( 7 )
கடவுளைக் காணச்
சென்றவர்கள்
கவலைகளே இல்லாமல்
போனது
இதுதான் முதல் முறை.
Printable View
( 7 )
கடவுளைக் காணச்
சென்றவர்கள்
கவலைகளே இல்லாமல்
போனது
இதுதான் முதல் முறை.
( 8 )
படம் காட்டுவதற்காக
அரங்கங்கள்
இருட்டாயின.
பார்க்கப் போனோர்
இதயங்கள்
வெளிச்சமாயின.
( 9 )
சிவனாக
சிவாஜி தோன்றினார்.
( அல்லது)
சிவாஜியாக
சிவன் தோன்றினார்.
( 10 )
கடவுள் இருக்கிறார் என
நிறையப் பேர்
நம்பத் துவங்கினர்.
( 11 )
முதல் முறையாக
கடவுளுக்கு
விசில் மந்திரங்கள்...
கைதட்டல்
அர்ச்சனைகள்...
( 12 )
திரையில்
கடவுள் தோன்றிய போது..
இங்கிதமே இல்லாமல்
செருப்பணிந்து வந்ததற்காக
எண்ணற்றோர்
சங்கடப்பட்டனர்.
( 13 )
திரை நோக்கி வணங்கிய
தாய்மார்கள்
குழந்தைகளையும்
கும்பிடச் சொன்னார்கள்.
( 14 )
அதிசயத்தை
அருகே பார்த்து விட்ட
அத்தனை கண்களும்
ஆனந்தக்கண்ணீர்
உகுத்தன.
( 15 )
நடிகர் திலகத்தின் வடிவில்
உலகம்
கடவுளைப் பார்த்தது.
"உமையவளே"என விளித்த சிம்மக் குரலில்
கடவுளின்
குரல் கேட்டது.
( 16 )
அம்மாக்கள்
பயமுறுத்தியது போல்
இந்த சாமி, கண்ணைக்
குத்தவில்லை என்பதால்
குழந்தைகளுக்கும்
சிவாஜி "சாமி"யைப்
பிடித்திருந்தது.