http://www.youtube.com/watch?v=XP7bEX4_cDk
Printable View
நடிகர் திலகம் நடிக்கவந்த காலம் தொட்டு அவருடைய உண்மை சாதனைகளை மறைத்தும், அவருடைய பல முரியடிக்கபடாத சாதனை, பெருமைகளை தனதாக்கிகொண்டும், தம்முடைய சிறுமைகளை மற்றவர்கள் தலைமீது சுமத்தி பழக்கப்பட்டும் உள்ளவர்கள், உண்மை செய்திகளை ஆதாரமாக ஆவணங்களுடன் மற்றவர் வெளியிடும்போது எரிச்சல் கொள்வது இயல்பே. இதற்க்கு முக்கிய காரணம் இதுதான்.
தகவல் தொழில்நுட்பம் சற்றும் இல்லாத காலங்களில் துண்டு சீட்டு மூலம் அடிமட்ட தொண்டன் வரையில் (19 years with the help of DMK caders )பரப்பப்பட்ட பொய் செய்திகளையும், தகவல்களையும் இந்த தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் ஆதாரத்துடன் மற்றவர் வெளியிடும்போது இவர்களுடைய பரப்பப்பட்ட செய்திகள் அனைத்தும் பொய் செய்திகள் "காயமே அது பொய்யட..காற்றடைத்த பையடா " என்ற பழமொழிக்கு சான்றாக உள்ளதை நடுநிலையாளர்களும் பெருவாரியான மக்களும், இந்த கால இளைஞர்களும் உணர்ந்து பதில் கேள்வி ஆதார ஆவணம் சகிதம் கேட்கும்போது வாயடைத்து போகிறார்கள். காரணம் இவர்கள் சட்டியில் இவர்கள் கூறும் பொய்க்கும், பொய் தகவலுக்கு அதை உண்மை என்று நிரூபிக்கும் ஆதாரம் ஆவணம் ஒன்று கூட கிடையாது.
அவர் கூறினார்...இவர் அங்கிருந்து கொடுத்த தகவல்....அவர் இங்கு அனுப்பிய தகவல் என்பதை போலவே இன்றுவரை பரப்பிக்கொண்டு உள்ளது இங்கு அனைவரும் பொதுமக்கள் உட்பட கண் கூடாக காண்கிறார்கள்.
எவ்வளவோ தடவை இவர்கள் மற்றவரை பற்றி உரைக்கும் பொய்யான தகவலை ஆதார ஆவணத்துடன் இங்கும் சரி மற்ற இடத்திலும் சரி ...புளுகள் என்று நிரூபித்தாகிவிடது.
உதாரணம் : 6 வருடத்திற்கு முன்பு வெளிவந்து சாதனை படைத்த வசூல் ஒரு தொகை. ....அதே படத்தின் வசூலை இவர்கள் தங்களுடைய 6 வருடத்திற்கு பிறகு வந்த திரைப்படத்தின் டிக்கெட் விலை ஏற்றப்பட்டு கிடைத்த வசூலோடு ஒப்பிட்டு....இந்த வசூல் முரியடிக்கபடவில்லை என்று மார்தட்டிகொள்வது சிரிப்பை தான் வரவழைக்கிறது.
இதை விட இன்னொரு கொடுமை...பத்திரிகை ஆவணம் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட நாட்களில் ஒரு திரைப்படம் வசூல் செய்து ..அதுவரை வந்த திரைப்படங்களிலே இந்த படம்தான் எல்லா சாதனைகளையும் முறியடித்துள்ளது என்று புள்ளி விவர கணக்குடன் கொடுத்தும்கூட அது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல்....நடிகர் வடிவேல் பாணியில்...."என்ன கைய புடிச்சு இழுத்தியா " என்று பதிவு செய்வதை பார்த்து என்ன சொல்ல...!
இவர்களே ஒரு சட்டத்தை போடுவார்கள் ....அதை நாம் follow செய்ய வேண்டும்...ஆனால் இவர்கள் மட்டும் follow செய்ய மாட்டார்கள் !
உபதேசம் ஊருக்குதான்....!
1952 முதல் உயிருடன் உள்ளவரை நேரிடையாக திரையுலகை வாழவைத்தது யார்...இப்பூவுலகு விட்டும் மறைந்தும் இவர்படத்தால் நாம் வாழலாம் என்று ஒரு விநியோகஸ்தர் வெளியிடும்போது அப்படி வெளியிடுபவர்களை இவரும் வாழ வைத்துகொண்டுதான் இருக்கிறார் என்பது திரை உலகில் உள்ள அனைவருக்கும் தெரியும்...
ஒரு வருடத்தில் சராசரி 8 படங்கள் நடிகர் திலகதினுடயது 1952 to 1986 வெளிவந்தபோது...எங்கெல்லாம் வெளிவருகிறதோ அங்கெல்லாம் உள்ள
எத்துனை தயாரிப்பாளர்கள்..
எத்துனை இயக்குனர்கள்..
எத்துனை இசை கலைஞர்கள்...
எத்துனை சக நடிகர்கள் ..
எத்துனை சக நடிகைகள்..
எத்துனை துணை நடிகர்கள்...
எத்துனை கேமரா ஆட்கள்...
எத்துனை ஸ்டுடியோக்கள் அங்குள்ள தேநீர், காபி, சிற்றுண்டி மற்றும் பீடி விற்பவர்கள்
எத்துனை போஸ்டர் ஓட்டுபவர்கள்
எத்துனை போஸ்டர் பிரிண்ட் செய்பவர்கள்
எத்துனை போக்குவரத்து செய்பவர்கள்
எத்துனை சம்பத்தப்பட்ட இதர கலைஞர்கள்...
எத்துனை விநியோகஸ்தர்கள்..
எத்துனை திரை அரங்கு உரிமையாளர்கள்...
லீஸ் பார்ட்டிகள்,
சைக்கிள் ஸ்டான்ட் வைத்திருப்பவர்கள்...
கான்டீன் வைத்தவர்கள்...
முறுக்கு விற்பவர்கள்...
கார் ஸ்டான்ட் வைத்தவர்கள்...
இன்னும் எத்துனை எத்துனை பேர் நேரிடையாகவும் மறைமுகமாகவம் அந்த திரைப்படங்கள் வெளிவரும்போது ஜீவனம்...வாழ்வாதாரம் பெற்றார்கள் என்பது இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் ! .....!
இத்துனை கணக்கில் அடங்க பேர்கள் யாரால் வாழ்ந்தார்கள் ?
யாரால் ஜீவனம் பெற்றார்கள் ? யாரால் காசு சம்பாதித்தார்கள் ?
என்னமோ .....இவர்கள்தான் உண்மை விளம்பிகள் போல மற்றவர் கூறுவது பொய் போல ...ஏன் இந்த ஜோடனை ? இன்னும் எத்துனை காலங்கள் இது தொடரும்...!
நடிகர் திலகம் இல்லாத ஒரு திரை உலகு.....இருள் கொண்ட ஒரு பாழடைந்த மண்டபமாக தான் இருந்திருக்கும் !
சிவாஜியை வெறும் காழ்புணர்ச்சி, வயிதெரிச்சல் கொண்டு அவர் வளர்ச்சியை அவரது சாதனைகளை பார்த்து பொறாமைகொண்டு இப்படி தூஷணம் ஏன் ?
திரை உலகில் , நடிகர்கள் எப்படி நடிக்கவேண்டும் ..எப்படி தமிழ் ஏற்ற இறக்கத்துடன் பேசவேண்டும், எப்படி சொன்ன நேரத்தில் படத்தை முடித்து கொடுக்கவேண்டும், முக்கியமாக பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை எந்த விதத்திலும் சித்ரவதை செய்யாமல் எப்படி punctual ஆக படபிடிப்புக்கு வரவேண்டும் என்பதை அனைவருக்கும் கற்றுகொடுத்த ஆசான் நடிகர் திலகம் ! அது நினைவிருக்கட்டும் முதலில் !
ஏழேழு ஜென்மம் ....எத்துனை பிறவி எடுத்தாலும் nobody can ever think or even dream of achieving the status of nadigar thilagam in the entire world of cinema !!
They can perhaps try & maintain their fake tall claims like an air filled balloon only !
DEAR SIVA SIR YOUR LIST IS PERFECT. mY NAME IS subramaniam RAMAJAYAM not ramanujam as mentioned in the list. it is okay otherwise. from the age of 10 i was an ardent fan of NT.TODAY iam 65. by god's grace iam able to get along with three geneations of NT fans and associates.
dear abkhlabhi. Thanks for exhibiting the undisputed talent of NT in horse riding and his majestic walk and talk in his avtaar as Shivaji. This footage should be preserved to show to the future generations how the original Marathi Warrior Shivaji would have behaved, as depicted by NT with perfection.
செல்லுலாய்ட் சோழன் – 20
சுதாங்கன்
தன் முதல் படமான `பராசக்தி’ யில் பாடிய சி.எஸ். ஜெயராமன் படியதை சிவாஜி இன்னும் மறக்கவில்லை. அவரே தான் தனக்கு தொடர்ந்து பாட வேண்டும் என்று ஒவ்வொரு தயாரிப்பாளர்களிடமும் சிவாஜி சொல்லிக்கொண்டிருந்த சமயம் அது!
`தூக்குத் தூக்கி’ படத்தில் நாட்டுப்புறப் பாணி பாடல்கள் தான் அதிகம். `தெம்மாங்கு பாடுவதில் செளந்தரராஜனுக்கு ஈடு கிடையாது’ என்றார் இசையமைப்பாளர் ராமநாதன். எல்லாம் சரி இப்போது செளந்தரராஜன் குரலை சிவாஜி ஒத்துக்கொள்ள வேண்டுமே ? சரி! சிவாஜி தொடரில் ஏன் இத்தனை விஷயம் டி.எம்.எஸ்ஸீக்கு இன்று ஒரு கேள்வி எழலாம்! இதற்கு பிறகுதான் சிவாஜியின் இன்னொரு பரிமாணத்தை நாம் பார்க்கப்போகிறோம்! அதற்காகவே இந்த பீடிகையோடு கூடிய டி.எம்.எஸ். அறிமுகம் தேவை!
இந்தக் கேள்வியும் கூடவே செளந்தரராஜனின் தன்மான உணர்ச்சியும் குத்திக்கொண்டே இருந்தது. ! தயாரிப்பாளரிடம் சொன்னான், ` எட்டுப் பாட்டுல சிறப்பா இருக்கிற மூணு பாட்டை கொடுங்க ! அத மட்டும் முதல்ல பாடறேன். பதிவான பாடலை சிவாஜி கேட்கட்டும்! அவர் ஒத்துக்கிட்டா மத்தப் பாடல்களையும் பாடறேன். இல்லேன்னா நீங்கள் எனக்கு பணமே கொடுக்க வேண்டாம்!
படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான ராதாகிருஷ்ணனின் ஒலிப்பதிவுக்கூடத்தில் முதல் பாடல் பதிவானது.
`சுந்தரி செளந்தரி நிரந்தரியே’ அடுத்த பாடல் ` பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே ‘ அப்புறம் ` ஏறாத மலை தனிலே ‘ முதல் பாடலை பி.லீலாவும், ஏ,பி. கோமளாவும், டி.எம்.எஸ்ஸுடன் பாடினார்கள்.பாடலை மருதகாசி எழுதியிருந்தார். பெண்களை நம்பாதே பாடலை உடுமலை நாராயண கவி எழுதியிருந்தார்.
மூன்றாவது முற்றிலுமான தெம்மாங்கு! திஸ்ர நடை, மூன்று கட்டை சுருதி! ஏறாத மலை தன்னிலே ஜோரான கவுதாரி ரெண்டு’ தஞ்சை ராமய்யதாஸ் பாடல்! `பாகவதர் மாதிரி சாரீரம். கள்ளத் தொண்ட கலக்காமல், வார்த்தைகள் திரண்டு நிக்குது. உணர்ச்சி வேகத்தில் எப்படி பாடுகிறார் ‘ வியந்து பாராட்டினார் தஞ்சை ராமய்யதாஸ்!
பாடல் பதிவானவும் சிவாஜி வீட்டுக்கு போன் பறந்தது. ! இரவு பகலாக படப்பிடிப்பில் இருந்த சிவாஜி தனக்காக பதிவான பாடலைக் கேட்க பறக்கிறார்! காரை விட்டு இறங்கிய சிவாஜியை அப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்கிறார் செளந்தரராஜன். தான் பாடிய பாடலுக்கு இவர் எப்படியெல்லாம் நடிப்பார் ! செளந்தரராஜன் மனதில் கற்பனை ! மரியாதையுடன் ராமநாத அய்யரின் பக்கத்தில் நிற்கிறார் செளந்தரராஜன். `சுந்தரி செளந்தர் நிரந்தரியே ‘ நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தபடி கேட்கிறர் சிவாஜி! `கண்டால் சொல்லும் விஷமாம்’ என்று அடுத்த பாடல் ஒலிக்கிறது அடுத்து `ஏறாத மலை மீது பாடல் ஒலிக்கிறது. சாய்ந்து உட்கார்ந்திர்ந்த சிவாஜி நிமிர்ந்து உட்காருகிறார்.
பாட்டுக்கள் முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்திருந்த சிவாஜி ஒரு புன்னகையுடன் எழந்து நிற்கவும் சரியாக இருந்தது.
சிவாஜி : ` இந்தப் பாட்டுக்களை யார் பாடியது ?’
ராமநாதன்: `இதோ இந்த மதுரைப் பையன். செளந்தரராஜன்னு பேரு ..’’ அறிமுகப்படுத்துகிறார்!
`வாங்கய்யா ‘ என்று செளந்தரராஜனை அருகில் அழைத்தார் சிவாஜி
`நல்லா பாடியிருக்கீங்க.. எல்லாப் பாட்டுக்களையும் நீங்களே பாடுங்க’ அன்பாக செளந்தரராஜனை முதுகில் தட்டிகொடுக்கிறார் சிவாஜி.
ஒரு நடிப்புக் கலைஞன் ஒரு பாட்டுக் கலைஞனுக்கு கொடுத்த முதல் பாராட்டு!
`தூக்குக் தூக்கி படத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்! பட்டித் தொட்டியெங்கும் அதே பாடல்கள் தான் ` படம் வசூலை வாரிக் கொட்டியது.
1954ம் வருடம் வந்த படம் தூக்குத் தூக்கி. மற்ற எல்லாத் தயாரிப்பாளர்களையும் திகைப்பில் ஆழ்த்திய படம் தூக்குத் தூக்கி. ஒரு நாடோடிக் கதைக்கு மக்களிடம் இத்தனை வரவேற்பா என்கிற கேள்வி ஒரு புறம். இல்லை படத்தின் அத்தனை பாடல்களும் பிரமாதம்! அதுவே மக்களை கொட்டகைக்கு வரவழைத்துவிட்டது என்று சொல்பவர்கள் இன்னோரு புறம்.
இந்த வருடம் அதாவது 1954ம் வருடம் மட்டும் சிவாஜிக்கு மொத்தம் எட்டு படங்கள் வெளியானது.
தூக்குத்தூக்கி, இல்லறஜோதி, `அந்த நாள்’ `கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி’ `துளிவிஷம்’ `கூண்டுக்கிளி’ எதிர்பாராதது.
இதில் ஜனரஞ்சகமாக ஒடி வெற்றியை கண்ட படம் தூக்குத் தூக்கிதான். இந்த படத்தின் பாதிப்பினால் தனக்கு இப்படி ஒரு படம் வேண்டுமென்று எம்.ஜி.ஆர் இயக்குனர் ராமண்ணாவிடம் கேட்டு, இதே பாணியில் அவர் எடுத்த படம்தான் குலேபகாவலி அந்த அளவுக்கு இந்த படத்தின் பாதிப்பு இருந்தது. நவரசங்களையும் கலந்து ஜனரஞ்சகமான படத்தை தன்னால் தரமுடியும் என்பதை இந்த படத்தில் சிவாஜி நீருபித்தார். அரசகுமாரனான சிவாஜி இந்த படத்தில் பல மாறு வேடங்களைப் போட்டு பிரமாதமாக நடித்தார். குறிப்பாக ` குரங்கிலிருந்து பிற்ந்தவன் மனிதன் படத்திற்கு அவர் லலிதா, பத்மினியுடன் சிவாஜி நடனமாடும்போது, கொட்டகையே அதிருமாம், விசில் பறக்கும் !
இந்த படத்தில் ` அபாய அறிவிப்பு அய்யா அபாய அறிவிப்பு’ என்று ஒரு பாட்டை சிவாஜி , யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளையிடம் பாடுவார். இந்த யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை யார் ? இவருடைய நாடக சபாவில் தான் சிவாஜி முதன் முதலாக சேர்ந்து நடிப்பு பயிற்சி பெற்றார்.
இந்தப் படத்திற்குப் பிறகு தான் சிவாஜிக்கு பின்னனி இனி டி.எம்.எஸ்தான் என்பது உறுதியானது!
இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால் `தூக்குத் தூக்கி’ வெளியான அதே தினத்தில்தான் 26.81954 அன்று எம்.ஜி. ஆர் சிவாஜி முதல் முறையாகவும், கடைசியாகவும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படமும் வெளியானது.
இருபெரும் நடிகர் நடித்த ஒரே படம் என்கிற ஒரே ஒரு சிறப்புத்தான் இந்த படத்திற்கு உண்டு. சிவாஜி இந்த படத்தில் வில்லம் கதாபாத்திரம். படம் இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்களுக்கு திருபதியில்லை. படம் படு தோல்வி. இந்த படத்தை டி.ஆர். ராமண்ணா இயக்கியிருந்தார்.
அடுத்து வந்த படம் `துளிவிஷம்’ `நரசு காபி’ நிறுவனத்தின் அதிபரான வி.எ. நரசு தயாரித்த படம்தான் இந்த துளி விஷம். திரைக்கதை வசனம் எழதி படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ. சாமி. இந்தப் படத்தில் ஒரு திருப்பம். இதில் கதாநாயகன் கே.ஆர். ராமசாமி. சிவாஜி மீண்டும் இந்த படத்திலும் வில்லன்.
இந்த இடத்தில் சிவாஜியை பற்றி ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும். தனக்கு நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்துத்தான் படத்தை ஒப்புக்கொள்வர். அது வில்லனா ? கதாநாயகனா அவருக்கு கவலை கிடையாது !
(தொடரும்)
விமர்சனங்களுக்கு: sudhangan@gmail.com
Dear KCS Sir:
Excellent article. However, there are certain facts not represented fully/correctly. First, the biggest movie of NT after "Parasakthi", i.e., "Manohara" is not in the list of movies released in 1954. Though Manohara was the most reputed movie of 1954 till date, Thookku Thookki has the distinction of better movie in terms of box office and NT got the best actor (Pesum Padam - cinema rasigargal award, if am right) for Thookku Thookki.
1954 - I've earlier also indicated somewhere in the earlier threads about this year. Typically, this is the second year of NT's career - 1952's debut movie 'Parasakthi' got released at the fag end of 1952. See within a year, he was able to churn out 8 different movies out of which 4 are 100 day movies. Kalyanam Panniyum Bramhachari (KPB), Manohara, Edhirparadhadhu & Thookku Thookki (Murali Sir to confirm) of which Thookku Thookki and Manohara are blockbusters (2 tangentially different characters). Edhirparadhadhu, KBP along with "Andha Naal" (anti-hero that too national traitor) and others are also different characters.
The underlying fact is only one thing. The confidence combined with the guts and talent of NT was evident right from his first film and getting better even at his young age.
You can use your good offices to correct Mr. Sudhangan's article AS WE NEED TO EMPHATICALLY PROJECT OUR NT. No doubt, Mr. Sudhangan has been doing great service by this series. However, without hurting his ego, we have to fine tune.
Regards,
R. Parthasarathy
ஒருவருக்கொருவர் ஆறுதல் இப்படிதான் கூறிகொள்ளவேண்டும்.
நம் சாதனையால் அடுத்தவருக்கு வலி, வேதனை, ஏமாற்றம்...இதை தான் இனி வரும் காலங்களில் சொல்லி சமாளித்தாகவேண்டும்...என்ன செய்வது...ஆதாரத்துடன் ஒரு செய்தி வெளிவந்து அதற்க்கு முன் பரப்பப்பட்ட பொய் செய்தி, தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும்போது..இப்படி பொதுபடையான வாக்கியங்கள் உபயோகிப்பது நல்ல ஒரு STRATEGY
இதை தான் நாம் முன்பே உரைத்தது போல....காலம் காலமாக தம்முடைய சிறுமையை அடுத்தவர் தலையில் கட்டி ...அடுத்தவர் பெருமைகளை தனதாகி அதை தமுடயது என்று பறை சாற்றும் கலை என்பது !
அடேயப்பா...! என்ன திறமை...என்ன திறமை..!
நடிகர் திலகம் செய்த புண்ணியம்...பெரிய மனது வைத்து ஏதோ 4 வருட இடைவெளியில் வந்த இரண்டு படங்களை ஒப்பிட்டார்கள் ...கொஞ்சம் விட்டால் இவர்கள் வசூல் ஒப்பீடு 1952இல் வெளிவந்த பராசக்தி ரிலீஸ் வசூலுடன் 1977இல் வந்த மற்றொரு படத்தின் வசூலை ஒப்பிட்டு...பராசக்தி வசூலை முறியடித்தது மேலும் இந்த படத்தின் வசூலை எந்த படமும் முறியடிக்கவில்லை என்று வழக்கம் போல எந்த ஆவணம்...ஆதாரம் இல்லாமல், கூறவில்லையே அதுவே ஒரு பெரும் ஆறுதல்...
பாவம் அரசியல் வெற்றி வேறு ...திரைப்பட சாதனை ..சாதித்தல் என்பது வேறு என்பதை இவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை....அரசியல் முழு வெற்றி...திரைபடத்துறயிலும் அப்படி இருக்கவே வாய்ப்பு என்று (ASSUMPTION) கருதிய, கருதும் மக்கள் அந்த கருத்து மாறி ..VICE VERSA வாக தான் இருந்திருக்கிறது அந்த காலத்தில் என்று ஆவணங்களையும் ஆதாரங்களையும் ஒப்பிட்டு பார்க்கும்போது என்பதை தகவல் தொழில்நுட்பம் வளர தொடங்கிய காலத்தில் இருந்தே ஆவணங்களையும் ஆதாரங்களையும் பார்த்து படித்து எது உண்மை எது புருடா என்று உணர தொடங்கிவிட்டார்கள் என்பதை காலம் கனியும்போது உணர்ந்துகொள்வார்கள் !
வேறு வழி...? இப்படி ஒரு சமாளிப்பு செய்யாமல் போனால் ..மற்றவர்கள் கண்டுபிடித்து விடுவார்களே என்ன செய்வது....ஆகையால் என்ன ஆதார ஆவணம் யார் பதிவிட்டு அதற்க்கு முன் வந்த செய்தி பொய்...தவறு என்று நிரூபித்தாலும் ...
இவர்களுக்கு மட்டும்...."என்ன கைய புடிச்சு இழுத்தியா?" மற்றும்..." "ஒன்னு இந்தா இருக்கு...இன்னொன்னு எங்கே.....என்று கேட்கும்போது...."அதுதாண்ணே இது " என்ற கதைதான் !
நல்ல வேளை இணையதளத்தில் பொதுமக்களும் பெருவாரியாக பார்கிறார்களா பிழைத்ததா...இல்லையென்றால் அவ்வளவுதான் !
" திரை உலகில் சிவாஜி என்றொரு நடிகர் இல்லவே இல்லை ! " என்று கூறினாலும் ஆச்சர்ய படுவதற்கு இல்லை !
Rks...
அருமையான இந்த காவியம் !
இதில் நாம் சற்று கவனிதோமேயானால், நடிகர் திலகத்தின் திறமை, தரம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்தது என்பதை உணரலாம்.
பேசி கொண்டிருக்கும்போதே முகபாவ மாற்றம் முகத்தில் உள்ள நெற்றி புருவம் முதல் உதடு தாடை வரை கோர்த்த அபிநயம்.
மராத்த மன்னர் சிவாஜி போல உள்ள இறைவன் அருளால் வந்த அதே உருவ அங்க அமைப்பு...குதிரை ஓட்டும் லாவகம்..!
கேமரா எந்த கோணத்தில் வந்தால் எப்படி நிற்கவேண்டும்..ஓடிகொண்டிருக்கும் கமெராவுடன் எந்த கோணத்தில் நடக்கவேண்டும் என்ற துல்லியமான அந்த technical knowledge ...இன்னும் எவ்வளவோ இந்த ஒரு சில நிமிட video மூலம் நாம் உணர முடிகிறது ...! இத்தனைக்கும் இது வேறு மொழி திரைப்படம் !
வீம்பளப்பவர்கள் பலரும் இந்த ஒரு சில நிமிட video விற்கு பதில் சொல்ல முடியுமா ?
அதுதான் பிறவி கலைஞன் !
திருவிளையாடல்- 1965.
சிவாஜியின் புராண படங்களின் வரிசையில் நான்காவது படமான திருவிளையாடல் அவர் அறிமுகமாகி 13 ஆண்டுகள் கழிந்தது. இதற்கு முன் சம்பூர்ண ராமாயணம்(1958) படத்தில் சிறிய பங்கு பரதனாக. ஆனால் ராமனை மீறி பரதன் புகழடைந்தது நடிகர்திலகத்தின் பிரத்யேக சரித்திரம்.அதுதான் சிவாஜி.இன்னொரு அரசியல் ஜி ராஜாஜியின் பாராட்டே சான்று. 200 நாள் கண்ட வெற்றி சித்திரம்.பரதனும்,பாடல்களும் சாதித்தது. அடுத்த ஸ்ரீ வள்ளி(1961) ,ராமண்ணா இயக்கிய ,நடிகர்திலகத்தின் இரண்டாவது வண்ண படம்.இரண்டாவது புராண படம். ஏனோ சோபிக்கவில்லை. நடிகர்திலகமே கிண்டலடித்தார் தன்னுடைய சிவாஜி ரசிகன் பட தொகுப்பு ஆல்பத்தில். 1964 இல் வெளியான கர்ணனின் புராண சரித்திர இதிகாசம் நான் சொல்லி ரசிகர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.உலகுக்கே தெரிந்த உன்னதம்.
1965 -திருப்பு முனை வருடம். 1964 அவருடைய வெற்றி சரித்திரத்தின் பாக்ஸ் ஆபீஸ் உச்சம். 1965இல் புதியவர்களின் வருகை, மற்றும் re- emergence of entertainment movies அவருடைய பழனி,அன்பு கரங்கள் படங்களுக்கு போதிய வரவேற்பில்லாமல் செய்தது.போர், திராவிட அரசியல்,கடவுள் எதிர்ப்பு எல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில் திருவிளையாடல் வருகை. திருவிளையாடல் அளவுக்கு,எதிர்ப்பிலும் ,சாதகமற்ற சூழ்நிலையிலும் சாதித்து காட்டிய படங்கள் உலகளவில் பார்த்தாலும் வெகு சொற்பமே. இதன் இமாலய வெற்றி உலகறிந்தது.
திருவிளையாடலின் பிரத்யேக சிறப்புகளை பார்ப்போம்.அதுவரை வந்த புராண படங்கள் யாவும் ,இதிகாச கதையமைப்பை அடிப்படையாக கொண்டவை. அதில் ஒரு நாயகனை வரித்து ,சார்பு கொண்டாலும் ,பெரும்பாலும் கதையமைப்பு சார்ந்தவை.பக்தி படங்களிலும் உருக்கம்.miracle அடிப்படை . இந்த நிலையில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை அடித்தளமாக்கி episode பாணியில் கதை கோர்ப்பு முயற்சிகளுக்கு முன்னோடி திருவிளையாடல்.வெகு வெகு சுவாரஸ்யமான கோர்ப்பு. முதலில் ஒரு புராண படம் நாயகனை முன்னிறுத்தி உருக்கம்,பக்தி,miracle,glorification இவற்றை செய்யாமல் ,சராசரி மனிதர்களின் பிரச்சினைகளே விஸ்வரூப தரிசனமாய் 5 எபிசோடில் விரிந்தது.(connectivity with common mans' problems and his heart)
முதல் பிரச்சினை- sibling ego conflict . குடும்ப பிளவில் முடியும் முருகனின் தனி வீடு பிரச்சினை. ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போல மக்களால் connect பண்ணி உணர முடிந்த ஒன்று.ஆனால் அசாதரணமான ஞான பழத்தை முன்னிறுத்தி. ஏற்கெனெவே பிரபலமான ஒவ்வையார் பாத்திரம்,கே.பீ.சுந்தரம்பாள் இவற்றின் வெகு புத்திசாலிதனமான நுழைப்பு. படத்திற்கு புது களையை அளித்து விடும்.(பழம் நீயப்பா).
இரண்டாவது பிரச்சினை- நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன அறிஞர்களின் தார்மீக நெறி சார்ந்த ethic based ego conflict .இதில் இலக்கியம் ,மொழிவளம்,நகைச்சுவை,உன்னத நடிப்பின் உச்சம்,சுவாரஸ்யமான விவாத போக்கு இவற்றினால் ஒரே பாடல் கொண்டு 50 நிமிட படம் போகும் வேகம். (ஏ.பீ.என் ஏற்கெனெவே இதற்காக practice match ஆடியிருந்தார் நான் பெற்ற செல்வம் படத்தில்)
இங்கு உள்ள படித்த ,வேலை பார்க்கும் அனைவருக்கும் Transaction Analysis பரிச்சயம் ஆகியிருக்கலாம். இதில் ego stage என்பதை parent -Exterro Psyche(dos and donts )-adult-Neo Psyche(reality and practical ) -child-Archaeo Psyche (wishes&needs , Tandrum,illogical )என்ற நிலைகளிலேயே நம் அத்தனை நடைமுறை செயல்பாடுகள்,உரையாடல்கள் மற்றோருடன் நடை பெறுகின்றன.
உதாரணம்- கணவன் அலுவலகம் கிளம்புகிறான். மனைவி வழியனுப்புகிறாள். தொடருங்கள்.
"இதோ பாரு ,நான் வீட்டை விட்டு கிளம்பறேன். நல்லா பூட்டிக்கோ.பத்திரம்".(parent ).
ஆமா பெரிசா வாங்கி போட்டிருக்கீங்க யாராவது திருடிட்டு போக. திருடன் வந்தாலும் அவன்தான் எதையாவது விட்டுட்டு போகணும்.(child ).
இப்போ நான் என்ன சொல்லிட்டேன்.நீ பத்திரமா இருக்கணும்னுதானே சொன்னேன் செல்லம்.(adult ).
ஆமா.பத்திரமா இருக்கேன். என் கிட்டே என்னை தவிர வேறென்ன இருக்கு.பாதுகாக்க. ஒரு நகையா நட்டா(child ).
சரி.office கிளம்பும் போது மூட் அவுட் பண்ணாதே. வாயை மூடறியா (Parent )
சரி.சரி.என்னை அதட்டுங்கள். உங்க promotion பிரச்சினை என்னாச்சு?(adult ).
அது இன்னும் முடியாத கதை.வேணு எனக்கு supervisor ஆக இருக்கும் வரை எனக்கு கிடைச்ச மாரிதான்.(child ).
ஆமா .உங்க வீரம் வீட்டிலேதான்.(child ).
ஆமா உன் கிட்ட காட்டாம யாரிட்ட காட்டுரதான்.இது போன தீபாவளிக்கு வாங்கினதுதானே.(adult ).
ஆமா.நல்லி போயிருந்தமே?அப்படியே சீதா வளைகாப்புக்கும் போனோமே?(adult ).
ஞாபகம் இருக்கு. இந்த கலர் உனக்கு பொருத்தம்.(Adult ).
சரி.தலை கொஞ்சம் சரியா வாரலை போலருக்கே. சீப்பு கொண்டு வரேன்.(adult ).
இதில் சில அனுசரணையானது(Adult -Adult ). சில முரணானது.(crossed Transaction.adult -child ,adult -parent )சில ஒப்பு கொள்ள கூடியது.(parent -child )
நம் வாழ்வில் தற்காலிக-நிரந்தர வெற்றிகள் ,இதனை நாம் பயன் படுத்தும் விதமே.ஆனால் இவைதான் வாழ்வையும் ,கலையையும் சுவாரஸ்யமாக்குகின்றன.இனி திருவிளையாடலுக்கு மீண்டு வருவோம்.
கொஞ்சம் புரிய தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன்.
இந்த episode சிவன்தான் parent ரோல். தன் ஸ்தானத்தில் இருந்து கண்டிப்பு, பராமரிப்பு (தருமிக்கு), சோதிப்பு (நக்கீரன் புலமை மற்றும் பணி நேர்மை) கொண்டது. நக்கீரன் adult ரோல். உள்ளதை உள்ளபடிக்கு தன் தொழில் தர்மத்தில்,நிலையில் உறுதியாக.தருமி child ரோல்.தனக்கு தகுதியில்லைஎன்றாலும் ஆசை படும் நிலை.எடுப்பார் கைபிள்ளையாய்.இப்போது நான் சொன்னதை வைத்து ஒவ்வொரு வசனமாய் எடுத்து ஆராய்ந்தால், இந்த முழு பகுதியில் வரும் நகைச்சுவை, விவாத சுவை,லாஜிக் மீறாத crossed transactions .இதில் சில சமயம் சிவன் parent ,adult ,child நிலைகளில் மாறும் அழகு. நான் யார் தெரிகிறதா ,என் பாட்டிலா குற்றம் (child ). சங்கறுக்கும் நக்கீரனோ என் பாட்டில் குற்றம் சொல்ல தக்கவன் (child ),நக்கீரன் பதிலுக்கு சங்கரனார்க்கு ஏது குலம் (child ). தருமி எல்லா நிலையிலும் child state interraction .இதில் வசன வாரியாக விளக்க அவசியமில்லாமல் ,அனைவருக்கும் தெரிந்த episode .இதில் முழுக்க முழுக்கவே Transaction Analysis வகுப்புக்கு பாடமாக்கலாம்.
இதிலும் எல்லா தரப்பு மக்களும் தங்களை பிணைத்து கொள்ளும் தகுதி மீறிய ஆசை,கைகெட்டும் தூர அதிர்ஷ்டம்,அது அடையும் நிலையால் denial சார்ந்த சிரமங்கள், அற்புதமான situational dialogue காமெடி, ஒரு பட்டி மன்ற சுவையுடன் இலக்கியம் சார்ந்த தமிழ் விளையாட்டு என்று ethic value based conflict ஒன்று பொது மக்களுக்கு முழு சாப்பாடு திருப்தியாய் பரிமாற பட்டு விடும்.
முதல் காட்சியில் தருமி யின் புலம்பலுக்கு காட்சி தரும் போது parent நிலையில் ஒரு கண்டிப்பான provider ஆகவே தருமியை child ஆகவே கருதுவார். தருமி தனக்கும் சற்றே புலமையுண்டு என ஸ்தாபிக்க எண்ணும் போது ,adult -adult transaction ஆக மாறும்.ஓலை கொண்டு போக தயங்கும் தருமிக்கு கொடுக்கும் உற்சாகம் parent -adult ஆக மாறும்.
அடுத்த episode எல்லா வீட்டிலும் கிடந்தது லோல் படும் பிறந்து வீடா,புகுந்த வீடா பிரச்சினை.male ego -female ego clash ஆகும் பிரச்சினை. அழிவின் விளிம்பு வரை செல்லும்.
அடுத்த episode love teasing பிரச்சினை.
அடுத்த episode .... எனக்கு அலுவலகத்தில் நேர்ந்தது. ஷா(ஹேமநாதர்) என்ற ஒரு பெரும் அகந்தை கொண்ட vice president (production ).அவருக்கு சம நிலையில் இல்லாத பன்ஸல்(பாண்டிய மன்னன்) என்ற vice president(விற்பனை) .இவர்களுக்குள் மீட்டிங் தோறும் சவால்கள் இருக்கும். ஒருவருக்கொருவர் ஆகாது.அப்போது ஒரு விவகாரமான டாஸ்க் force ரிப்போர்ட். அது சரியான பாணம் ஷாவை மட்டம் தட்ட. அந்த பணியை ஜூனியர்(பாணபட்டர்) ஆன என்னிடம் கொடுத்து ஷாவிடம் அனுப்பினார் பன்ஸல் . எனக்கோ உள்ளுக்குள் உதைப்பு.(இருவரையும் பகைக்க முடியாது) பாணபட்டர் போல முறையிட கடவுள் நம்பிக்கையும் கிடையாது.நான் என்ன பண்ணினேன்,ஒரு தைரியமாக (பன்ஸல் இடம் அனுமதி வாங்கி)என் staff(விறகு வெட்டி) ஒருவரை நன்றாக சொல்லி கொடுத்து ,இந்த மூன்று கேள்வி கேளுங்கள், டூரில் இருந்து வந்தவுடன் கோபால் உங்களிடம் வருவார் என்று செய்தியுடன்.அந்த கேள்விகளின் ஆழம் தாங்காத ஷா ,சிஷ்யனே இப்படி என்றால் என பயந்து task force report பாதகமாக இருந்தும் ,அப்படியே ஒப்பு கொண்டார்.பன்ஸல் வெற்றி களிப்புடன் எனக்கு ஒரு promotion கொடுத்து கொண்டாடினார்.
இது கிட்டத்தட்ட சிவபெருமான் இல்லாத திருவிளையாடல். கடைசி ஒன்று challenge to the establishment ,அது சார்ந்த personality conflict ,superiority complex மற்றும் அது சார்ந்த வாழ்கை சறுக்கல்கள்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஒரு நிலையிலாவது உணர கூடியது.
இப்போது புரிகிறதா இந்த புராண படத்தின் அசுர வெற்றியின் ரகசியம்? ஒவ்வொரு எபிசோடும் நம் வாழ்க்கைக்கு அருகே வந்து ஒவ்வொரு தனிமனிதனையும் தொட்டு பார்க்க கூடியது. எந்த அமானுஷ்யமும் கிடையாது.(சிவாஜி என்ற நடிப்பதிசய அமானுஷ்யம் ஒன்றை தவிர )
முதல் அரை மணி நான்கு பாடல்கள் கடக்கும்(சம்போ மகாதேவா,அவ்வையின் இரண்டு,பொதிகை மலை). அடுத்த ஒன்றரை மணி ஒரு பாடலும் இருக்காது. (ஒன்றே ஒன்று நீல சேலை)ஒரு ஆடல் சிவதாண்டவம். அடுத்து ஒரு மணி நேரம் ஐந்து பாடல்கள்.(ஒரு நாள் போதுமா,இல்லாததொன்றில்லை,இசை தமிழ் நீ செய்த,பார்த்தா பசுமரம்,பாட்டும் நானே),கடைசி முடிவில் ஒன்று ,இரண்டு,வா சிவாசி என்று .கிட்டத்தட்ட முக்கிய இரண்டு பகுதிகள் இயல் தமிழுக்கு,இசை தமிழுக்கு என பிரிக்க பட்டு சிவனின் நாடகம் அரங்கேறும்.
என்ன அழகான சுவாரஸ்ய பகுப்பு? ஒரு வித்யாசமான அமைப்பு மற்றும் அணுகுமுறை சுவாரஸ்யம் கூட்டும்.
சிவாஜியின் மேதைமை ,இந்த படத்துக்கான நடிப்பு முறையையே புரட்டி போட்டு பல விற்பன்னர்களையே தலை சுற்ற வைத்தது. அப்படி ஒரு சிந்தித்து செயல் பட்ட ஒரு plasticity கொண்ட அதிசய நடிப்பு முறை. திருவிளையாடற் புராணம் மதுரை மண்ணில் சிவ பெருமான் சாதாரண மக்களுடன் மக்களாய் நின்று தோள் கொடுத்து செய்த மகத்துவங்களை குறிக்கும்.
சிவாஜி கையாண்ட நடிப்பு முறை இன்னதுதான் என்று வரையறுக்க கூடாது. ஒரு அரசன் என்றால் அவன் பொறுப்பு,நிலை சார்ந்து எப்போதுமே ஒரு தலைமை கம்பீரத்தை காட்டியாக வேண்டும். ஆனால் இந்த பட கடவுளோ, சராசரி மனிதன் போல தாயாய்,தந்தையாய் ,காப்பனாய்,பாமரனாய் ,சோதிக்கும் தந்தையாய் ,முரட்டு புலவனாய்,அகந்தை கணவனாய் ,பாமர காதலனாய் ,விறகு வெட்டியாய் ,சில நேரம் கடவுளாக என பல வகை நிலைகள்.ஒரே படத்தில். கடவுளின் அமானுஷ்யத்தையும் இழக்காமல்,கொண்ட பாத்திரத்தையும் துறக்காமல் நடிக்கும் இவரது நயம்.(எனக்கு கடவுள் என்றால் சிவ பெருமான்தான்,ஆனால் இதில் வரும் சிவாஜி போலவே என்று மனதில் ரோல் மாடல் உண்டு)
குறிப்பிட்டு சொன்னால் சிவ தாண்டவம். ஒரு purist dancer ஆக முழுமை இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் ஒரு ஆண்மை நிறை ரௌத்ரம் பீறிடும். ஒரு விகசிப்பு நிலையை தரும்.(ராணி லலிதாங்கி,நிறைகுடம்,பொன்னூஞ்சல் எல்லா படத்திலும் அவர் சிவதாண்டவம் அருமைதான்).
மீனவ பாத்திரத்தில் இவர் சுவாரஸ்யம் கூட்டும் அந்த வினோத நடை.(அழகான இரவல்).இந்த பகுதி சற்றே சுவாரஸ்யம் குறைந்ததை சிவாஜியின் காதல் குறும்பு,நடை ஈடு செய்து விடும்.
அடுத்து பாட்டும் நானே பாட்டில் அத களம். ஒரு குறும்பு பார்வை.பாடும் உன்னை நான் என்று ,நான் அசைந்தால் அசையும் இடத்தில் ஒரு குலுங்கல் ஏளன சிரிப்பு,வாத்திய கருவிகள் கையாளும் timing ,preparatory gesture ,perfection நம்மை பிரமிப்பின் உச்சிக்கே பறக்க வைக்கும். அப்பப்பா இந்த பாத்திரத்தில் அவரை பார்த்து கன்னத்தில் போட்டு கொள்ளாதவர் யார்?என்ன கம்பீரம் ,தெய்வ தன்மை ...வா சிவாசிதான்....குத்துபாட்டு அலம்பல் வேறு. பார்த்தா பசுமரம்.
கே.வீ.மகாதேவன் இசையில் அத்தனை பாடல்களும் classy என்றாலும் குறிப்பாக ஒருநாள் போதுமா (மாண்டுவில் துவங்கி ராகமாலிகை),பாட்டும் நானே (கௌரி மனோகரி),இசை தமிழ், பழம் நீயப்பா,பொதிகை மலை உச்சியிலே,பார்த்தா பசுமரம்.இது ஒரு இசை திருவிழா.
நாகேஷ் -இதை சொல்லாத பத்திரிகை இல்லை. நான் என்ன சொல்ல ?இவர் performance ,சிவாஜியின் பெருந்தன்மை எத்தனை முறை எத்தனை பேர்களால் அலச பட்ட சமாசாரம்.?
ஆனால் நடிகைக்கு கற்பவதிகள்தான் அகப்படுவார்களா கடவுளின் நாயகிகள் பாத்திரத்திற்கு?ஏ.பீ.என் இரு முறை தவறினார்.இந்த பட பார்வதி சாவித்திரி,திருமால் பெருமை ஆண்டாள் கே.ஆர்.விஜயா.
இறுதியாக உறுதியாக இந்த பட கதை,வசனம் ,இயக்கம் ,தயாரிப்பு அனைத்தையும் இழுத்து செய்த அருட்செல்வர் நாகராஜர். அப்பப்பா ..என்ன ஒரு செம்மை,இலக்கிய நயம்,விறுவிறுப்பு ஜனரஞ்சக ஈர்ப்பு.. தலை வணங்குகிறோம் அருட்செல்வரே.
Nadigar Thilagam Sivaji Ganesan : A Never Before Never Again Neglected Phenomenon in Global Cinema!
Dr.S.Senthilvel
Cinema remains till today the powerful medium of entertainment encompassing breathtaking visuals, enchanting music and enterprising story telling alongside effervescent acting histrionics that keeps the viewer spellbound with psychological impulses in their minds. Ever since this medium came in vogue, started the domination of the heroes as their 'larger than life' portrayals penetrated into the hearts and minds of the viewers culminating into the so called 'hero worship' adoring them as demigods inseparable from all walks of life! The cross-current ingredients of cinema worldwide have been varying spatially and temporally but the unique hallucination of hero worship remains unaffected irrespective of the country or culture. In other words, a hero is construed as the backbone of success for a film even as other vital ingredients like the direction, background music, story content, supporting characters, audio-visual qualities, dialogues and dialogue deliveries, action scenes, dances,....what not, also exist alongside the hero's histrionics. The Global Cinema has witnessed an incessant array of actors over decades, who have enthralled the 'fans' to their delight.....Gregory Peck, Ronald Coleman, Marlon Brando, Charlton Heston, Cary Grant, Humphry Boghart, John Gielgud, Lawrence Olivier, Richard Burton, Errol Flynn, Fred Astaire,Gene Kelley ....Sean Connery, Clint Eastwood,Jack Nicholson, Stallone, Schwarzenegger, ..Robin Williams, Di Caprio... Raj Kapoor, .....M.G. Ramachandran, Gemini Ganesan,.....and above all the one and the only one 'never before never again' but 'neglected' global phenomenon ... Sivaji Ganesan... the Celluloid God of acting! ................( I purposely stop at this stage as I wish to convey some message to our fellow hubbers, whether I am bound to receive bouquet or brickbats)
The principal objective of this technical article is to analyse the traits of actor of actors Sivaji Ganesan as to why he should be given the 'better late than never' recognition for a 'life time achievement award' by the Globally acclaimed Oscar Award commitee!
dear RKS, I sincerely feel that as the hard core Sivaji fan I must do justice by way of initiating 'original' articles on NT's calibre and legacy as a stepping stone for aspirants to follow (with a hidden agenda of bringing into limelight the latent talents of our fellow hubbers to write more on glorifying NT with a simultaneous wish of converting these resource material into a thesis quality for getting M.Phil or Ph.D from appropriate Universities through our Hub)
I invite suggestions from our friends for further actions in taking our threads to meaningful activities and dignified higher levels rather than wasting our time and energy with 'school-children' type filthy quarrels on movie collection statistics (which may be beneficially utilized for such value added articles). I will be elated if authors can also join together for their contributions (both in Tamil and English) to be documented properly as 'degree' award winning articles or valuable resource materials for reference by research scholars on Sivaji Ganesan and his films! I think this will be truly a service to the society by a chartered union that sings the name and fame of NT in unison, rather than building castles in air!
dear RKS and Gopal Sir. I hope you can take a lead prompting other seasoned and wisdom filled writers on NT taking mypersonal views and suggestions in an optimistic angle! Let us not give way for a stalemate situation by responding to ignorable comments and neglectable criticisms from other threads which may have different objectives for their existence and survival.We have grown up to this dignified level 14....which warrants something different from us rather than exchanging paper arrows and verbal dynamites!
திரு RKS
விட்டுவிடுவோம் பாவம் சுய இன்பம் அடைபவர்கள்
தங்களது அபிமான நடிகரின் படங்கள்தான் சாதனை
செய்யும் செய்தது வேறு எந்த நடிகர்களது படங்களும்
சாதனை செய்யாது செய்யவில்லை செய்யக்கூடாது
என்ற மனநோய் பிடித்தவர்கள்
என்னதான் ஆதாரம் காட்டினாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது
ஏனெனில் மனநோய் ஏற்றுக்கொள்ளவிடாது
அங்கே ஒருவராவது உண்மைகளை தெரிந்துகொள்ள விருப்பமுள்ளவர்
இருக்கக்கூடும் அவருக்காகவும் நம்மவர்கள் தெரிந்துகொள்ளவும்
என்னைபொறுத்தவரை இலங்கைவிபரங்களில் மட்டும்
என்னிடம் உள்ள சரியான விபரங்களையே தருகிறேன்
இலங்கையில் எம் ஜீ ஆர் படங்கள் 100 நாட்கள் 200 நாட்கள்
ஓடவில்லை என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா?
பிழையான தகவல்களை சுட்டிக்காட்டியுள்ளேனே தவிர ஓடவில்லை
என்று எங்குமே சொல்லவில்லை
ஆனால் நான் எழுதுவதை
சரிபிழை பார்க்கக்கூட அவர்களது மனநோய் விடுவதாக இல்லை
உதாரணத்துக்கு சில விபரங்களை தருகிறேன்
(ஒரு உதாரணம் இங்கே ரிக்ஷாகாரன் படம்18 ..02..1972ஆம் ஆண்டு
திரையிடப்பட்டது
ரிக்ஷாகாரன் திரையிட்ட அதே அரங்குகளில் 12..04..1972..ஆண்டு
தங்கைக்காக திரையிடப்பட்டது அந்த காலப்பகுதியில்
திரை உலகம் பதத்pரிகையில் ஒருவர் ரிக்ஷாகாரன் 10வது வாரத்தையும் கடந்து
ஓடிக்கொண்டிருப்பதாக எழுதியிருந்தார் தங்கைக்காக திரையிடும்பொழுது ரிக்ஷாகாரன்
முழுமையான 8 வாரங்கள் ஆகவில்லை
அப்படியிருக்க எப்படி 10 வாரத்தை தாண்டி ஓடமுடியும்
அதற்கான பதிலடியை மின்மினி
பத்திரிகைக்கு எழுதி அனுப்பியிருந்தேன் அதில் எனது கடிதம் பிரசுரிக்கப்பட்டது
அது பழைய கதை அதை விடுவோம்
புது கதையை பாருங்கள்
ரிக்ஷாகாரன்..கெப்பிட்டல் 84 நாட்களாம..;வெலிங்டன்..79.. நாட்களாம்
ஒலிக்கிறது உரிமைகுரல் மே மாதம் 2013ல் பிரசுரித்துள்ளார்கள.;இப்படித்தான் வெற்றி
அல்லது சாதனை காட்டுகிறார்கள)
மேலே குறிப்பிட்டுள்ளது இலங்கை நண்பர்
டேவிட் பெயரில பிரசுரிக்கப்பட்டுள்ளது தந்த வசூலைதான் பிரசுரித்துள்ளார்கள்
ரிக்ஷாகாரன் ஓடிய நாளில் 20 நாட்களை அதிகரித்து காட்டியவர்
உ சு வாலிபன் வசூலில் எத்தனை லட்சங்களை அதிகரித்து
கள்ளக்கணக்கு காட்டியிருப்பார்
மனச்சாட்சி உள்ள எம் ஜீ ஆர் ரசிகர்கள் சிந்திப்பார்கள்
கொழும்பு வசூல்விபரங்கள் தியேட்டர் உரிமையாளர்கள்
வெளியிட்டால் தவிர பெரும்பாலும் வெளிவருவதில்லை
யாழ்நகர் வசூல்விபரங்கள் மட்டுமே அங்கே பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது
கிடைக்கமுடியாத கொழும்பு வசூலை பிரசுரித்தவர்கள்
கிடைக்கககூடிய கிடைத்த யாழ்நகர் வசூலை ஏன் மரைறத்து வைத்திருக்கிறார்கள்?
ஒளிவிளக்கு ஓடிய நாள் விபரத்தில்
மட்டுநகர் சாந்தி என்பதற்குபதிலாக
தவறுதலாக யாழ்நகர் சாந்தி என பதிந்துள்ளார்கள்
1969ல் யாழ்நகரில் சாந்தி தியேட்டர் கிடையாது
இவற்றையெல்லம் சொன்னால் நாங்கள் எம் ஜீ ஆர் பட சாதனைகளை ஜீரணிக்கமுடியாமல்
கூக்குரல் இடுகிறோமாம்
இதற்கெல்லாம் பதில் சொல்லதேவையில்லலையாம்
நாங்கள் உள்ளதை சொல்கிறோம்
அவர்களிடத்தில் பதில் இல்லை
என்னே சமாளிப்பு வார்த்தைகள்
எங்கள் முலம் உண்மைகள் வெளிவருவதனால்
அவர்களுக்கு எங்கள்மேல் ஆத்திரம் விரோதம் ஏற்படுகிறது
அதனை சாமர்த்தியமாக எங்கள்மேல் பழிபோடுகிறார்கள்
ஏனெனில் தங்கள் தோல்விகளை எதிரிகளின் தோல்விகளாக
சுமத்தி பழக்கப்பட்டவர்களாயிற்றே
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்
திருவிளையாடல் படத்தில் கடற்கரையில் ஒரு நடை,
மன்னவன் வந்தானடி பாட்டில் முதல் வரி முடிந்தவுடன் ஒரு கம்பீர நடை,
’மன்னிக்கவேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்’ பாடலின் பிஜிஎம்மில் ஒரு நடை
’ செல்வம்’ படத்தில் ’காற்றிலே நீந்தும் கொடியிடை என் கைகளில் தவழட்டுமே’ என்ற வரி முடிந்ததும் ஒரு நடை.
’யாருக்கு மாப்பிள்ளை யாரோ!அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!’பாடலை ரசித்துக்கொண்டே ஊனமுற்ற காலோடு ஒரு அழகு நடை.
நடப்பதில் கூட இவ்வளவு வெரைட்டி காட்டி விட முடியுமா!!
பராசக்தி மூலம் புயலாக வீசி,
மனோகராவில்கொந்தளித்து ’குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே’ என்று சீறிய, சீரிய கலைஞன்.
உத்தம புத்திரனில் விந்தையான வேந்தனாக காட்டிய ஸ்டைல்!
’ராஜா ராணி’ படத்தில் சேரன் செங்குட்டுவனாக
ஒரு lengthy single shot ல் மடை திறந்த வெள்ளம் போல பேசிய அடுக்கு மொழி வசனங்கள்.
“காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்து
சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்துக் கலசத்தில் யார் கொடி தான் பறப்பதென்று இன்று போல் போர்
தொடுத்துக்கொண்டிருந்த காலமது!”
எம்.ஆர்.சந்தானத்தைப்பார்த்து’தானாபதி பிள்ளை அவர்களே! நீவிர் நாகாக்க.’
என்ற வீரபாண்டிய கட்டபொம்மன்.
குறவஞ்சி படத்தில் “ மன்னா! பசிக்கிறது என்றால் அடிக்கிறார்கள். வலிக்கிறது என்றால் கொன்றே விடுகிறார்கள் ” என்ற குமுறல்.
வணங்காமுடி படத்தில் ’பாடுடா’ என்று நம்பியார் அதிகாரமாக தங்கவேலுவிடம் வற்புறுத்துவார்.தங்கவேலு திகைத்து தவிக்கும்போது நம்பியார் ஒரு அடி பலமாக கன்னத்தில் அறைவார். அடுத்த நொடியில் சிவாஜி பாடுவதாக ” பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும் பயன் தருமா- ஓங்காரமாய் விளங்கும் நாதம்” இதில் சிவாஜி கணேசனின் தொண்டை நரம்பு புடைக்கும். எந்த பாடலாயிருந்தாலும் தானே பாடுவதான பிரமையை உண்டாக்கிய நடிகர்.
தமிழர்கள் பாக்கியசாலிகளல்லவா! தமிழ் திரை கண்ட அசுர நடிகன் எங்கள் சிவாஜி கணேசன்.
கெமிஸ்ட்ரி கெமிஸ்ட்ரி என்று ஒரு cliche இன்று உச்சரிக்கப்படுகிறதே.’தெய்வப்பிறவி’ படத்தில் சிதம்பரம் ஜெயராமன் -ஜானகி பாடிய
“அன்பாலே தேடிய என் அறிவுச்செல்வம் தங்கம்
அம்புலியின் மீது நாம் ஆடி வரும் ஓரங்கம்
உடல் நான் அதில் உரம் நீ
என உறவு கண்டோம் நேர்மையாய்
பகல் இரவாய் வானத்திலே கலந்து நின்றோம் பிரேமையால்.............
ஏகாந்த வேளை வெட்கம் ஏனோ வா என் பக்கம்” ஆஅ ஆஅ ஆ...
இந்தப்பாடலுக்கு சிவாஜி கணேசன் பத்மினி ஜோடிக்கிடையிலான கெமிஸ்ட்ரி பார்த்து விட்டு சொல்ல வேண்டும்.
”அன்பாலே தேடிய ”என்று அடி வயிற்றில் இருந்து குரல் எடுப்பது போல் பாவனை செய்வார்.
சபாஷ் மீனா ”காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலம் தானோ”
”மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை
மங்கள மேடையின் பொன்வண்ணம் கண்டான்”
இந்தப் பாடல் காட்சியை பார்க்கும்போது,அவர் வாயசைக்கும் நேர்த்தி பற்றி சொல்ல வார்த்தைகளே கிடையாது.
கைத்துப்பாக்கியை சுடுவதற்குத் தானே யாரும் பயன்படுத்த முடியும். எந்த நடிகனும் எத்தனை ஸ்டைலாக துப்பாக்கியைப்பிடித்தாலும் நோக்கம் சுடுவதாகத்தானே இருக்கும்.ஆனால் ஆவேசமாக துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வந்து,பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொண்டு,சுட வந்த கைத்துப்பாக்கி கொண்டு,கண்ணீரை துடைக்க முற்பட்ட ஒரே நடிகன் இந்த உலகத்திலேயே சிவாஜி கணேசன் ஒருவர் மட்டுமே! என்ன ஒரு கவிதாப்பூர்வம்!
”காதலிக்கிறேன் என்றாள். பின் கல்யாண தேதி நிர்ணயித்தாள்.அதன் பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்த நாடகமாடினாள்.முடிவில் வாக்குத்தவறி விட்டாள்.வந்த வழியே செல்லுங்கள் என்றாள்.நடக்காது நம் கல்யாணம் என்று கூறி விட்டாள். கடைசியாகச் சென்று பார்த்தால் கல்நெஞ்சக்காரி கண்ணுறங்குகிறாள்!நம்பிக்கைக்கு துரோகமா? கல்யாணம் என்று மோசமா? கடைசியில் கண்ணுறக்கமா? ”ஆவேசமான கணேசனின் கணீர் என்ற குரல்...
இடி.. ..மின்னல்! இடி.. மின்னல்!
’ ராதா!ராதா!ராதா’என்ற கதறல்!
தொடர்ந்து டி.எம்.எஸ் பாடல்
’உன்னைச்சொல்லி குற்றமில்லை
என்னைச்சொல்லி குற்றமில்லை!
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
மயங்கவைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
ஒரு மனதை உறங்க வைத்தான்
ஒரு மனதை தவிக்க விட்டான்
இருவர் மீதும் குற்றமில்லை
இறைவன் செய்த குற்றமடி’
இன்றைக்கு அடிடா அவளை!ஒதடா அவளை!...
why this கொலவெறி..... என்று வந்த காட்சிகளுக்கெல்லாம் மூலம் இந்த ’குலமகள் ராதை’ தானே!
ஒரே நேரத்தில் உடலின் அத்தனை அங்கங்களையும் இயக்கி நடிக்கவைத்த கலைக்குரிசில் கணேசன்!
’ஐயா பாரதி... போய்விட்டாயா’ என்று கலங்கிய கப்பலோட்டிய தமிழன்.
’நான் எங்க போவேன்..எனக்கு யாரைத்தெரியும்..மாமா நிசமாவே போவச்சொல்றீங்களா மாமா!’ என்று தேம்பிய வெகுளி ரங்கன்.
’கண்ணில் தெரியும் வண்ணப்பறவை கையில் கிடைத்தால் வாழலாம்’ - தவித்த பலே பாண்டியா
’சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்’ என்ற வரிகளுக்கு முகத்தின் குளோஸ் அப் மூலம் அர்த்தம் சொன்ன கலை மேதை.
’நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா!
சட்டி சுட்டதடா கை விட்டதடா’
’நவராத்திரி’ நவரச நாயகன்.
’புதிய பறவை’ ஜென்டில்மேன்.
ஸ்டைலாக சிகரெட் குடிப்பதில் எவ்வளவு வகைபாடு காட்டலாம்?’சாந்தி’ படத்தில் -”யார் அந்த நிலவு!ஏனிந்த கனவு!”
சிவாஜி மட்டும் பெருந்தன்மையாக விட்டுக்கொடுக்காமல் இருந்திருந்தால் திருவிளையாடல் தருமி பாத்திரத்தில் நாகேஷ் தூள் கிளப்பி கலக்கியிருக்கமுடிந்திருக்குமா??
’நெஞ்சிருக்கும் வரை’ படத்தில் அரிதாரம் பூசாமலே ‘முத்துக்களோ கண்கள்!தித்திப்பதோ நெஞ்சம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை’ என்ற நெகிழ்ச்சி!
ரிலாக்ஸ்டாக கலாய்த்த ’கலாட்டா கல்யாணம்’
’மோகனாம்பாளின் சிக்கல் சண்முகசுந்தரம்’
உயர்ந்த மனிதன் அவருக்கு 125 வது படம். 124 படங்களுக்குப்பிறகு புதிதான ஒரு பாத்திரத்தை எப்படி சித்தரிக்க முடிந்தது என்பதில் இருக்கிறது கணேசனின் சாதனை வீச்சு.
சுருக்கமாக ’செல்லும்’ இந்த வார்த்தைகளோடு கணேசன் நடித்த படங்களின் அத்தனைக்காட்சிகளும் முழுமையாக விரிகிற அதிசயம் நிகழ்கிறது.
கிருஷ்ணன் பஞ்சு, எல்.வி.பிரசாத், பி.ஆர்.பந்துலு, பீம்சிங், ஏ.பி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.ஜி, ஏ.சி.திருலோக்சந்தர் போன்ற இயக்குனர்களின் படைப்புகளில் விதவிதமான அவதாரங்கள் எடுத்த மகத்தான கலைஞன்!
1960களில் மேக்கப் இல்லாமல் வேட்டி சட்டை போட்டு நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு பொது நிகழ்வுக்கு வரும்போது முகவசீகரம்.
அந்த ஸ்பெஷல் கண்கள்! அந்த ஸ்பெஷல் மூக்கு!
அந்த அடர்ந்த இயற்கையான கேசம்! 70 வயதில் கொஞ்ச காலம் குடுமி கூட வைத்துக்கொண்டிருந்தார்!
ஃபுல் சூட் கனகச்சிதமாக பொருந்திய கணவான் கணேசன்.
ஒரு கதாநாயகன் அந்தக்காலத்தில் நினைத்தே பார்க்க விரும்பாத ‘அந்த நாள்’தேசத்துரோகி.
’பார் மகளே பார்’ வரட்டு கௌரவ,அகங்கார, பணத்திமிர்.
நண்பனையே கொல்லத்துணியும் ’ஆலயமணி’ பொறாமை.
இமேஜ் பற்றிய பிரக்ஞை கிஞ்சித்தும் இல்லாதஒரே ஹீரோ நடிகர்.
ராமன் எத்தனை ராமனடி படத்தில் மாஸ்டர் பிரபாகர் நடிகர் திலகத்தைப் பார்த்து ’டே சாப்பாட்டுராமா’ என்பான்!
ராஜராஜ சோழன் படத்தை விட்டுத்தள்ளிவிடலாம்.ஆனால் அப்படத்தில் டி.ஆர் மகாலிங்கம் இவர் வீசும் வார்த்தைகளை எடுத்துப்பாடும் காட்சி.
’தென்றலோடு உடன் பிறந்தாள் செந்தமிழ் பெண்ணாள்
அவள் தென்மதுரை கோவிலிலே சங்கம் வளர்த்தாள்.
தஞ்சையிலே குடி புகுந்து மங்களம் தந்தாள்
தரணியெல்லாம் புகழ் மணக்க தாயென வந்தாள்
மணிமுடியில் தொல்காப்பியம் வீற்றிருக்கும்
திருவடியில் சிலம்போசை பாட்டிசைக்கும்
அணிமுத்து மாலை எட்டுத்தொகையாகும்
அவன் ஆட்சி செய்யும் செங்கோலே குறளாகும் திருக்குறளாகும்
புலவரெல்லாம் எழுதி வைத்த இலக்கியங்கள்
பொன்மேனி அலங்கார சீதனங்கள்...........’
’ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல’ தங்கபதக்கம் சௌத்ரி.
அவருடைய 24 வயதில் ஆரம்பித்து கடைசி வரை, முதுமை வியாதிகள் அவரை சித்திரவதை செய்த போதும் சிவாஜி கணேசன் ஷூட்டிங் என்றால் சம்பந்தப்பட்ட யூனிட் ஆட்கள் பதறி அடித்துக்கொண்டு காலை ஆறு மணிக்கே தயாராக வேண்டும்.முழு மேக்கப்புடன் ரெடியாக ஸ்பாட்டில் ‘என்னடா ! உங்களுக்கு இன்னும் விடியலயா?’ என்று குறும்பு பேசும் சிங்கத்தமிழன் சிவாஜி கணேசன்.
நேரில் சந்திக்கிற மனிதர்களை தன் கதாபாத்திரங்களுக்கு பிரதிபலிப்பார்.
’ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு பாடலில் கடைசி ஸ்டான்சாவில் கிருபானந்த வாரியார் (இந்தப் பாடலில் அவருடைய நடை மற்றொரு விஷேசம்) ..கடலை சாப்பிடுகிற அழகு.
திருவருட்செல்வர் ‘அப்பர்’ பாத்திரத்திற்கு காஞ்சி பரமாச்சாரியாள்
காவல் தெய்வம் பட கௌரவ வேடத்திற்கு மதுரை சென்ட்ரல் தியேட்டர் கண்ணாயிரம்
தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்
வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா
( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’
1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
சிவாஜி கணேசன் மரணம் நிகழ்ந்த போது செத்த உடலைப் பார்த்த பிரபலங்கள்,பொதுமக்கள் பெரும்பாலும் வாய் விட்டுப் பேசினார்கள்.
“ அய்யா நீ தானே பிறவிக்கலைஞன்!” ”உனக்குமா சாவு” “உன் சாதனை இனி எவனாலும் முடியாது”
உடல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்போது கூட மரத்தில் அமர்ந்திருந்த ஒரு ரசிகன் ஆவேசத்துடன் ”இருந்தது ஒரே நடிகன். அவனையும் கொன்னுட்டீங்களேடா!” என்று ரஜினிகாந்த், வடிவேலுவைப் பார்த்து கத்தினானே!
Quote:
சிவாஜி கணேசன்
- R.P.ராஜநாயஹம்
தங்கப்பதக்கம் சௌத்ரி பாத்திரத்திற்கு வால்டர் தேவாரம்
வியட்நாம் வீடு சுந்தரம் சொல்கிறார்:’பிரிஸ்டிஜ் பத்பனாய்யர் பாத்திரத்திற்கு இந்தியா சிமெண்ட் நாராயணசாமி.
’கௌரவம்’பாரிஸ்டர் ரஜினிகாந்த் தோற்றத்திற்கு டி.எஸ் கிருஷ்ணா
( டி.வி.எஸ்).
பாரிஸ்டர் பேசும் பாணி பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன்’
1994ல் ஜெமினியோடு நான் ஒரு சில மணி நேரம் இருந்த போது-
டி.வி யில் ஒரு சானலில் சிவாஜியும் இவரும் சாவித்திரியுடன் நடித்த ’பாசமலர்’ படத்தில் தொழிலாளி ஜெமினியுடன் பேசிக்கொண்டே முதலாளி சிவாஜி கோபத்தை அடக்க முடியாமல் வெறி மின்னும் கண்களுடன் பென்சில் சீவும் காட்சி-அதை ரசித்துப் பார்த்துக்கொண்டே மாடியேறிய ஜெமினி “ சிவாஜி கணேசன் என்னை விட எட்டு வயசு இளையவன் தான்...ஆனா நடிகன்னா அவன் தான் நடிகன்!”
Joe Sir. Thanks a lot for posting such a 'true to the type' write-up on NT's glory with a silky neurotic charm!
Dear Sarathy Sir,
I will forward your corrections/points to Mr.Sudhangan. However, you can also send your comments to Mr.Sudhangan to sudhangan@gmail.com.
Dear Mr.Ravi kiran Surya
My Heartiest wishes for Staring New Thread 14 of Great Supreme actor Sivaji Ganesan and thanks for your valuable postings
C. Ramachandran.
Good News and Confirmed News to All Sivaji Fans
Thalaivar's RAJA PART RANGA DURAI ALL OVER RIGHTS PURCHASED BY TIRUNELVELI PERSON FROM AVM LIMITED AND COMPLETE DIGITALIZATION WILL BE TAKEN CARE BY HIM AND HE WAS PLANNED TO RELEASE THE DIGITAL VERSION OF THE SAME IN OCTOBER-2014
This is Confirmed News we had from Trichy AVM office
Congrats rks sir for making new thread 14 of our god of cinema nadigar thilagam.hope our thread members will actively participate and deliver lot of true datas about our nt films.
என் இனிய நல்வாழ்த்துக்கள்!
14ம் பாகம் துவக்கி வைக்கும்
r
k
s
அவர்களுக்கு
நன்றி
சிவா சார்
அவர்களுக்கு
என் பெயரையும்
குறிப்பிட்டதற்கு
ஹ்ம்ம்...
Nothing wrong in being superstitious at the accepted level .
Those who claim that they are not, have always worn yellow ....green .......& other multi-color towel around their shoulders.. Time and again only because of their superstition ...!
But they have always pretended in front of the world that they are not !!
2)
தவறு நம்முடையது தான் . ரசிகர் மன்ற நோட்டீஸ் ஒரு ஆதாரமாக எப்படி ஒத்துகொள்ளமுடியும் என்று கேட்டோம்.
பதிலுக்கு...சரி..நோட்டீஸ் ஆதாரம் அல்ல..ஒத்துகொள்கிறோம்...ரசிகர் மன்றம் / ரசிகர் நடத்திவரும் நாளிதழ் பற்றி கூறவில்லையே என்று அதை ஆதாரம் போல பதிவிட்டுள்ளனர்...! தங்கபதக்கம் ..அவன்தான் மனிதன் பற்றி இவர்களுடைய வயிதெரிச்சல்..பொறாமை...வெதும்பல்கள்...என்றுதா ன் தீருமோ இலங்கையிலும் இருந்தது கண்டு மகிழ்ச்சி ..!
...அதுசரி...பராசக்தி பற்றியே வெதும்பல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை...அதற்குள் தங்கபதக்கம் அவன்தான் மனிதன் பற்றி வந்துவிட்டேன்.
இன்னொரு "என்ன கைய புடிச்சு இழுத்தியா ராகம் ! "
அவர்கள் அறிவுரை படி....அதில் உள்ள புரட்டுக்கு ஒரு நன்றி...!
பொதுமக்கள் இதை கவனிக்க தான் செய்கிறார்கள்..! இதெல்லாம் ஒரு ஆதாரம் ...ஆவணம்...சிரிப்பு தான் வருது ! இல்லை இல்லை..சிரிப்பு வருது என்றால்..உடனே ....அந்த பாட்டு பதிவிடுவார்கள் நாம் என்னவோ ஆணவத்தால் சிரிக்கிறோம் என்று ! ...!
நம்முடைய சிரிப்பு என்றுமே...
"சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே.."
"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே...நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே "
"சிலர் சிரிப்பார்..சிலர் அழுவார்...!
"மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன்.."
நம் தலைவர் பாடியதில்லை என்றாலும்...அவர் பட பாடல்
சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிச்சு ..சிரிச்சு..சிரிப்பு வருது...
சின்ன மனுஷன்..பெரிய மனுஷன்..செயல பாத்து சிரிப்பு வருது....
மற்றும்
கலைவாணர் முதல் தேதியில் பாடிய...."சிரிப்பு..." பாடல்...!
சிறிது நேரம் இளைபாறியாயிற்று !
இன்றுமுதல் இந்த திரியின் - பாகம் 14 இதுவரை காணாத வேகத்துடன் பயணம் செய்ய தயாராக உள்ளது !
http://i501.photobucket.com/albums/e...ps4ef812e7.png
பயணத்திற்கு தயாராகுங்கள் நண்பர்களே !
நடிகர் திலகம் திரி பாகம் 14 எதை பற்றி எழுதலாம் என்று சற்றே 13 பாகங்களையும் பார்த்தேன். எல்லா விஷயங்களையும் தொட்டுள்ளோம் அந்த 13 பாகத்தில்.
ஆகையால் இந்த பாகம் 14 நமது நடிகர் திலகம் அவர்களின் அனைத்து தகவல்களையும் பல கோணங்களில் இரத்தின சுருக்கமாக கொடுக்கலாமே என்றால் அந்த அரும்பணியை நம்முடைய ராகவேந்திரன் சார் செய்துகொண்டிருக்கிறார்.
அதை பார்த்தபொழுது சிந்தையில் ஒரு சிந்தனை. அதன் அடிப்படையில் இந்த பாகத்தில் நடிகர் திலகம் filmography ஒரு புதிய கோணத்தில் தொடங்கலாம் என்று முடிவேடுத்துளேன்.
இத்தனை நாட்கள் ஒடியாது இவளவு வசூல் செய்தது என்று திரும்ப திரும்ப எழுதி எதற்கு அரைத்த மாவை அரைப்பது ?
நம் பாத்திரம் என்ன ஒரே விஷயத்தை அரைக்கும் wet grinderஆ அல்லவே ...பல விஷயத்தை அரைக்கும் mixie அல்லவா !
காவிரி தந்த தமிழகத்து புதுமாணலில் களமமைத்த சேர சோழ பாண்டிமன்னர் கோபுரத்து கலசமதில் யார்கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்த காலமது !
தமிழகத்து திரைஉலகில் மற்றவர்போல் களமமைத்து தனது திறமையை காட்சிவைக்க என்றுதான் காலம் கைகூடுமோ என்று நடிகர் திலகம் ஏக்கமும் கைவிடாத முயற்சியும் செய்துகொண்டிருந்த காலமது...!
அன்றொருநாளில்......
http://i501.photobucket.com/albums/e...ps5fff0d30.jpg
dear rks sir
ஆரம்பமே அமர்க்களம்
ராஜ நடை தொடரட்டும்
1952உக்கு முன் :
தமிழ் திரை உலகம் அதுவரை பாடல்களை மையமாக கொண்டு கதை களம் அமைத்த திரைப்படங்கள் பல வந்தவண்ணம் இருந்தன...அதற்க்கு மத்தியில் சில சமயங்களில் சில சமூக படங்கள், மாயாஜால படம் என்று ஒன்றிரண்டு வந்துகொண்டும் இருந்தன...
பல நடிகர்கள் முக்கியமாக ஆந்திரா, கேரளா மாநில நடிகர்கள் தமிழ்நாட்டில் நன்றாக மகசூல் செய்து கொண்டிருந்த காலம். அந்த சமயத்தில் எந்த ஒரு புரட்சிகரமான திரைப்படங்களோ, புரட்சிகரமான கருத்தை சொல்லும் நடிகர்களோ தமிழக திரை உலகில் வலம் வரவில்லை.
இவை அனைத்தையும் விட முக்கியமாக, எந்த கதாபாதிரதிரமும் திறம்பட ஏற்று அதை நன்கு உணர்ந்து நடிக்க கூடிய நடிகர் என்பவர்கள் மிக மிக குறைவு அல்லது இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம்.
நல்ல திரைபடம் நிறைய வந்தாலும் மக்களை திரைப்படத்துடன் ஒன்றிவிடசெய்யும் காவியங்கள் வரவில்லை. அப்படி வந்தாலும் அதில் நடிப்பவர்கள் நடிப்பு மக்கள் மனதில் தொடவோ அல்லது ஒரு பாதிப்பை ஏற்படுத்தவோ இல்லை. ஆகையால் மக்களும் எதற்கோ ஏங்குவதை போலவே நிலைமை இருந்தது.
தயாரிப்பாளர்களும் அதை உணர்ந்தாலும் எதற்கு இந்த நிலை, என்ன எதிர்பார்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை.
புரட்சி என்றால் என்ன என்று தெரியாத திரை உலகம் அதை உணராத திரை உலகம் இப்படி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் ஒரு திரை புரட்சிக்காக காத்திருந்த நேரம் ...ஏங்கிகொண்டிருந்த நேரம் ...என்று கூறுவதே சரியாகும்..
தமிழ் திரைஉலகம் ஒரு spark என்று கூறுவார்களே அதற்காக ஏங்கிய தருணம் !
RKS
இது ஒருபுறம் இருக்க , நாடகங்களில் பல கதாபாத்திரங்களை சர்வ சாதாரணமாக நடித்து, போட்ட வேடம் அனைத்திற்கும் பல கரகோஷங்கள் பெற்று வந்த ஒரு இளம் வயது நடிகன் ...
அவர் தான் கலை கடவுள் கலைவாணியின் ஒரே தவப்புதல்வன் என்று என்றும் பல கோடி மக்கள் நம்பிகொண்டிருக்கும் நமது இப்போதைய நடிகர் திலகம் !
அப்போதைய v c கணேசன்.
நாடகங்களில் எந்த வேடமானாலும் அதை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து சக்கை போடு போடும் திறம் கொண்ட நடிகர் என்ற பெயர் மட்டும் இருந்தது.
தன்னுடன் இருந்த மற்ற நண்பர்கள் என்று கருதப்பட்ட சக நடிகர்கள் திரைப்படங்களில் அவ்வபோது தலைகாட்டிய வண்ணம் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட நடிகர் திலகத்தை விட 10 - 18 வயது மூத்த கலைஞர்கள். இருந்தாலும் தங்களுக்கு கதாநாயக வேடம் இல்லை என்றாலும் கிடைக்கும் வேடங்களில் நடித்து அந்த ஒரு சந்தற்பத்திர்க்காக காத்திருந்தார்கள் ஒரு சில நடிகர்கள்..
மற்றும் சிலரோ கதாநாயகன் வேடம் புனைந்தார்கள் என்றாலும் அவர்களால் தொடர்ந்து பரிமளிக்க முடியவில்லை, தொடர்ந்து படங்கள் கிடைக்கவும் வழியில்லை. தயாரிப்பாளர்கள் ஏனோ அவர்களை திரும்ப திரும்ப அணுகவில்லை. .ஆந்திரா நடிகர்கள் பக்கம் காற்று தொடர்ந்து வீசிகொண்டிருந்தது...!
தமிழ் நடிகர்கள் என்று கூறப்பட்டவர்கள், இந்த நிலை எவ்வளவு நாள் இனியும் தொடர்ந்துகொண்டு இருக்கும் என்று கவலைப்பட்ட நேரம் !
அப்படி இருக்கும்போது...அவர்கள் நிலையே நிரந்தரம் இல்லாதபோது அவர்கள் எப்படி நடிகர் திலகத்தையும் தங்களுடன் இணைக்க முடியும் ?
நிலைமை இப்படி இருக்க நாடகத்தின் மூலம் வரும் வருவாய் போதுமானதாக வருமா என்று ஒரு ஏக்கம் ஒருபுறம், வந்த வருமானத்தை வைத்து குடும்பத்தில் உள்ள (சுமார் 8 முதல் 10 பேர் தாய் தந்தையார் தவிர )அனைவரையும் காப்பாற்றி கரை ஏற்ற, தானும் கரை ஏற முடியுமா என்ற கவலை மற்றொருபுறம் ....
இப்படி ஒரு நிம்மதி இல்லாத நிலை இருந்தாலும் நாடகத்தில் நடிக்கும்போது தொழிலில் அப்படி ஒரு பக்தி. நேரம் தவறாமை, பேச்சில் கண்ணியம், செயலில் கண்ணியம், எந்த வேடமானாலும் திறம்பட நடித்தல் இப்படி அசாத்ய திறமை கொண்ட ஒரு நடிகர் ..இப்படி ஒரு கலைஞனை தமிழ் நாடக கலை மன்றம் அதுவரை கண்டதில்லை !
RKS
வரும் காலங்களில் இந்த நாடக நடிகர்தான் திரை உலகை அதுவும் தமிழ் திரை உலகை ஒரு சில வருடங்களிலே உலகளவில் கொண்டுசெல்லகூடியவர் பலரை வாழவைக்க போகிறவர், பலருக்கு வாழ்கை கொடுக்கபோகிறவர், படம் பார்க்கும் அனைவரையும் தனது அதீத நடிப்பு திறமையால் கட்டிபோட்டு ஆண்ட சராசரங்களையும் ஆச்சர்யபடுத்த போகிறார் என்று என்று யாராலும் கருத, எண்ண முடியவில்லை.
1948ஆம் ஆண்டு முடிவில் அப்போதைய பெரும் பட நிறுவனமாம் avm திரைப்பட நிறுவனம் மற்றும் தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனமாம் perumal pictures நிறுவனமும் இனைந்து ஒரு திரைப்படம் தயாரித்தால் என்ன? என்ற எண்ணத்தில் பேச்சு வார்த்தை நடத்திகொண்டிருந்த நேரம் !
புதுமையான சமூக சீர்திருத்த கதை ஒன்று அனைவரின் கவனத்தையும் கவர அதையே திரைப்படமாக தயாரிப்பது என முடிவு செய்யப்பட்டது !
அதற்க்கு முன்பு இது போல கதைகள் அதில் சிறந்த வசனங்களும் எழுதிய கருணாநிதி என்ற திராவிட கழகத்தில் பெரியார் பாசறையில் இருந்து சீர்திருத்த நாடங்களுக்கு வசனம் மற்றும் கதை எழுதுபவராக இருந்தார்.
நல்ல வசனம் எழுதினாலும் அதை மக்களிடத்தில் சரியாக உச்சரித்து அதன் உயிரை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டிய விதத்தில் கொண்டு செல்ல ஒரு நல்ல நடிகர் தேவை. அப்படி ஒரு நடிகர் திரை உலகம் அதுவரை கண்டதில்லை என்ன செய்வது.
ஆகவே அந்த வசனகர்தவிர்க்கும் ஒரு நட்சத்திர அந்தஸ்து அதுவரை கிடைக்கவே இல்லை ! அவரும் அந்த அந்தஸ்தை எதிர்பார்த்து காத்து இருந்த நேரம் !
நேற்று நண்பர்களிடம் தற்காலிக ஓய்வெடுத்து வெளியூர் வந்தேன்.இங்கு வந்தால் எனது supplier china விமானம் தாமதம். ஐந்து நட்சத்திர விடுதியில் எதிர்பாரா ஓய்வு. திடீரென்று ஒரு எண்ணம். நேற்று சோ சார் ரொம்ப கவலைக்கிடமாக மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டதாக கேட்டதிலிருந்து அவரை சுற்றியே சிந்தனை. அவருடைய ஒன்றரை பக்க நாளேடுகளை மிகவும் ரசித்தவன் என்ற விதத்தில்,அதை பின்பற்றி நம் திரி நண்பர்களை வைத்து ஒரு parody பண்ணினால்?இது ஒரு உயர் ரக நகை பாணி.யார் மனதையும் புண் படுத்த வாய்ப்பே இல்லை .
நம் திரியில் தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு ,பதிவாளர்களின் பாணி ஓரளவு பரிச்சயம் என்பதால் பெயர் சொல்லாமல் பதிவிட்டு ஊகத்துக்கு விடுகிறேன்.(தயவு செய்து சிரிக்க மட்டுமே)
துவக்கமே வித்தியாசமாக இருக்கிறது rks. பாராட்டுக்கள்!!! தொடருங்கள்.
கோபால். ரிஸ்க் எடுக்கிறது உங்களுக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி-ன்னு எங்களுக்கு நல்லா தெரியும்! நடத்துங்க... நடத்துங்க...
பதிவு எண் -1
அப்போதுதான்,ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பட்டபடிப்பை முடித்து ,வசதியான கல்லூரி கால ஜீன் ,டி.ஷர்ட் துறந்து,படவைக்கு மாறிய நேரம்(அம்மா சொல்படி).கொஞ்சம் சோகமாக இருந்தாலும் பழகியது.அப்போது ஹரிதாஸ் ரிலீஸ் ஆகி எம்.கே.டி.பாகவதர் சிறை சென்றிருந்த நேரம்.ஹரிதாஸ் படத்தின் நூறாவது நாள் விழாவிற்கு ,எனது சித்தப்பா,பெரியப்பா இருவருக்கும் இரண்டு பாஸ்கள் மட்டுமே வழங்க பட்டிருந்தது,.நான் இந்த படத்தை 20 முறைகளுக்கு மேல் பார்த்தவள் என்பதால்,பாஸை தியாகம் செய்யவே மனமில்லாத அவர்களிடம் போராடி நானும் ,என் சித்தப்பா பையன் மணியும் விழாவிற்கு கிளம்பினோம்.
அப்போது அண்ணா சாலை,மவுண்ட் ரோடு என்று அழைக்க பட்டது.இப்போது இருக்கும் l .i c கட்டிடம் அப்போது காலி மனை. அங்கேதான் பந்தல் போட்டு விழா.ஒரே தள்ளு முள்ளுதான்.என் சித்தப்பா மகன் சைக்கிளை நானே ஓட்டும் வசதிக்காக அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி ஜீனுக்கு மாறி,சுலபமாய் இரு கால்களையும் போட்டு சீட்டில் உட்கார்ந்து பின்னாடி மணியையும் உட்கார வைத்தேன்.
பந்தலுக்குள் கூட்டமான கூட்டம்.பீ.யு.சின்னப்பா,வசந்த கோகிலம்,டி.ஆர்.ராஜகுமாரி ஜி.ராமநாதன்,பாபநாசம் சிவன்(அடுத்ததடுத்து ஹிட் படங்களை தந்த ஜோடி அசோக் குமார்,சிவகவி,ஜகதல பிரதாபன்,ஹரிதாஸ் இப்படி),அந்த நாள் கவர்ச்சி புயல் தவமணி தேவி,எம்.எஸ்.பாக்கியம் என்று அதுவரை பிரமிப்போடு திரையில் கண்டு களித்த நட்சத்திரங்கள் நேரில் பார்க்கும் பொன்னான வாய்ப்பு.பாகவதரை நினைவு கூறும் விதமாக ஜெயில் வடிவிலேயே பிரம்மாண்ட மேடை.தம்பிக்கு ஏக பட்ட நண்பர்கள்.சமீபத்தில் வந்த வசந்த சேனா படத்தின் ரிசல்ட் திருப்தியளிக்கவில்லை என்று வருத்த பட்டனர்.நண்பர்கள் என்னை பற்றி விசாரிக்க,என் அக்கா ,இப்பதான் காலேஜ் முடிச்சா என்று அறிமுக படுத்தினான் மணி.
அப்போது ஒருவர் ஹெர்குலிஸ் சைக்கிளில் வந்து இறங்கினார்.(அவர்தான் பட இயக்குனர் என்று காதில் முணுமுணுத்தான் மணி).என்னையும் என் தம்பியையும் பார்த்து ,அட்லஸ் சைக்கிள் நல்ல வண்டிதான் என்று தட்டி கொடுத்து விட்டு மேடையேறினார். விழா தொடங்கி களை கட்டியது.
அடுத்த பதிவில் ,நான் பள்ளியில் படிக்கும் போது ,பாவாடை சட்டையுடன் ,என் அப்பா கைப்பிடித்து அழைத்து சென்ற கல்தூண் படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டங்களை பற்றி எழுத இருக்கிறேன்.
நடிகர் திலகம் திரை உலகிற்கு நடிக்க வருவதற்கு முன்பு
திரு mk தியாகராஜா பாகவதர்,
திரு pu சின்னப்பா ,
திரு நாகேஸ்வர ராவ்,
திரு mk ராதா,
திரு நாகையா,
திரு ntr ,
திரு mr ராதா,
திரு திகுருசி சுகுமாரன் நாயர்,
திரு சத்தியன்,
திரு mg ராமசந்திரன்
திரு mn நம்பியார்,
திரு ரஞ்சன்,
திரு kr ராமசாமி ,
திரு tr மகாலிங்கம்,
திரு tr இராமச்சந்திரன்,
திரு. ஜகய்ய,
திரு ஸ்ரீராம் ,
திரு காளி n ரத்தினம் ,
திரு பாலையா
திரு mg சக்ரபாணி,
திரு ஜெமினி கணேசன்
திரு ராமசாமி,
திரு s பாலச்சந்தர் (வீணை)
திரு பந்துலு,
மற்றும் பலரும் தமிழ் திரைப்படங்களில் அப்போது கதாநாயகனாக நடித்துக்கொண்டும், கதாநாயகதன்மை கொண்ட கதாபத்திர வேடம் புனைந்துகொண்டும் கோலோசிகொண்டிருந்தார்கள்.
பதிவு எண் -2.
உலக சரித்திரத்திலேயே முதல் முறையாக
பிரம்மாண்டமாய் புதிய சகாப்தம் படைக்க,
இதுவரை அச்சிலே எழுத்து வடிவிலே மட்டுமே வந்த "சரோஜாதேவி"
பட வடிவில் (வண்ணம்),வித விதமான கோணங்களில்,போஸ்களில்....
கண்கள் பிதுங்க, இதயம் இனிக்க,
பொக்கிஷாதி பொக்கிஷம்.
இன்றே முன்பதிவு செய்யுங்கள்.
பிரதி ஒன்றின் விலை ரூபாய் 10,000.
பணத்தை இன்றே அனுப்பி விடவும்.
வெளிவரும் நாள்/தேதி/வருடம்-வெகு விரைவில் இந்த நூற்றாண்டு முடிவுக்குள்.
உலக விநியோக உரிமையாளர்- டி.டபுள்யு . (பெங்களூர்)
பதிவு எண் -3.
ஈந்த பாடம் எங்க ஆமா ஆப்பு கூட நேத்து காட்டில் பத்தேன் .சீவஜீ ஆந்த வாருஷாம் நலு முலு நீல படத்தில் அடித்திருந்தார் .
நல்ல தடிப்பு.கானிலூயெ தடிப்பு தரியும் .
முத்தத்தில் சுமங்கிலி ...முழ சூமங்காலி ஈல்ளை .
பதிவு எண் -4.
இஸ்கி புஸ்கியின் பாணியில் இருந்து முற்றிலும் மாறுபட்டது டுபாகூர் பாணி.(சிஷ்யன் என்றாலும்)இஸ்கி புஸ்கி every action should have reaction and verse versa என்றதற்கு மாறாக டுபாகூர் action is behaving என்றார்.
உதாரணம் (உங்களுக்கு புரிய)நீங்கள் ஒரு குடிகாரர் என்று வைத்து கொள்ளுங்கள்.குடித்து விட்டு இரவு வீடு செல்கிறீர்கள்.உங்கள் மனைவி "இன்னாய்யா ,நீயெல்லாம் ஒரு மனுசனா "என்று திட்டிய பிறகு உதைத்தால் reaction .தூங்கி கொண்டிருக்கும் மனைவியை அப்படியே காலால் உதைத்தால் behaving .
இப்போது என்னை தொடருங்கள்.
ஹரிதாஸ் படத்தில் மன்மத லீலையை வென்றாருண்டோ பாட்டில் ஒரு முத்தம் என்றதும் ராஜகுமாரி ,பாகவதர் கையில் முத்தம் கொடுப்பது இஸ்கி புஸ்கி பள்ளி என்றாலும்,பாகவதர் மரக்கட்டை போல உட்கார்ந்து பாடுவது டுபாகூர் பள்ளி சார்ந்ததே.
இயக்குனர் ,அந்த காலத்திலேயே ,எல்லா பள்ளிகளையும் சார்ந்த நடிப்பை ,நடிகர்களிடம் வெளிக்கொண்டு வந்தது,நட்கர்னியின் சாதனையில் ஓர் மகுடம்.
கோபால் ..கோபால் :rotfl: