காத்திருப்பதில்லை
கண்ணீர்த் துளிகள்
கன்னத்தில் வடியும்
காரியம் சாதிக்கும்
Printable View
காத்திருப்பதில்லை
கண்ணீர்த் துளிகள்
கன்னத்தில் வடியும்
காரியம் சாதிக்கும்
சாதிக்கும் எண்ணமெதுவுமின்றி
சிறுவனைச் சந்தோஷப் படுத்துவ்தற்காக
கிடுகிடுவென ஓடிப்
பந்தை எடுத்து வருகிற்து
அந்த்த் தெருநாய்,,
வாலை ஆட்டிய படியே..
மறுபடி எறிய..
மறுபடி எடுத்து வர...
திடீரென பந்தை நாய் போட
சிறுவன் எடுத்து வர..
சிலிர்த்துக் கொண்ட சிறுவன்
நினைத்துக் கொண்டான்..
‘சே அப்படி எல்லாம் செய்யாது..
இது மட நாய்..”
நாய்க்கு வேணும் நாணம்
நங்கைக்கு அல்லவாம்
புரட்சிப்புலவன் வாக்கு
பிழையாய் போனதின்று
அர்த்தமும் அனர்த்தமும்
அறிந்திட ஒரு வாய்ப்பு
வாய்ப்புக் கிடைக்குமென
எதிர்பார்க்கவில்லை..
வழியில் தான் சந் தித்தேன்..
சற்றே குண்டாய் இருக்கிறான்..
மீசையின் இரு மூலைகளிலும் வெண்மை..
கண்களில் சற்றே சுருக்கம்..
இரண்டு குழ ந்தைகளாம்..
பெயர் விஜய் வினிதாவாம்..
என் பெயர் இல்லை..
மனைவி சுகமாம்..
வேலைபரவாயில்லையாம்..
குடும்பம் ஊரிலாம்..
ஓமானுக்கு வந்து இரு மாதமாம்..
கேள்விகளுக்குப் பதில் வந் த்து
கேள்விகள் வரவில்லை..
நானும் சொல்லவில்லை..
சற்றே கண்களைப் பார்த்துவிட்டுக்
கைகுவித்தேன்..
அவனும் கைகுவிக்கையில்
தெரிந்த்து
நான் கொடுத்த கடிகாரம்....
கடிகாரம் நின்றுவிட்டதா
எத்தனை தரம் பார்ப்பது
கடினமானது காத்திருப்பது
கடிகார முள் பறக்கிறதே
அதற்குள் பிரிய வேண்டுமா
கடிகாரம் என்னவோ ஒன்றேதான்
உயிர்
ஒன்றேதான் உள்ளது என்னிடம்
கொன்றே தந்து விடுகிறேன் உன்னிடம்
இன்றே வருவாய் என்னிடம்
என்னிடம் அவனது
எதிர்பார்ப்பு புரிகிறது..
சிறிய தலையாட்டல்..
மெலிய புன்சிரிப்பு..
கொஞ்சம் தயக்கமான பார்வை..
ம்ஹீம் மாட்டேன் போ..
தைர்யமிருந்தால் நீ வா..
இதோ..
எதிரில் அவன்..
வழக்கம் போல்
தலைகுனிந்து கடந்து
திரும்பிப் பார்த்தால்..
இல்லை.,.
முன்னால் சென்றால்
வ்ழிமறித்துத் தொடர்கிறது
அவன் உருவம்..
மனதில்..
மனதில் நடக்குது பட்டிமன்றம்
கெஞ்சுவதா மிஞ்சுவதா
கொஞ்சுவதா குழைவதா
சாம தான பேத தண்டத்தில்
இந்தக் கணம் இவனை வெல்ல
துரிதமாய் துணிவாய் முடிவெடு
முடிவெடு அழகின் அழகே என்னைச்
சேர்ந்தால் உனக்கு ராஜ யோகம்
அந்தப் புரத்தின் அழகிகளெல்லாம்
உனக்கே அடிமை மற்றும் நகைகள்
இந்த இலங்கை எல்லாமுன்சொத்து..
சொன்ன ராவணன் பதிலுக்கு நிற்க
சோகம்,துக்கம்,வெறுப்பு எல்லாம்
கலந்தே சிரித்தாள் சீதை மெல்ல..
அந்தச் சிரிப்பிற்கிருக்கும் கதையும்
மதியில் மயக்கம் கொண்டவன் அறியான்..
*
சீதா ராமர் திருமண வைபவம்
சிறப்பாகவே நடந்திடும் சமயம்
தாமதமாகவே வந்தார் சிவனும்..
அவர்கள் அருகே சென்றே வாழ்த்த
‘ராமா மன்னி, உம்மைக் கண்டு
வாழ்த்த வேண்டும் என்ற அவசரத்தில்
பரிசு எதுவும் வாங்கவு மில்லை..
என்னவேண்டும் உரை நீ என்றார்..
தம்பதிகளில் தான் சீதை சொன்னாள்..
ஈசா நீவிர் இங்கே வந்து
எமைத்தான் வாழ்த்தினீர் அதுவே போதும்..;
ஈசன் சிரித்தே சொன்னான் அம்மா..
எந்தன் சிரிப்பை உனக்கே தருவேன்..
தக்க சமயத்தில் உபயோகப் படுத்து..!
**
திருமணப் போதில் கிடைத்த பரிசு
ஈசன் சிரித்த அழகிய சிரிப்பு
சாதா ரணமான சிரிப்பா அதுதான்
திரிபுரம் தன்னைப் பொடிப்பொடி யாகச்
சாம்பலாய் ஆக்கிய சிரிப்புதான் அன்றோ..
அதையே அந்த சோகப் பொழுதில்
தந்தாள் சீதை பிற்காலத்தில்
இலங்கையை எரித்த்து அந்தச் சிரிப்பு...
**
சிரிப்பு ஒரு திரை
அழகாய் மறைக்கும்
உள்ளத்து உணர்வை
உலை கொதிப்பதை
வலி வாட்டுவதை
வினை விளைவதை
நாகரிக ஒப்பனை
போலி வெளிப்பூச்சு
அறிவார் தேர்ந்தவர்
எளிதில் ஏமாறாதவர்