ஜெயமோகன் படைத்த "அறம்" சிறுகதையை இன்று பஸ் பிரயாணத்தில் வாசித்தேன். மனதைத் தொட்டது..
http://www.jeyamohan.in/?p=11976
Printable View
ஜெயமோகன் படைத்த "அறம்" சிறுகதையை இன்று பஸ் பிரயாணத்தில் வாசித்தேன். மனதைத் தொட்டது..
http://www.jeyamohan.in/?p=11976
சுமாரான கதை.
monologue-இல் சிக்கி உள்ளிழுக்கப்பட போதுமான வசீகரம் இல்லை.
உக்கிரமான மனநிலை என்பதை நம்பவைக்க கொஞ்சம் பிரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனால் அது அவ்வளவு சிறப்பாக வெற்றிபெறவில்லை. உற்றுநோக்கும் பறவை சிறுகதையில் பங்கஜகாக்ஷன் நம்பி தன் நம்பிக்கையை ஆவேசமாக எடுத்துரைக்கும் ஒரு இடம் வரும். படிக்கும்பொழுது நெருடலாகவே தோன்றாது. இங்கு என்னதான் 'எங்கிருந்துதான் ஆவேசம் வந்ததோ தெரியவில்லை' என்ற ரீதியிலெல்லாம் எழுதினாலும் அந்த நம்பகத்தன்மையைக் கொண்டு வர முடியவில்லை.
வழக்கம்போல சூழல் சித்திரங்கள் அழகாகவும், lead up conversations நன்றாகவும் வந்திருந்தன. (எனக்கு அப்படி ஒண்ணும் வயசாயிடலை). பிற்பகுது fizzle ஆகி விட்டது.
One feedback from a reader
திரு ஜெ,
அறம் கதை எனக்கு சரியாகப் படவில்லை. அதில் மனிதர்களின் சுயம் தான் தெரிகிறது. அந்த செட்டி பெண் தன் வம்சம் பற்றின கவலையும் அவளின் மூட நம்பிக்கையையுமே சுயத்தை அதீதம் ஆக்கி விட்டு இருக்கிறது. அந்த புலவர் தப்பானவனாக இருந்தாலும் அவள் இந்த முடிவையே எடுத்து இருக்க கூடும். இங்கே எங்கே அறச்சிந்தனை தோன்றியது.
முத்துகுமார்
முத்துக்குமார்,
தெரியவில்லை. நான் அந்த அளவுக்கு பகுத்தறிவுடன் சிந்திப்பதில்லை. கொஞ்சம் மூடநம்பிக்கை உண்டு. பொதுவாக இலக்கியம் வாசிக்க கொஞ்சம் மூடநம்பிக்கை தேவை. நீங்கள் செய்தித்தாள்கள் வாசிக்கலாமே
ஜெ
venkiram :lol:
ஒரு குசும்பர்யா நீர்
"நான் ‘மூணுநாளிலே ஒரு புக்கா?’ என்றேன். ‘எழுதினேன். இப்ப எனக்கே ஆச்சரியமா இருக்கு. பையனுக்கு ஒரு லெட்டர் போடணும்…ஏழுநாளாச்சு. இன்லண்டிலே நாலுவரி எழுதி அப்டியே வச்சிருக்கேன்…ஆனா அப்ப சாமிவந்தவன் மாதிரி எழுதினேன். ராமுழுக்க உக்காந்து எழுதுவேன். ஒரு நாளிலே நூறுபக்கம்வரை கூட எழுதியிருக்கேன். கை சலிச்சு ஓஞ்சிரும். காலம்பறபாத்தா புறங்கை வீங்கி மெதுவடை மாதிரி இருக்கும். அப்ப நான் சொல்லி என் பொண்ணும் பையனும் எழுதுவாங்க. மூணுநாளைக்கு ஒரு புக்கு வீதம் கொண்டுவந்து கொடுப்பேன். காலையிலே பிரஸுக்கு போயி புரூஃப் பாத்துட்டு மத்தியான்னம் பிரஸ்லேயே ஒரு தூக்கம். நேரா நடந்து லைப்ரரி போயி அடுத்த புக்குக்குண்டான மூலபுத்தகத்த எடுத்துட்டு வீட்டுக்கு போனா ஒரு காபிய சாப்பிட்டுட்டு எழுத உக்காந்திருவேன். படிக்கிறதும் எழுதறதும் எல்லாம் ஒரே சமயம் நடந்திட்டிருக்கும். சிலசமயம் விடிஞ்சாத்தான் எந்திரிக்கிறது…"
"ஆனாலும் கடைசி ரெண்டுவரியும் ஞாபகத்திலே இருக்கு.’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்’
"கடனை வாங்கி தொழில்செய்றவன்கிட்ட போயி மொத்தமா பணத்தை கேட்டது என் தப்புதானேன்னு நினைப்பு ஓடுது’"
"அன்னிக்கு படி எறங்கினவன் அதுக்கு முன்னாடி இருந்த நான் இல்ல. செத்து பொழைச்சேன். அப்ப தெரிஞ்சுது சொல்லுன்னா என்னான்னு. அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம்"
--------------
The above portions really moved me.. what a great narration Jeyamohan brings into?
During second reading, I found a logical mistake. You people can confirm it.
At the time periyavar cursed the chettiyar wife with a harsh veNbaa, it says "நான் எழுதின முதல்செய்யுளும் அதுதான். கடைசிச் செய்யுளும் அதுதான். பாட்டு நினைவில இல்ல. அதை மறக்கணும்னுதான் இருபத்தஞ்சு வருஷமா முயற்சிசெய்றேன். ஆனாலும் கடைசி ரெண்டுவரியும் ஞாபகத்திலே இருக்கு.’செட்டி குலமறுத்து செம்மண்ணின் மேடாக்கி எட்டி எழுகவென் றறம்’ "
But at the end of the story, periyar says "தர்மம் இருக்கிறது வீட்டிலே அய்யா. தர்மபத்தினின்னு சும்மாவா சொன்னாங்க.ட்டுன்னு வெண்பா வந்துட்டுது. சடசடன்னு பேப்பரை எடுத்து எட்டு பாட்டு எழுதிட்டேன். அத ஆச்சி கையிலே குடுத்தேன். ரெண்டு கையாலே வாங்கி கண்ணுலே ஒத்திக்கிட்டா’".
So he actually wrote 2 poems in his life.
கடைசி சந்திப்பில் எட்டு வெண்பா வந்துருச்சுன்னு சொல்லிருக்கார். அப்போ மொத்தம் ஒன்பதா?
ஒரு வேளை அது எட்டு வெண்பாக்கள் அடங்கிய செய்யுளோ என்னமோ. அப்படி பார்த்தாலும் ரெண்டு செய்யுள் எழுதிட்டார்.
நம்ம ரொம்ப பிளிற ஆரம்பித்தால் ஜெமோ உடனே "பெருசுக்கு அல்ஸைமர் வியாதி"ன்னு பிளேட்டை மாத்திடுவார்.
http://www.jeyamohan.in/?p=12144
somebody please post here what A.muthulingam said about aRam?
From Muthulingam's site. The link is in the article by JeMo.
Quote:
முன்பெல்லாம் கடிதங்கள் வரும். 'ஐயா ஒரு நல்ல சிறுகதை எப்படி எழுதுவது?' என்னுடைய பதில் இப்படி இருக்கும். 'முதலில் தமிழில் வந்த 500 சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யுங்கள்.' இப்பொழுது கடிதம் வந்தால் இப்படி எழுதலாம் என்று இருக்கிறேன். 'ஜெயமோகனுடைய பத்து சிறுகதைகளையாவது படியுங்கள். பின்னர் எழுத முயற்சி செய்யலாம்.' அதுவும் முடியாவிட்டால் ஒரேயொரு சிறுகதையையாவது படியுங்கள். ஜெயமோகன் எழுதிய அறம் என்ற சிறுகதை. சகல அம்சங்களும் பொருந்திய சிறந்த சிறுகதை அது.
ஆதியிலிருந்து புலவர்கள் ஒரு புரவலரைச் சார்ந்து இருக்கவேண்டிய நிர்ப்பந்தம். ஊர் ஊராகச் சென்று புலவர்கள் மன்னர்களின் வாசல்களில் பாடல்களை வைத்துக்கொண்டு நின்றார்கள். சோற்றுக்கும், கூழுக்கும் துணிக்கும் பாடினார்கள். அச்சு யந்திரம் வந்தபிறகு எழுத்தாளருக்கு பதிப்பாளரின் தயவு வேண்டியிருந்தது. பதிப்பாளர் தரும் பணம்தான் எழுத்தாளரின் வருமானம்.
2000 வருடங்கள் கடந்தும் எழுத்தாளரின் நிலைமை மாறவேயில்லை. அதேதான்.
Thanks complicateur
no wonder for JeMo's புளகாங்கிதம்.
expecting something from Charu
இது வரை இவரது கட்டுரைகள் தவிர கதையோ புதினங்களோ படித்ததில்லை.
எல்லாரும் இங்கே பேசறதால் அறம் படிச்சேன்.
படு சுமார்.
இது தான் சிறு கதைக்கு பெஞ்ச் மார்க்'னெல்லாம் சொல்லுறது ரொம்ப ஓவர்.
ஜெயமோகனின் 'உலோகம்' புதினத்தை - தமிழ்நதி என்னும் ஈழத்தமிழ்ப்பெண் எழுத்தாளர், இணையத்திலும் தொடர்ந்து எழுதுபவர் - கட்டவிழ்த்திருக்கிறார்.
http://tamilnathy.blogspot.com/2011/...g-post_27.html
இப்போது தமிழ் மீனவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் ஜெமோ -வின் எழுத்தைக் கொண்டாடுபவர்களுக்கு அவருடைய "நுண்ணரசியலைப்" புரிந்து கொள்ள மேற்சொன்ன கட்டுரையை வாசிக்கலாம்.
For me, the connection between me and JeMo is 'Gandhi'. It is very strong and i will be connected to any person who loves Gandhi and his principles (and also applicable to Ilaiyaraja :))
and geno, there was an article from JeMo for Ezha tamil issue, have you read that?
i will also agree to an extent that 'aRam' is sumar. first half thandurathukku konjam kastapatten but the impact it gave towards the end was something unusual and i should say that the usage of words and sentence formation was just superb.
அறம் நல்லாவே வந்திருக்கு. ஒருவர் தனது கடந்த கால அனுபவத்தை இந்த அளவுக்கு சுவையா சொல்லாமுடியாது. பெரியவர் நிகழ்வுகளை மட்டுமே சொல்லிச் செல்லாமல் அதை பின்னாளில் அசை போட்டதையும் சொல்வது சிறப்பு. "கடனை வாங்கி தொழில்செய்றவன்கிட்ட போயி மொத்தமா பணத்தை கேட்டது என் தப்புதானேன்னு நினைப்பு ஓடுது’". இங்க தான் ஜெமோ நிற்கிறார்.
சோற்றுக்கணக்கு : சிறுகதை
சொந்த மைதானத்தில் சதம் அடிப்பது போல.. ஆனால் இதில் ஜெமோ அடித்திருப்பது இரு சதங்கள். அறம் எட்டடி என்றால் சோற்றுக்கணக்கு பதினாறு அடி.
ஒரு சிறுகதையை படிக்கும் போது இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டதில்லை. என்ன வரிகள்டா இது? சிலிர்க்க வைக்கிறது! ஜெமோ உன் எழுத்துக்கு முன்பு சாஷ்டங்கமாக விழுவதைத் தவிர வேறேதும் தெரியவில்லை.Quote:
"கடை திறந்ததும் உள்ளே சென்று உண்டியலில் பணத்தை போட ஆரம்பித்தேன்.........மொத்தப்பணத்தையும் போட்டபின் கைகழுவிவிட்டு வந்து அமர்ந்தேன்."
"சோற்றுக்கணக்கு" - கெத்தேல் சாகிப் பகுதிகள் அருமை (ஜெயமோகன் கட்டுரை எழுதுவதில் வல்லுநர் என்பதால் இதில் பெரும் பகுதியும் அவர் கேட்ட உண்மைச்சம்பவங்கள் ஆக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.)
மற்றபடி, அவர் எழுதி இருக்கும் கற்பனைப்பகுதிகள் மிகச்சாதாரண ரகம்.
திரையுலக உறவு அவரது கதைகளில் 'மிகைப்படுத்தல்' என்ற ஒரு குழப்பத்தை உண்டாக்கி இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது.
திரைப்படத்துக்கு மிகைப்படுத்தலும், சிறுகதை எழுத்துக்கு யதார்த்தமும் அவசியம்.
இன்னொன்று - இந்த ஃபிளாஷ்பேக் முறை அவருக்குப்பிடித்தமனதாக இருக்கலாம்.
ஆனால், என் கருத்துப்படி, சிறுகதை படிப்போருக்கு 50% த்ரில் / எதிர்பார்ப்பு போய் விடுகிறது.
அதனால் கொஞ்சம் ஆயாசம் / நீளம் கூடுதல் என்ற உணர்வு எல்லாம் வருகிறது.
அறம் கொஞ்சம் சவசவ என்று இருந்தது. கெத்தேல் சாகிப் கதை மிகப் பிடித்திருந்தது. எந்த வகை reciprocityயும் இல்லாது (வாழ்க்கையைப் போலவே) முன்செல்வதை unnerving-காக சொல்லிச்சென்றிருப்பார்.
I liked how he pulled up a reader yesterday for 'not getting the point' but still claiming to have enjoyed the story. ஒரு எழுத்தாளன் 'விளக்கம்' சொல்ல நேர்வது அவனுக்கு கொஞ்சம் துர்பாக்கியமானது தான். ஆனால் படைத்துவைத்ததில் பூரணமாக ஆழாமல், ஆனால் ருசித்துவிட்டதாக நினைத்து, ருசிக்க அவ்வளவு இருந்தால் கூட போதும் என்று எதிர்பார்த்து (இப்போதெல்லாம் அவ்வளவு இருந்தாலே பெரிது என்பதால் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம்!) நகர்பவர்களை சட்டையைப் பிடித்து உலுக்கியதுபோல இருந்தது. 'உங்களுக்கு எப்பிடி புடிச்சாலும் எனக்கு சந்தோஷம், நான் எழுதிட்டேன் இனி உங்களுது' அப்பிடின்னெல்லாம் விட்டுற முடியாது.
கடைந்த கீரையும், தொடர் பசியின் வாய்கசப்பும், செதிலிலிருந்து எடுக்கப்பட்ட கொழுப்பு ஊற்றப்படும் விதமும் தெரியும் அளவு நுட்பமான சித்தரிப்பு. 'உனக்கும் மரியாத எனக்கும் மரியாத' என்று வெறுப்பில் கூட விட்டுவிடமுடியாத குறைந்தபட்ச, பேச்சளவு நாசூக்கு எல்லாம் சிறப்பாக வந்திருந்தன. செய்யாததைச் செய்ததாகச் சொல்பவள் மனதறிந்து பொய் சொல்லவில்ல்லை. பூரணமாக நம்புகிறாள். ஞாபகத்தில் தன்மை அப்பிடித்தான். அதற்கும் 'உண்மை'க்கும் கொஞ்சம் சிக்கலான உறவு. உடன்வாழ்வோரின் ஞாபகங்களையும், மனப்பதிவுகளும் அனுசரித்து வாழும் போது for all practical purposes அது தான் உண்மை என்றாகிறது. அதற்கு மேல் உண்மையின் தன்மை என்பது ஒரு academic point மட்டுமே.
ஊர் பொறுக்கி ஓரிரு வரிகளில் அறிமுகமாகி, அடிவாங்கி, நிலைகுலைந்து சாகிறான். சாகிப்பை கேட்க வருபவர்களை தடுக்கும் ஊர்ப்பெருசு சொல்லும் எதிர்வாதம் :lol: அவரவர்க்கு அவரவர் தர்க்கம். இவை அனைத்தும் cardboard சித்திரமாக இல்லாமல் 'நிஜம் போல' இருந்தது (அவர் சொற்களில் 'நிகரனுபவம்). இவை இல்லாமல் எழுத முனைபவர்களைப் படிக்கவே கடுப்பாகிறது.
சோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்
how true.Quote:
சிறு துளி அனுபவமும் இல்லாவிடில் இந்த கதை உள்ளிறங்காது. அது பசியின் அனுபவமாக இருப்பினும், பசித்த வயிற்றுக்கு உணவு அவமதிக்கப்பட்ட அனுபவமாக இருப்பினும், பசிக்கு உணவிட்ட அனுபவமாக இருப்பினும், .. எந்த அனுபவமாக இருப்பினும் சரி
சோற்றுக்கணக்கு அபாரம். இந்த கதையில் அறியப்படும் சில வலிகளை நான் அனுபவித்து இருக்கிறேன். சில இடங்களை மிகவும் ரசித்தேன். குறிப்பாக
அப்புறம்Quote:
தம்பானூர் ரயில் நிலையத்திற்குச் சென்று நாளெல்லாம் இரும்புச்சத்தத்தைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன்
..
அந்த நாயின் கறியை எடுத்துக்கொண்டுபோய் குடோன் பின்பக்கம் கல்லடுப்பு கூட்டி சுட்டு தின்பதைப்பற்றி கற்பனை செய்தேன்
..
ஏதோ திருட்டுத்தனம் செய்ய வந்தவனைப்போல உணர்ந்தேன்
இதை இங்கு எத்தனை பேர் அனுபவித்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு இப்போது நினைத்தாலும் ஒரு வெறுமை மனதில் வரும்.Quote:
என் கைகால்கள் பதற ஆரம்பித்தன. சோறு தொண்டையில் அடைத்தது
எதிர் கோஷ்டி (சாரு) ஆள் மாமல்லனின் எதிர் வினை
கிட்டத்தட்ட அப்_எஞ்சின் கருத்து போல் உள்ளது. என்னை பொறுத்த வரை 'உணர்ச்சி வசப்படுத்தல்' கண்டிப்பாக இலக்கிய வகை. அப்புறம் இந்த சிறுகதைகள் சிந்திக்க வைக்க வில்லை என்பது பொய்Quote:
சிந்திக்க வைப்பது இலக்கியம் - மூக்கு
சிந்த கைக்குட்டை எங்கே எனத் தேட வைப்பது பரப்பிசை
அறம், சோற்றுக்கணக்கு இரண்டிலும் என்பது தான். பாலா பட போல. சோற்றுக்கணக்கு சேரன் கையில் கிடைத்தால் பிழிந்தெடுப்பார். நல்ல சினிமாவாக படைக்கலாம்.
அடடே, நான் 'மிகைப்படுத்தல்' பற்றி அல்லவா சொன்னேன்?Quote:
Originally Posted by San_K
உணர்ச்சிவசப்படல் பற்றி எங்கே சொன்னேன்? இன்னும் சொல்லப்போனால் உணர்ச்சி வசப்பட வைக்கவில்லை என்பது தான் எனக்கு இந்தக்கதைகளில் உள்ள கோளாறு.
அதாவது கெத்தேல் உண்மைக்கதையை விட்டு விட்டு மிச்சம் பகுதியைப் பார்த்தால் எனக்கு ஒரு ரோமாஞ்சமும் இல்லை என்பது தான் குழப்பம் :-)
app,
மிகைப்படுத்தல் பற்றி நீங்கள் சொல்வதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை.
கேத்தேல் சாகிப்பின் உண்டியலில் அத்தனை பணத்தையும் கொட்டி விடும் நிகழ்ச்சியை அந்த கதைக்கே உண்டான இயக்கத்தில் மிக முக்கியமானது. அது
மிகைப்படுத்தாலாகவும் தெரியலாம். ஆனால் கதையின் உண்மையான உச்சம் அங்கு இல்லை. கணக்கெடுக்காத ஒருவருக்கு கையிலடன்காத செல்வம் கொடுப்பதும் சுயத்துக்காகத் தான். இது மிக நன்றாகவே கதையில் வந்திருக்கிறது. ஒரு உச்சம் ஒரு முரணை இவ்வளவு நன்றாக உணர்த்துவது மிக கடினம். ஒற்றை வரியில் ராமலட்சுமியை கல்யாணம் செய்துவிடும் நிகழ்ச்சி கடந்து விடுகிறது. வாழ்க்கையிலும் சில உண்மையான உச்சங்களை உணராமலே கடந்து விடுகிறோம். அதுவும் மிக துல்லியமாக உணர முடிகிறது. இதெல்லாம் கதைக்கு (திரையாகட்டும் இலக்கியமாகட்டும்) தேவையில்லை என்றால் என்னை போன்றவர்களுக்கு உறைக்குமா என்றே சந்தேகம் தான்.
While P_R is quite happy with Jeyamohan explaining (?) the story to the reader, I sort of get where that reader was coming from. He is looking for a summation at the end which sort of logically ties down what happened earlier or atleast explains the writer POV or philosophy. He finds a confusion there. The ending seems to indicate that the protagonist married Ramalaxmi because of 'sotru kanakku'. The question in the readers mind must be this: "If you take help from someone and they help you but treat you like shit, do you still owe then something." I am sure this is a question many of us would ask, given that our parents may not have come from very rich background, there was no IT industry those days, and we may have been forced to take help from various people, all of whom would not have treated us kindly. The ending sort of tends to say that 'yes, you still are duty bound to them', which may have confused the reader. Contrast this to the ending of 'Aram'. It is very unambiguous. What it says is "However high be your morals, when you fight with someone whose morals are higher, you will lose." The old man has understood that and that is why he says, "Aram was with her." In short I fully appreciate what that reader wanted to say. And to be very honest the story does give rise to such an interpretation as I had outlined earlier. That is the failure of the author. Saying that the reader should read better doesn't cut ice.
Yes, both 'Aram' and 'Sotru Kanakku' have their emotionally intense moments. Yes, no one in this world can render the emotional intensity of a feeling as well as Jeyamohan can. Or atleast I haven't read anyone recently who can match Jeyamohan in this regard. Having said that, if it is only about emotional intensity and shared feelings then it is like high quality journalistic work, when dealing with real life incidents. 'Aram' rises above it to become a statement of the author. 'Sotru Kanakku', in my opinion, doesn't rise too much above that level. Having said that, you can never go wrong reading a JeMo story. And it is indeed a tribute to him that these stories have been discussed so widely. Personally I wouldn't rate these in his top ten stories.
As a contrast, if you can get hold of it, read Pa.Krishnaswamy's 'செலுத்த முடியாத கடன்' available in the first part of 'ஐம்பதாண்டு தமிழ் சிறுகதைகள்' edited by Sa.Kandaswamy. The contrast is with the short story 'Aram'. Krishnaswamy's short story talks about the same 'Aram' that JeMo talks about. The contrast is in the style of telling. In Krishnaswamy's tale, there are no emotional highs as in JeMo tale. It is told in such a way that the common-ness of it gets to you. You end up feeling this is the way 'Aram' actually works. Not with the bang of JeMo but with the whimper of Pa.Krishnamurthy.
I thought the eventual ending in sORRukkaNakku was quite clear.Quote:
Originally Posted by Suresh65
Throughout the interaction with Kettle Sahib, the narrator keeps paying when he doesn't have to pay. Always calculating when he is lagging, always more than his 'means' permit. Yet the sense of indebtedness is always there. He pays those who ask him to and those whom he does not. Paying and 'awareness that one is indebted' is pretty much equated: cogniszance of a reciprocity. Where a payment 'settles' a social quid-pro-quo and brings it to a closure.
The dramatic moment in the story when he loads the money makes no impact on the Sahib. He is still what he says. Kind of Rudyard Kipling's "If" level un-realness in treating non-payers and payers alike. I guess one would have expected the story to have ended there. A man who has paid all along, but he feels a cosmic indebtedness that needs a egregiously high repayment. Yet the 'cosmos', so to speak, moves along with characteristic indifference. Its like the concept of 'being obliged to' does not come from the act to which one feels obliged to but rather from one's own self.
If the story had ended here, the maximum peak would have been man's absurd scramble for balance and tallying.
Where the story really scales its fantastic peak is the extension beyond that. I truly loved how Subbamma is 'convinced' she fed the narrator. She is not even lying. It is her truth. Memory is a servant of circumstances. She wholeheartedly believes she 'took care' of the narrator and says so herself. Tries to perpetuate in him a sense of obligation. So even if he overcompensates like he paid the Sahib, is he ever going to compensate her enough? The futility of attempting to 'fully compensate' doesn't move him away from 'losing' to Subbamma, even after becoming a man of his own means (which is what the whole growing struggle was all about).
He is bound to be misunderstood by his parents (whose reactions to his job are fantastic!) and it is unlikely that Subbamma may consider his move an act of grace (as she strongly feels he owes her big time). And it is not as if he has forever broken the shackles of - to abuse the expression - social accounting. But this is one opportune திமிறல் against it.
Without getting this, IMO, the reading experience is grossly incomplete. And I liked it that JM said that.
My problem with அறம் is the kind of monologuish style and that the periyavar was not very appealing a character (can't put a finger on it). So I was not carried into the story as well as in சோற்றுக்கணக்கு.
அதுக்குள்ள இன்னும் ரெண்டு கதை எழுதிட்டாப்ல. ஒரு ஒரு மாசம் leave விடச்சொல்லணும். அப்பொதான் catch-up பண்ண முடியின். :-)
PR neeeenga engayoooooop' poittinga... :notworthy:
அறத்தை விட சோற்றுக்கணக்கு ஈர்த்தது.
:)Quote:
Originally Posted by "JeMo in சோற்றுக்கணக்கு”
SoaRRu kaNakku was really good but I didnt have the patience to read "aRam" - something was lacking and I lost interests half way through and stopped reading. Let me see if I can givea another try.
தாயார்பாதம் கதை -
என்னத்த சொல்றது .. எண்ணங்களை கொட்ட வார்த்தைகளை தேட வேண்டியிருக்கு . கதை முடியும் இடம் - கவிதையா இருக்கு . அறத்திற்கு அப்புறம் பெண் பாத்திரம் இடம் பெற்ற கதை . மனதை உலுக்கும் நிகழ்வுகள் . பல இடங்களில் மனசாட்சியிடம் பேசுகின்றன . இவ்வளவு அற்புதமா ஒரு தாத்தா பாட்டியின் குணத்தை அக்கு வேறா ஆணி வேறா எழுதிவிட முடியாது .
எனக்கு பிடித்த வரிகள்..
Quote:
அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’
Quote:
எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு…
Quote:
‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ரா…ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்’ னு மட்டும் சொன்னார்.
Quote:
அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது.
Quote:
அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது.
Quote:
ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்கு…அதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறது…தெரியலை.
Quote:
தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்
அறம், சோற்றுக்கணக்கு, தாயார் பாதம் படித்த மூன்றில் - எதையுமே தாழ்த்தி சொல்லமுடியவில்லை . அந்தந்த களத்தில் பல திசைகளில் கதை விரிவடைந்து கொண்டே இருப்பதால் கதைகளை இன்னொரு முறை வாசிக்கணும் என்ற எண்ணம் தொக்கி நிற்கிறது .
இன்னும் வணங்கான் கதை படிக்கவில்லை . வணங்கான் படித்து முடிக்கையில் அடுத்து மூன்று சிறுகதைகளை ஜெமோ எழுதித் தள்ளாமல் இருக்கணும் . இப்படி ராட்சசன் போல எழுதித் தள்ளுவது , இதற்கு இடையில் அந்தக் கதைகளுக்கான கடிதங்கள் வேறு.. இதெல்லாம் படிக்கணும் என்ற எண்ணத்தையே சிதைக்கும் வகையில் மலைப்பாக இருக்கிறது . இந்த லட்சணத்துல மீள் வாசிப்பு எல்லாம் எங்கே! எப்போ!
வணங்கான் மற்றும் யானை டாக்டர் இரண்டு சிறுகதைகளையும் படிச்சு முடிச்சாச்சி. நல்லதொரு மனவெழுச்சியைத் தரும் வாசிப்பு அனுபவங்கள். மனம் கனத்துப் போகிறது. சமுத்திரத்தை சிறு துளியில் அடக்கியது போல வார்த்தைகள் பிரமிப்பை பல முறை ஏற்படுத்தியது. நல்லதொரு சினிமா பார்த்தால் எப்படி இருக்குமோ அதுபோலவே ஜெமோவின் கதைகளை வாசிப்பதில் கிடைக்கிறது. யானை டாக்டர் வனத்தையும், வனம் சார்ந்த வாழ்க்கையையும் கண் முன்னே நிறுத்துகிறது. நிஜ மனிதர்களை மையமாகவோ, புறத்திலோ வைத்து புனையும் உத்தி மனத்தைக் கவர்கிறது. இந்த விஷயத்தில் ஜெமோவின் நேர்மை போற்றத் தக்கது. கிருஷ்ணமுர்த்தியையும் நேசமணியையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றிகள் பல. அறம் முதல் யானை டாக்டர் வரை நெகிழ்ச்சியான அனுபவங்களாக இருக்கிறது. சுகானுபவம். மானுடம் வெல்லும் என்பதை வணங்கானும், யானை டாக்டரும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஒரு எழுத்தாளர் வாழும் காலத்திலேயே நாமும் அவரது படைப்புக்களை வாசித்து இன்புறுவது ஒரு தனி சுகம். மரபைப் பேணும் ஜெமோவின் தன்மைக்கு வந்தனங்கள்.
வணங்கான் கதையில் ஜெமோ அங்கங்கே வைக்கும் நகைச்சுவைக் கண்ணிகளில் மாட்டிக்கொண்டு சிரிப்பதுண்டு.
Quote:
நேராக வந்து ‘என்னவே இது?’ என்று காகிதத்தை ஆட்டி காட்டினார். ‘கவர்மெண்டு பேப்பராக்கும். அப்டி ஆட்டப்பிடாது’ என்றார் அப்பா.
Quote:
எதிர்பாராதவகையில் படீரென்று ஒரு சல்யூட் அடித்தார்.
Quote:
அப்பா சிரித்தார் ‘போலே, அறிவுகெட்ட மூதி. ஏலே எனக்க உடம்பு முழுக்க ஆனைக்க வாசனையாக்கும். ஆனைமணம் கேட்டா ஒரு நாயிநரி அருவில வருமாலே? நான் பின்ன எப்டியாக்கும்லே ஏமானுக்க முற்றத்திலே இருந்து தப்பினென்? பன்னிரண்டு நாயாக்கும் காவலுக்கு. எல்லாம் எனக்க ஆனைவாசன கேட்டு வால கவட்டைக்கெடையிலே வச்சுகிட்டுல்லா ஓடிச்செண்ணு மூலையிலே இருந்துபோட்டு”
ரோமங்கள் எல்லாம் சிலிர்த்தெழும் கணங்களும் உண்டு.Quote:
‘லே அவன் சொன்னா என் தலய வெட்டுவியாலே?’என்றார் கணக்குப்பிள்ளை. ‘பின்ன? சார் சொன்னா வெட்டணுமின்னுல்லா சர்க்காரு சொல்லுகான். நீரு என்ன, பூஞ்ச பிள்ளவாள். சாரு சொன்னாருண்ணாக்க வந்து சமீன் தலைய வெட்டி கீழ வச்சிருவோம்லா? ஏது?’ என்றார் தேவர்.
Quote:
நான் இப்பதான் கேறி வந்து பிடிச்சிருக்கேன். இந்தப்பிடி எனக்க பிடியில்லவே, எனக்கும் எனக்கு பின்னால வாற ஏழு தலைமுறைகளுக்கும் சேத்து உண்டான பிடியாக்கும். இப்பம் நான் இத விட்டா எட்டு தலைமுறைகளாக்கும் கீழ விழுகது, கேட்டேரா? சாவுறதுக்கு நாடாரு ரெடியாக்கும்னு போயி சொல்லும்..போவும் வே’ என்றார்
Quote:
நான் செத்தா அது அப்டி தீராது வே . குளவிக்கூட்டிலயாக்கும் நீரு கைய வைக்குதீரு. கெளம்பி வருவோம் வே. அலையலையா பெத்து பெறந்து வந்துகிட்டே இருப்போம். எம்பிடு பேர நீரு சுடுவீருண்ணு பாக்குதோம்’ என்று அப்பா சொன்னார்.
ஆ- வென வாய் பிளந்து நிற்கும் இடங்களும் உண்டு.Quote:
ஒளியுடன் வானம் அவரை நோக்கி இறங்கி வந்தது.
Quote:
எனக்கு என் பிறப்பிலேயே நான் மீறமுடியாத ஆணை ஒன்றை அளித்தார்.
ஜெயமொகன் எழுதிய "கட்டு"ரையான -
ஐஸ்வரியா ராயும் அருந்ததிராயும்
http://www.jeyamohan.in/?p=10189
அதிலிருந்து சில பத்திகள் :
".....அருந்ததி ராயின் நிலைப்பாடுகளில் எப்போதும் மாறாமல் இருக்கும் இரு அம்சங்கள் உண்டு. இந்தியாவின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் எல்லா நடவடிக்கைகளுக்கும் அவரது ஆதரவு உண்டு. ஏன்? இந்திய ஒருமைப்பாட்டை முதல் எதிரியாகக் கொள்ளும் இரு சக்திகள் ஒன்று சீனா, இன்னொன்று கிறித்தவ மதமாற்ற அமைப்புகள். அருந்ததி எந்நிலையிலும் சீனாவுக்கோ மிஷனரிகளுக்கோ எதிரான எதையும் சொல்வதில்லை. இவ்விரு சக்திகளும் வடகிழக்கில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்று இந்த ஒத்துழைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பரவி இடதுசாரி தீவிரவாதமாக மாறியிருக்கிறது. அருந்ததி இந்த இரு சக்திகளின் ஊடகமுகம்.
ஆம், அருந்ததியை முதலில் ‘உலகப்புகழ்’ பெறச்செய்து, பின் நம் மீது சுமத்தி, நம் சிந்தனையை ஊடுருவியிருப்பது இந்தியாவை சிதிலப்படுத்த விரும்பும் மேலநாட்டுச் சக்திகளே என்று பொதுப்பார்வையில் உணர முடியும். அருந்ததி போராளி அல்ல.வெறும் ஊடகப்பிரமை மட்டுமே. அவர் இந்திய சமூகத்தின் மாற்றத்துக்காகவோ இந்திய மக்களின் முன்னேற்றத்துக்காகவோ போராடுபவர் அல்ல. அவரது நோக்கம் இந்தியாவின் அழிவு, இச்சமூகத்தின் சிதைவு. அதன் மூலம் உருவாகும் மாபெரும் அராஜகத்தில் இருந்து லாபம்பெற காத்திருக்கும் அதிகார சக்திகளின் ஐந்தாம்படை அவர்.."
இதற்கான காத்திரமான எதிர்வினை :
http://www.keetru.com/index.php?opti...008&Itemid=263
"... அருந்ததி ராயின் பழங்குடியின மக்கள் ஆதரவு எனும் அரசியலை மறுக்கவும், வைக்கம் போராட்டத்தில் பெரியாரது பங்களிப்பை மறுக்கவும் எவ்வாறு வக்கிரமாக அவர் வாதிடுகிறார் என்பது அவரது அரசியல் அதிகாரம் நோக்கிய செயல்பாட்டுக்கான சான்றுகள் என நாம் கருத வேண்டியிருக்கிறது. சமூகத்தின் பிற அதிகாரப் படிநிலைகளுக்குச் சவாலாகவும் சுயாதீனமாகவும், நேரடியிலான உறவு காணப்பட முடியாமல் நழுவிச் செல்லும் பண்புகொண்ட இலக்கியம், ஜெயமோகனிடம் அதனது அனைத்து பாசாங்குகளையும் உதறிவிட்டு பிரச்சாரமாக ஆகிவிடுவதை அவரது அரசியல் மற்றும் கருத்தியல் சார்ந்த கட்டுரைகளில் பார்க்கிறோம்.
இளையராஜா இலக்கியவிருது மாதிரியானதோ அல்லது விளக்கு அல்லது இயல் விருது மாதிரியிலானதோ அல்ல விஷ்ணுபுரம்இலக்கிய வட்டத்தின்செயல்பாடுகள். அதற்குப் பின்னால் ஜெயமோகனின் ஒரு உருவக சமூகம் இருக்கிறது. அந்த உருவக சமூகம் தமிழகத்தின் திராவிட மற்றும் இடதுசாரி மரபின் எல்லாவிதமான ஆக்கக்கூறுகளையும் கேவலமாக மதிப்பிடுபவை, அவமானப்படுத்துபவை, விகாரமாக வக்கிரத்துடன் எள்ளி நகையாடுபவை. இந்தக் காரணங்களாலேயே ஜெயமோகனது அரசியல்-கருத்தியல் செயல்பாடென்பது நுட்பமாக எதிர்கொள்ளப்படவேண்டும் என நாம் கருதுகிறோம். "
கோல்வால்க்கரினது வாசிப்பனுபவமும், மனுவின் நிகரனுபவமும் ஒருங்கே அமையப்பெற்ற சிலாக்கியத்தை ஏற்படுத்தும் ஜெமோ மற்றும் அவரது அடியார்களினது மானுட நேசம், கருணை மற்றும் இதமான பண்பு - நந்தனாரை கொளுத்திவிட்டு - அவர் சோதியில் கலந்துவிட்டதாக அருளாசி வழங்கினவர்களது - கருணையைச் சார்ந்ததாக இருப்பது ஒரு பொருட்டில்லை(தெற்குவாசல் திறந்தாச்சா?) .
எல்லையில்லா இவர்களது பெருங்கருணையை நம்மீது இன்னும் எத்தனை காலம் பொழிவார்களோவென அச்சத்தில் இருக்க வாய்த்ததும், கருணை வேண்டாமெனச் சொன்னாலும் விடாமல் வலிந்து பொழிவதும் தான் நமக்கு வாய்த்த வீடுபேறு போலும்.
மத்தளம் இதுவரை ஒரு புறத்திலிருந்தே அடிக்கப்பட்டது. இப்போ தான் எதிர்ப்புறத்திலிருந்தும் சத்தம் வர ஆரம்பித்திருக்கிறது. திடமற்ற கருத்தியக்கயங்கள் வரப் போகும் காலங்களில் சுவடு தெரியா வண்ணம் அழிந்தே போகும். எத்தனை நாட்கள்தான் மக்களிடம் நல்லிணக்கத்தை குலைக்கும் வண்ணம் கவர்ச்சி வார்த்தைகளால் ஏமாற்ற முடியும்? இனி வரும் காலங்கள் போலிகளை தோலுரித்து காட்டி விடும் வெகுஜன மக்களுக்கு.
தேடுதல் நேரத்தை குறைத்துக்கொள்வதில் அன்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் என..
அறம்
http://www.jeyamohan.in/?p=11976
சோற்றுக்கணக்கு
http://www.jeyamohan.in/?p=11992
தாயார்பாதம்
http://www.jeyamohan.in/?p=12269
வணங்கான்
http://www.jeyamohan.in/?p=12218
http://www.jeyamohan.in/?p=12220
யானைடாக்டர்
http://www.jeyamohan.in/?p=12433
http://www.jeyamohan.in/?p=12435
http://www.jeyamohan.in/?p=12439
தொடர்ந்து படித்தால் கொஞ்சம் சுமார் தான்.
ஒரு ideaவுக்காக வலிந்து உருவாக்கும் கதை, நிகழ்வுகள், உரையாடல்கள் என்கிற format சலிப்பு தட்டுகிறது.
கதை சொல்ல வருவது 'இது தான்' என்று reduce செய்ய முடியும் ஒரு coreஐ வைத்துக்கொண்டு பின்னப்படுவதே அவ்வளவு சிறப்பாக இல்லை.
தாயார் பாதம், வணங்கான் வரை தான் இதுவரை வந்திருக்கிறேன். தா.பா இவ்வகையில் reduce செய்யப்படக்கூடிய, அதற்குத் தோதாய் புனையப்பட்டது நன்றாகத் தெரிகிறது. ஒற்றைப்பரிமாண பாத்திர வார்ப்புகள். 'நிகரனுபவம்' எல்லாம் வாய்க்கவே இல்லை.
வணங்கான் சுவாரஸ்யமான கதை. எந்த level இல் pitch செய்வது என்று அங்கும் ஒரு குழப்பம் இருந்திருக்கிறது. வணங்கானின் அப்பாவை எவ்வயதிலிருந்து intellectualize செய்வது என்று தடுமாறியதாகத் தெரிகிறது. இல்லை 'சாதாரணமாக'ச் சொல்லப்பட்டதை வணங்கான் இன்று சொல்கிறபோது அவ்வாறு தெரிகிறதா என்ற குழப்பம் நீடிக்கிறது. வணங்கானின் அப்பா/தாத்தா வேலை செய்த பண்ணையில் ஜாதி அடுக்குகள், ஒடுக்குமுறை பற்றி விவரிக்கும் அந்த matter-of-factness நன்றாக வந்திருந்தது. அதே சமயம் 'பார்த்தாயா ஒரு எளிமையான மேல்Xகீழ் இருமை அல்ல, ஒரு வகை sequential ஒடுக்குமுறையாக்கும்' என்ற undertone ஒரு வித intellectualizationஐத் தருகிறது. திடீரென்று ஒரு ரெண்டு வரிகள் கதை நின்று, கட்டுரை படிப்பது போல இருந்தது :-) பண்ணையார் தேவரை கோமாளியாகக் காட்ட வேண்டும், சரி. அதற்கு: கபர்தாரா!!!?? என்ன காமெடி இது?
அவருடைய 'மாடன் மோட்சம்', 'மடம்' போன்ற கதைகள் கூட 'ஒரு கருத்தை' சொல்பவை தான். ஆனால் அதில் கட்டுரையின் 'துல்லியம்' கவனமாகத் தவிர்க்கப்பட்டிருக்கும். அதனால் அவை ஈர்த்தன என்று நினைக்கத் தோன்றுகிறது.
இவற்றில் சோற்றுக்கணக்கு அளவுக்கு எதுவும் நினைவில் நிற்பவையாக இல்லை.
http://thoughtsintamil.blogspot.com/...post_9293.html
hayyo jeyamohan veguja ezhuthaalar agittaar
Typical marketing thingy...see the internal contradiction :
Will any businessman do that? :lol:Quote:
மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன. கடைகளுக்குப் போகவே இல்லை.
இதன் விற்பனை வேகத்தைப் பார்த்து, இந்தப் புத்தகத்தை 5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம். விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம். அதே தாள், அதே தரம். விலை மட்டும்தான் பாதிக்குப் பாதி!
P_R,
உங்களது எதிர்பார்ப்பை மயில்கழுத்து பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன். Let us see.