அருமை மதிப்பிற்குரிய bis_mala அவர்களே! :)
பூ செய் -> பூசை :clap:
பூசை என்பது வடசொல் என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன்.
தங்களின் மிகத் தெளிவான சொல்லாய்வில் தெளிந்தேன்.
நன்றி மற்றும் நன்றி :)
Printable View
அருமை மதிப்பிற்குரிய bis_mala அவர்களே! :)
பூ செய் -> பூசை :clap:
பூசை என்பது வடசொல் என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன்.
தங்களின் மிகத் தெளிவான சொல்லாய்வில் தெளிந்தேன்.
நன்றி மற்றும் நன்றி :)
Quote:
Originally Posted by disk.box
:ty:
You are always welcome....!
இதில் எங்கிருந்து வழிபடுதல் / தொழுதல் என்ற பொருள் வருகிறது?Quote:
Originally Posted by disk.box
மேலும், வடமொழிச்சொல்லான பூஜாவை, பூ+ஜா என்று பிரித்து மூலம் இல்லை என்று சொல்வது உறுத்துகிறது.
'பிதா'வை அதே மாதிரி பி+தா என்று பிரித்துப்பொருள் தேடலாமா?
'மாதா'வை மா+தா?
'மைதா'வை மை+தா? :lol:
ஒரு பேச்சுக்கு "பூசை" தமிழில் இருந்து வடக்குக்குப்போனதாகவே வைத்துக்கொண்டாலும், 'சா' ஏன் 'ஜா' ஆக வேண்டும்? அவர்களுக்கும் 'சா' இருக்கிறது தானே?
அப்புறம், அந்த "ஆச்சார்யா" (ஆசாரி) என்ற சொல்லும் தமிழ் தானா? நான் கேட்டவரை வடக்கத்தியர் மட்டுமே அப்படிப்பெயர் வைத்திருக்கிறார்கள். இதிகாச மொழிபெயர்த்தல்களில் தான் தமிழில் இந்தப்பதம் கேட்கிறோம் (துரோணாச்சாரியார்)
[quote="app_engine" நான் கேட்டவரை வடக்கத்தியர் மட்டுமே அப்படிப்பெயர் வைத்திருக்கிறார்கள். [/quote]
Rajaji -> C.Rajagopalachari
TTK -> T.T.Krishnamachari
Rangachari
Varadachari
Ramanujachari
These are names of Tamils! :)
சில சொற்களைப் பிரித்துப் பார்த்ததுத்தான் பொருள் காணமுடிகிறது. பிரிக்க இயலாத சொற்களைப் பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். வேறு முறைகளைக் கையாளுவார்கள்.Quote:
Originally Posted by app_engine
இதில் உறுத்துகிறது என்கிறீர்கள். ஏனென்று அறிந்துகொள்ளலாமா?
Majumdhar, a leading authority and professor in Indologist, a Brahmin scholar in Sanskrit, has said puja is a Dravidian word. Pl follow this authority. I have given the name of the book and the publisher. Pl read the book,
The term puja is not found in any related Indo-European languages.
இப்போது பத்மஜா என்ற சமஸ்கிருதச் சொல்லைப் பார்ப்போம்.
இதைப் பத்ம + ஜா என்று பிரிக்கவேண்டும்.
பத்ம - தாமரை.
ஜா - பிறந்தோன்/ பிறந்தோள் / பிறந்தது.
எனவே பத்மஜா - தாமரையிற் பிறந்தோன்
பிரித்துப் பார்த்துத்தான் சமஸ்கிருதத்தில் பொருள் கூறுவார்கள்.
இதைப் பார்த்துவிட்டு சம்ஸ்கிருதப் பண்டிட்டிடம் சண்டைக்குப் போய்விடாதீர்கள்.
இந்தப் பூசை - பூஜை என்ற சொல்லில் இருந்துதான் வழிபடுதல் என்ற பொருள் வருகிறதென்று யார் சொன்னது?Quote:
Originally Posted by app_engine
Quote:
Originally Posted by app_engine
You mean they have no right to replace it?
Why someone writes the name Ahmad as Amat? Is it because of a lack of certain letters in their language?
Why do the Indonesians write "polisi" instead of "polis/police"? Is it because of lack of certain letters in their language?
இப்போது பாபஜா என்ற சம்ஸ்கிருதச் சொல்லைப் பார்ப்போம்.Quote:
Originally Posted by app_engine
பாப + ஜா = பாபஜா.
பாப= பாவத்தில்,
ஜா = பிறந்தது.
ஆகவே பாபத்தில் பிறந்தது என்று பொருள்.
இதைப் பிரித்துப் பார்த்துதான் பண்டிதர்கள் பொருள்கூறுவர்.