தெரியவில்லை
இரவா பகலா
இனிப்பா கசப்பா
இசையா இரைச்சலா
இடரா உதவியா
இதெல்லாம் இலக்கியமா
இத்தனை சுதந்திரமா
இன்னும் என்னென்னவோ
இருட்டுது வெருட்டுது
இணையம் தஞ்சம்
Printable View
தெரியவில்லை
இரவா பகலா
இனிப்பா கசப்பா
இசையா இரைச்சலா
இடரா உதவியா
இதெல்லாம் இலக்கியமா
இத்தனை சுதந்திரமா
இன்னும் என்னென்னவோ
இருட்டுது வெருட்டுது
இணையம் தஞ்சம்
தஞ்சமென வந்ததுபோல்
வெளியே செல்ல விடாமல்
காலடியில் முட்டுது தெரு நாய்க்குட்டி..
நேற்றிரவு போட்ட பிஸ்கெட் காரணமா.
வால் படபடவென அடிக்க
கண்களில் தெரியும் பாசம்..
உள்சென்று மறுபடி கொடுத்து விலக நினைத்தால்
வேகமாய் ஓரிரண்டை உண்டுவிட்டு
கேட் வரை ஓடி வருகிற்து..
நான் காட்டும் அன்பு
இதனன்புக்குச்சமமா..
சமமா சரிசமமா நிசமா
உமையொரு பாகனா
உடலிலும் மனதிலும்
உரிமை கொடுப்பவனா
ஒருவன் வருவானா
ஒவ்வொருத்தியின் ஆசை
ஆசையுடன் கோபம் கொண்டு
தனித்து வாழ்ந்த அறிவை
இனம் புரியா காதல் ஒன்று
மனம் முடிக்க எண்ணி
மடல் ஒன்றை வரைந்தது
"என் ஆசை நாயகனே!..."
என்று துவங்கும் அந்த மடலைப்
படித்த அறிவு சிந்தித்தது
"ஆசையுடன் தனித்திருந்தால் கோபம் வரும்!..
ஆசையின்றி தனித்திருந்தால் காதல் வரும்!..
...அத்துடன் ஆசையும் வரும்!..
அட்ரா சக்க நமக்கு ரெண்டு பொண்டாட்டி!!!"
மறு பேச்சின்றி காதலை மணந்தது அறிவு.
அறிவு ஒரு ஆயுதம்
செதுக்கு உன் வாழ்வை
செம்மையான முறையில்
சீரான நேர்பாதையில்
விலகட்டும் அஞ்ஞானம்
விரியட்டும் கண்ணோட்டம்
வேண்டும் ஆக்கபூர்வம்
வேண்டாம் வீண் ஆராய்ச்சி
விளைவுகளை நினை
விழிப்புடன் முன்னேறு
முன்னேறும் இதயமற்ற கால்கள்..
பின்னோக்கும் அன்பான கண்கள்..
என்னப்பா எழுதறே..ஒண்ணும் புரியலை..
அஃதாவது
எவ்வளவோ பணிவிடைகள்
உன் அம்மாவின் கால்களுக்குப் புரிந்திருக்கிறேன்..
நல்ல செருப்பு,
காலைப்பராமரிக்க அழகு நிலையச் செலவு என..
ஆனால்
அந்தக் கால்கள் தான் நன்றியில்லாமல்
பணம் செலவழிக்க கடைத்தெருவிற்கு.
.சரி தமிழில் ஷாப்பிங்
போகுது..
உன் அம்மாவின் கண்களைப் பார்க்கமுடியுமா..
(எரித்துவிடுவாளே)
ஆனால் அவை மட்டும் என்னைத்
திரும்பிப் பாசத்துடன்
பார்த்தவண்ணம் செல்கின்ற்ன..
அப்பா..
வழக்கம் போல நீ ஒரு லூசு..
ஒன்ன அப்படிப் பார்த்துப் பார்த்து
ஏமாத்தறா...அம்மா
அம்மாவின் கைமணம்
மீனானம் தேனானம்
மனைவியும் நிபுணிதான்
ஆனாலும் ஒரு படி கீழே
மருமகளே மருகாதே
மாமியார் ஆனதும் பார்
மகன் பல்லவி தொடர்வான்
மருமகள் பல்லைக் கடிப்பாள்
பல்லைக் கடிப்பாள்..
விழிகளை உருட்டி மிரட்டுவாள்..
அதுவா அசரும்..
கிடுகிடுவெனத் தவழ்ந்து போய்
சற்றே
மேஜையைப் பிடித்து
மேலுள்ள பொருளை
கீழ் தள்ளி விட்டு
ஓசை எழும்புவதை வேடிக்கை பார்க்கும்..
அருகில் சென்று
அடிக்க கை ஓங்கினாலோ
நிமிர்ந்து பார்த்து கடகடவென நகைக்கும்..
அந்தச் சிரிப்பில்
அவளுக்கு
மற ந்து போகும் எல்லாம்...
எல்லாம் தெரிந்தவர் இல்லை
எல்லாம் புரிந்தவர் இல்லை
எல்லாம் உணர்ந்தவர் இல்லை
எல்லாம் கண்டவர் இல்லை
எல்லாம் வென்றவர் இல்லை
எல்லாம் இன்பமயந்தான்
இயற்கையோடு நடந்தால்
இடரின்றி பயணம் முடியும்
முடியும் எனப்
பலதடவை நினைத்த
நீள்தொலைக்காட்சித் தொடர்
முடியவில்லை.- பார்க்கவும்
முடியவில்லை..!
முடியாது என நினைக்கும் வாழ்க்கையோ..
...
மூன்று புள்ளிகளில்
முதற்புள்ளி முடிவதற்கும்
காத்திருப்பதில்லை