-
பாயும்புலி நாளை வெளியாகுமா? பரபரப்பு தொடருகிறது
விஷால் நடித்த பாயும்புலி படத்துக்கு செங்கல்பட்டு திரையரங்க விநியோகஸ்தர்கள்சங்கம் தடை விதித்ததைத் தொடர்ந்து திரையுலகம் பரபரப்பாகிவிட்டது.
அந்தத்தடை காரணமாக, தயாரிப்பாளர்கள்சங்கம் நாளை முதல் புதியபடங்களைத் திரையிடுவதில்லை என்றும் 11 ஆம் தேதி முதல் எல்லாப்படங்களையும் திரையிடுவதில்லை என்றும் முடிவுசெய்து அறிக்கை வெளியிட்டுவிட்டார்கள்.
செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை தயாரிப்பாளர்கள்சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிக்கை வந்த சில மணிநேரங்களில் விஷால், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், திட்டமிட்டபடி செப்டம்பர் 4 ஆம் தேதி பாயும்புலி படம் வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்.
ஏன் இப்படி? செங்கல்பட்டு திரையரங்குஉரிமையாளர்கள்தானே படத்துக்குத் தடை விதித்தார்கள், மற்ற மாவட்டங்களில் நாங்கள் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து காத்திருக்கிறோம் எங்களை ஏமாற்றலாமா? என்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேட்கத் தொடங்கிவிட்டார்களாம்.
அவர்களுக்குப் பதில் சொல்லும் விதமாகவே விஷால் இப்படி அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர்கள்சங்கமும் இதையொட்டிய அறிவிப்பை வெளியிடும் என்றும் சொல்கிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டு திரையரங்குஉரிமையாளர்கள்சங்கக்கூட்டம் இன்று நடக்கவிருக்கிறதாம். அதில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது மதியம் தெரியும்.
-
திரையுலகில் திடீர்திருப்பம், விஷாலுக்கு சரத்குமார் ஆதரவு
பாயும்புலி படத்துக்கு செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள்சங்கம் தடை விதித்ததையொட்டி பல்வேறு பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
செப்டம்பர் 4 முதல் புதுப்படங்கள் திரையிடப்படாது என்று சொன்ன தயாரிப்பாளர்சங்கத்தின் முடிவு மாறி படங்களை வெளியிட முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு திடீர்திருப்பம் ஒன்றும் ஏற்பட்டிருக்கிறது.
விஷால் படத்தை நிறுத்தக்கூடாது திட்டமிட்டபடி படம் வெளியாகவேண்டும் என்று சொல்லியிருக்கிறார் சரத்குமார். நடிகர்சங்கத் தேர்தலையொட்டி இருவரும் எதிரும்புதிருமாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பது தெரிந்த செய்தி.
இந்நிலையில் விஷால் படத்துக்குச் சிக்கல் என்கிற நேரத்தில் நடிகர்சங்கம் சார்பாக அது சம்பந்தப்பட்ட பேச்சுகளில் பங்கேற்றதோடு படம் வெளியாகியே தீரவேண்டும் என்றும் அவர் சொல்லியிருப்பது மிகவும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
-
vishalukku ethos bill clinton na ninaippu.. ooru aani kuuda pudunga mudila but aatchiyai pidippen'gra kanakkila pechu
-
-
Rockline Venkatesh
-
Watched thani oruvan. A powerful one-word comment says it all:AWESOME!:clap::clap::clap:
-
'தனி ஒருவன்' ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி
மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் 'தனி ஒருவன்' படத்தின் ரீமேக் உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது.
மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'. ஆதி இசையமைத்திருக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.
ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும்பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படத்தின் வசூல் நிலவரம் குறித்து விநியோகஸ்தர்கள் தரப்பில் விசாரித்த போது, "நீண்ட நாட்கள் கழித்து ஒரு படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருக்கும் தமிழ் படம் இது தான். விடுமுறை நாட்களில் தான் திரையரங்குகள் நிரம்புவது பார்த்து வருகிறோம்.
'தனி ஒருவன்' படத்துக்கு வார நாட்களில் திரையரங்குகள் நிரம்பி வருகிறது. தமிழக அரசு வரிச்சலுகையும் கொடுத்திருப்பதால் இப்படம் கண்டிப்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய் லாபம் கொடுக்கும்" என்று தெரிவித்தார்.
மேலும், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ராம்சரண் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்தியில் சல்மான்கானும் இப்படத்தை பார்த்திருக்கிறார்.
ரீமேக் உரிமையில் யார் நடிக்கவிருக்கிறார் என்பது குறித்து தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, "தெலுங்கு, இந்தி இரண்டு ரீமேக் உரிமைக்கும் கடும் போட்டி நிலவி வருவது உண்மை தான். ஆனால், இன்னும் ஒரிரு வாரத்தில் உரிமை யாருக்கு, யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது தெரியும்" என தெரிவித்தார்கள்.
-
தீபாவளி நெருக்கடியில் திணறும் படங்கள்
தீபாவளி அன்று பட்டாசு, இனிப்புகளுடன் முக்கிய இடம்பிடிப்பது, புதிய திரைப்படங்கள். தீபாவளியை மனதில் வைத்தே முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டு தேதி நிர்ணயிக்கப்படும்.
பட்ஜெட் 15 கோடிக்கு மேல் உள்ள திரைப்படங்களை தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பத்து முக்கிய தினங்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய விதியால், தீபாவளியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
இந்த தீபாவளிக்கு இப்போதே பல படங்கள் ஆயத்தாமாகிவிட்டன.
தூங்கா வனம்
2015 -இல் உத்தம வில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து கமலின் தூங்கா வனமும் வெளியாகிறது. ப்ரெஞ்ச் திரைப்படம், ஸ்லீப்லெஸ் நைட்டின் அதிகாரப்பூர்வ தழுவலான இந்தப் படத்தை 38 தினங்களில் முடித்தார் கமல். போஸ்ட்புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
தீபாவளிக்கு படத்தை வெளியிட்டால் விளம்பரம் அதிகமின்றியை நல்ல ஓபனிங்கை பெற முடியும் என்பதால் கமல், தீபாவளியை குறிவைத்துள்ளார்.
தூங்கா வனத்தில் கமல், பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத், த்ரிஷா, ஆஷா சரத், மதுஷாலினி, யூகிசேது உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை. கமலின் முன்னாள் உதவி இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வம் படத்தை இயக்கியுள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல்ஸ் தயாரிப்பு.
அஜித் படம்
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் முடியும் நிலையில் உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் அஜித்துடன் ஸ்ருதி, லட்சுமி மேனன், கபீர் சிங், ராகுல்தேவ் நடித்துள்ளனர். நகைச்சுவைக்கு சூரி. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படம் அதன் இறுதிகட்டத்தில் உள்ளது.
விரைவாக படத்தை முடித்து தீபாவளிக்கு படத்தை கொண்டுவர விரும்புகிறார் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அவரது முந்தைய தயாரிப்பான என்னை அறிந்தால் 78 கோடிகளை வசூலித்திருந்தாலும் அவருக்கு பெரிய லாபமில்லை. அதில் விட்டதை இதில் பிடிக்க தீபாவளி ஓபனிங் மிக அவசியம்.
தனுஷ் படம்
வேலையில்லா பட்டதாரி டீம் (நாயகி அமலா பால் மட்டும் கிடையாது) மீண்டும் இணைந்து உருவாக்கியிருக்கும் படமும் தீபாவளிக்கு வெளிவரும் என கூறப்படுகிறது. வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பு.
மாரி சரியாகப் போகாத நிலையில், இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அதிகம் நம்பியுள்ளார் தனுஷ். படம் விரைவில் தயாராகிவிடும் என்பதால் இவர்களின் இலக்கும் தீபாவளியாகவே உள்ளது.
இது நம்ம ஆளு
இடியாப்ப சிக்கலில் இருக்கும், இது நம்ம ஆளு படமும் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்புள்ளது. இந்தப் படத்தின் டாக்கி போர்ஷன் ஏற்கனவே முடிந்துவிட்டது. கதைக்கு தேவையில்லாத ஒரு குத்துப் பாடலை..
மட்டும் எடுக்க வேண்டும் என்று சிம்பு தரப்பு வலியுறுத்துகிறது. இந்தப் பாடல் முடிந்தால் படம் தயாராகிவிடும்.
இது நம்ம ஆளு கிட்டத்தட்ட முடிந்த நிலையில் உள்ளதால் தீபாவளிக்கு முன்பே திரைக்கு வரலாம். ஆனால், சிம்பு படமல்லவா. தாமதத்துக்கு குறைவிருக்காது, தீபாவளிக்கே படம் வரும் என்கிறார்கள்.
தாரை தப்பட்டை
பாலா படம் குறித்து கடைசி நிமிடம்வரை எதுவும் கூறுவதற்கில்லை. அதேநேரம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் தாரை தப்பட்டையை தீபாவளிக்கு வெளியிட முயற்சிக்கலாம் என்ற பேச்சு உள்ளது. பாலாவின் இந்தப் படத்தில் சசிகுமார், வரலட்சுமி நடித்துள்ளனர். இசை இளையராஜா. இது அவரது ஆயிரமாவது படம். ஒளிப்பதிவு செழியன்.
தஞ்சையை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
இவை தவிர மேலும் பல படங்கள் தீபாவளி நப்பாசையுடன் ரேஸில் உள்ளன. ஆனால், இதில் எத்தனைப் படங்களை தீபாவளி தாங்கும்?
தமிழகத்தில் புதிய திரைப்படங்களை திரையிடும் நிலையில் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை சுமாராக 800 இருக்கும். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு 300 முதல் 400 திரையரங்குகளை ஒதுக்க வேண்டிவரும். இரண்டு படங்கள் வெளியானாலே ஹவுஸ்ஃபுல்லாகிவிடும் நிலையில், மூன்று படங்களுக்கு மேல் சாத்தியமேயில்லை.
தீபாவளியை கைப்பற்றும் அதிர்ஷ்டம் எந்தப் படங்களுக்கு இருக்கிறதோ.
-
அக்.18-ல் நடிகர் சங்கத் தேர்தல்: அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற உள்ளது. 2015-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் சங்கத் தேர்தல் அக்டோபர் 18-ம் தேதி சென்னை மயிலாப்பூரில் நடைபெற உள்ளது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நடிகர் சங்கத்தேர்தலில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட உள்ளன.
தேர்தல் பார்வையாளராக ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
விஷால், நாசர், பொன்வண்ணன் உள்ளிட்ட 'பாண்டவர் அணி' ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரையும் சந்தித்து பேசிவருகிறார்கள்.
இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்களின் இறுதி பட்டியல் கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது.
-
அக்ஷய் குமாருக்கு பிரபுதேவா அளித்த பரிசு
நேற்று அக்ஷய் குமாரின் பிறந்தநாள். அவருக்குப் பிடித்த, சினிமா தேக்கே மாமா என்ற பாடலை பிரபுதேவா, பிறந்தநாள் பரிசாக வெளியிட்டார்.
அக்ஷய் குமாரை வைத்து, தெலுங்கு விக்ரமார்க்குடு படத்தை ரவுடி ரத்தோர் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார் பிரபுதேவா.
படம் பம்பர் ஹிட். இதையடுத்து, சிங் இஸ் பிளிங் படத்தில் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இந்தப் படம் அக்டோபர் 2 திரைக்கு வருகிறது.
இதில் இடம்பெற்ற, சினிமா தேக்கே மாமா பாடல் அக்ஷய்யின் விருப்பப் பாடல். அதனை அவரது பிறந்தநாள் பரிசாக நேற்று பிரபுதேவா வெளியிட்டார்.
பிரபுதேவா கடைசியாக இந்தியில் இயக்கிய 2 படங்களும் தோல்வி என்பதால், சிங் இஸ் பிளிங் படம் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் பிரபுதேவா உள்ளார்.