Originally Posted by
kcshekar
டியர் r .k .s சார்,
நடிகர்திலகம் செய்த, கொடுத்த நன்கொடைகளை வெளியில் தெரியாமல் செய்ததால்தான் இன்றுவரை நாம் அதனை காட்டு கத்தலாகக் கத்தி மற்றவர்களுக்குத் தெரியவைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நடிகர்திலகத்தின் புகழை, சேவைகள் பல செய்து, தனி மனிதனாக, யாருக்கும் தெரியாமல், ரகசியமாகப் பரப்புகிறேன் என்று சொல்பவதேல்லாம் இந்தக் காலத்தில் எடுபடாது. விநியோகஸ்தர்கள் எல்லாம் வியாபாரிகள் அல்ல என்றால், நஷ்டம் அடைகிறார்களா? லாபம் அடைகிறார்கள் என்றால், அவர்களே நடிகர்திலகத்தின் புகழ் காக்க ஏதாவது நிகழ்ச்சிகள் செய்யவேண்டியதுதானே? அவர்களும், ரகசியமாக நற்பணிகள் செய்கிறார்களா?
எனக்கு தங்களுடன் அறிமுகமும் இல்லை, பழக்கமும் இல்லை. தாங்கள் சென்னையில் இருப்பவர் என்றால், பிறந்தநாள், நினைவுநாளுக்கு, நடிகர்திலகத்தின் சிலைக்குக் கூட மரியாதை செலுத்தலாமே? அதையும் நான் மானசீகமாகவே செய்துகொள்வேன் என்று கூறுவீர்கள் என்று நினைக்கிறேன். Atleast இந்த நிலையிலாவது தங்களுடைய பின்னணியைச் சொன்னால், தங்களுடைய பணியைப் போற்றுவதற்கு எதுவாக இருக்கும்.
பரம ரசிகர்கள் என்று கூறிக்கொண்டு நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிடும் விநியோகஸ்தர்கள் பெரும்பாலும், லாபம் சம்பாதித்த பிறகு, மாற்று முகாம் படங்களை வெளியிடுவதை நாம் பார்க்கிறோம் (சொக்கலிங்கம் மட்டுமல்ல)
இன்று, பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் என்று பல தலைவர்களுக்கு புகழ் சேர்க்க, பல்வேறு பெயரில் அமைப்புகள், இயக்கங்கள் இருக்கின்றன. எனவே தனித்தனியாக அமைப்புகள் இருந்து தலைவன் புகழ் பாடுவது ஒன்றும் குற்றமல்ல. கர்ணன் திரைப்பட வெற்றிக்குப் பிறகுதான் பல தியேட்டர்கள் பழைய, குறிப்பாக நடிகர்திலகத்தின் திரைப்படங்களை வெளியிட முன்வந்தார்கள் என்பதுதான் உண்மை. இதற்காக எந்தப் பெரிய போராட்டங்களும் நடைபெறவில்லை. அதற்கு அவசியமும் இல்லை. தினந்தோறும் ஏதாவது ஒரு தொலைக்காட்சியில், புத்தம் புதிய dvd க்களில், நடிகர்திலகத்தின் திரைப்படங்களைக் கண்டுகளித்துக்கொண்டிருக்கும், இன்றைய தலைமுறையினர், நவீன திரையரங்குகளில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்களே தவிர மகாலட்சுமி திரையரங்கு போன்றவற்றில் அல்ல.
நான் எல்லாவற்றிற்கும் பதிலுக்கு பதில் சொல்பவன் அல்ல. இருந்தாலும் என்னைச் சார்ந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து வந்துள்ளேன். இனியும் அப்படியே.
நன்றி.