டியர் ஜவஹர், ஷிவராம் மற்றும் நண்பர்களுக்கு,
தங்களுடைய பதில்களும் பெருந்தன்மையும் எனக்கு உவகை அளித்துள்ளது. தற்போது இருக்கும் தலைவர்களுக்கோ அல்லது மறைந்த அவரது கால, அவரது முற்காலத்திய தலைவர்களுக்கோ எந்த விதத்திலும் நடிகர் திலகம் குறைந்தவரல்ல. சொல்லப் போனால் எல்லோரையும் விட ஒரு படி மேலே தான் உள்ளார். அந்த அடிப்படையில் தான் எனனுடைய கருத்து அமைகிறது. சிவாஜி ரசிகர்களின் வாக்குகள் கடைச் சரக்கல்ல என்பதை நாம் வலியுறுத்த வேண்டும். வெறும் ஒரு சில கோரிக்கைகளின் அடிப்படையில் நம் வாக்குகளை சிலர் பெற்று விட முயல்வதை நாம் அநுமதிக்காமல் சில குறைந்த பட்ச அங்கீகாரத்தை நடிகர் திலகத்தின் அரும்பணிகளுக்கு அவர்கள் தருவாரேயானால் அப்போது நாம் அதைப் பற்றி சிந்திக்கலாம்-
என்னுடைய தனிப்பட்ட எண்ணங்கள்.
1. இந்திய அளவில் சிறந்த தலைவராக திகழும் நடிகர் திலகத்தை அந்த அடிப்படையில் யார் தலைவராக ஏற்றுக் கொள்கிறாரோ, எந்த இயக்கம் ஏற்றுக் கொள்ளுகிறதோ, அவர்களுக்கு நம் வாக்கை அளிப்பதைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.
2. ஒவ்வாத காரணங்களை சொல்லிக் கொண்டிருக்காமல், அவருக்கு பாரத் ரத்னா விருது பெற்றுத் தருபவருக்கே அல்லது அந்த இயக்கத்தினைப் பற்றி நாம் சிந்திக்கலாம்.
3. திரையுலகில் இந்தியாவின் மிகப் பெரிய விருதாக சிறந்த நடிகருக்கு வழங்கப் படும் விருதை நடிகர் திலகம் சிவாஜி பெயரில் வழங்க வேண்டும்.
4. இந்த மணிமண்டபம் என்பது சில பல கோடிகளில் நடந்து விடக் கூடியது, அது ஒன்றும் பெரிய காரியம் அல்ல, அதுவும் அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஒரு கடமைக்கு செய்யாமல் அதை உரிய முறையில் செய்ய வேண்டும். அது நிச்சயம் நடக்கும். அது வெறுமனே ஒரு அரசியல் தலைவருக்கு கட்டப்படுவது போல் செய்வதில் எனக்கு உடன் பாடில்லை. அது உலக அளவில் போற்றப் படவேண்டும், உலக அளவில் பயன் பெற வேண்டும், சும்மா வந்து அஞ்சலி செலுத்தி விட்டு போகும் வகையில் இருக்கக் கூடாது. அது மிகப் பெரிய அளவில் உலக வல்லுநர்களை வரவழைத்து ஒரு அருங்காட்சியகம் போல் அமைக்கப் பட வேண்டும். திரைப்படத்துறை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் போன்ற பல தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் நிதானமாக யோசித்து செய்ய வேண்டிய காரியம்.
எனவே இந்த மணிமண்டபம் விவகாரத்தில் அரசியல் வாதிகளின் தலையீடு இல்லாமல் இருப்பதே சாலச் சிறந்தது.
இவையெல்லாம் என் தனிப்பட்ட விருப்பங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்