-
"#எங்க_வீட்டு_பிள்ளை-ல் நடித்த நாயின் குட்டியை வாங்கி,ஆசையாக வளர்த்தார் #எம்ஜியார்.
அங்கேயே பொமரேனியன் ஆண், பெண் நாய்களையும் வளர்த்தார்.
ஒரு தாய் இறந்து விட்டது. மற்றொரு நாயை, பெரிய நாய் அவர் கண் முன்னாலேயே கடித்துக் குதறி விட்டது.
அதிலிருந்து பிரியமான எதையும் வளர்ப்பதை நிறுத்தி விட்டார்.
அன்று அவர் சொன்ன சொல் எவரது கல்மனதையும் கரையச் செய்யும்:
’பாசத்தை காட்ட பிள்ளைதான் இல்லை.
இப்படியான வீட்டு மிருகங்களை வளர்த்தாலும் அவை தரிப்பதில்லை”
என்று கண் கலங்கிச் சொன்னார் செம்மல்.
ஒரு சமயம் டைரக்டர் தாதா மிராஸி செம்மலைப் பார்த்து
“மிஸ்டர் எம்.ஜி.ஆர்.
நீங்க உலகத்திலே பிறந்து எந்த பிரஜோனமுமில்லை.
மனுஷனா பிறந்தா எதாவது வைஸஸ் இருக்கனும்.
ஸ்மோகிங் இல்லை.
காபி டீயாவது சாப்பிடுறீங்களா? அதுவும் இல்லை.
என்னைப் போல் தண்ணி கேஸாவது உண்டா?
அது அறவே கிடையாது.நீங்க நல்ல அழகான எதாவது கலர்களை ரசிக்கிறீர்களா? அதை பத்தியும் தெரியலே” என்றார்.
அதற்கு செம்மல் “நான் நல்ல ரசிகன். அழகை ரசிக்கலாம் ஆனால் அதை அடைய நினைக்கிறது தான் பெரிய தப்பு” என்றார்.
எம்.ஜி.ஆரின் சுபாவம் மற்றும் அவருடைய பண்பட்ட குணநலன்கள் அவரை ஒரு சிறந்த மனிதராக நம் மனதைக் கவர்கிறது.......... Thanks...
-
எம்.ஜி.ஆரின் தாய் மொழி தமிழா..மலையாளமா..?
இரண்டும் இல்லை...
இறைவனின் தாய் மொழி எதுவோ...
எம்.ஜி.ஆரின் தாய் மொழியும் அதுதான்...!
அது ...அன்பு மொழி ..!!!
எம்.ஜி.ஆர். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின் ...பேச்சு வராமல் பெரும்பாடு பட்டார்...
அப்போது அவருக்கு பேச்சு சிகிச்சை அளிக்க , மனோகரன் என்ற மருத்துவர் நியமிக்கப்பட்டார்..
எம்.ஜி.ஆரோடு பழகிய அந்த நாட்களைப் பற்றி டாக்டர் மனோகரன் பின்னர் ஒருமுறை அளித்த பேட்டி...
“ஒருமுறை கோவைக்குச் சென்றிருந்தோம். விமானத்தில்தான் சென்றோம். எனக்கு அது முதல் விமானப் பயணம். சற்றே அச்சத்தோடு ஏறினேன். பெரிய பெரிய அமைச்சர்கள் எல்லாரும் அந்தப் பிளைட்டில் இருக்க, எம்.ஜி.ஆர்.., என்னை அவர் அருகில் உட்கார வைத்துக் கொண்டார். சீட் பெல்ட்டை அவரே மாட்டிவிட்டார். ஜூஸ் வந்தது. ஒரு கிளாசை அவரே தன் கையால் எடுத்து என்னிடம் கொடுத்து "குடிங்க" என்றதை என்னால் இப்போதும் மறக்க முடியாது.
பக்கத்தில்தான் எம்.ஜி.ஆரின் சொந்த ஊரான பாலக்காடும் இருந்தது. அங்கு கிளம்புகிற நேரம். எனக்குத் திடீரெனக் காய்ச்சல் வந்துவிட்டது. நான் படுத்துவிட்டேன்.
நான் வராததைக் கவனித்த எம்.ஜி.ஆர், ‘மனோகரன் வரலயா?’ என்றாராம். அவர்கள் எனக்கு உடம்பு சரியில்லாத தகவலைச் சொல்லியிருக்கிறார்கள்.
பாலக்காட்டிலிருந்து திரும்பியதும் என்னைப் பார்க்க வந்துவிட்டார். நான் அவர் வருவது தெரியாமல் படுத்திருந்தேன். திடீரென்று யாரோ பக்கத்தில் நிற்கிற உணர்வு. திரும்பிப் பார்ப்பதற்குள் அவர் என் கன்னத்தில் கை வைத்து, "ஆமாம்.. ரொம்ப காய்ச்சலா இருக்கே"...என்று கூறியவர், "உடம்ப பார்த்துக்கங்க.." என்று கூறிவிட்டுப் பக்கத்தில் அவருக்காக நியமிக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவிடம், "மனோகரனை கவனிச்சுக்கங்க" என்று கூறிவிட்டுக் கிளம்பினார்...... நான் உருகிப் போனேன்...!!!”
# எப்படி உருகாமல் இருக்க முடியும்..?
எம்.ஜி.ஆரைப் பற்றி முன்னர் ஒருமுறை எழுதியது இப்போதும் நினைவுக்கு வருகிறது..!!
“ஆண்மைக்கும் தாய்மை உண்டு..”
அந்த தாய்மையின் தனி வடிவம் ..எம்.ஜி.ஆர்..!!!.......... Thanks...
-
கடந்த பல ஆண்டுகளாக தமிழ் படங்களின் தலைப்புகள் மிகவும்
பொருத்தமில்லாமலும் - ஆபாச பெயர்களும் - சமூக விரோதிகளின் பெயர்களையும் தாங்கி வருவது வேதனையான
தகவல் என்று நீதிபதிகள் கூறும் அளவிற்கு இன்றைய சினிமா
உலகம் உள்ளது .
மக்கள் திலகம் தன்னுடய படங்களின் பெயர்களை என்ன ஒரு
தீர்க்கதரிசனமாக , மங்களகரமான பெயர்களை வைத்து மக்கள் மனதில் பதியும் படி வைத்து வெற்றி கண்டார் .
மக்கள் திலகத்தின் படங்களின் மனம் கவரும் தலைப்புகள் .
இன்று போல என்றும் வாழ்க
பல்லாண்டு வாழ்க
உழைக்கும் கரங்கள்
ஊருக்கு உழைப்பவன்
உரிமைக்குரல்
சிரித்து வாழ வேண்டும்
நல்ல நேரம்
அன்னமிட்ட கை
ஒரு தாய் மக்கள்
நம்நாடு
ஒளிவிளக்கு
காவல்காரன்
தொழிலாளி
எங்க வீட்டு பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
தர்மம் தலைகாக்கும்
என்று மக்கள் மனம் கவரும் பெயர்கள் தாங்கி படம் வந்ததால் இன்றும் அவர் படங்கள் பேசப்படுகிறது .
சத்யராஜ் (நடிகர்)
நீங்கள் யாரோட ரசிகர்?
ஒரு நொடிகூட யோசிக்காம சொல்லுவேன் எம்.ஜி.ஆருன்னு.
'வாழ்க்கை என்பது வெறுமனே வாழ்வதற்கல்ல, கொண்டாடுவதற்குன்னு ரஜனீஷ் சொன்னது மாதிரி, சினிமாங்கிறது கூட வெறுமனே பாக்கிறதுக்கு மட்டுமில்ல பார்த்து சந்தோஷமடையறதுக்கு, உற்சாகமடையறதுக்கு.
இதை எப்பவும் என்னால எம்.ஜி.ஆர். படங்கள்ல மட்டும்தான் பார்க்க முடியுது. அவர் நடிப்பைப் பார்த்தா தெம்பு வரும். தைரியம் வரும். அதனால எனக்குப் பிடித்த நடிகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.தான். சினாமாவில் ஒரு நடிகராக எம்.ஜி.ஆர். தரும் உற்சாகத்தை வேறு எந்த நடிகராலும் தரமுடியாது. அதனாலேயே என்னோட நடிப்புல அவரோட சாயல் இருக்குன்னு யார் சொன்னாலும் அதை சந்தோஷமா பாராட்டா ஏத்துக்குவேன்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பரதநாட்டியம் - மேலைநாட்டு நடனம் இரண்டிலும் தன்னுடைய தனி முத்திரையை காட்டி ரசிகர்கள் நெஞ்சத்தை கொள்ளை அடித்திருப்பார் .
மக்கள் திலகத்தின் நடனத்தின் போது அவருடைய முக பாவங்கள் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருப்பதை பார்க்கலாம் .நடன அசைவுகள் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும் .
எனக்கு தெரிந்த வரையில் மக்கள் திலகம் ஒரு ஆல் ரவுண்டர் .
பெரிய இடத்து பெண்- அன்று வந்ததும் அதே நிலா
தெய்வத்தாய் - ஒரு பெண்ணை பார்த்து
பணத்தோட்டம் - ஒருவர் ஒருவராய் பிறந்தோம்
என்கடமை - யாரது யாரது சொந்தமா
தொழிலாளி - வளர்வது கண்ணுக்கு ....
எங்கவீட்டு பிள்ளை - பெண் போனால் ........
கலங்கரை விளக்கம் - பல்லவன் பல்லவி ....
ஆசை முகம் - என்னை காதலித்தால் மட்டும் ....
அன்பே வா - நாடோடி ..ஓடி .....
நான் ஆணையிட்டால் - நல்லவேளை நான் பிழைத்த கொண்டேன்
பறக்கும் பாவை - சுகம் எதிலே ..... மது ரசமா
தனிப்பிறவி - ஒரே முறைதான் உன்னோடு
காவல்காரன் - நினைத்தேன் வந்தாய்
குடியிருந்த கோயில் - ஆடலுடன் பாடலை கேட்டு
ரகசிய போலீஸ் 115 - என்ன பொருத்தம் இந்த .....
நினைத்தை நடத்தியே ....
தேடிவந்த மாப்பிள்ளை - தொட்டு காட்டவா
எங்கள் தங்கம் - ஒரு நாள் கூத்துக்கு ...
சங்கே முழங்கு - பொம்பளை சிரிச்சா போச்சி
ராமன் தேடிய சீதை - திருவளர் செல்வியோ
உலகம் சுற்றும் வாலிபன் - பச்சைக்கிளி .. முத்துச்சரம் ..
உரிமைக்குரல் - நேற்று பூத்தாளே ......
நினைத்தை முடிப்பவன் - தானே .. தானே ,, தானே மேனி ....
நாளை நமதே - நானொரு மேடை பாடகன் ...
நீதிக்கு தலை வணங்கு - கனவுகளே .. ஆயிரம் ....
இன்றுபோல் என்றும் வாழ்க - என் யோக ஜாதகம்
மேற் கண்ட பாடல்களில் மக்கள் திலகத்தின் எழிலான தோற்றமும் , சுறுசுறுப்பான நடனமும்
என்றென்றும் மறக்க முடியாத பாடல்களாகும் .
உலக திரைப்பட வரலாற்றில் நம் மக்கள் திலகம் படைத்த சாதனைகள் இந்த தலை முறை
மட்டுமல்ல எதிர்கால தலைமுறையினரும் கண்டு மகிழ்வார்கள் என்பதற்கு இந்த பாடல்
காட்சிகளே சான்று ........... Thanks...
-
#தாமதம் #ஏன்?
புரட்சிதலைவர் ஒருமுறை முக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதறகாக அமெரிக்கா சென்றார். அங்கு ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்துகொண்டு இருக்கும்போது வழியில் ஒரு சாலை விபத்தில் கார் சேதகமாகிக் கிடப்பதைப் பார்க்கிறார். உடனே தன் காரை நிறுத்தச்சொல்லி அருகே சென்று பார்க்கையில் உள்ளே ஒருவர் குற்றுயிராகக் கிடப்பதைப் பார்த்து அந்த நபரை தன் காரிலேயே மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் . நிகழ்சசிக்கோ நேரமாகிவிட்டது.
எம்ஜிஆருடன் இருந்தவர்கள் எவ்வளவோ சொல்லியும் பிடிவாதமாக அடிபட்டவருக்கு உதவி செய்து விட்டுத்தான் அடுத்த நிகழ்ச்சிக்கு மிகவும் தாமதமாக சென்றார்.
அந்த நிகழ்ச்சிக்குத் தாமதமாக வந்ததற்கு சபையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நடந்த சம்பவத்தை விவரித்து சொல்லி இருக்கின்றார்...!
தொடர்ந்து பேசிய புரட்சித்தலைவர் ... "ஒரு விபத்து நடந்துவிட்டது... யாரும் உதவிக்கு வரவில்லை... சாலையில் சென்ற கார்கள் எல்லாம் நிற்காமல் விரைகின்றன..."
ஆனால்...!
"இப்படி ஒரு விபத்து நடந்தால், தங்கள் உறவினர்களோ நண்பர்களோ அடிபட்டுக் கிடப்பதுபோல் நினைத்து ஓடோடி வந்து உதவி செய்யக்கூடிய #மனிதாபிமானம் #உள்ளவர்கள் #உலகிலேயே #எங்கள் #தமிழ்நாட்டினர்தான்...#என்று #பெருமையோடு #தெரிவித்துகொள்கின்றேன் ..."
என்று பேசியபொழுது அரங்கமே எழுந்து நின்று எழுப்பிய கரவோசை அடங்க வெகுநேரமானது... .................. Thanks...
-
தினகரன் - வெள்ளிமலர் -சினிமா செய்திகள் -old is gold
--------------------------------------------------------------------------------------------
1.நிஜ தம்பதிகளான என்.எஸ்.கிருஷ்ணன்,-டி.ஏ.மதுரம் ஜோடி 75 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள் .
2.1959ல் தென்னிந்திய நடிகர் சங்கம் உருவானது. சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
3.தமிழில் " வயது வந்தவர்களுக்கு மட்டும் "சான்றிதழ் பெற்ற முதல் தமிழ் படம்
புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த "மர்மயோகி " திகில் காட்சிகளுக்காக கொடுக்கப்பட்டது .
4.மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர். இருவரும் இணைந்து தயாரித்த படம் "நாம் "
மேகலா பிக்ச்சர்ஸ் தயாரிப்பு
5.பேரறிஞர் அண்ணாவின் "ஓர் இரவு " திரைப்படம் ஒரே இரவில் நடப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருந்தது .முதலில் இதை நாடகமாக எழுதிய அண்ணா முழு திரைக்கதையை ஒரே இரவில் எழுதி முடித்தார்
6.நடிகர் சிவகுமாரின் முதல் படம் காக்கும் கரங்கள். 100 வது படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி . 100 வது படத்தின் வெற்றி விழாவிற்கு முதல்வர் எம்.ஜி.ஆர்.
கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் சிவகுமார் காவல்காரன், இதயவீணை படங்களில் நடித்துள்ளார் .
7.மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகை சரோஜாதேவி 26 படங்களிலும் ஜெயலலிதா 28 படங்களிலும் ஜோடியாக நடித்துள்ளார்கள்
8.தமிழில் ஜனாதிபதி பரிசு (வெள்ளி பதக்கம் ) பெற்ற முதல் படம் மலைக்கள்ளன்
9.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சொந்தமாக எம்.ஜி.ஆர். பிக்ச்சர்ஸ் பெயரில் 3 படங்களை தயாரித்தார் . அதில் நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் படங்களை அவரே இயக்கினார் . இரண்டும் வெள்ளிவிழா படங்கள். மூன்றாவது படமாகிய அடிமைப்பெண் இயக்குனர் கே.சங்கர் டைரக்ட் செய்தார் .அடிமைப்பெண் படமும் வெள்ளிவிழா கொண்டாடியது .
10.1936ல்ல திரையுலத்திற்கு அறிமுகமாகிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
1947ல் கதாநாயகனாக உயர்ந்து 1977 வரை தொடர்ந்து திரையுலகில் 41 ஆண்டுகள் பணியாற்றி வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார் .
-
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த சபாஷ் மாப்பிளே 14-7-1961 வெளியானது 58 ஆண்டுகள் நிறைவு பெற்றது . சென்னை பிளாசா பாரத் மகாலட்சுமி 48 நாள் நல்லவன் வாழ்வான் வரும் 31-8-1961 வரை ஓடியது.
: இப்படத்தில் மருதகாசி இயற்றி சீர்காழி கோவிந்தராஜன் பாடிய சிரிப்பவர் சில பேர் அழபவர் பல பேர் இருக்கும் நிலை என்று மாறுமோ ? உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை உழைப்பவர் உயர்ந்தால் போதுமையாஎன்ற அருமையான கருத்துள்ள ஏழைகள் உழைப்பாளர்கள் பற்றி எம்ஜிஆர் அவர்கள் படத்தில் தான் இந்த கருத்துக்கள் வரும். மக்கள் மனதில் படிப்படியாக இடம் பெற்றார். அதனால்தான் மற்றவர்கள் அவரை கிண்டல் கேலி பேசிய போதும் மக்கள் அதை நிராகரித்து தமிழகத்தின் முதல் அமைச்சர் ஆக்கினார்கள்.[படத்தையும் மக்கள் திலகத்தின் வித்தியாசமான நகைச்சுவை நடிப்பையும் பார்த்துவிட்டு அறிஞர் அண்ணா, 'சபாஷ் எம்ஜிஆர் ' என்று பாராட்டிய படம்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முழு நீள நகைச்சுவை படத்தில் கதாநாயகனாக
நடித்திருந்தார் . நடிகவேள் எம்.ஆர். ராதா முதன் முறையாக மக்கள் திலகத்துடன்
இணைந்து நடித்தார் . அதன்பின் பல படங்கள் 1966ல் பெற்றால்தான் பிள்ளையா
படம் வரையில் நடித்தார் .
1975ல் முதன் முறையாக ராம் தியேட்டரில் பார்த்தேன் . அதன்பின் பல முறை
பிரபாத், சரவணா , பத்மநாபா , பிளாசா அரங்குகளில் பார்த்துள்ளேன்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நகைச்சுவை வேடத்திலும் தன்னால் நடிக்க
முடியும் என்று நிரூபித்த படம் . மும்பையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இன்று 19-07-2019 முதல் திருச்சி - கெயிட்டி திரையரங்கில், எப்பொழுதும் மறு வெளியீடு காவியங்களின் வற்றாத வசூல் சக்கரவர்த்தி, புரட்சி நடிகர் வழங்கும் " குடியிருந்த கோயில் " தினசரி 4 காட்சிகள் வெற்றி நடை காண்கிறது...
-
-
-
-
-
-
"நான் குற்றம் சாட்டப்பட்டவன், எல்லோரையும் போல் நானும் நின்று கொண்டே பதில் கூறுகிறேன்"
நீதி மன்றம் கொடுத்த சலுகையையே மறுத்த #மக்கள்திலகம்
அது 1973 மார்ச் மாதம் 27ம் தேதி.
திருப்பூரில் முன்னாள் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் துரைசாமி (தற்போது ம.தி.மு.க) நமது #புரட்சித்தலைவர் மேல் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு சம்பந்தமாக, தற்போது பலர் கேட்பதைப் போல், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கவில்லை - நமது பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்கள்.
மாறாக, தானே நேரில் ஆஜாராகி நீதிபதி தொடுத்த சுமார் 50 க்கும் மேலான வினாக்களுக்கு பொறுமையாக பதில் அளித்தார்.
தலைவரின் பதில்கள் முழுவதையும் பதிவு செய்த எழுத்தர், தயக்கத்தோடு, தலைவரின் வயதை கேட்க, தலைவரோ
"ஏன் தயங்குகிறீர்கள், நீதி மன்ற நடைமுறைகளில் ஒன்று தானே இது"
-என்று கூறி அவரது அச்சத்தை போக்கி, தனது வயதை தெரிவிக்கிறார்.
தொழில் அரசியல்தானே என்று வினவும் பொழுது, நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள்
"அரசியல் என் தொண்டு, சினிமாவில் நடிப்பு என் தொழில் "
-என்று கூறியது மட்டுமல்லாமல்,
"சிலர் அரசியலை தொழிலாக்கி பிழைப்பாக்கி கொண்டதால், நான் என் தொழிலை விட்டு அரசியலுக்கு வர நேர்ந்தது"
-என்று நகைச்சுவையாக மேலும் சொன்னார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வழக்கு போட்ட துரைசாமியே குற்றம் சாட்டப்பட்ட நம் தலைவர் அவர்கள் 'நாற்காலியில் அமர்ந்தவாறே பதில் சொல்லலாம்' என்று கூறிய பொழுதும், அதை நாசூக்காக மறுத்து, நீதிமன்ற நடைமுறைப்படி,
"நான் குற்றம் சாட்டப்பட்டவன், எல்லோரையும் போல் நானும் நின்று கொண்டே பதில் கூறுகிறேன்" என்று தெரிவித்தார்.
நீதிமன்றத்துக்கும், அதன் நடை முறைகளுக்கும் பெரும் மதிப்பளித்து அவர் கூறிய இந்த பதில், நீதிபதி உட்பட எல்லோரையும் நெகிழ வைத்தது.
அதுதான் 'நீதிக்கு தலை வணங்கு' என்று அறிவுறுத்திய நம் மன்னன், பொற்கால ஆட்சி தந்த பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பண்பு !
அன்பின் பிறப்பிடம், பண்பின் சிகரம், பாசத்தின் உறைவிடம், நேசத்தின் இருப்பிடம். உலகத் தமிழர்களின் உண்மைத் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். !
அன்புடன்
படப்பை R.D.பாபு........... Thanks...
-
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு தலைவர் பட குழு ஜப்பான் வந்து சேருகிறது.
குழுவினர் நடுவில் ஒரு மன்னன் போல நடந்து வருகிறார் வாத்தியார்...
கஸ்டம்ஸ் பகுதியை கடந்து வரும் போது வேஷ்டி ஜிப்பா தலையில் தொப்பியுடன் வந்த எம்ஜிஆர் அவர்களை பார்த்த ஜப்பானிய விமானநிலய பணிப்பெண்கள் எம்ஜிஆர் இவ்வளவு எளிமையாய் இருக்கிறாரே என்று வியநதனர்
அவர் அருகில் சென்ற நான் வாருங்கள் வணக்கம் ஜப்பான் expovil அனுமதி கிடைப்பது கடினம் நம் தமிழ்நாடு போல இல்லை ஆனாலும் ஒருவாரம் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கி உள்ளேன் என்றேன்...
ஒரு வாரம் இருக்கு போதும்...என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார் எம்ஜிஆர்..
நடு இரவு ஒரு மணி டோக்கியோவில் உள்ள பிரபல இம்பீரியல் ஹோட்டல் முன் குழு வந்து இறங்குகிறது
நாகேஷுக்கு நடை சரியில்லை..அசோகன் அசைவு சரி இல்லை. மஞ்சுளா முகம் மங்கி இருந்தது..சந்திரகலா சரியாக பேசவில்லை...எனக்கு காரணம் புரியவில்லை. வாத்தியார் மட்டும் அவர்களிடம் ஏதோ பேசிவிட்டு என்னிடம் வந்து விமானத்தில் யாரும் சாப்பிடவில்லை அனைவருக்கும் நான் உள்பட சரியான பசி.
இப்போது நம்ம ஊர் சாப்பாடு எங்காவது கிடைக்குமா என்று என்னிடம் கேட்க பதறிய நான் அந்த இரவிலும் ரசமும் சோறும் கிடைத்தால் கூட போதும் என்று அவர் சொன்ன வார்த்தை உணர்ந்து ஒரு பெரிய காரில் இரவோடு இரவாக எனக்கு தெரிந்த பேங்க் ஆப் இந்தியா சந்தானம் வீட்டுக்கு சென்று கதவைத்தட்டினேன்
எம்ஜிஆர் வந்து இருக்கிறார் என்ற உடன் அந்த தம்பதியினர் அசந்து வியந்து அந்த வேளையில் சுட சுட சாதம் ரசம் அப்பளம் வத்த குழம்புடன் அனைவரும் வயிறார பசியாற அனைவரும் சாப்பிடத்தை உறுதி செய்து கொண்ட நம் வாத்தியார் அந்த சந்தானம் தம்பதியருக்கு நன்றி சொல்லி புறப்பட அவர்கள் இது கனவா நினைவா என்று திகைத்து போனார்கள்.......... Thanks...
-
வாலி மக்கள் திலகத்திற்காக
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார் (2)
(நான் ஆணையிட்டால்)
ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன்
அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தோடமாட்டேன் (2)
(நான் ஆணையிட்டால்)
சிலர் ஆசைக்கும் தேவைக்கும்
வாழ்விற்கும் வசதிக்கும்
ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை
அவர் எப்போதும் வால்பிடிப்பார்
முன்பு யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார்
இந்த மானிடர் திருந்திட பிறந்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
(நான் ஆணையிட்டால்).......... Thanks...
-
தெய்வத்தாய்", ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் முதல் தயாரிப்பு.வெளியான தேதி 18/07/1964. வெளியாகி 55 ஆண்டுகள் நிறைவு பெற்றது
இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய "மெழுகுவர்த்தி", "மேஜர் சந்திரகாந்த்" ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.
ஒருமுறை "மெழுகுவர்த்தி" நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.
தெய்வத்தாய் ஆரம்ப காட்சி தன் தாயாரை சந்திக்க வருவார் எம்ஜிஆர். ஏன் இவ்வளவு லேட் என்பார். அதற்கு என் எதிரிகள் என்னை தாக்க திட்ட மிட்டனர். அவர்களுடைய திட்டங்களை தவிடு பொடி ஆக்கிவிட்டேன் என்பார்.
: கலை உலகம் மட்டுமில்லை அரசியலிலும் புரட்சித்தலைவரை எதிரிகள் பல வகையில் தாக்கினார்கள். தமிழக முதல் அமைச்சராக இருந்த போது தினம் ஒரு போராட்டம் நடத்தினார் கருணாநிதி. அவரை 13 வருடங்கள் கோட்டை பக்கம் வராமல் அவருடைய திட்டங்களை தவிடு பொடி ஆக்கினார் புரட்சித்தலைவர்.
: தமிழ் சினிமாவில் எம்ஜியார் படம் சிவாஜி படம் ஸ்ரீதர் படம் பிறகு பாலச்சந்தர் படம் என்று பேசப்பட்டது. தெய்வத்தாய் படத்தில் வசனம் எப்படி இருக்க வேண்டும் மக்களுக்கு எளிதாக புரிய வேண்டும் என்று உணர்த்தினார்.
வாழைமலர் போல பூமி முகம் பார்க்கும் கோழை குணம் மாற்று தோழா நாளை உயிர் போகும் இன்று போனாலும் கொள்கை நிறைவேற்று தோழா[ என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடல் வரிகளைத்தான் தன்னுடைய காரின் கண்ணாடியில் பதித்து வைத்திருந்தார் எம்ஜிஆர் ரசிகர்களுக்கு உறுதுணையாக இருந்த மறைந்த திரு. ராமாவரம் தோட்டம் எம்ஜியார் விஜயன் அவர்கள்.
சென்னை பிளாசா கிரவுன் புவனேஸ்வரி 100 நாள் ஓடியது. மதுரை கல்பனா கோவை ராயல் தொழிலாளி வரும் வரை 69 நாள் ஓடியது. நெல்லை லட்சுமி 50 நாள் ஓடியது.
குமுதம் பத்திரிகை மக்கள் திலகம் படம் விமரிசனம் மட்ட மாக இருக்கும்.எம்ஜிஆர் அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்கி எழதும். தெய்வத்தாய் பற்றி தரக்குறைவாக எழதியது. மறு வாரமே விளம்பரத்தில் கருத்துக் குருடர்களின் எழத்திக் கனைகளை முறியடித்த படம் என்றுவிளம்பரம் செய்தார் தயாரிப்பாளர் திரு.ஆர்.எம்.வீரப்பன் அவர்கள்.
: இது ஒரு சத்யா மூவிஸ் தயாரிப்பு!
: சேலம் ஓரியண்டல் 69 நாள் ஓடியது.
வசனம் : கே. பாலச்சந்தர் . இயக்கம் : பி.மாதவன் . இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி ,
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிக பொருத்தமான ஜோடி என பேசப்பட்ட சரோஜாதேவி ஆடல், பாடலுடன் மிக சிறப்பாக நடித்திருந்தார் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்களில் புதுமையான நடன அசைவுகளை புகுத்தி
ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார் .
நகைச்சுவை மன்னன் நாகேஷ் தனக்கே உரிய பாணியில் சிரிக்க வைத்தார் .
நடிகர் அசோகன் தந்தையாகவும், பண்டரிபாய் தாயாகவும் நன்கு சோபித்தனர் .
வில்லன் எம்.என். நம்பியார் எஸ்.வி.சகஸ்ரநாமம், எஸ்.என். லட்சுமி, மற்றும் பலர் நடிப்பில் மெருகேற்றி படத்தை சிறப்பித்தனர் .
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அறிமுக காட்சி அபாரம். முதன்முறையாக விமானத்தில் இருந்து வெளி வரும் காட்சி. பல காட்சிகளில் கருத்தாழமிக்க வசனங்கள் பேசி கைதட்டல்கள் பெற்றார் . துப்பறியும் அதிகாரி வேடம் கைவந்த கலை போல நடித்தார் . பாடல்கள் மிகவும் இனிமை. மெல்லிசை மன்னர்கள் டைட்டில் இசையில் இருந்து கிளைமாக்ஸ் காட்சிகள் வரையில் பாராட்டும்படி இருந்தது .கிளைமாக்ஸ் காட்சிகளில் குற்றவாளி யான தன் கணவன் தன் மகனுக்கு அவர்தான் தந்தை என்பது தான் உயிரோடு இருக்கும்வரை தெரியக்கூடாது என்கிற வகையில் உணரிச்சிமிக்க போராட்டமாக காட்சிகளை திறமையாக இயக்கிய
இயக்குனர் மாதவன் பாராட்டத்தக்கவர் .அதற்கு வசனகர்த்தா பாலச்சந்தரின் வசனங்கள் கைகொடுத்தன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காதல், வீரம், தீரம், துப்பறிவது சண்டை நடனம் சோகம் உணர்ச்சி , தாய்மை ஆகிய வற்றை காட்சிகளில் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் உள்ளங்களை கவர்ந்தார் .
பாடல்கள் :
1. காதலிக்காதே, கவலைப்படாதே (பி.சுசீலா )
2. [பருவம் போன பாதையிலே (பி.சுசீலா )
3. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ( கொள்கை பாடல் )
4. இந்த புன்னகை என்ன விலை ( மேல் நாட்டு நடனம் / கிராமிய நடனம் கலந்த காதல் பாடல் )
5. வண்ணக்கிளி சொன்ன மொழி (காதல் பாடல் )
6. ஒரு பெண்ணை பார்த்து ( அருமையான ட்விஸ்ட் நடனத்துடன் காதல் பாடல் )
7. உண்மைக்கு வேலியிட்டு 0(சீர்காழி கோவிந்தராஜன் - சோக பாடல் )
1974ல் ,முதன்முறையாக பார்த்தேன். அரங்கு ஞாபகமில்லை. ஆனால் பல அரங்குகளில் பார்த்துள்ளேன். இருப்பினும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஆனந்த் அரங்கில் பக்தர்களுடன் கண்டுகளித்து மறக்க முடியாதது .
-
-
-
-
-
-
-
-
-
-
-