Thanks rajesh. Ennavaakkum kathai..
Printable View
Thanks rajesh. Ennavaakkum kathai..
36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழ், தனது நீண்ட நெடிய பயணத்தை 2016, பிப்ரவரி 16-29 இதழோடு நிறுத்திக் கொண்டுள்ளது.
1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் சினிமா எக்ஸ்பிரஸின் முதல் இதழ் வெளிவந்தது. அந்த இதழை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்கிற பெருமை சினிமா எக்ஸ்பிரஸுக்கு மட்டுமே உண்டு. தேசிய விருதுக்கு நிகராகக் கலைஞர்கள் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுக்கு மதிப்பு அளித்தார்கள்.
–
கோழைத் தம்பி ஸ்ரீகாந்தால் ஜமீனை ஆட்சி செய்ய முடியாததால் அக்கா ஸ்ரீவித்யா பொறுப்பெடுத்துக்குறார். பக்கத்து ஜமீன் ஜெய்சங்கர் இவரைத்தான் கல்யாணம் செய்வதாக உறுதியுடன் இந்த ஜமீனுக்கு வேலையாளாக வர்ரார்.. கடேசில தம்பி வீரனாகி அக்காவையே எதிர்க்க அடுத்த ஊர் ஜமீனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிடறார்.... இந்த மாதிரிதான் கதைன்னு நினைவு. நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் அப்படின்னு வாணி ஜெயராம் பாட்டு ஒண்ணு அப்போ அடிக்கடி ரேடியோல போடுவாங்க..
தாங்க்ஸ்ங்கோவ்..ஹச்சோ அப்ப ஜெய்சங்கர் கதி.. காதலிலே தோல்வியுற்றான் ஜமீன் ஒருவன்னு பாடுவாரா.. பட் இந்தப் படத்தை சிலாகித்து ஒருத்தர் சொன்னாரே முக நூலில்..ம்ம்
நான் சினிமா எக்ஸ்ப்ரஸ் தொடர்ந்து வாங்கும் ஒரு வாசகன்.. நல்ல கட்டுரைகள் டீஸண்ட்டான புகைப்படங்கள்..கொஞ்சம் எப்படி இருக்கீங்க என பழைய நடிக நடிகையர் பற்றி, கன்னட டாக்கீஸ் மலையாள டாக்கீஸ் ஹிந்தி , ஆங்கிலப்படங்கள் என நன்றாகவே எழுதிக்கொண்டு இருந்தார்கள்..டபக்கென நிறுத்த என்னகாரணமோ..
சிக்கா... ஒரு சீன் ரொம்ப நல்லா இருக்கும். ஜெய்சங்கர் இந்த ஜமீனில் வேலைக்காரனாக இருக்கறப்போ அவர் ஜமீனிலிருந்து அவருக்கு சிலமபம், குஸ்தி எல்லாம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் வருவார். அவர் கோழை ஸ்ரீகாந்திடம் அவங்க ஜமீன் கோழை என்று ஏசி சண்டைக்கு வரும்படி கூப்பிடுவார். உடனே ஸ்ரீவித்யா கையில் கம்பை எடுத்துக் கொண்டு கிளம்ப நாமெல்லாம் அவரே சண்டை போடப்போகிறார் என்று நினைப்போம். ஆனா அவர் ஜெய்சங்கரை கூப்பிட்டு இந்த ஜமீனில் வேலை செய்யுற உங்களுக்கு நன்றி இருந்தா சண்டை போட்டு ஜெயிச்சுட்டு வாங்க என்று சொல்லிவிடுவார். வேறு வழியில்லாமல் வாத்தியாரையே ஜெய் அடிக்க வேண்டி வரும். அங்கங்கே பல நல்ல டிவிஸ்ட் ( டான்ஸ் இல்லை ) இருக்கும்.
chinnakkaNNan:
Here is another 'sundhari' song:
un athaanum naandhaane sattai pothanum nedhaane
........................
sundhariye andharangame.............
Instant Hit of the 80's. Superb melody from Sivappu Malli
https://youtu.be/5MksKJmFC2w
hi good morning all :)
மதுண்ணா இளைய ராணி ராஜலட்சுமி யூட்யூபில் இருக்கா என்ன பார்க்கணும்.. தாங்க்ஸ்
வாத்யாரையா..ராஜ் ராஜ் சார்.. நன்றி..
எஸ்.வாசுதேவன்..இந்த் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் மெட்டுக்கு முதல்ல கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் எது தெரியுமோ..
மொட்டு வச்ச வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி
அப்புறம் அது ஏனோ தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக ரெ. க. ச.கி எழுதிட்டார்..பட் எழுதினதை வேஸ்ட் பண்ணலையே..
நெய்வேலிக்குப் பிடிச்ச கருடா செளக்கியமா படத்துல யூஸ் பண்ணிக்கிட்டாராக்கும்..:)