அகிலாண்டேஸ்வரி சாமுண்டேஸ்வரி பாலயமாம் கெளரி பரி பாலயமாம் கெளரி..
சபிதா தன் அன்னையின் கிராமத்தில் ஆட குடும்பமே பார்க்கின்றது அந்த ஆடலுடன் கூடிய அழகிய கானத்தை..
http://www.youtube.com/watch?feature...&v=RBIG7W5UI3k
Printable View
அகிலாண்டேஸ்வரி சாமுண்டேஸ்வரி பாலயமாம் கெளரி பரி பாலயமாம் கெளரி..
சபிதா தன் அன்னையின் கிராமத்தில் ஆட குடும்பமே பார்க்கின்றது அந்த ஆடலுடன் கூடிய அழகிய கானத்தை..
http://www.youtube.com/watch?feature...&v=RBIG7W5UI3k
கோவில்.. வேதகோஷம்.. ஆடல் சபிதா..அம்பாள்.. தாத்தாவின் முடிவு…
http://www.youtube.com/watch?feature...&v=BYUfQ3BNDiE
மனக்குழப்பத்தில் மயில் ஆடினால் அந்த ஆட்டத்தில் மின்னல் மட்டுமா வரும்..மனமும் ஆடிவிடுமே.. கோவிலில் சுழன்றாடும் சபிதா.. அவளை டோலாயாம் ..இசைத்து ஒடுக்கும் புல்லாங்குழல் இசை…
http://www.youtube.com/watch?feature...&v=OQjBVMqyRYI
ஒரு சந்தர்ப்பத்தில் தான் வேறு குலம் என முரளிகுழம்புகிறான்..இந்த சபிதாப் பெண் இருக்கிறதே அவனை சமாதானப் படுத்திப் பாடும் பாடல்..”..மரு கேலரா ஓராகவா…
ஓ ராமா
நீ ஏன் உன்னைமறைத்துக் கொள்கிறாய்
பிரபஞ்சமே உன்னுடைய வடிவம்
சூரிய சந்திரர்கள் உனது விழிகள்
வெகு ஆழ்ந்த அலசலுக்குப் பின்
நான் உன்னையே எல்லாம் என ஆக்கிவிட்டேன்..
எல்லாமும் உன்னிடத்திலேயே அடக்கம்..
உன்னைத் தவிர வேறுஎந்தக் கடவுளும்
என் சிந்தையினுள் இல்லை..
நீயே என்னைப் பாதுகாப்பாயாக..
http://www.youtube.com/watch?v=CX4kT...yer_detailpage
இன்னொரு காதற்பாடல்
ரேபள்ளிய எத ஜள்ளுன பொங்கின ரரளி
நவரச முரளி..ஆனந்தன முரளி.. இதேனா ஆ முரளி
மோஹனமுரளி..
வேணுகான லோஹினி முனி பிஞ்சின ரவளி
நடனல சரளி ஆனந்தன முரளி…இதேனா ஆ முரளி..
பாடியவாறே அவளது – அவன் ஆராதிக்கும் பொற்கால்களுக்கு முரளியின் நீரபிஷேகம்.. வெகு அழகு…
http://www.youtube.com/watch?feature...&v=UXN8-m_4X98
எங்கிருந்தாலும் என்றைக்கும் இந்த ஊர்வம்பு இருக்கிறதே இருந்து கொண்டு தானிருக்கும்.. இங்கும் அப்படித் தான்.. அந்த கோவில் பெரிய மனிதர் வீட்டு மாட்டுப்பொண் இருக்காளோன்னோ.. என்னா கர்வம்.. என்னா கர்வம்..பெரிய நாட்டியக் காரியோல்லியோ .. பாரேன் அவ நடையே ஒரு நாட்டியம் போல இருக்கே…
சோர்ந்து தண்ணீரெடுக்கச் செல்லும் சபிதாவும் அந்தக் கிராமத்துப் பெண்களின் கண்களில் நாட்டியமாடிச் செல்வது போலத் தெரிகிறாள்..
பாமனே சத்ய பாமனே..
http://www.youtube.com/watch?feature...&v=2uO0KhuSlzQ
இன்னுமொரு பாடல் இருக்கிறது..அது இங்கே தரவில்லை..
அவ்வளவு தான்.. அப்புறம் வரட்டா..
நண்பர் சி கே
வணக்கம்
சப்தபதி பாக்யராஜ் இன் 'அந்த 7 நாட்கள் ' போன்ற கதை . இதை பற்றி விகடன் இதழில் பாக்யராஜ் எழுதியது உண்டு. தமிழ் பெற்ற வெற்றியை சப்தபதி தெலுங்கு திரைப்படம் பெற தவறியது. அதற்கு காரணம் கிளைமாக்ஸ் தான்
க்ருஷ்ணா ஜி.. இது சங்கராபரணத்திற்கு அடுத்த படம் என நினைவு.. நிறைய தடவைபார்த்து ரசித்த படம்.. அ.ஏ நாட்கள் வேறு விதம்..
அதற்கு அந்த க்ளைமேக்ஸ் சரி..
உண்மை சி கே
1981 இல் வெளிவந்த படம் சப்தபதி . அருமையான பாடல்கள் நிறைந்த படம். படம் வெளிவருவதற்கு முன் இன்னொரு சிரி சிரி முவ்வா,சங்கராபரணம் என்று தெலுங்கு திரை உலகம் கொண்டாடிய திரை படம். ஆனால் படம் தோல்வியை தழுவியது .அதற்கு கே விஸ்வநாத் சொன்ன விளக்கம் இது .'நமது கலாசாரம் ஏற்று கொள்ளாத முடிவு. அந்த 7 நாட்கள் திரைபடத்தின் வெற்றிக்கு காரணமே அதன் கிளைமாக்ஸ் தான் . நான் கிளைமாக்ஸ் இல் ரவிகாந்தையும் ,சபிதாவையும் பிரித்து முரளியுடன் சேர்த்தேன் . அந்த முடிவு ரசிகர்களால் ஏற்றுகொள்ள படவில்லை. ஆனால் திரு கே பாக்யராஜ் அவர்கள் வசந்தியை மாதவன் நாயர் உடன் சேர்க்காமல் டாக்டர் ஆனந்த உடனே சேர்ந்து வாழ வைத்து விட்டார் . நமது பண்பாடு என்பது அதுதான். ஏற்கனவே திருமணம் முடிந்த சபிதாவை அவளது கணவனே சபிதாவின் காதலினிடம் சேர்பிபது இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்றது அல்ல ' என்பதை இந்த திரைப்படம் வெற்றி பெறாததின் போது புரிந்து கொண்டேன். சாவி இதழில் இது சம்பந்தமாக ஒரு கட்டுரை ராணி மைந்தன் அல்லது பாரி வள்ளல் எழுதுதியதாக ஞாபகம் சி கே.
இரண்டுமே 1981 ரிலீஸ்.ஆனால் சப்தபதி தேசிய விருது வாங்கியதாக நினைவு
இன்று காலை மின் அஞ்சலில் இந்தியன் வங்கி ஊழியர திரு எஸ் வீ வேணுகோபால் அவர்கள் அனுப்பிய கட்டுரை.
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
எஸ் வி வேணுகோபாலன்
சில நாட்களுக்குமுன் மவுண்ட் ரயில் நிலையத்தில் கடற்கரை போகும் ரயிலுக்காகக் காத்திருக்கையில், திரை இசை தவழ்ந்தபடி வந்து என்னைத் தொட திரும்பிப் பார்த்தால் அன்பர் ஒருவரது அலைபேசியிலிருந்து ததும்பி வழிந்து கொண்டிருந்த சங்கீதம் அது. அவர் எந்தப் பெட்டியில் ஏறினாரோ அவரைத் தொடர்ந்து பின்சென்றால், காலையிலேயே அண்ணன் முழு 'ஜே'யில் இருந்தார். நிற்க மாட்டாமல் தள்ளாடியபடி இருந்தாலும் பாடலில் 'ஸ்டெடி'யாக இருந்தார். அவரது பாக்கெட்டில் இருந்து, "அமைதியான நதியினிலே ஓடும், ஓடம், அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்..." என்று இசைத்த கீதத்தில் நானும் முழுக்க 'ஜே'யாகிக் கரைந்து போனேன். அதுதான் இசையின் வல்லமை.
ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், 'இனிமை நிறைந்த உலகம் இருக்கு....' என்ற எல் ஆர் ஈஸ்வரி (நினைத்தாலே இனிக்கும்) பாடலை ஒரு சிறுமி பாடியதும், பாடகர் மனோ சொன்னார்: "யாராவது பணத்தை பிக் பாக்கெட் கிட்ட ஏமாந்து உட்கார்ந்திருக்கும்போது அவர் இந்தப் பாடலைக் கேட்டாருன்னா, சரி, பணம் போனால் போகட்டும்னு அப்படியே கவலை மறந்து போய்க் கொண்டிருப்பார்' என்றார்.
இறைவனைக் கிறங்கச் செய்ய ஆழ்வார்களும், நாயன்மார்களும் இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்றுதான் பாடிக் கொண்டிருந்தனர். தேவாலயங்களில், உபதேசங்களின் சீரான இடைவெளியில் சங்கீதம் மிதந்து கொண்டே இருக்கிறது. நான்கு வேதங்களில் ஒன்றான சாம வேதம் முழுக்க இசைப் பாடல்களால் ஆனது என்று சொல்லப்படுகிறது. இஸ்லாமியர் வழிபாடுகளின்போது ஓதப்படும் சொற்களின் இசைக்கட்டு, தாளகதி கவனத்தை இழுப்பது.
காட்டு மூங்கிலில் வண்டு துளை செய்துவைத்து காற்றை அழைத்து வந்து நுழைய வைத்தபோது பிறந்திருக்கலாம் உலகின் ஆதி புல்லாங்குழல். சில்வண்டுகளின் ரீங்காரத்தில் அதற்குமுன் அரங்கேறியிருக்கக் கூடும் ஒரு நட்சத்திர இசை இரவு. உயிர் தோன்றியபோது இசை அதற்குமுன்னே பிறந்து காத்திருந்திருக்க இந்த பிரபஞ்ச வெளியில் சான்றாதாரங்கள் இருக்கவே செய்யும். இயற்கையின் செல்லக் குழந்தை இசை. ஓவியத்தின் மூத்த சகோதரன் அல்லது பேச்சு மொழியின் முப்பாட்டனுக்கு முப்பாட்டனுக்கு.... வேண்டாம்....இசைக்கு வயது கிடையாது. அது கேட்பவரின் வயதையே குறைத்து விடும்போது அதற்கு ஒரு முதுமையான அடையாளம் எதற்கு?
வேளாண்மை இசையின் தாலாட்டில் விளையும் பயிர். எந்திரங்களோடு சமர் புரியும் பாட்டாளியின் உடல் அசைவுகளுக்கிடையே அவனை உயிர்ப்போடு வைத்திருப்பது இசை. இசை மனிதர்களுக்கு வாய்த்த வரம். மனிதர்கள் இசையை வளர்ப்பதில்லை. இசையைப் போற்றித் தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றனர்.
கம்பரைப் பற்றி கால காலமாகச் சொல்லப்பட்டு வரும் செவி வழி கதை ஒன்று உண்டு. வயல்வெளியில் ஓய்வாக அவர் உட்கார்ந்திருக்கும்போது, ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த விவசாயி மூங்கில் இலை மேலே.....மூங்கில் இலை மேலே....தூங்கும்...தூங்கும்..." என்று பாடியபடி வேலையில் இருந்தானாம். கம்பருக்கோ, அடுத்த வரியை அறிந்துகொள்ள ஆவல்...மூங்கில் இலைமீது யார் தூங்குவார் என்று ஒரே குழப்பம். சிறிது நேரம் பொறுத்து, அந்த உழைப்பாளி, மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே என்று ராகம் இழைத்தானாம். அடடா...தெரியாமல் போயிற்றே என்று நினைத்தாராம் கம்பர். அதோடு போயிற்றா...விவசாயி அடுத்த அடியை எடுத்தார், 'தூங்கும் பனி நீரை....வாங்கும்...வாங்கும்...' என்று! விவசாயி சாப்பாட்டுக்கு இறங்கிவிட்டார்....கம்பர் செருக்கழிந்து காத்திருந்தாராம், அந்த நீரை யார் வாங்குவார்...என்று! பின்னர் உணவு, ஓய்வு எல்லாம் முடிந்து ஏற்றம் இறைப்பு தொடர்கையில், வாங்கும் கதிரோனே என்று அடுத்த அடிமுடிந்ததாம்.
மூங்கில் இலைமேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
இசையை, தேர்ந்த சொற்கள் சென்று தழுவிக் கொள்ளும்போது இசையின் இன்பம் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது அல்லவா...அது செவ்வியல் இசை எனப்படும் மேல் தட்டு இசையாகத் தான் இருக்கவேண்டும் என்றில்லை. திரை இசை, மெல்லிசை, கானாப் பாடல்..என எந்த இசை வடிவமாகவும் இருக்கலாம். இசைக்கு இலக்கணம் கேட்பவரின் உளவியலைப் பொறுத்தது. அதன்மீது தீர்ப்பளிக்க மற்றவர்களுக்கு இடம் ஏது ?
இன்றும் கால்கள் வேகமாக நடந்தாலும் காதுகளின் வழியே கம்பிகளின் பாதையில் இசை நதி வேகமாக இறங்கிக் கொண்டிருப்பதை நகர வாழ்க்கையின் அசுர ஓட்டத்தில்கூடக் காண முடிகிறது. எதைக் கேட்டாலும் காதில் விழாத கொடுமையும் நடக்கிறது. விபத்துகளிலும் போய்முடிகிறது. அது தனியே கவலையோடு பேச வேண்டிய விஷயம். இசை மனிதரைக் கட்டி ஆள்கிறது. சம காலத்தில் எந்த விதத்தில் பட்ட புண்களின்மீதும் இதமான களிம்பு பூசுகிறது இசை.
சிந்து பைரவி திரைப்படத்தில் உச்ச கட்ட காட்சிக்குமுன் இடம்பெறும் 'கலைவாணியே' என்ற அருமையான (ஜேசுதாஸ்) பாடலின் இடையே வயலின் கருவி பிழிந்து கொடுக்கும் இசையில் தாயும், மகளுமாக பரிமாறிக் கொள்ளும் பார்வையில் நழுவும் உளவியல் செய்தி பரிமாற்றம் இசையின் அருளன்றி வேறென்ன?
ரோஜா திரைப்படத்தின் காதல் ரோஜாவே (எஸ் பி பாலசுப்பிரமணியன்) என்ற உருக்கமான பாடலின் இசைத்துண்டுகளுக்கிடையே இளம் தம்பதியினரின் ஏக்கமும், பிரிவின் துயரமும், நெருக்கடியும் எத்தனை காத்திரமாக பரிமாறப்படும்?
கொண்டாட்டமும், திண்டாட்டமும், அதிர்ச்சியும், மலர்ச்சியும் இசையின்வழி செய்யும் பயணம் மனிதர்களுக்கு அவர் அறிந்த மொழிகளோடு கூடுதலாக வாய்க்கிற இன்னொரு மொழி!
எத்தனையோ காதல் பாடல்கள் கேட்டிருந்தாலும், ஒவ்வொரு புதிய பாடலும் உள்ளத்தைக் கிளர்த்தத் தானே செய்கிறது. ஷாஜஹான் எழுதியிருக்கும் 'அமுத மழையில் என் கவிதை நனைகிறது, நிலவே கொஞ்சம் குடை பிடி...' என்ற பாடலை நமது முற்போக்குப் பாடகர் கரிசல் குயில் கிருஷ்ணசாமி குழைத்து உருக்கி வார்க்கும்போது கலை இரவு மேடை அசந்து போக வைப்பதில்லையா...வைகறை கோவிந்தனின் சாரட்டு...சாரட்டு குரலிசை கேட்பவரையும் அந்த வண்டியில் ஏற்றிக் கொண்டு பரப்பதில்லையா...
'கருத்தம்மா'வின் போறாளே பொன்னுத்தாயி...(வைரமுத்து) சொர்ணலதாவின் குரலில் சாகாவரம் பெற்றது போலவே, வையம்பட்டி முத்துசாமி எழுதிய, 'பொண்ணு பொறக்குமா...இல்ல ஆணு பொறக்குமா' பாடலை முற்போக்கு ரசிக உள்ளங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கை மாற்றிக் கொடுத்துச் செல்லும் அல்லவா...
இசைப்பாடல் சோர்வுற்ற உள்ளத்தை மடியில் சாய்த்து ஆற்றுப் படுத்துகிறது. ஆர்வமிக்க இதயத்தை வானூர்தியில் ஏற்றிப் பறக்கவிடுகிறது. தவிப்பில் துடிக்கும் பருவத்தை இலேசாக்கி மிதக்க வைக்கிறது. பெற்றோர் வசவுகளால் காயப்பட்ட பேரக்குழந்தையை ரகசியமாக அழைத்து, கருப்பட்டி கொடுத்துக் கட்டி அணைக்கும் பாட்டியைப் போல் நொந்த மனங்கள் நொறுங்காது பார்த்துக் கொள்கிறது இசை.
இசைக் கருவி எது என்பது முக்கியமில்லை, இசையே கருவியாகிறபோது! 'மின்சாரக் கண்ணா' என்று நித்யஸ்ரீ (படையப்பா) இழைக்கையில் அதிரும் மிருதங்கம் போலவே, 'சிங்கார வேலனே தேவா...' என்று ஜானகி (கொஞ்சும் சலங்கை) குழைக்கையில் கலக்கும் நாதசுரம்-தவில் போலவே, வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா என எஸ் பி பி நெகிழ்த்துகையில் (பட்டின பிரவேசம்) இழையும் வயலின் போலவே, உயிரே உயிரே வந்து என்னோடு கலந்து விடு என்று ஹரிஹரன் உருக்குகையில் (பம்பாய்) பரவுகிற குழலோசை போலவே.......எதைச் சொல்ல! எதை விட!
மோகத்தைக் கொன்றுவிடு, அல்லால் எந்தன் மூச்சை நிறுத்திவிடு என்றான் மகாகவி. (மகாராஜபுரம் சந்தானம் பாடி அதைக் கேட்கவேண்டும்!). இசையின் மோகவலைக்குள் விழாதவர் யாராயிருக்க முடியும்!
இசையின் ஜனநாயகத் தன்மை அசாத்தியமானது. அதை யாரையும் எப்போதும் எங்கும் சென்று தொட்டுத் தழுவிக் கலந்து விடைபெறுகிறது. பகைமை, துரோகம், குற்றம், ஆதிக்கம் போன்ற அராஜகங்கள் அகன்ற அற்புத உலகம் சமைக்கப் புறப்படும் யாரும், போராடும் ஒவ்வொருவரும் இசையைத் தங்களது வலுவான துணையாகக் காண முடியும். இசை மனிதர்களிடையே உருவாக்கப்பட்டிருக்கும் வேறுபாடுகளை உடைக்கத் தக்க பண்பாட்டுக் கருவி. அதன் செயல்பாடு மிகவும் நயமானது. ஆனால் உத்தரவாதமானது.
https://mail.google.com/mail/u/0/?ui...f_i2ybywel0&zwhttps://mail.google.com/mail/u/0/?ui...f_i2ybywjj1&zw
dear ck
சப்தபதி திரைபடத்தின் கதாநாயகி சபிதா பாமிடிபடி
http://4.bp.blogspot.com/-ciVcCJT0Ma...8h08m05s88.jpg
http://3.bp.blogspot.com/-j_v7pX1hPI...1981Telugu.jpg
சப்தபதி திரைபடத்தின் கதாநாயகன் கிரீஷ்- (நாம் முரளி என்று சொல்லிவிட்டோம் திரை படத்தில் இவர் பெயர் ஹரி ) தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் ஆக வருவார் .
http://4.bp.blogspot.com/-wmNLbV1e4p...1981Telugu.jpg
சப்தபதி திரைபடத்தின் யாஜுலுவின் பேரன் ரவிகாந்த் (கௌரிநாத் என்ற கதாபாத்திரம் )
http://4.bp.blogspot.com/-xMYMj8UA-5...Telugu1981.jpg
1981 ஆம் ஆண்டு தேசிய ஒருமைப்பாடு விருதை தட்டி சென்ற படம் சப்தபதி .சென்னை சுபம் திரை அரங்கில் பார்த்த படம் . மிக சிறந்த படத்தை நினைவு ஊட்டியதற்கு நன்றி CK