https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fb&oe=599CF69B
Printable View
S V Ramani
· 28 mins ·
"அவர் ஒரு சரித்திரம்" -006
பிறந்ததிலிருந்தே தாய் தந்தையை அறிந்திராத ஒருவன் தன தாயைக் கண்டவுடன் உணர்ச்சிப் பெருக்கில் பாடும் ஒரு பாடல்.
"தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே" - தெய்வ மகன் படத்திலிருந்து. பாடலைப் பாடியவர் டி எம் சௌந்தரராஜன். இசை எம் எஸ் விஸ்வநாதன். இயற்றியவர் - கவியரசர். பாடலுக்கு உயிரூட்டியிருப்பவர் நடிகர் திலகம் அவர்கள்.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
இங்கு கண்டு கொண்டேன் அன்னையை என்று பாடும்பொழுது சிறிது நிறுத்தி, தான் கண்டது கனவா இல்லை நனவா என்ற திகைப்பையும் ஆச்சரியத்தையும் சில நொடிகளுக்குள் வெளிப்படுத்துகிறார் நடிகர் திலகம்.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
தெய்வமே, தெய்வமே ... ஹோ ... ஹோ
பாடலின் இடையே வசனங்களில் புறக்கணிப்பட்ட மகனின் உணர்ச்சிகளை வெளிக் கொணர்வது மிகவும் தத்ரூபம். TMS பாடல் வரிகளையும் சரி, வசனங்களையும் சரி, தேவையான ஏற்ற இறக்கங்களுடன் உச்சரித்திருக்கிறார்.
மஞ்சள் கொஞ்சும் மகாலட்சுமி என் தாய்
சந்தித்தேன் நேரிலே, பாசத்தின் தேரிலே
தெய்வமே, தெய்வமே
அந்த அழகுத் தெய்வத்தின் மகனா இவன் ஹா ...
தனது முகத்தை அருவருப்புடன் தடவிப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு வெறுப்புடன் அழும் காட்சி அனைவரையும் கலங்க வைத்து விடுகிறது.. சிவாஜி கணேசன் ஒருவாரால்தான் தனது இமேஜைப் பற்றி துளியும் கவலைப்படாமல் தனக்களித்த பாத்திரத்தை திறம்பட செய்வதில் முனைப்புடன் இருக்க முடியும்.
தன்னுடைய உடன்பிறந்த, அழகான தம்பியைக் கண்ட ஆனந்தத்தில், உணர்ச்சி பூர்வமாக
"முத்துப் போல என் தம்பி வந்தவுடன் முத்தம் சிந்த ஓடினேன்
ஓடினேன்......ஓடினேன்....
அட ராஜா என் தம்பி வாடா ..
அண்ணா...அண்ணா..
அண்ணா என ( ஒரு சிறு இடை வெளி) சொல்வான் என (மறுபடியும் இடைவெளி) உடன் பான்கோசின் ஆர்ப்பாட்டமான தாள நடை.
அண்ணா என சொல்வான் என பக்கம் பக்கம் சென்றேன்
(இப்போது சிறிது சுருதியைக் குறைத்து)
அண்ணா என சொல்வான் என பக்கம் பக்கம் சென்றேன்
தான் யார் என்று அறியாமால் தன தம்பி தன்னை தாக்கியதை எண்ணி
"குழந்தைக் கையை கடித்து விட்டது.. போடா போ"
நான்குவரிகளையும் திரு TMS வெவ்வேறு ஸ்தாயில் உணர்ச்சி பொங்க பாட, சிவாஜி அதற்கேற்ப பாவனைகளுடன் நடிக்க, மனம் சிறிது கனக்கிறது. குழந்தை கையைக் கடித்து விட்டது என்ற இடத்தில தலைவரின் முகபாவனையை பாருங்கள், என்ன ஒரு வாத்சல்யம் தென்படுகின்றது. கண நேரத்தில் எப்படி டக் டக் என்று இவரால் மட்டும் உணர்ச்சிகளை மாற்றி மாற்றி வெளிப்படுத்த முடிகின்றது!
தெய்வமே, தெய்வமே
தெய்வமே, தெய்வமே (இரண்டாம் முறை தெய்வமே, தெய்வமே எனும்போது சிறிது வித்தியாசமான நடை)
அன்னையைப் பார்த்த மகிழ்ச்சியில்
"அன்னையைப் பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
அன்னையைப் பார்த்தபின் என்ன வேண்டும் நெஞ்சமே
இன்று நான் பிள்ளை போலே மாற வேண்டும் கொஞ்சமே"
தாயின் மடி இது வரை கிடைக்காத தவிப்பை தாயின் மடிக்கு ஏங்குவதையும் சிவாஜி உணர்ச்சிபூர்வமாக வெளிப்படுத்துகிறார்.
தாய் , தந்தையில்லாமல் எதுவும் இல்லை என்பதை
"வேரில்லாமல் மரமா, மரமில்லாமல் கிளையா கிளையில்லாமல் கனியா, எல்லாம் ஒன்று|
தெய்வமே, தெய்வமே
தெய்வமே, தெய்வமே
கண்ணீரினில்... உண்டாவதே...
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
கண்ணீரினில் உண்டாவதே பாசம் என்னும் தோட்டம்
விதி என்னும் நதி ஒரு பக்கமாகவே ஓடுகிறது .. போடா போ..
தந்தையையும் பார்த்துவிட்ட மன நிறைவில்
தந்தையைப் பார்த்த பின் என்னவேண்டும் நெஞ்சமே
தர்மமே தந்தை தாயை காக்க வேண்டும் தெய்வமே
தனது குரூரமான தோற்றத்தினால் தன்னைப் புறக்கணித்து விட்டார்கள் என்ற வருத்தம் துளியும் இல்லாமால் அவர்கள் நலத்துடன் இருக்க வேண்டும் என்று வேண்டும் மகனது உள்ளம் தூய அன்பின் வெளிப்பாடு.
தெய்வமே, தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே
தேடினேன், தேடினேன், கண்டு கொண்டேன் அன்னையை
கண்டு கொண்டேன் அன்னையை
ஹோ ... ஓஹோ... ஹோ ... ஓஹோ...
பாடலின் இறுதியில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தனக்கு ஆதரவு அளித்த டாக்டர் மேஜரின் காலடியில் விழுந்து கதறும் காட்சி கண்டிப்பாக கல் மனதையும் கரைய வைக்கும்.
இந்தப் பாடலில் முதல் மகனாக வரும் சிவாஜி மிகவும் திறம்பட நடித்துள்ளார். இதுபோன்ற ஒரு சிறந்த நடிப்பை எவரிடமும் காண முடியாது. மூன்று பாத்திரங்களையும் திறம்பட செய்திருந்தாலும், இந்தப் பாத்திரம் அனைவரையும் கவர்ந்து விடுகின்றது. இறுதியில் அவர் இறக்கும் காட்சி, கல் மனதையும் கரைய வைத்து விடும்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...6c&oe=599E3BC6
Sekar Parasuram
· 1 hr ·
குழந்தைகளோடு "வீரபாண்டிய கட்டபொம்மன்" கண்டு தேச பக்தியை வளர்த்திடுவோம்,
இன்று இரவு 8 மணிக்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...fb&oe=599CF69B
http://i1110.photobucket.com/albums/...GEDC5780-1.jpg
Sekar Parasuram
· 5 hrs ·
நினைத்து உருகும் நடிகர் திலகம் திரைப்பட காதலக் காட்சிகள்!!
எத்தனையோ திரைப்படங்களில் காதலை சொல்லுகிற காட்சிகள் உண்டு, அதில் நடிக்கும் நடிகர்களும் உண்டு,
ஆனால் நடிகர் திலகம் நடிப்பினில் தான் அந்தக் காட்சிகள் உயிர் பெற்று மனதில் நிலைக்கும் காட்சியாக அமையும்,
நடிகர் திலகம் நடிப்பினிலே வந்த வண்ணக் காவியங்கள் " வசந்த மாளிகை, அவன் தான் மனிதன், தீபம்.
இதில் வசந்த மாளிகை முழுக் காதல் காவியம், காதல் வெற்றிப் பெற்றதாக பயணிக்கும் கதை, மற்ற இரண்டும் காதல் மலராமல் போகும் காட்சிகளைக் கொண்டது,
வசந்த மாளிகையின் சின்ன ஜமீன் ஆனந்த் துள்ளல் மணம் கொண்டவர், வானிலேயே பறந்து சகட்டு மேனிக்கு வாழ்க்கையை ரசித்தவருக்கு அழகான லதாவைக் கண்டவுடன் காதல் வயப்படுகிறார், அந்தக் காதலை சொல்லுகிற விதம, அதற்கான காட்சியமைப்பு அதற்கும மேல் நம் மனங்களை கொள்ளும் கொள்ளும் நடிப்பு, " ஆண்டவன் மட்டும் எனக்கு பறக்கும் சக்தியை கொடுத்து இருந்தால் ஆகாயத்திலே மின்னிக் கொண்டிருக்கும் அத்தனை நட்சத்திரங்களையும் பறித்து வந்து இங்கே தோரணங்களாய் கட்டி தொங்க விட்டிருப்பேன் என்ன செய்வேன் எனக்கு அந்த சக்தி இல்லையே! சக்தி இல்லையே". என்ற நடிகர் திலகம் வருந்துகிற போது நானெல்லாம் அந்த சக்தியை கொடுக்காத ஆண்டவனை திட்டோ திட்டென்று திட்டித் தீர்த்தேன்.
அதன்பின் லதாவை இருக்க கட்டியனைத்து " மயக்கம் என்ன இந்த மௌனம் என்ன " பாடல் வரை திட்டு இருக்கும்
"அவன் தான் மனிதன் " கோடீஸ்வரர் ரவிக்குமார் ஆனந்த பவனில் ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கிய படி ஆனந்தமாக இருப்பவருக்கு ஏற்கனவே வாழ்க்கையில் நடந்த அன்பான மனைவி குழந்தைப் பிரிவு போன்ற சொல்லில் அடங்கா துயரங்கள் இதயத்தின் அடிப் பகுதியில் இருந்தாலும் கூட தன்னிடம் பணியாற்றும் தன்னை பாஸ் என்று அழைத்து வரும் லலிதா மீது சூழ்நிலையினால் உருவாகும் காதல் அதை வெளிப்படையாக சொல்ல முடியாமல் கடிதம் மூலமாக தெரியபடுத்த வேண்டி படும் அவஸ்தை அந்த அவஸ்தை லலிதாவின் மனதில் சந்துரு நுழையும் வரை தொடர்வது கொடுமையிலும் கொடுமை, ஒரு வழியாக காதலை சொல்லத் துனியும் போது லலிதா குறுக்கிட்டு " சந்துருவைத் தானே சொல்லுரீங்க பாஸ்" என்றவுடன் ஏற்படும் ஏமாற்றத்தை கண்களிலும் கண்களின் புருவங்களில் காட்டும் நடிப்பு,
காதலில் அவசரப் படக் கூடாது என உணர்த்தினாரோ என்னவோ புரியவில்லை, நானெல்லாம் கூட விரும்பிய காதலை வெளிபடுத்த முடியாமல் காலம் தாழ்த்தி ஏமாந்த நினைவுகளை அசை போட அவன் தான் மனிதன் உதவுகிறது,
அடுத்த தீபம் முதலாளி ராஜாவிற்கு தனது தங்கையின் தோழியும் தனது ப்யூன் ராமையா மகளுமான ராதா மீது வரும் காதல், உண்மையான ராஜாவின் காதலைப் புரிந்து கொள்ள விரும்பாத ராதா வெறுமனே " இந்த முதலாளிகள் என்றாலே எனக்கு பிடிக்காது" எனக் கூறும் போது நம்மையெல்லாம் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுவார் இந்த ராதா ( அந்தக் காட்சியில் எதற்கு புன்னகை அரசியை போடாமல் இந்த கமுக்கமான மூஞ்சியைப் போட்டார்கள் என்ற ஆடியன்ஸ் முணுமுணுப்பு கேட்கும்)
எதேச்சையாக தனது தங்கையுடன் தனது பங்காளாவிற்கே தனது ராதா வருவதை கண்ட ராஜா பரவசமடையும் போது ராதாவுடன் தனியாக பேசிக்கொள்ளும் சூழ்நிலையும் அமையும் , என்னதான் செல்வந்தர் என்றாலும் கூட மனதில் குடி கொண்ட பெண்ணிடம் பேசும் போது சொதப்பலான பேச்சுக்கள் பீரிடும்,
ராஜா: அப்பா எங்க வீட்லதானே?
ராதா: ம்ம்
ராஜா: முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்றாலே வெளியில் போயிடுவேன், ஆனா இப்பயெல்லாம் ஆபிஸ் முடிஞ்சா வீடு, வீடு விட்டா ஆபிஸ்,
ராஜா: நீ பத்திரிகை படிக்கிறது உண்டா?
புயல்.. ஏதோ கரையைக் கடக்கிறதா, புயல், புயல் i mean what a call cyclone
இப்படி பேசிக்கொண்டே இருக்கையில் ராதா புறப்பட்டு விட ( இந்தக் காட்சியைத் தான் சமீபத்தில் வந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கௌதம் மேனன் கொஞ்சம் மாற்றி அமைத்து கை தட்டல் அள்ளிக் கொண்டார்) ராஜா
ஒரு வழியாக தனது ப்யூன் ராமையாவிடமே ராதாவை திருமணம் செய்ய விருப்பம் எனத் தெரிவிக்க பூரித்துப் போன ராமையாவும் தனது மகளின் சம்மதத்தை பெற முடியாமல் திரும்பி வந்து சொல்லும் போது
நடிகர் திலகம் தன் கண்களை மூடி சோகத்தை வெளிப்படுத்தும் நடிப்பை பாருங்கள் இணைப்பில் உள்ள படத்தை கவனிக்கவும்,
மூன்று திரைப்பபடங்களிலும் மூன்று விதமான காட்சிகள், ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பை மட்டும் எண்ணிக்கையால் பெற முடியவில்லை..
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...bb&oe=59A2B965
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8d&oe=59D9BA87
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...d1&oe=59D7A4C1
இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்***
சன் லைப்-- 11am -- இரு மேதைகள்,
பொதிகை-- 3 pm-- கலாட்டா கல்யாணம்,
முரசு டிவி-- 7:30 pm -- வாழ்க்கை,...
ராஜ் டிஜிட்டல் -- 8 pm -- வீரபாண்டிய கட்டபொம்மன்,
ஜெயா மூவி-- 10 pm-- முதல் தேதி,
பொதிகை-- 11pm-- கலாட்டா கல்யாணம்
http://www.nadigarthilagam.com/paper.../galatta75.jpg
S V Ramani
· 1 min
அவர் ஒரு சரித்திரம் - 007.
அன்புள்ள நடிகர் திலகத்தின் பக்தர்களுக்கு, நமது தலைவர் தேசத் தலைவர்கள், கடவுளர்கள் மட்டுமல்ல, மூதறிஞர்களையும் நம் கண்முன் நிறுத்தி சென்றிருக்கிறார். நாம் பார்த்தேயிராத சாக்ரடீஸை நம் கண்முன் வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்றே சொல்லலாம். கலைஞர் வசனங்கள் அனல் பறப்பவையாக இருக்கலாம். ஆனால் அதை மற்றவர்களாயிருந்தால் உரக்க முழக்கமிட்டு பொரிந்து தள்ளியிருப்பார்கள். மூதறிஞர் சாக்ரடீஸ் அல்லவா! என்னவொரு தெளிவுடனும், உறுதியுடனும் தமது சிந்தனைகளை இளைஞர்களுக்கு வழங்குகிறார் பாருங்கள். அத்துடன் அவரது முகபாவனைகள், வயதும், அனுபவமும் கூடிய ஒரு அறிஞரால்தான் இவ்வாறு முகபாவங்கள் காட்ட முடியும். நமது திலகம் அதை எவ்வளவு அனாயசமாக காட்டுகிறார் பாருங்கள்.
முதலில் அவர் தோன்றும்போது அவர் நிற்கும் நிலையைப் பாருங்கள். (அதெல்லாம் தானா வரணும்)
சாக்ரடீஸ்: உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய்!!
கிரேக்கத்தின் கீர்த்தி புவனம் அறியாததல்ல, அதற்காக இங்கே விழுந்திருக்கும் கீறல்களை மறைத்திட முயலுவது புண்ணுக்கு புனுகு தடவு வேலையை போன்றது
அதனால் தான் தோழர்களே சிந்திக்க கற்றுகொள்ளுங்கள் என்று சிரம் தாழ்த்தி உங்களை அழைக்கிறேன் அறிவு அறிவு அகிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அதை தேடி பெறுவதற்காக உங்களை அழைக்கிறேன், உன்னையே நீ அறிவாய்!! இந்த உபதேசத்தின் உண்மைகளை உணர்வதர்க்காகத்தான் என் உயிரினும் இனியவர்களே உங்களையெல்லாம் அழைக்கிறேன்
ஏற்றமிகு ஏதன்சு நகர எழில்மிக்க வாலிபர்களே!
நாற்றமெடுத்த சமுதாயத்தில் நறுமணம் கமிழ்விக்க இதோ சாக்ரடீஸ் அழைக்கிறேன் ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! வீரம் விலை போகாது விவேகம் துணைக்கு வராவிட்டால் தீட்டிய வாளும் தினவெடுத்த தோள்களிலே தூக்கிய ஈட்டியும் மாத்திரம் போதாது தீரர்களே. இதோ நான் தரும் அறிவாயுதத்தையும் எடுத்து கொள்ளுங்கள்
அறிவாயுதம்! அறிவாயுதம்! அகிலத்தின் அணையாத ஜோதி
மெலிடஸ்: ஹஹ ஹஹ.. அறிவாயுதமாம் அனைத்துலகும் அடிபணியும் அஸ்திரமாம்
குமுறும் எரிமலை கொந்தளிக்கும் கடல் அவைகளை விட பயங்கரமானவன் சாக்ரடீஸ். அவன் தரும் அறிவாயுதம் கிரேக்கத்திலே தயாரகுமானால் நாமெல்லாம் தலை தூக்கவே முடியாது. அனிடஸ், என்ன சொல்கிறீர்?
அனிடஸ்: மெலிடஸ் நாம் கீறிய கோட்டை தாண்டாத இந்த கிரேக்க மக்களுக்கு அந்த கிழவன் அறிவுக்கண் வழங்குவதற்குள் அவனை நாம் அழித்துவிட வேண்டும்
மெலிடஸ்: ஆமாம் அது தான் சரி. சாக்ரடீஸ் நீ கைது செய்யப்படுகிறாய் ம்..
இரண்டாம் காட்சி
மெலிடஸ்:-சாக்ரடீஸ்-அனிடஸ்
அனிடஸ்: சாக்ரடீஸ் நாட்டிலே நடமாடக்குடாத ஒரு ஆத்மா. ஜனநாயக அரசாங்கத்தை குறைகூறும் அந்த ஜந்து உடல் முழுதும் விஷம் கொண்டது. கேட்டார் பிணிக்கும் சொற்களால் கேளாரும் வேட்பமொழி வார்த்தைகளால் கேடு விளையும் கருத்துக்களை அள்ளி வழங்கி அரசாங்கத்துக்கு விரோதமாக ஆண்டவனுக்கு விரோதமாக சட்டத்துக்கு விரோதமாக இளைஞர்களை தூண்டிவிடும் இழிகுண கிழவன்
சாக்ரடீஸ்: ம்ம்ம்ம்....
நீதிபதி: என்ன சிரிப்பு!! என்ன காரணம்!!
சாக்ரடீஸ்: ஒன்றுமில்லை தலைவா ஒன்றுமில்லை
ஆத்திரத்திலே அணிடஸ் தன்னை மறந்து என்னை பார்த்து கிழவன் என்று கேலி செய்கிறான் ம்ம்ம்ம் கேலி செய்கிறான் ம்ம்ம் அதை நினைத்தேன் சிரித்தேன் கடல் நுரை போல் நரைத்துவிட்ட தலை எனக்கும் அனிடசுக்கும் இல்லையா சபையோர்களே? என்ன அனிடஸ் உண்மை தானே?
மெலிடஸ்:சாக்ரடீஸ் வழக்கும் விசாரணையும் உங்கள் இருவரின் தலையை பற்றியல்ல அதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்
சாக்ரடீஸ்: ம்ம்ம்ம் மிகவும் நன்றி மெலிடஸ் மிகவும் நன்றி. ஆனால் ஒன்று எண்சாண் உடம்புக்கு தலையே பிரதானம் போல் இந்த வழக்கிற்கும் தலை தான் பிரதானம்
என் தலையிலே இருந்து சுடர்விட்டு கிளம்பும் அறிவு. அதை அழிக்க கவிஞனாகிய உன் தலையிலே இருந்து புறப்படும் அர்த்தமற்ற கற்பனைகள் அரசியல்வாதி அனிடஸின் தலையிலே இருந்து பீறிட்டெழும் அதிகார ஆணவம். இந்த மூன்றுக்கும் இடையே நடக்கும் மும்முனை போராட்டம் அதன் விளைவு தான் மெலிடஸ் இந்த வழக்கு
மெலிடஸ்: பார்த்தீர்களா!! சட்டத்தையும் சபையையும் அவமதிக்கிறான். இப்படித்தான் இளைஞர்களையெல்லாம் கெடுத்தான்
சாக்ரடீஸ்: ஒரு கிழவன் எப்படியப்பா இளைஞர்களை கெடுக்க முடியும். நான் என்ன வாலிபருக்கு வலைவீசும் விலைமாதா. பருவ விருந்தளிக்கும் பாவையா
மெலிடஸ்: ம் மாதரிடமில்லாத மயக்குமொழி. வாலிபர்க்கு வலைவீசும் வனிதையரும் பெற்றிடாத வசீகர சொல்லலங்காரம் வார்த்தை ஜாலம் அடுக்கு தொடர் இப்படி பல மாயங்கள் கற்றவர் நீர்
சாக்ரடீஸ்: மந்திரவாதி என்றுகூட சொல்வாய். அன்புள்ள இளைஞனே ஏதன்சு நகரிலே நான் ஒருவன் மட்டும் தான் இளைஞர்களை கெடுக்கிறேன் அப்படித்தானே
மெலிடஸ்: ஆமாம்
சாக்ரடீஸ்: நீ கெடுக்கவில்லை
மெலிடஸ்: இல்லை
சாக்ரடீஸ்: அனிடஸ்
மெலிடஸ்: இல்லை
சாக்ரடீஸ்: டித்திலைகன்
மெலிடஸ்: இல்லை
சாக்ரடீஸ்: இந்த நீதிபதி
மெலிடஸ்: இல்லை
சாக்ரடீஸ்: யாருமே இளைஞர்களை கெடுக்கவில்லை எல்லோருமே இளைஞர்களுக்கு நன்மையே செய்கிறார்கள் என்னை தவிரஅப்படித்தானே
மெலிடஸ்: ஆமாம் ஆமாம்
சாக்ரடீஸ்: ஹஹஹா அத்தனை பேரும் ஏன் ஏதன்சு நகரமே இளைஞர்களை திருத்தும்போது நான் ஒருவன் எப்படியப்பா அவர்களுடைய பாதையை திருப்ப முடியும்?
அனிடஸ்: ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
சாக்ரடீஸ்: ஏன் இப்படியும் சொல்லலாமே இருண்ட வீட்டிற்க்கு ஒரு விளக்கு. என்ன மெலிடஸ் திகைக்கிறாய். சபையோர்களே வாலிபர்கள் என்னைச்சுற்றி வானம்பாடிகள் போல் வட்டமிட காரணம் என்னுடைய வார்த்தை அலங்காரமல்ல வளம் குறையா கருத்துக்கள் தரம் குறையா கொள்கைகள் இந்த தரணிக்கு தேவையான தங்கம்நிகர் எண்ணங்கள் ம்ம்ம்ம்.... அழகுமொழியால் அலங்கார அடுக்குகளால் அரும்பு உள்ளங்களை மயக்குகிறேன் என்று சொல்கிறார்களே அவர்களை நான் கேட்கிறேன்!
அந்த மொழி எனக்குமட்டும் சொந்தமல்லவே. அவர்கள் அதை பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையாதே. பேசிப்பார்க்கட்டுமே அவர்களும் ஆம் பேசித் தோற்றவர்கள் ம் பேசி தோற்றவர்கள்
நீதிபதி: சாக்ரடீஸ் பேச்சை நிறுத்து விளக்கம் தேவையில்லை. இந்த நீதிமன்றத்தின் அதிகப்படியான உறுப்பினர்களின் வாக்களிப்பின்படி நீர் விஷம் சாப்பிட்டு மரணதண்டனைக்கு ஆளாக வேண்டுமென்று தீர்ப்பளிக்கிறேன்
மூன்றாம் காட்சி
சாக்ரடீஸ்: பார்த்தாயா பயனற்ற தத்துவ விசாரணையில் காலத்தை கழிக்கிறேன். வீண் வாதம் புரிந்து தொல்லை படுகிறேன் என்றெல்லாம் கோபித்து கொண்டாயே
இப்போது பார் உனது கணவன் அகிலம் புகழும் வீரனாக, தேசம் புகழும் தியாகியாக மாறிவிட்டான். அன்புள்ள எக்ஸ்சேந்துபி நீ மிகவும் பாக்கியசாலி
பணபலம் படைபலம் அத்தனை பலத்தையும் எதிர்த்து நின்று யாருக்குமே பணியாத பெருமையோடு கடைசியாக விழிகளை மூடப்போகும் இந்த கர்ம வீரனுக்கு நீ மனைவி ஹஹஹா.... குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள். அவர்கள் பெரியவர்களாக மாறியதும் நேர்மை தவறி நடப்பார்களேயானால் நான் உங்களை திருத்த முயன்றதுபோலவே நீங்களும் அவர்களை திருத்த முயலுங்கள். நேரமாகிறது காவலர்கள் கோபிப்பார்கள் நீ போய் வா. கிரீடோ இவர்களை அனுப்பி வை
கிரீடோ உனக்கு தெரியுமல்லவா இன்றோடு முப்பதுநாள் சிறைவாசம் முடிந்து நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விஷம் சாப்பிட்டு சாக வேண்டிய நாள் இதுதான்
கிரீடோ: அருமை நண்பா
சாக்ரடீஸ்: அழாதே அதோ வந்துவிட்டது அமுதம். சிறைக்காவலா இதை என்ன செய்யவேண்டும் முறைகளை சொல்
சிறைக்காவலன்: பெரியவரே விஷத்தை முழுவதும் குடிக்க வேண்டும். பிறகு இங்குமங்கும் நடந்துகொண்டே இருக்க வேண்டும். கால்கள் மரத்து போகும் வரையிலே அப்படியே நடக்க வேண்டும். பிறகு உட்காரலாம் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு ஜில்லிட்டு கொண்டே வரும் பிறகு படுத்துவிட்டால்
சாக்ரடீஸ்: ஆனந்தமான நித்திரை, கனவுமங்கையாலும் கலைக்க முடியாத நித்திரை. சிறைக்காவலா கொடு இப்படி
கிரீடோ: நண்பா சிறிது நேரம் பொறுத்துக்கூட சாப்பிடலாம். சிறைச்சாலையிலே அதற்க்கு அனுமதி உண்டு
சாக்ரடீஸ்:. ம்ம்ம் கிரீடோ கிரீடோ நட்பு மிக மிக அற்பாசை மிக மிக அற்பாசை . இந்த விஷத்தை நான் இரண்டு நாழிகை கழித்து சாப்பிடுவதாக வைத்து கொள்
அதற்குள் என் இருதயம் வெடித்து நான் இறந்தது விட்டால் பிறகு கிரேக்க நாட்டு நீதிமன்றத்தின் தண்டனையை யார் நிறைவேற்றுவது?. புதிய சாக்ரடீஸா பிறந்து வரப்போகிறான் கூடாது கூடாது. இப்போதே சாப்பிட்டு விடுகிறேன். கிரீடோ இந்த விஷம் அழிக்கப்போவது என்னையல்ல இந்த உடலைத்தான்
கிரீடோ: ஏதன்சின் எழுச்சிமிக்க சிங்கமே எங்கள் தங்கமே கிரேக்க பெரியாரே. உம்மையும் எம்மையும் இந்த விஷம் பிரிக்கபோகிறதா ஐயகோ நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறதே. நண்பா எனக்கு கடைசியாக ஏதாவது சொல்லு
சாக்ரடீஸ்: புதிதாக என்ன சொல்லப்போகிறேன். உன்னையே நீ எண்ணி பார்!. எதையும் எதற்க்காக? ஏன்? எப்படி? என்று கேள். அப்படி கேட்டதால்தான் இந்த சிலைவடிக்கும் இந்த சிற்பி சிந்த்தனை சிற்பியாக மாறினேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று நம்பி அறிவிழந்து தடுமாற்றம் அடைய வேண்டாம். எவர் சொன்ன சொல்லானாலும் அதனை உந்தன் இயல்பான பகுத்தறிவால் எண்ணிப்பார்பாய். அதைத்தான் உனக்கும் இந்த நாட்டுக்கும் நான் சொல்ல விரும்புவது. விஷம் அழைக்கிறது என்னை
இந்தக்கிழவன் கிரேக்க நாட்டு இளைஞர்களை கெடுத்ததாக யாராவது உண்மையாக உளமாற நம்பினால் அவர்கள் என்னை மன்னிக்கட்டும் அவர்கள் என்னை மன்னிக்கட்டும்
வருகிறேன் வணக்கம்! ஏ ஜகமே! சிந்திக்க தவறாதே!
உன்னையே நீ அறிவாய்!! உன்னையே நீ அறிவாய் வருகிறேன்
நீதிமன்றத்தில் அவரது எதற்கும் அஞ்சாத தோற்றம், அறிவார்ந்த விவாதங்கள், அத்தனையிலும் நடிகர் திலகம் தான் பிறவி நடிகன் என்பதை நிரூபிக்கிறார். கடைசியாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையை நெஞ்சில் வைத்திருக்கும் பாவனையைப் பாருங்கள். எங்கிருந்து வந்தது இந்த உத்தி? அவர் விஷம் அருந்த செல்லும்போது பதறுவது கலைவாணர் மட்டுமல்ல, நாமும்தான். ஒன்றிவிடுகிறோம் அவரது நடிப்பில்.
ஜெய் ஹிந்த்!
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...4c&oe=59A252B0
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...7f&oe=59A61DBB
Sundar Rajan
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...30&oe=59A43BF0
Sundar Rajan
அன்பு இதயங்களே,
ஒரு புது படத்தை
ஒரு வருடமாக எடுத்து
ஓரிரு நாள் அல்ல
ஓரிரு காட்சிகள் ...
ஓடுமா
என்ற சந்தேகம் உள்ள நிலையில்
44 ஆண்டுகளுக்கு
முன் வந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம்,
அதில் நடித்தவர் மண்ணை விட்டு மறைந்து
16 வருடம் ஆன நிலையில்
இன்றைய நவீன் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்
வெளிவந்து 25வது நாள் வெற்றிவிழா காண்கிறது
என்றால்,
இன்றும் மக்கள்தலைவர் சிவாஜி அவர்கள்
தமிழக மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
என்று தானே பொருள்.
அன்றும் இன்றும் என்றும்
கலையுலகின் அசைக்க முடியா சக்தி
நடிகர்திலகத்தின் ராஜபார்ட் ரங்கதுரை 25வது நாள்
வெற்றி விழாவில் அனைவரும் கலந்து
வெற்றிவிழாவினை மாநாடாக மாற்ற
அன்புடன் அழைக்கிறேன்.