http://i61.tinypic.com/1584d1g.jpg
Printable View
'காற்றினிலே வரும் கீதம்' கதை வாசித்து பாராட்டிய நல்மனங்கள் கல்நாயக் (சார் போடவில்லை. போதுமா நாயக்!) கிருஷ்ணா, முரளி சார், கலைவேந்தன் சார், ரவி சார் அனைவருக்கும் நன்றி.
அன்பு நண்பர் கலைவேந்தன் சார்,
தாமத பதிலுக்கு மன்னிக்கவும். சற்று பிஸி. தங்கள் பொன்னான நேரத்திலும் கூட எங்கள் விருப்பப்படி மதுர கானங்களை சுவைக்க வருவது ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.
நீங்கள் என்னதான் சொன்னாலும்
'உள்ளம் தேடாதே என்று சொல்லுதே
என்ன சொன்னாலும் கண் தேடுதே'
என்று யாரையோ தேடிக் கொண்டு
கூண்டுக்கிளி' பறவை எப்போது வெளிவரும்?
என்று காத்துக் கொண்டு
'கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ'
என்று ஏக்கம் கொண்டு
'கோபாலன் எங்கே உண்டோ கோபியர் அங்கே உண்டு கிருஷ்ணாரி ராமாரி'
என்பதையும் நீங்கள் தெரிந்து வைத்துக் கொண்டு
இருப்பதை நாங்கள் அறியவில்லை என்று நினைக்க வேண்டாம். 'பொறுப்பாக மாட்டேன்' என்று தட்டிக் கழிக்க முயற்சித்தால் ஏற்றுக் கொள்ளப்படாது. அவ்விடமும் அதே ஏக்கம்தான்.:) அது கைபேசியில் என்னிடம் பேசும் போதே தெரியும். முதல் வார்த்தை 'எப்படிடா இருக்கே? அடுத்த வார்த்தை 'கலை அப்படி... கலை இப்படி... அப்புறம் கலை எப்படி? என்று எப்போதும் கலை புராணம்தான் தான். நானே இரண்டாம் பட்சம்தான். எனக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கும். ஆமா. நீங்க வச்சி இருக்கிற வசிய மருந்து பெயர் என்ன?:)
தங்கள் பதிவுகள் எங்களை மேலும் மேலும் உற்சாகப் படுத்துகின்றன கலை சார். தாங்களும் அடிக்கடி பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.
நன்றி!
வணக்கம் வாசுஜி
காலை வணக்கம்
ஒருவரின் அராய்ச்சி கட்டுரைகள் இந்த பெட்டியில் உள்ளதால்
அதை என்ன செய்வது என்று தெரியாமல் ''ஆராய்ச்சின் நாயகன்''
சுமக்க முடியாமலும் , தூக்கி வீச முடியாமலும் உள்ளது போல்
காட்சி தருகிறது - இந்த நிழற் படம் இல்லையா வாசு சார் ?
http://i57.tinypic.com/ea5nat.jpg