"அந்த மேவும் அரவிந்த மாமலையில் வந்த வேதவல்லியாம்" - இது தான் ஞாபகத்திற்கு வருகிறது....
Printable View
வாசு சார்
அம்மன் அருள் படத்தை முழுதும் பார்த்த பொறுமைசாலிகளில் அடியேனும் ஒருவன். அந்தப் படத்தைப் பார்க்க வைத்த அந்த "ஒன்றே ஒன்று" - அதைப் பற்றித் தாங்கள் அவ்வளவு சிறப்பாக எழுதி விட்டீர்கள். அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் ... அதுவும் கொஞ்சம் தன் பங்கிற்கு படத்திற்கு சிறப்பு செய்தது.
மற்றபடி ஏதோ ஓவர் ஆக்டிங்... என்கிறார்களே... அதற்கு முழுத் தகுதியும் படைத்த ஏவிஎம் ராஜனின் நடிப்பைப் பற்றிப் பாராட்டி எழுதாத தங்களுக்கு ஈரேழு உலக ஏவிஎம்ராஜன் ரசிகர் மன்றங்களில் தலைமை ஒருங்கிணைப்பு ஒன்றிய அமைப்பு சார்பாக கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதற்குத் தண்டனையாக திருவருள் படத்தை நூறு முறை தாங்கள் பார்க்கக் கடவது...!
வாசு சார்
பி.எஸ்.திவாகர் இசையமைத்த படங்களைப் பட்டியலிடலாமே என்ற எண்ணத்தில் 1951 முதல் 1980 வரையில் வெளிவந்த தமிழ்ப்படங்களில், திவாகர் இசையமைத்த படங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது. ஆதாரம்... பிலிம் நியூஸ் அனந்தன் வெளியிட்ட திரைப்படப்பட்டியல் புத்தகம்.
1952 - பசியின் கொடுமை
1952 - புயல் - எஸ்.ஜி.கே. பிள்ளை என்பவருடன் இணைந்து
1953 - தந்தை
1964 - தெய்வத்திருமகள்
1965 - காட்டு ராணி
1965 - தாயும் மகளும்
1967 - தெய்வச் செயல்
1968 - நேர்வழி
1980க்குப் பிறகு இன்னும் பட்டியலெடுக்கவில்லை.
Vanakkam ji
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் “இறைவன் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்” பாடலை மிகவும் விரும்புவார் போல
தான் இயக்கிய காவியத்தலைவனில் (விஜயகாந்த் பானுப்பிரியா நடித்தது)
தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்து வந்த அர்விந்த் சித்தார்த்தா (ஆபாவாணனின் துணையுடன்) இசையமைத்தார்
இறைவன் ஒரு நாள் போலவே ஒரு பாடல்
யேசுதாஸுடன் ஸ்வர்ணலதா
சந்தன மலர்களை பார்த்து வந்தது தென்றல் காற்று
https://www.youtube.com/watch?v=9pqsRyFRqWU
'உத்தரவின்றி உள்ளே வா' போனஸ் சிறப்புப் பதிவு.
http://i1087.photobucket.com/albums/..._000051912.jpghttp://i1087.photobucket.com/albums/..._000044416.jpg
மதுண்ணா!
'உத்தரவின்றி உள்ளே வா' படத்தின் கிளைமாக்ஸ் பாடல் பற்றிக் கேட்டிருந்தீர்கள். இன்றுதான் அப்லோட் செய்ய அதற்கு நேரம் கிடைத்தது. இறுதியில் ரவி, காஞ்சனா அலங்கரிக்கப்பட்ட பொண்ணு மாப்பிள்ளை காரிலும், அவர்களுக்கு முன்னால் ஆளுக்கொரு பக்கமாக மூர்த்தி, சச்சு ஜோடி ஸ்கூட்டரிலும், நாகேஷ், ரமாபிரபா ஜோடி இன்னொரு ஸ்கூட்டரிலும் சென்னை சாலைகளில் அம்சமாக நிஜமாகவே வர, ரோட்டின் இருமருங்கிலும் ஷூட்டிங் பார்க்க ஜனங்கள் திரண்டிருப்பதும், காரின் பின்னாலேயே சிலர் ஆர்வத்துடன் ஓடிவருவதும் ரசிக்க வைக்கிறது. நாகேஷ் சீரியஸாக ஸ்கூட்டர் ஓடி வருவார். அப்புறம் வலுக்கட்டாயமாக சிரிப்பார். முகம் காட்டிக் கொடுக்கும். மூர்த்தி சமாளித்து விடுவார். ரவி, காஞ்சனா காரின் பின்னால் அவர்களின் பாதுகாப்பிற்காக ஐந்தாறு கார்கள் தொடர்ந்து வருவதைப் பார்க்கலாம். மாலிக்கு ஜோடி இல்லாததால் பூ தூவும் வேலை. இப்போதும் பாவ'மாலி':)
வழக்கமான 'கள்ளம் இல்லாத' வரிகள் ரவிக்கு பாலா குரலில்.
'மஞ்சள் முகத்தை மெல்லப் பிடித்து என்னை ரசிக்கக் கூடாதோ'
என்று ரமாபிரபாவுக்கும்,
'வண்ணம் மலர்ந்து எண்ணம் கலந்து மின்னல் மயக்கம் கொள்ளாதோ'
என்று சச்சுவுக்கும் புதிதாக ஆளுக்கொரு வரி பாட இப்பாடலில் அடித்தது சான்ஸ்.
பாடலின் இடையிசையில் ஒரிஜினல் பாடலுடன் வேறுபடுத்திக் காட்ட இப்பாடலில் மாற்றம் தந்திருப்பார் எம்.எஸ்.வி. இடையிசை கேட்டீர்களானால் ஒரு இடத்தில் அதாவது மாலி பூ தூவும் போது 'வரவு எட்டணா....செலவு பத்தணா' 'பாமா விஜயம்' படப் பாடலின் இடையிசையை அப்படியே ஞாபகப்படுத்தும்.:) ('அடங்கா மனைவி அடிமைப் புருஷன் குடும்பத்துக்ககாது' என்று டி.எம்.எஸ் பாடும் முன்பு வரும் இடையிசை யில் நான் சொன்ன மியூசிக் பிட் 4 தரம் ஒலிக்கும். அதே போல இப்பாடலிலும் கொஞ்சம் வலுவாக அதே 4 தரம் ஒலிக்கும். டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்... டட்டடன் டடடடைன்):)
http://i1087.photobucket.com/albums/..._000035889.jpghttp://i1087.photobucket.com/albums/..._000064857.jpg
பாடல் முடியும்போது இருவர் காரின் முன்னே ஓடி வந்து காஞ்சனா, ரவியை கழுத்தில் மாட்டியிருக்கும் கேமெரா மூலம் ஸ்டில் எடுப்பார்கள். அதில் பேன்ட் போட்டு படம் பிடிப்பவர் 'ஸ்டில்' சாரதி போலத் தெரிகிறது. ராகவேந்திரன் சாரும் இதை உறுதி செய்தார். (சாரதிதான் இந்தப் படத்திற்கு ஸ்டில் உதவி. லாங் ஷாட்டில் பார்த்தால் ஸ்ரீதர் போலவும் தெரியும்).
'உத்தரவின்றி உள்ளே.... வா' என்ற அனைவரின் உற்சாகக் கூக்குரல்களுடன் பாடல் முடியும்.
பட யூனிட்டே காமெடி படம் என்பதற்காக ஜாலியாக இப்பாடலை பொதுமக்கள் முன்னிலையில் ஜோவியலாக படமாக்கிருப்பார்கள். அதனால் இந்தப் பாடல் காட்சியும் ஒரு நிமிடங்கள் சில வினாடிகளே ஆனாலும் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டது. சரியான எண்ட்.
இன்னொன்று. இந்தக் காட்சியில் பாடல் ஆரம்பிக்கும்போது இரு பெண்குரல்கள் 'உத்தரவின்றி உள்ளே.... வா' என்று சேர்ந்து ஒலிக்கும். ஏற்கனவே இந்தப் பாடலை ஈஸ்வரி பாடியிருப்பதால் ஒரு குரல் அவருடையது. இன்னொரு பெண் குரல் சுசீலா அம்மாவா அல்லது டிராக் பாடும் வேறு பாடகியா என்பது தெரியவில்லை. சச்சுவும், ரமாபிரபாவும் பாடும்போது ஈஸ்வரியின் குரலிலேயே பாடுவார்கள். இரு பெண்குரல்கள் சேர்ந்து ஆரம்பத்தில் ஒலிக்கும்போதுதான் இன்னொருவர் யார் என்பதில் குழப்பம்.
இந்தப் பாடலை பாலா தொடரில் நான் சேர்க்கவில்லை. அதனால் இது நம் நண்பர்களுக்கு ஸ்பெஷல் போனஸ். குறிப்பாக மதுண்ணாவிற்கு. ஓ.கே.வா?
https://youtu.be/rePTD5ZeAZ8