRI A MEMORABLE ONE FORTHE PRESENT AND FUTURE GENERATIONS. PAMMALAR AND VASUDEVAN CONTINUES TO BE OUR TWO EYES ALWAYS.
MEGA SUCCESS OF KARNAN has further boosted our writings.
LONGLIVE NADIGARTHILAGAM.
நேற்று இரவு 'ராஜா ராணி' குறுந்தகடு பார்த்தேன்.SSரஜெந்திரன் ஆரம்பத்தில் வருகிறார்-ஒரு நாடக
குரூப் நடதுபவரஹா. அதில் அவரும் நடிக்கிறார்.
பின் நமக்கு நம் கடவுள் எப்போ வருவர் என்று கேள்வி
படம் ஆரம்பித்து 10௦ நிமிடம் ஆஹிவிட்டதே. பத்மினி
introduction ஆஹி விட்டது.
பின் ஒரு நாடக அரங்கு. ஒரு நடிகர் கேமராக்கு முதுகு காட்டி
நிற்கிறார். ராஜசுல்ச்சனா அருகில் நிற்கிறார். அந்த நடிகர்(nam Sivaji)
திரும்பி பார்த்து, வசனம் (சேரன் செங்குட்டுவன்) பேச ஆரம்பிக்கிறார்.
அனல் தெரிkirathu. 1956 இல் ரிலீஸ் ஆன படம் என்று நினைக்கிறேன்
அப்போதே யார் முன்னணி நடிகர் என்பதை டைரக்டர், ப்ரோடுசெர், மக்கள்
தீர்மானம் செய்து விட்டனர போலிருகிறது.
நேஷனல் pictures (பெருமாள்) தயாரிப்பு
புண்ணிய பூமி, எமனுக்கு எமன், வசந்தத்தில் ஓர் நாள், சரித்திர நாயகன், நேர்மை, அன்புள்ள அப்பா, சின்ன மருமகள், என்று ஒரு அழகிய பூ மாலையாக தொடுத்து வழங்கிய பம்மலார் அவர்களுக்கு நன்றி.