http://i45.tinypic.com/2rhv3gl.jpg
Printable View
சதி லீலாவதியில் அறிமுகமான டி.எஸ்.பாலையா கதாநாயகனாக தனது இரண்டாவது படத்திலேயே நடித்தார். அந்தப் படம் தான் இரு சகோதரர்கள். இதில் நம் தலைவருடன், கே.பி.கேசவன், எம்.ஜி.சக்ரபாணி, எம்.எம்.ராதாபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.
இரண்டு சகோதராக்ளுக்கிடையே உண்டான குடும்ப சிக்கல்களை சரி செய்து குடும்பம் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை நிலைநாட்டும் படமாக இரு சகோதரர்கள் படம் வெளிவந்தது.
இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நமது தலைவர் தோன்றினார். மேலும் இந்த படத்தில் தாடி வைத்து இன்னொரு கதாபாத்திரத்திலும் தோன்றினார் என்று படித்து இருக்கிறேன்.
சதிலீலாவதி - இரு சகோதரர்கள் படங்கள் வெளியான திரை அரங்குகள் பற்றிய விபரம் கிடைக்கவில்லை .
இந்த திரியினை பார்வையிடும் நண்பர்களிடம் மேற்கண்ட படங்களின் நிழற்படமோ அல்லது விளம்பரமோ இருந்தால் அதனை இங்கு பதிவிட வேண்டுகிறேன் .
இரு சகோதரர்கள் படத்தில் நமது மக்கள் திலகம் முஸ்லிம் அன்பராக தோன்றும் ஒரு காட்சி
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் பற்றிய விவரம் அடுத்து தொடர்கிறது.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
http://i47.tinypic.com/xbliyf.jpg
நன்றி ரவிச்சந்திரன் சார். தங்களின் பங்களிப்பு இத்திரியினிலும் தொடர விரும்புகிறேன்.
ஏற்கனவே தெரிவித்தபடி இத்திரியினில் நமது இதய தெய்வம் எம்.ஜீ.ஆர். அவர்களின் திரைப்பட செய்திகளை மட்டும் அனைவரும் எதிர்பார்கின்றனர்.
அவர்களின் எதிர்பார்ப்பிர்கேற்ப பதிவிகளை மேற்கொள்ளுவோம்.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
படத்தில் எம்.ஜி.ஆருடன் இருப்பவர் டி.எஸ்.பாலையா அவர்கள் அல்லவா
Daksha Yagnam 1938
Sati, the daughter of Daksha, a descendant of Lord Brahma, marries Lord Shiva (V. A. Chellappa) against the wish of her father. This annoys the king (Daksha) and he performs a yagna (to insult Shiva), where he invites all gods except his son-in-law (Lord Shiva). Sati attends this sacrifice against the wishes of Shiva and is insulted by her father. Unable to bear this, Sati kills herself by burning in the fire.
Shiva destroys Daksha's sacrifice through Veerabhadra, cuts off Daksha's head and replaces it with that of a goat, and restores his life. Later he picks up the remain of Sati's body and performs "Rudra Thandavam", a dance that will lead to the destruction of Universe, but the other gods intervene, and the Disc of Vishnu (M. G. Ramachandran) cuts through the Sati's corpse Her body parts, known as Shakthi Peetas, fall in several places on the Indian subcontinent.
M. G. Ramachandran, who later became one of the leading actors and politicians in Tamil Nadu acted in a small role as Lord Vishnu. M. G. Nataraja Pillai played an important role in the film.
Cast
- V. A. Chelappa as Lord Shiva
- M. M. Radhabai
- M. G. Nataraja Pillai
- K. R. Jayalakshmi
- P. G. Venkatesan
- T. N. Chandramma
- N. S. Krishnan
- T. A. Mathuram
- M. G. Ramachandran as Lord Vishnu
From wikipedia.
இப்படத்தில் நமது தலைவர் அவர்களின் அழகு தோற்றம்.
http://i125.photobucket.com/albums/p...psc4346711.jpg
இந்த படத்தில் மகா விஷ்ணுவாக.
Dear roop sir
very nice postings .
Makkal thilagam still is very fine to see him as lord vishnu in this movie .
Unseen pic
Dhaksha Yagnam image. A really rare one. Good.
Daksha Yagnam 1938
V. A. Chellappa, M. M. Radhabai, M. G. Ramachandran, M. G. Nataraja Pillai, K. R. Jayalakshmi, P. G. Venkatesan, T. N. Chandramma, N. S. Krishnan and T. A. Mathuram ???
This legend is associated with the destruction of Daksha's sacrifice and the origin of the Shakthi Peetas in India.
Sati, consort of Shiva, is the daughter of Daksha Prajaapathi, a descendant of Brahma. She had married Shiva against her father's wishes. The vain Daksha performs a great yagna (with the sole aim of insulting Shiva), to which he invites all the gods and goddesses except his son-in-law Shiva. Against Shiva's wishes, Sati attends this sacrifice only to be insulted by her father. Unable to bear the insult, Sati immolates herself.
Enraged, Shiva through Veerabhadra destroys Daksha's sacrifice, cuts off Daksha's head and replaces it with that of a goat, as he restores him to life. Still crazed with grief, he picks up the remains of Sati's body, and performs ‘Rudra Thandavam', the dance of destruction throughout the Universe. The other gods intervene to stop this dance, and the Disc of Vishnu (Vishnu Chakra) cuts through the corpse of Sati, whose various parts of the body fall at several spots in the Indian subcontinent and form the sites of what are known as Shakthi Peetas today.
Not surprisingly, this interesting story was made into a movie many times in India during the Silent Film period and later during the Talking Picture era. The first film Sati Parvathi (a.k.a. Daksha Yagnam ) was made in 1920 in the Silent Film format. Then came another titled Sati in 1922, made by the well-known production company of the day, Madan Theatres. In 1927, noted filmmaker G. V. Sahni made it again as a silent film, which was believed to have fared well at the box office. The first talking picture version was made in 1938 in Tamil (the movie now being discussed) by noted filmmaker Raja Chandrasekhar. Qualifying himself in Arts in Bombay, he worked as art director and designer for some time. He graduated to film direction at which he was quite successful. He made films such as Ashok Kumar , featuring the icon of Tamil Cinema, M. K. Thyagaraja Bhagavathar. In those days, he was believed to have been a favourite director of Bhagavathar. However, his later years were spent in obscurity, while his brother T. R. Raghunath became a successful filmmaker. Chithrapu Narayanamurthi made the Telugu version in 1941 and another Telugu version was made by Kadaru Nagabhushnam, husband of celebrated star-actress and producer Pasupuleti Kannamba, in 1962. In 1980, a Bengali version came, proving the popularity of the epic tale.
M. G. Ramachandran, the later day cult figure in Tamil Nadu political history, was an interesting feature of this film. He played a minor role and the initial advertisements released in support of the film did not mention his name at all! This was the fourth movie after his impressive debut in Ellis R Dungan's Sati Leelavathi (1936) in which he played a police inspector with laced turban, stick and all!
Well-known stage and screen star of his day Chellappa played Lord Shiva in his flamboyant style and sang quite a few songs. Krishnan-Mathuram who had come together as a couple around the time provided comic relief in their own characteristic style.
Remembered for being one of the early films of MGR.
randor guy
நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படமாகிய "சதிலீலாவதி" படத்தைப் பற்றிய கூடுதல் தகவல் :
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைச்சுருக்கம் :
நல்லவனாகிய கிருஷ்ணமூர்த்தி, மனைவி லீலவதியுடனும், மகள் லட்சுமியுடனும் ஆனந்தமாக வாழ்ந்து வருகிறான். அவர்கள் வாழ்க்கையில் வில்லனாக ராமநாதன் குறுக்கிடுகிறான். துரதிருஷ்டமாக, ராமநாதனுடன் பழகியதால் கிருஷ்ணமூர்த்தி மது பழக்கத்துக்கு அடிமையாகிறான்.
பரசுராமன் கிருஷ்ணமூர்த்திக்கு நல்ல நண்பன். கிருஷ்ணமூர்த்தியை திருத்துவதற்கு எவ்வளவு முயன்றும் முடிய வில்லை.
ராமநாதன் செய்த சூழ்ச்சியால் தன் மனைவி மீதும், உற்ற நண்பன் பரசுராமன் மீதும் சந்தேகம் கொள்கிறான் கிருஷ்ணமூர்த்தி, பரசுராமனை கொல்ல எண்ணி சந்தர்ப்பத்தை எதிர் நோக்குகிறான். இதனிடையில்,பரசுராமனைப் போல் ஒருவனக்கு உடை அணிவித்து, அவனைப்போலவே நடை, பாவனைகளை ஏற்படுத்தி, கிருஷ்ணமூர்த்தி கண்ணில் படும்படி அவ்வழியே அனுப்புகிறான் ராமநாதன்.
போலி பரசுராமனை துரத்திக்கொண்டு வரும் பொழுது கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுகிறான். இந்த சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ராமநாதன், போலி பரசுராமனை சுட்டு விட்டு பழியை கிருஷ்ணமூர்த்தி மீது போட்டு விடுகிறான். பயந்து போன கிருஷ்ணமூர்த்தி இலங்கைக்கு தப்பி செல்கிறான். அங்கு அவனுக்கு புதையல் கிடைக்கிறது. உண்மையான பரசுரமனையும் சந்திக்க நேரிடுகிறது. இருவரும் மாறு வேடத்தில் தாய்நாடு திரும்பி வருகிறார்கள். தனியாக இருக்கும் லீலாவதியை கெடுக்க முயன்ற ராமநாதனை போலிசார் கைது செய்கின்றனர்.
முழு உண்மை தெரிந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர, சுபமாக எல்லாம் நடக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி கதாபாத்திரத்தில் மறைந்த எம். கே. ராதா அவர்களும், லீலாவதியாக எம். ஆர். ஞானம்பாள் அவர்களும், பரசுரமனாக கலைவாணர் என். எஸ் கே. அவர்களும், போலீஸ் அதிகாரி வெங்கையா நாயுடுவாக நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் நடித்துள்ளனர்.
மனோரமா பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்துக்கு கதை எழுதியவர் கந்தசாமி முதலியார்.
இத்திரைப்படம் 125 நாட்கள் வரை ஓடியதாக நம்பத்தகுந்த தகவல்.
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
குறிப்பு : நமது பாரத திருநாடு சுதந்திரம் பெறுவதற்கு முன், பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தபோது வெளிவந்த இத்திரை படத்தினைப் பற்றிய அதிகபட்சமான தகவல்களை அளித்துள்ளோம். வெளியான திரை அரங்குகள், மற்றும் இதர தகவல்கள் ஏதும் இருப்பின் அவற்றை இத்திரியில் பகிர்ந்து கொள்வதை வரவேற்கிறோம்.
நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த 2வது படமாகிய "இரு சகோதரர்கள்" படத்தைப் பற்றிய தகவல் :
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைச்சுருக்கம் :
மகாதேவர் என்பவர் தான் சாகும் தருவாயில், சபாபதி, பசுபதி என்கின்ற தனது இரு குமாரர்களையும் அருகிலழைத்து, தான்
காலகதியான பின், அவர்கள் மிக்க ஒற்றுமையோடும், அன்போடும் வாழ வேண்டும் என்று புத்திமதி கூறி மரித்தார்
தகப்பனார் சொன்னபடி நடக்க சகோதரர்களுக்கு தடையில்லை. ஆனால் சபாபதியின் மனைவி சரசா, பொறாமையும், அகம்பாவமும் கொண்டவள் அவள், பசுபதியின் மனைவியும், நற்குணம் உடையவளுமாகிய சாந்தா என்பவளையும், அவள் மக்களையும் படாத பாடுபடுத்தி வந்தாள். தன் கணவனிடத்தில் சாந்தாவைப் பற்றி எப்பொழுதும் பொய்க் குற்றம் சாற்றி அவர் நல்ல மனதை கலைத்து வந்தாள்.
பசுபதி குடும்பப் பொறுப்பும், கல்வியும் இல்லாதவர். ஆனால் சங்கீத பிரியமும், நடிகத் திறமையும் உள்ளவர் ஆதலால் வீட்டுக் காரியங்களைக் கவனியாமல் அந்த ஊர் யுவ நாடக சபையொன்றின் பாலே பெரிதும் ஊக்கம் செலுத்தி வந்தார். சரசாவின் புருஷனோ, அவ்வூர் ஜமீன்தார் ஆபீஸ் மேனேஜராக இருந்தாலும், மிகவும் அறிவாளியாயினும், மனையாள் சொல் கேட்பவர்.
சரஸாவுக்குத் தூண்டுதல் செய்து வந்தவள் ஊர் வம்பளப்பு முதலியவற்றிக்கு பொக்கிஷமான குப்பி பாட்டி என்னும் வேலைக்க்காரி. அவள் தூண்டுதலினால், சரசா தன் கணவனை காணும் போதெல்லாம் பசுபதி, அவர் மனைவி இவர்களைப் பற்றி பொல்லாப்பு கூறி வந்தாள்.
பசுபதியோ காலக் கொடுமையால், தான் முயற்சியுடன் மூத்த நாடக சபைக்காக ஒரு மார்வாடியிடம் கடன் வாங்கி குறிப்பிட்ட வாய்தாவில் கொடுக்கத் தவறி விட்டார். மார்வாடி சபாபதியிடம் வந்து முறையிட்டான்.
இயற்கனவே சகோதரனை வெறுத்து வந்த சபாபதிக்கும் பசுபதிக்கும் இந்த கடன் காரணமாக வாக்குவாதம் முற்றி சண்டை வந்து பாகப்பிரிவினை ஏற்பட்டது. வீட்டின் பாதி உரிமையோடும், சில ஓட்டை உடைசல் பாத்திரங்களோடு பசுபதி பகிர்ந்து கொண்டவராயினும், சாந்தாவும், மக்களும் அந்த வீட்டிலேயே குடியிருந்துகொண்டு சராசாவின் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்க வேண்டியதாயிற்று.
இருந்தாலும் அக்குடும்ப தேவதை சாந்தா மீது இரக்கம் கொண்டு பார்வதி என்னும் பணிப்பெண் வேடம் பூண்டு, சாந்தாவுக்கு சமாதனம் சொல்லிக்கொண்டு, அவளிடம் இருந்த கொஞ்சம் திரவியத்தினால் குடித்தனச் செலவை நடத்திக்கொண்டு, பசுபதியை எதாவது ஒரு வேலை பார்த்து வரும்படி சென்னைக்கு அனுப்பினாள்.
"பட்ட காலிலேயே படும்" என்றபடி பசுபதி, ரயிலில் தன் செலவுக்காக கொண்டு போன பணத்தை பறிகொடுத்து, சென்னை நகரில் ஆண்டியாய் திரிந்தான். எங்கேயோ நடந்த களவுப் பழி இவன் மேல் சாற்றப்பட்டு நையப்புடைக்கப்பட்டான்.
இப்பொழுதுதான் நல்ல காலம் வருகிறது நகைகளை களவு கொடுத்த சாம்பசிவய்யர் கார்ப்பரேஷனில் பெரிய
உத்தியோகஸ்தர். அவர், பின்னாளில் உண்மையான கள்வனை கண்டுபிடித்தார் பசுபதியை வீணாக புடைத்ததற்கு மனம் வருந்தி அவனுடைய நிலைமைக்கு இரங்கி உதவி செய்ய தலைப்பட்டார். சங்கீத ஞானமுடைய பசுபதி, சாம்பசிவய்யர் உதவியால் ரேடியோவில் பாடி சம்பாதித்தார். இவரின் சங்கீத அறிவும், நடிகத் திறமையும், வியக்க வைக்கவே, சென்னையில் ஆடி வந்த பிரபல நாடக கம்பனியில் நல்ல சம்பளத்தில் முக்கிய நடிகரானார்.
இது நிற்க - பசுபதி சென்றவுடன் சரசா தன் தாயார், தனயன் கோபாலன் முதலியவர்களை தன் வீடு வந்து இருக்கச் செய்தாள். கோபாலன், பசுபதியின் குடும்பத்தை வேரோடு அழிக்க கங்கணம் கட்டினனான். பசுபதி அனுப்பி வந்த மணியார்டர்களை எல்லாம், கோபாலன் தூண்டுதலினால் சரசா சாந்தாவைப் போல் கள்ளக் கையெழுத்து இட்டு வாங்கி, சாந்தாவிடம் ஒன்றுமே தெரியாமல், தானே சுகித்து வந்தாள்.
அந்தவூர் ஜமீன்தார் ஒரு ஸ்திரீலோலன். சுந்தரி என்ற விலை மாதுவுடன் காலங்கழித்து வந்தார் ஒரு நாள் தற்செயலாய் சாந்தாவைக் கண்ணுற்றதும், அவள் மீது மோகம் கொண்டு, அவளைக் கைப்பற்றக் கருதினான். கோபாலனும் இதற்கு உடந்தையானான். அவன் சாந்தவை தன் மனையாள் என்று சொல்லி ரூ. 10,000/- க்கு விற்று விட்டான். எப்படியோ சாந்தாவுக்கு மயக்க மருந்து கொடுத்து மயக்கி, அவள் அறியாமல் அவளை ஜமீன்தார் வீட்டுக்கு அனுப்பி விட்டான் கோபாலன். சாந்தா யாருடனோ ஓடி விட்டாள் என்ற பொய் தந்தியும் பசுபதிக்கு கொடுத்து விட்டான். சரசாவும் அவ்விதமே ஊரெல்லாம் வதந்தி பரப்பி விட்டாள்.
தந்தி கிடைத்த பசுபதி மானம் பொருக்க முடியாமல் தற்கொலை செய்ய எத்தனிக்கையில், ஒரு சந்நியாசி அவனைக் காப்பாற்றுகிறார். இருவரும் உண்மையை விசாரிக்க ஊர் திரும்புகின்றனர்
இதற்குள் ஜமீன்தாரின் தாசியாகிய சுந்தரி சாந்தாவின் வரவினால் தன் மீது ஜாமீன்தாருக்குள்ள பிரியம் குறைபவளாய்
பார்வதியிடம் உண்மையைக் கூறினாள். பார்வதி உடனே போலீஸ்காரர்கள் சஹிதம் சென்று சாந்தாவை விடுவித்து,
ஜமீன்தார், கோபாலன் முதலிய கொடியோர்களைச் சிறையில் அடைப்பித்து தக்க தண்டனைக்குள்ளாக்கினாள்.
சபாபதியோ, ஐயோ பாவம், ஜமீன்தாரின் ஆபீஸ் கணக்குகளை புரக்க்ஷி செய்ததாக பொய்க் குற்றம் சாற்றப்பட்டு வேலை இழந்தான்.
ஊருக்கு திரும்பி வரும் சமயம் பசுபதியும் சாமியாரும், சாந்தா, பார்வதி இவர்களுடன் தற்செயலாய் சேர்ந்து கொண்டார்கள்.
பசுபதி உண்மையனைத்தும் அறிந்து கொண்டான் சாந்தா தன் உன்னத குணத்தால், சரசாவை மன்னித்தாள். சபாபதியாரும் மிகவும் வருந்தினார். குடும்பம் திரும்பவும் ஐக்கியமாகிறது. யாவரும் சந்தோஷம்.
பசுபதியின் பிரிவினால் வரும்படி குறைந்துபோன சென்னை முருகதாஸ் நாடக கம்பெனியார், திரும்பவும் பசுபதியை
கம்பெனியின் பங்காளியாக சேர்த்துக் கொள்கிறார்கள்.
தகப்பனார் மஹாதேவர் சொன்னது பழுது போகவில்லை.
பொறுமையே உயர்வு அளிக்கும். சுபம். சுபம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பசுபதியாக பி. கேசவன் அவர்களும், சபாபதியாக கே. பெருமாள் அவர்களும் நடித்துள்ளனர். கோபாலனாக டி.எஸ். பாலையா அவர்களும், சாந்தாவாக என்.கண்ணாமணி அவர்களும், சரசாவாக என். விஜயலட்சுமி அவர்களும்
நடித்துள்ளனர். நம் கலைவேந்தன் எம் ஜி ஆர் அவர்களின் அண்ணன் எம். ஜி. சக்கரபாணி அவர்கள் இப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார். மக்கள் திலகம் அவர்கள் முஸ்லிம் அன்பராக ரயில் பயணியாக நடித்திருப்பார். .
பரமேஸ்வரா சவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் வெளியான தேதி : 10-09-1936.
குறிப்பு : இந்த கதைச்சுருக்கம் அப்போது வழக்கத்தில் இருந்த தமிழ் மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
1936- வெளிவந்த மக்கள் திலகத்தின் முதல் படமான சதிலீலவதியின் கதை சுருக்கம் இது வரை கேள்வி பட்டதே இல்லை .
முதன் முறையாக சதிலீலாவதி கதை சுருக்கம் பதிவு மிகவும் அருமை . நன்றி சார்
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
1936- வெளிவந்த மக்கள் திலகத்தின்இரண்டாவது படமான இரு சகோதரர்கள் கதை சுருக்கம் முழு படத்தையே பார்த்த உணர்வு .
கடின உழைப்புடன் இந்த கதை சுருக்கத்தை தயார் செய்து ஒரிஜினல் பாட்டு புத்தகத்திலிருந்து டைப் செய்துபதிவிட்ட உங்களுக்கு நன்றி சார்
இன்றைய தலை முறையினர் அறிந்து கொள்ள வேண்டியஅற்புதமான பதிவு இது .
Daksha Yagnam 1938
randor guy
V. A. Chellappa, M. M. Radhabai, M. G. Ramachandran, M. G. Nataraja Pillai, K. R. Jayalakshmi, P. G. Venkatesan, T. N. Chandramma, N. S. Krishnan and T. A. Mathuram ???
legend revisited Daksha Yagnam
This legend is associated with the destruction of Daksha's sacrifice and the origin of the Shakthi Peetas in India.
Sati, consort of Shiva, is the daughter of Daksha Prajaapathi, a descendant of Brahma. She had married Shiva against her father's wishes. The vain Daksha performs a great yagna (with the sole aim of insulting Shiva), to which he invites all the gods and goddesses except his son-in-law Shiva. Against Shiva's wishes, Sati attends this sacrifice only to be insulted by her father. Unable to bear the insult, Sati immolates herself.
Enraged, Shiva through Veerabhadra destroys Daksha's sacrifice, cuts off Daksha's head and replaces it with that of a goat, as he restores him to life. Still crazed with grief, he picks up the remains of Sati's body, and performs ‘Rudra Thandavam', the dance of destruction throughout the Universe. The other gods intervene to stop this dance, and the Disc of Vishnu (Vishnu Chakra) cuts through the corpse of Sati, whose various parts of the body fall at several spots in the Indian subcontinent and form the sites of what are known as Shakthi Peetas today.
Not surprisingly, this interesting story was made into a movie many times in India during the Silent Film period and later during the Talking Picture era. The first film Sati Parvathi (a.k.a. Daksha Yagnam ) was made in 1920 in the Silent Film format. Then came another titled Sati in 1922, made by the well-known production company of the day, Madan Theatres. In 1927, noted filmmaker G. V. Sahni made it again as a silent film, which was believed to have fared well at the box office. The first talking picture version was made in 1938 in Tamil (the movie now being discussed) by noted filmmaker Raja Chandrasekhar. Qualifying himself in Arts in Bombay, he worked as art director and designer for some time. He graduated to film direction at which he was quite successful. He made films such as Ashok Kumar , featuring the icon of Tamil Cinema, M. K. Thyagaraja Bhagavathar. In those days, he was believed to have been a favourite director of Bhagavathar. However, his later years were spent in obscurity, while his brother T. R. Raghunath became a successful filmmaker. Chithrapu Narayanamurthi made the Telugu version in 1941 and another Telugu version was made by Kadaru Nagabhushnam, husband of celebrated star-actress and producer Pasupuleti Kannamba, in 1962. In 1980, a Bengali version came, proving the popularity of the epic tale.
M. G. Ramachandran, the later day cult figure in Tamil Nadu political history, was an interesting feature of this film. He played a minor role and the initial advertisements released in support of the film did not mention his name at all! This was the fourth movie after his impressive debut in Ellis R Dungan's Sati Leelavathi (1936) in which he played a police inspector with laced turban, stick and all!
Well-known stage and screen star of his day Chellappa played Lord Shiva in his flamboyant style and sang quite a few songs. Krishnan-Mathuram who had come together as a couple around the time provided comic relief in their own characteristic style.
Remembered for being one of the early films of MGR.
randor guy
77 ஆண்டுகளுக்கு பிறகு சதிலீலாவதி ,இருசகோதரர்கள்
இரண்டு படத்தின் கதையை நம் கண்முன்னே கொண்டு
வந்த திரு செல்வகுமார் சார் அவர்களுக்கு எனது நன்றிகள்
இரு சகோதரர்கள் படத்தில் இடம் பெற்ற பாடல்களின் முதல் இரண்டு வரிகள் :
1. பொம்மை வியாபாரியின் வியாபார பாடல் : வேடிக்கை பொம்மை, விளையாட்டு பொம்மை
2. ஆண் குரலில் தனித்த பாடல் : நபியாவுர் - அலிதோனோ - ஜூமாது ஆயே - ஜூமனகேபல் ஹாறின பேஜீ
3. ஆண் குரலில் தனித்த பாடல் : தேவ தேவ ஜீவசுகதா - தமியேன் தீவினை தீராதா
4. ஜாலி பாடல் : கஞ்சா கள்ளுக்கடை காதலியுடனே குஷியாய் அஞ்சா தீரனடா
5. கூட்டுப்பாடல் : ஓடி விளையாடுவோம் - ஆஹா பாடியே பந்தடிப்போமே
6. பெண் குரலில் தனித்த பாடல் : நாதனே நளின சுய ரூபனே
7. தனித்த பாடல் ஆண் குரலில் : சரணமே தர நேரமா - பாரமா சகல லோக
8. தனித்த பாடல் ஆண் குரலில் : அடுத்தானை - யுரித்தானை அர்ஜுனர்க்கு
9. பெண் குரலில் தனித்த பாடல் : மதன மதுர மது ரூபனே
10. பெண் குரலில் தனித்த பாடல் : சோதனை போதாதா - பசுபதே சுகுணர் துன்பமாகாதே - பசுபதே
இப்படத்தையும் இயக்கியவர் எல்லிஸ் ஆர். டங்கன் அவர்களே.
================================================== ================================================== ===============
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Thank you both Mr. Vinodh and Mr. Ramamoorthy.
It is my pleasure. Whatever available information and records collected by me from my olden days, will be shared in this Thread. As rightly pointed out by Mr. Vinodh, it will be an useful thing for the present younger generation.
Thanking you both once again for Motivation.
Ever Yours : S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
Attachment 2192
Makkal Thilagam MGR in the movie Daksha Yagnam- 1938
http://i46.tinypic.com/tlhi.jpg
தட்சயக்ஞம் திரைப்படத்தின் அபூர்வ புகைப்படத்தினை பதிவிட்ட பிரதீப் பாலு அவர்களுக்கு நன்றி.
http://i47.tinypic.com/66lth2.jpg
தட்சயக்ஞம் திரைப்படத்தின் அபூர்வ புகைப்படத்தினை பதிவிட்ட திரு.ரூப்குமார் அவர்களுக்கு நன்றி.
THANK YOU VERY MUCH MR.PRADEEP AND MR.ROOP FOR POSTING THE RARE IMAGE OF OUR BELOVED GOD IN Daksha Yagnam MOVIE.
REGDS,
S.RAVICHANDRAN
மக்கள் திலகத்தின் முதல்படம் சதிலீலாவதி - இன்ஸ்பெக்டர் வேடம்
பெரியவர் எம்.ஜி.சக்கரபாணி அவர்களின் முதல்படம் - இரு சகோதரர்கள் இன்ஸ்பெக்டர் வேடம்
இரு சகோதரர்களும் இணைந்து நடித்த முதல்படம் - இருசகோதரர்கள்
கடைசி படம் நாளை நமதே
Thanks to selvakumar sir for sharing very rare news about our beloved leader's starting movies
1 சதிலீலாவதி 28-03-1936
2 இரு சகோதரர்கள் 1936
3 தட்சயக்ஞம் 31-03-1938
4 வீர ஜெகதீஷ் 1938
5 மாயா மச்சீந்திரா 22-04-1939
6 பிரகலாதா 12-12-1939
7 வேதவதி (அல்லது) சீத ஜனனம் 22-02-1941
8 அசோக்குமார் 10-07-1941
9 தமிழ் அறியும் பெருமாள் 30-04-1942
10 ஜோதி மலர் (அல்லது) தாசிப்பெண் 03-03-1943
11 ஹரிச்சந்திரா 14-01-1944
12 சாலிவாகனன் 16-02-1945
13 மீரா 03-11-1945
14 ஸ்ரீமுருகன் 04-06-1946
மேற்கண்ட படங்கள் வெளியான திரை அரங்குகளின் விபரம் கிடைக்கவில்லை .
மக்கள் திலகம் அவர்கள் இந்த படங்களில் சிறிய வேடங்களில் தோன்றியிருப்பார் .
11 ஆண்டுகள் கடுமையான போராட்டத்துக்கு பின் 1947ல் தான் கதாநாயகனாக நடிக்க முடிந்தது .
இந்த திரியினை பார்வையிடும் நண்பர்களிடம் மேற்கொண்டு இந்த படங்களின் செய்திகள் ,படங்கள் , பேப்பர் செய்திகள் இருப்பின் இங்கு பதிவு செய்யவும் .
"தட்சயக்ஞம்" ஒரு புராணப்படம். இப்படத்தினையொட்டிய புகைப்பட செய்திகளையும், இதர விவரங்களையும் ஏற்கனவே நமது அன்பர்கள் இத்திரியினில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். கூடுதல் தகவலாக இத்திரைப்படத்தில் இடம் பெற்ற சில பாடல்களை இங்கு பதிவிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. சங்கரா சங்கரா கங்காதரா ஹரா - சம்போ மஹாதேவா
2. ஆதியில் பாற்கடல் விஷத்தினை உண்டு நீ ஆதரித்தாய் சிவனே - பல்லவி பாடியது ராஜகுரு
தரணியை அழிக்க பொங்கிய கங்கையை சடையினில் தரித்தே கார்த்தாய் - அநு பல்லவி
பரமானந்த சுதினம் இன்றே சம்பவம் - பாடல் பாடியது தாஷாயணி
3. மனதிற்கிசைந்திடாத மணத்தினாலே வாழ்க்கைகெட்டு போவதோ உந்தன் பாக்யமே (பல்லவி)
இனிதாகிய வரனால் சுகமுடன் ஏகாந்தமாக இருந்திடலாகுமே - அநு பல்லவி
மாதர் தங்கள் மனதினாலே கோரின மர்மம் ஈதெனவே ஒதிடாமல் - சரணம்
4. தாஷாயணியின் பஜனை பாட்டு : ஹர ஹர ஹர ஹர அகிலாதிபனே
5. காமிக் பாட்டு : சிவானந்த ரஸம் இதுவே - சிவராஜ யோகமே கைவல்யந்தருமே
6. சிவன் விருத்தம் பாடல் : பெரும் புவிதனிலே மாந்தர் பெருநெறியறியாராகி
7. காமிக் (ரதி - மன்மதன்) பாட்டு : ஹா மாதர் மனோஹர வாழ்க்கை - அதுவே ஆனந்தம்
8. நாரதர் விருத்தம் : அஞ்சி உன் கட்டளைக்கே - அழைத்திலர் - அறனை மேலும் மிஞ்சிடும் இன்னல் கண்டு
9. ஸதி - அதிரூப லாவண்ய ஸுந்தரா எந்தன் அன்புக்குரிய ஈஸ்வரா - (பல்லவி)
சிவன் - எதுவும் களங்கமில்லா மனதுடைய கண்மணி (அநு பல்லவி)
ஸதி - நாசம் மரணம் புனர் ஜன்மமில்லா உங்களால் (சரணம்)
10. சிவன் பாட்டு : மாதருக்கெல்லாம் குணம் பேதமை பூஷனமே
11. ராஜகுரு பாட்டு : பவாநீ பவாநீ பவாநீ - பவாநீயை சதியெனவே நீயறிந்திடாமல்
12. பூதகணங்கள் பாட்டு : வாருங்கள் எல்லோரும் தஷன் யாகசாலை சென்றிடுவோம்
13. பெண்குரல் பாட்டு : இருவரும் ஒன்றாய் கூடி வாழலாம்
14. குழுவினருடன் மங்கலப்பாட்டு : பார்வதியாக ஜனிப்பாய் தாஷாயணி - நீ லோக சுபீஷம் தருவாய் மன மகிழ்வாய்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : இந்த பாடல்கள், அப்போது வழக்கத்தில் இருந்த தமிழ் மொழி நடையில் விவரிக்கப்பட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
"தட்சயக்ஞம்" திரைப்படத்தினைப் பற்றிய ஒரு சுவராஸ்யமான தகவல் :
------------------------------------------------------------------------------------------
தட்ஷனாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தெய்வத்திரு. எம். கே. ராதா அவர்கள். பின்பு சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனாலும் அவரால் பரிந்துரைக்கப்பட்ட நமது பொன்மனச்செம்மல் அவர்கள் இந்த "தட்சயக்ஞம்" திரைப்படத்தில், விஷ்ணுவாக தோன்றி நடித்தார். "தட்சயக்ஞம்" ஒரு புராணப்படம் மட்டுமல்ல. வெள்ளிவிழா படமும் கூட.
மெட்ரோபொலிடன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வெளியான தேதி : 31-03-1938. இயக்குனர் : தெய்வத்திரு. ராஜா சந்திரசேகர். வி. ஏ. செல்லப்பா மற்றும் எம். எம். ராதாபாய் அவர்கள் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களும் டி.ஏ. மதுரம் அவர்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
திரு. எம். கே. ராதா அவர்கள் இதற்கு முன்பு நம் மக்கள் திலகத்துக்கு சிபாரிசு செய்து நடிக்க முடியாமல் போன படம் "சமூகத்தொண்டு" என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
================================================== ================================================== ====================
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜீ.ஆர்.
எங்கள் இறைவன்
வி. எஸ் டாக்கிஸ், மதுரை நிறுவனம் தயாரித்துள்ள மக்கள் திலகத்தின் 4வது படமாகிய "வீர ஜெகதீஷ்" திரைப்படத்தினை இயக்கியுள்ளவர்கள் டி.பி. கைலாசம் மற்றும் பிரகாஷ்.
இப்படத்த்துக்கு மற்றும் ஒரு பெயர் : மங்கலவதி.
வீர ஜெகதீஷ் திரைப்படம் வெளியான தேதி : 28-08-1938.
மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் பெயர் : பையன் (கதாநாயகன் ஜெகதீஷின் சகோதரன்)
ஜெகதீஷாக வி. எஸ். எம். ராஜாராமய்யர் நடித்திருந்தார். பில்லு ராவாக எஸ்.ஆர் கிருஷ்ணய்யங்கார் நடித்துள்ளார்.
ஜெகதீஷின் மனைவியாக கே. ரங்கநாயகி அவர்கள் நடித்துள்ளார்.
ஜெகதீஷின் நண்பர் சுந்தராக எம். ஆர். பாலு நடித்துள்ளார்.
.
இத்திரைப்படம் 100 நாட்கள் ஒடியது.
================================================== ================================================== ======
http://i47.tinypic.com/2d6mcjr.jpg
(An ever memorable still from the movie Veera Jegadeesh.
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
நம் மக்கள் திலகத்தின் 4வது படமாகிய வீர ஜெகதீஷ் படத்தின் கதைச்சுருக்கம் :
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெகதீஷ் என்ற ஒரு பெரிய மிராசுதாருக்குப் பட்டணம் பார்க்க வேண்டும் என்ற ஆசை. அவர் ஏராளமான பணத்தை எடுத்துக்கொண்டு தனிமையாக புறப்பட்டு வந்து சேருகிறார்.
ரயில் ஸ்டேஷனில் நின்றதும் பில்லுராவ் என்ற வஞ்சகன் பார்த்து அவர் பட்டணத்துக்கு புதியவர் என்று யூகத்தால் தெரிந்து அவரை அணுகி, தன்னை கனவானாகவும், பரோபகாரியாகவும் நினைக்கும்படி தந்திரமாக பேசி வசப்படுத்தி விடுகிறான்.
அச்சமயம் கந்தன் என்ற ஏழைப்பையன் ஜெகதீஷின் சட்டைப்பையிலிருந்து மணிபர்சை திருடும்போது கண்டு போலீசாரிடம் ஒப்புவிக்கபடுகிறான். அவனுடைய பிரலாபத்தை கேட்ட ஜெகதீஷ் அவனை விடுவித்து இனாமும் கொடுத்து மறுபடியும் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லி அனுப்பி விடுகிறார். அப்போது பில்லு அவரிடம் உள்ளம் பணத்தை தான் பத்திரபடுத்தி வைப்பதாக சொல்லி அவர் மனிபுர்சை வாங்கி வைத்துக்கொள்கிறான்.
அப்பால் ஜெகதீஷ் பில்லுவின் ஜாகைக்கு செல்லுகிறார். அவ்விடம் பில்லு பாட்டுகச்சேரி வைத்து தமாஷ் காட்டி அவரை மது பானம் செய்ய வைக்கிறான். அன்று எல்லோரும் தூங்கும்போது அந்த ஜாகையை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த கந்தன் ஜெகடீஷை அணுகி பில்லுவிடம் உள்ள பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளும்படியும், ஊருக்கு போவதாக சாக்கு சொல்லி அவ்விடமிருந்து மறுநாளே வெளியேறித் தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கும்படியும் யுக்தி சொல்லி பிறகு அடுத்த அறையில் தூங்கி கொண்டிருந்த பில்லுவின் தலையணைக்கு அடியில் உள்ள மணி பர்சை எடுத்துக்கொண்டு போய் விடுகிறான்.
அதே ஊரில் வெகு சமீபத்தில் ஜெகதீஷின் நண்பன் சுந்தர் என்பவன் வசித்து வருகிறான் ஆனால் அவ்விருவருக்கும் பரஸ்பரம் இருப்பிடம் தெரியாததால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிய வில்லை
ஜெகதீஷின் பணத்தை எடுத்துக்கொண்டு அதிகாலையிலேயே ரயில் ஏறி விட வேண்டுமென்ற துர்எண்ணத்துடனிருந்த பில்லு, தூங்கி விழித்து மணி பர்சை காணாமல் தன் எண்ணம் பாழானதை குறித்து வேதனைப்படுகிறான்.
கந்தனின் யோசனைப்படி காலையில் ஜெகதீஷ் தன சாமான்களுடன் பங்களாவை விட்டு வெளியேறும்போது பில்லு, அவருடைய பணத்தை தான் வேறொரு இடத்தில் பந்தோபஸ்து செய்து வைத்திருப்பதாகவும், சிலவுக்கு வேண்டுமானால் கொஞ்சம் பணம் கொடுப்பதாகவும் சொல்ல, அதற்கு ஜெகதீஷ் தன்னிடம் இன்னும் ரூ.5,000/- வரை இருப்பதால் சிலவுக்கு பணம் தேவையில்லை என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் பில்லுவுக்கு ஆசை அதிகரித்து ஜெகதீஷை கொலை செய்து அவரிடம் உள்ள பணத்தை அபகரிக்க வேண்டுமென்ற சூழ்ச்சியுடன் அன்று மாலை கபேக்கு (cafe) வந்து தன்னிடமிருக்கும் பணத்தை வாங்கி கொள்ளச் சொல்லி அவரை அனுப்பி விடுகிறான்.
அன்று மாலை பில்லு, கபேயில் பாலு, பிரதர் என்ற இரு சகாக்களுடன் சுந்தரி என்ற தாசியை வைத்துக் கொண்டு ஜெகதீஷை எதிர்பார்த்திருக்கிறான்.
ஜெகதீஷ் தன சாமான்களை கந்தனிடம் ஒப்புவித்து விட்டு அன்று மாலை பில்லுவை கபேயில் சந்திக்கிறான். அங்கே பில்லு சுந்தரியைக் கொண்டு அவரிடம் சரசம் செய்யும்படி செய்து அவருக்கு மது பானம் கொடுக்கிறான்.
அப்பால், பில்லு தன் முன்னேற்பாட்டின்படி அன்று இரவு ஜெகதீஷை தன் வீட்டுக்கு கூட்டி வந்து சுந்தரியைக் கொண்டு அவரைக் கொலை செய்ய யத்தனிக்கும்போது அவர் அவரிடமிருந்து சாமர்த்தியமாய் தப்பி ஓடுகிறார். பில்லுவும் அவன் சகாக்களும் அவரை எதிர் கொள்கிறார்கள். அவர்களை அடித்து வீழ்த்தி விட்டு ஜெகதீஷ் வீட்டின் வெளியே உள்ள ஒரு காரில் குதித்து வேகமாக ஓட்டிக்கொண்டு போகும்போது பில்லுவும் அவன் ஆட்களும் வேறு ஒரு காரில் பின்னால் வருகிறார்கள். ஊருக்கு வெளியேயுள்ள ஒரு சாலையில் ஜெகதீஷின் காரில் கோளாறு ஏற்பட்டு நின்று விடுகிறது. பில்லுவும் அவன் ஆட்களும் அவ்விடம் வந்து சேருகிறார்கள். அவர்களுடன் ஜெகதீஷ் தீவிரமாகப் போராடிக் கடைசியில் களைத்துப் போயிருக்கும் போது, அவர்களில் ஒருவன் ஜெகதீஷின் தலயில் அடிக்க ஜெகதீஷ் மயங்கி கீழே விழுகிறார். அச்சமயம் அவ்வழியே கொஞ்ச தூரத்தில் வரும் ஒரு காரின் சப்தத்தை கேட்டு எல்லோரும் ஓடி விடுகிறார்கள்.
மேற்கூறியவை நிகழும்பொழுது ஜெகதீஷின் சகோதரன் பையனுக்கும் மனைவி காமாட்சிக்கும் கெட்ட கனவுகளும் அபச குணங்களும் தோன்றுகின்றன. பையன் ஜெகதீஷை தேடிக்கொண்டு புறப்பட்டு வருகிறார்
ஜெகதீஷின் சாமான்களை வாங்கி வைத்துக் கொண்டிருந்த கந்தன் அவரை தேடிக் கொண்டிருந்தபோது தற்செயலாய் பில்லுவை சந்தித்து விசாரிக்கிறான். கந்தனைக் கண்ட பில்லு திகிலடைந்து ஜீகடீஷ் ஊருக்கு போய் விட்டதாகவும், ரூ. 10 தன்னை கொடுக்கும்படி தெரிவித்தாகவும் சொல்லிப் பணத்தை கொடுக்கிறான். அதைக் கந்தன் வாங்கிக் கொண்டு ஜெகதீஷை ஸ்டேஷனில் சந்திப்பதற்காக அவருடைய சாமான்களை ஒரு வண்டியில் எடுத்துக்கொண்டு போகும்போது அதே வழியில் வந்த பையனின் மோட்டார் அந்த வண்டியில் மோதி சாமான்களெல்லாம் கீழே விழுகின்றன. அப்போது ஜெகதீஷின் பெட்டி ஒன்றை பையன் கவனித்து, கந்தனிடம் அவர் வரலாற்றினை தெரிந்து கொண்டு அவனுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்று பிராது (புகார்) கொடுக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னிடம் கந்தன் கொடுத்த ஜெகதீஷின் பர்சினை வாங்கிப் பையனிடம் கொடுத்து விட்டு துப்பு விசரிப்பதாக சொல்லி அவர்களை அனுப்பி விடுகிறார்.
அடிபட்டு விழுந்து கிடந்த ஜெகதீஷ் தடுமாறி எழுந்திருந்து அவ்வழி வந்த காரை நிறுத்துகிறார். தற்செயலாக அந்த காரில் இருந்த சுந்தர் (பால்ய சிநேகிதன்) அவரைக் காரில் ஏற்றிக்கொண்டு தன் வீட்டுக்கு வந்து அவருக்கு வைத்தியம் செய்விக்கி கிறான். ஜெகதீஷ் குணமடைந்து வருகிறார்.
போலிசுக்கு தகவல் கொடுத்த பின்பு பையனும், கந்தனும் கடற்கரையில் பில்லுவை பார்க்கிறார்கள் கந்தன் அவ்விடம் வந்திருப்பதை அறிந்த பில்லு வெகு சீக்கிரமாக காரில் ஏறி தன் வீடு வந்து சேருகிறான். பையனும், கந்தனும் அவனை பின் தொடர்ந்து அவன் (பில்லு) வீட்டை அடைகிறார்கள் பையன் கந்தனை போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் தகவல் கொடுக்க சொல்லி அனுப்பி விட்டு அந்த வீட்டிற்குள் சென்று பில்லுவுடன் தந்திரமாக பேசிக்கொண்டிருக்கும் போது அபி நயக் கச்சேரி செய்த சுந்தரிக்கு இனாம் கொடுப்பதற்காக பர்சை எடுக்கிறார். அதில் ஜெகதீஷ் என்ற பெயர் போட்டிருப்பதை பில்லு பார்த்து சந்தேகித்து பையன் பேரில் பாய்கின்றான். இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது போலீஸார் கந்தனுடன் வீட்டில் நுழைந்து பில்லுவை கைது செய்கின்றனர். அப்பால் (பின்பு) பையன் கண்டனுக்கு புத்திமதி சொல்லி அவனை அனுப்பி விட்டு ஊருக்கு திரும்புகிறார்.
ஒரு நாள் இரவு சுந்தர் வீட்டில் திருடர்கள் வர அவர்களை ஜெகதீஷ் அடித்து துரத்தி தன்னைக் காப்பாற்றிய நண்பனுக்கு தக்க சமயத்தில் உதவி செய்கிறார். பிறகு சுந்தரிடம் விடை பெற்றுக்கொண்டு ஜெகதீஷ் தன் ஊர் திரும்புகிறார்.
பில்லு தண்டனை அடைந்து சிறை செல்லுகிறான். ஜெகதீஷ் வீடு வந்து சேருகிறார். பிரிவால் கவலையுற்றிந்த சதிபதிகள் (கணவன் - மனைவியர்) சந்தோஷத்துடன் இருக்கிறார்கள்.
சுபம்.
================================================== ==========================================