cell :D
Printable View
cell :D
3.
நீ செல்லமாய் உன் வீட்டு
நாய்க்குட்டியைக் கொஞ்சும் அழகுக்கே
கோடி கவிதைகள் எழுதலாம் போ!
:clap:
மீண்டும் புதுக்கவிதை.......
இத்தனை அழகென்று
எதிர்ப்பார்க்கவில்லை - கருப்பு வெள்ளைப்
புகைப்படத்தில் வானவில்
தூக்கத்தில் கனவுகள்
கனவில் தூக்கம்
தூக்கத்தில் மீண்டும் கனவுகல்
.....................................
எழும்போது அத்தனை கனவுகளையும்
உதறவேண்டியிருக்கிறது!
:D
Hi venki can u do me a favour since ur poem all very good can u create a poem for me under the title of birthday pls i really appreciate u pls
appa chellam,click on the new topic shortcut that appears below this post on your bottom left of the monitor.then a similar box to a reply column appears.there chose a title for ur thread and go on.make sure ur thread keeps going on and on.dont waste threads for single entries alone.if u can,visit my new blog8-).as u are a hubber yourself,u can open threads here.
thanks for ur wishes.thank u very much.;-)
or u want me to write a b'day poem?huh?
நான் எழுதி எனக்கு திருப்தி தந்த முதல் கவிதை இதுதான்.இயற்பியல் பரீட்சையை மோசமாக எழுதிவிட்டு வந்து எழுதிய கவிதை.
(இதனை ஒரு கசங்கிய காகிதத்தில் எழுதினேன்,effect-காக.அப்படியே இந்த இணைய அஞ்சலையும் கருதுவது நலம்.)
ஊமைவீணை....
மழையின் ராகங்கள் மீட்ட
நான் பிடித்த கவிதை வீணை
வெறும் மௌன ராகங்கள் துப்பியபடி
என் விரல்களையும் அறுத்துக்கொண்டிருக்கிறது.
துருப்பிடித்த நரம்புகள் தீண்டி
புரட்சி ஏதோ நிகழ்த்த எண்ணி
என் இசைமொழிகளை ஒலியலையாக்கியதில்
மிஞ்சியவை ரத்தம்படிந்த கசங்கிய கவிதைகள்.
ஆயிரந்தான் அரிதாரம்,புலிவேஷம்,கரகோஷம்...
அட!உங்களுக்கெல்லாம் நான் பிச்சைக்காரன் தானே?
"கை,மா,தூ..."இவற்றை வாசித்த நீங்கள்,
"ை ா ூ ௌ..." இவற்றை வாசிக்க முடியுமோ?
உதிரிப்பூக்களை கோத்த என் வீண்விரல்கள்
மலைசூடுகையில் உலர்ந்துவிட்ட துயரம்....
சில்லறைகள் என்மேல் மழைபொழிந்த போது
செல்லாக்காசான யமகண்டத் தூது....
சாமரங்கள் எதிர்நோக்கிய தேகத்துக்கு
சவுக்கடியே ஏகோபித்த வரவேற்பு
சிம்மாசனம் தேடிய விழிகளுக்கு
சவப்பெட்டியே உல்லாச உறைவிடம்!
தூண்டில் முள்ளாக பவனி வர எண்ணி
ரோஜாவில் முள்ளான அலங்கார பொம்மை
போகட்டும்,ராணிக்கூந்தலுக்கு ரோஜாவாக எண்ணி
பிணத்தில் பூத்த புஷ்பமான ஆனந்தரணங்கள்!
அமரஜோதியாய் யுகயுகமாய் நிலைக்க நினைந்து
தெருவோர நியான் போலே அவமான அவதாரம்
என்சைக்ளொப்பிடியாவில் வலம் வராமல் இன்னும்
டெலிபோன் டைரக்டரியில் கூட நுழையா வக்கற்றவன்.
இயற்கையையும்,காதலையும் மொழிப்பெயர்க்கப் பார்த்தால்
கண்ணீரும்,தரித்திரமும் மறுஒலிபரப்பாகின்றன.
சரியென்று எல்லாவற்றையும் துறக்க எண்ணுகையில்
உலகத்தின் மீதான கவலை ரேகைகள்.
பிரும்மாண்டமான என் கற்பனைக்கோட்டை
தீப்பந்தக் கவிதைகளால் சாம்பலாகிவிட்டும்
நான் எழுதிய கடைசி கவிதை உங்கள் கையில்-
அந்தக்கவியும் கசங்கிச்சாக ஒப்பனை செய்துகொண்டுவிட்டது!
venki: :thumbsup: