-
http://i67.tinypic.com/16h7zox.jpg
பி.ஆர். பந்துலுவின் மிகப்பெரிய வெற்றி படம் ரகசிய போலீஸ் 115 டிஜிட்டலில் இம் மாதம் திரைக்கு வர உள்ளது . எம்ஜிஆர் படங்களுக்கே உரிய இனிமையான பாடல்கள் , பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள்
என்று வந்த படம் .எம்ஜிஆரின் ஸ்டைல் , சுறுசுறுப்பான நடிப்பு - அவரின் ரசிகர்களை பரவசப்படுத்திய படம்
இந்த படம் 1968ல் வெளிவந்தது 100 நாட்கள் ஓடிய வெற்றி படம் . பின்னர் மறு வெளியீடுகளில் பல முறை இடை வெளி இல்லாமல் தொடர்ந்து ஓடிய படம் .
மதுரையை சேர்ந்த சண்முகம் என்பவர் இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மாற்றி புத்தம் புது படமாக தயாரித்து உள்ளார்.
courtesy - net
-
பாடலாசிரியர் முத்துக்குமரன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத்தினருக்கு பெரும் இழப்பாகும் .மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்
-
மகத்தான மந்திரிகுமாரி -1950
தமிழ்சினிமாவில் கதாநாயகன் என்ற புனிதபிம்பத்தை முற்றிலும் மாற்றிய இரண்டு திரைப்படங்கள் மந்திரிகுமாரி, மற்றும் ரத்தக்கண்ணீர். இரண்டையும் பத்து முறைகளுக்கு மேலாகப் பார்த்திருப்பேன்.
மந்திரிகுமாரி 1950ல் வெளியானது. ரத்தக்கண்ணீர் 1954 ம் ஆண்டு வெளியாகி உள்ளது. இரண்டின் கதாநாயர்களும் தன்னுடைய விருப்பதின் பாதையில் தன்னை உருவாக்கி கொண்டவர்கள்.
மந்திரி குமாரியில் வரும் பார்த்திபன் கொலை, கொள்ளைகளை விரும்பிச் செய்கிறான். கொலை தனது கலை என்று உரத்து சொல்கிறான். ரத்தகண்ணீரில் வரும் மோகன் வெளிநாட்டில் படித்து திரும்பிவந்து குடும்பம் சமூகம் இரண்டு தளத்திலும் உள்ள கட்டுபாடுகள்,ஒழுக்கவிதிகள், மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறான். சமூகத்தை கடுமையாக்க் கேலி செய்கிறான்.
இருவருமே காதலிக்கிறார்கள். திருமணமும் செய்து கொள்கிறார்கள். திருமணத்தின் பிறகும் அவர்கள் இயல்பு மாறிவிடவில்லை. தொழுநோயுற்ற போதும் மோகன் கடவுளிடம் தஞ்சம் புகவில்லை. அது போலவே மந்திரிகுமாரியில் சிறைப்பட்டு மரணதண்டனைக்காக காத்திருந்த போதும் பார்த்திபன் மாறிவிடவில்லை. அவன் பதிபக்தியைக் கேலி செய்கிறான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே கருத்துருவின் இரட்டையர்களைப் போலவே இருக்கிறார்கள்.
இரண்டு படங்களுமே திராவிட இயக்க கருத்துக்களைத் திரையில் நேரடியாகப் பேசுகின்றன. மதத்தின் பெயரால் நடைபெறும் மூடநம்பிக்கைகளை விவாதிக்கின்றன. அவ்வகையில் திராவிட இயக்க அரசியல் தமிழகத்தில் வேர் ஊன்ற செய்வதற்கு இருபடங்களும் முக்கியக் காரணிகளாக இருந்திருக்கின்றன.
மந்திரிகுமாரி வெளியான அதே காலகட்டத்தில் நாகையா நடித்த ஏழைபடும்பாடு வெளியானது, இந்தபடம் விக்டர் க்யூகோவின் லே மிசரபிள் நாவலை மையமாக கொண்டு உருவாக்கபட்டது. அதுவும் ஒரு திருடனைப் பற்றியே பேசுகிறது. அவன் மனம் திருந்திய திருடன். ஏழ்மை அவனைத் திருட செய்கிறது. அவன் தனது திருட்டிற்காக மனம் கலங்குகிறான். மீட்சிக்காகப் போராடுகிறான், அவனை தமிழ்சமூகம் தனது அடையாளமாக அங்கீகரிக்கவேயில்லை
இந்தியாவில் சினிமா அறிமுகமான காலத்தில் இருந்தே புராணங்களும் இதிகாசங்களும் தான் அதன் கதைக்களமாக இருந்திருக்கிறது. அரிச்சந்திரா சத்யவான் சாவித்ரி, பஸ்மாசுர மோகினி லங்கா தகனம், பக்த விதுரன், நள தமயந்தி, என உருவான மௌனப்படங்கள் இந்திய சினிமாவை கோவில்கலைகளில் ஒன்றாகவே மாற்றியிருக்கிறது.
இந்திய மக்கள் திரை அரங்கின் வழியாகவே கடவுள் எப்படிப் பேசுவார். எப்படி நடந்து கொள்வார் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா நாட்டார்மரபில் இருந்த கதைகளையோ. அல்லது மக்கள் வரலாற்றினையோ கவனம் கொள்ளவேயில்லை. சமகாலப் பிரச்சனைகளை முதன்மைப்படுத்தவேயில்லை. புராணம் மற்றும் தொன்மம் சார்ந்த மிகை கற்பனைதன்மையில் இருந்து இந்திய பாபுலர் சினிமா இன்று வரை விடுபடவேயில்லை. அந்தக் குறையே இன்றும் சினிமாவை முற்றிலும் வணிகமான ஒன்றாக மாற்றி வைத்துள்ளது.
மௌனப்பட காலத்தில் சினிமா பார்ப்பது பாவம், அது மனித மனதில் தீய எண்ணங்களை உருவாக்கிவிடும் என்ற நம்பிக்கையை மதம் உருவாக்கி மக்களைத் தடுத்து வைத்தது. காலமாற்றத்தில் அதே மதம் கடவுளின் அருட்கதைகள், திருவிளையாடல்களை பெருவாரியான மக்களின் நம்பிக்கை வடிவமாக மாற்றுவதற்கும் சினிமாவைப் பயன்படுத்த முயற்சி செய்து வெற்றியும் பெற்றது.
தமிழ்சினிமாவிற்கும் மதஅடையாளங்களுமான உறவும் எதிர்ப்பும் தனித்து விரிவாக அறிய வேண்டிய ஒன்று
மந்திரிகுமாரி தமிழ் இலக்கிய மரபிலிருந்து உருவானதொரு திரைப்படம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியே இதன் மூலம். மூன்று தமிழ்காப்பியங்கள் பெண்களை முக்கியக் கதாபாத்திரமாகக் கொண்டு உருவாக்கபட்டவை. கண்ணகி, மணிமேகலை, குண்டலகேசி ஆகிய மூன்று பெண்களும் தனித்துவமானவர்கள்.
குண்டலகேசி ஒரு பௌத்த காப்பியம். அழிந்து போன அந்தக் காவியத்தின் பத்தொன்பது பாடல்கள் மட்டுமே இன்று வாசிக்க கிடைக்கின்றன. தேரிகதையில் வரும் புத்த பிக்குணியான குண்டலகேசியின் கதையை அடிப்படையாகக் கொண்டு இக்காப்பியம் உருவாக்கபட்டிருக்கிறது. தம்மபதத்தில் இக்கதை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது.
திருடர்களை முக்கியக் கதாபாத்திரமாக கொண்டு கதை சொல்வது இந்திய நாட்டார்கதைமரபில் தொன்று தொட்டுவரும் ஒன்றே. திருடர்கள் பெரும்சாகசக்கார்களாகவும், திருடுவதன் மூலம் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றும் நாட்டார்கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. மனம் திருந்திய திருடனைப் பற்றிய கதைகள் பௌத்த கதைமரபில் காணப்படுகிறது. அந்த வகையின் தொடர்ச்சியே குண்டலகேசி காப்பியம், குண்டலகேசி என்றால் சுருண்ட கூந்தலை உடையவள் என்பதே பொருள்.
குண்டலகேசி காப்பியத்திலிருந்து மந்திரிகுமாரி திரைக்கதை எப்படி மாறிவந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அதன் காப்பியக் கதையை வாசித்து அறிய வேண்டியது அவசியம்.
குண்டலகேசி காப்பியம் திருடனைக் காதலித்த ஒரு இளம்பெண்ணைப் பற்றியது. பூம்புகாரில் உள்ள செல்வமிக்க வணிக குடும்பத்தில் பிறந்த அவள் தோழிகளுடன் பூபந்து விளையாடிக் கொண்டிருந்த போது பந்து தவறிப்போய் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு ஆணின் மீது விழுகிறது. குண்டலகேசி குனிந்து பார்க்கும் போது அவனும் திரும்பிப் பார்க்க, முதல்பார்வையில் அவளுக்கு அந்த ஆணைப் பிடித்துப் போய்விடுகிறது. அவன் யாரென விசாரிக்கத் துவங்குகிறாள்.
அவன் பெயர் காளன், மந்திரியின் மகன் என்றும் அவன் ஒரு திருடன் கொலையாளி, கொள்ளைக்காரன் என்பதால் மரணதண்டனை நிறைவேற்ற கொண்டு போகபடுகிறான் என்றும் தகவலை அறிகிறாள்.
பெற்ற தந்தையே இந்த தண்டனையை விதித்து அவனைக் கொல்ல அனுமதித்துள்ளார் என்பது அவளை வியப்பூட்டுகிறது. பூம்பூகாரில் இந்திரவிழா துவங்கிய நாட்களில் கொலைதண்டனை நிறைவேற்ற மாட்டார்கள். ஆகவே அவள் இதைப் பயன்படுத்தி திருடனை விடுவித்து மணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறாள்
மகளின் பிடிவாதத்தை கண்ட அவளது தந்தை அரசனிடம் சென்று காளனை விடுவிக்கும்படி கேட்கிறார். அவன் எடைக்கு எடை பொன்னும் எண்பத்தியோறு யானைகளும் தந்து காளனை விடுவிக்க வைத்து மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.
காளனோடு குண்டலகேசி இன்பமாக வாழத் துவங்குகிறாள். காவிரியில் புதுவெள்ளம் வரும்போது புனலாட அவர்கள் கிளம்புகிறார்கள். காளன் வேண்டுமென்றே குண்டலகேசியின் குங்குமச்சிமிழை எடுத்து ஒளித்து வைக்கிறான். அதைக் காணாமல் தேடி அலைகிறாள் குண்டலகேசி. காளன் வேடிக்கை முடிந்து எடுத்து தந்துவிடவே உங்கள் கள்ளதனம் மாறவேயில்லையே என்று கேலியாக சொல்கிறாள். அது அவன் மனதில் தன்னைக் குத்திகாட்டுவது போல படுகிறது. தன் கடந்தகாலத்தை அவள் சொல்லிக்காட்டுவதாக நினைத்துக் கொண்டு அவளைக் கோவித்துக் கொள்கிறான்.
வீடு வந்த போதும் அவன் மனதில் குண்டலகேசியின் வார்த்தைகள் மறையவேயில்லை, மறுநாள் அவளைக் கொல்ல முடிவு செய்து மலைஉச்சியில் உள்ள தெய்வத்தை வழிபட துணை வர வேண்டும் என்று அழைத்துப் போகிறான். அங்கே காளன் தன்னைக் கொல்ல முயற்சிப்பதை அறிந்து அவனைத் தந்திரமாக கிழே தள்ளி கொன்றுவிடுகிறாள் குண்டலகேசி.
பிறகு தானும் குதித்து உயிர்விட முயற்சிக்கிறாள். அவளை ஒரு வேடுவப்பெண் தடுத்துக் காப்பாற்றுகிறாள். அதன்பிறகு அவள் பௌத்த சமயத்தில் சேர்ந்து துறவியாகி பல இடங்களில் தன் அறிவுத் திறனால் வாதிட்டு பௌத்த சமயத்தை பரப்பி ஞானம் அடைந்தாள் என்கிறது காப்பியம்.
காப்பியத்தின் சாரத்தை மட்டுமே திரைக்கதையாகக் கொண்டு சுவாரஸ்யமான புனைவை மேற்கொள்கிறது திரைப்படம், கலைஞரால் நாடகமாக எழுதப்பெற்று பல ஊர்களிலும் நடத்தப்பட்ட மந்திரிகுமாரியை மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் திரைப்படமாக்க முன்வந்தார், ஆகவே இப்படத்தின் ஆதார வடிவம் மேடை நாடகமே,
முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) தோழிகள். தளபதி வீரமோகனை ( mgr) ராஜகுமாரி காதலிக்கிறாள். மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) ஒரு திருடன், அதிலும் ராஜகுருவின் மகன். ”கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவனது கொள்கை.
பார்த்திபனை அவனது சுயரூபம் அறியாமல் மந்திரிகுமாரி அமுதா மணக்கிறாள். கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சியில் ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனைப் பிடித்து அரச சபையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பார்த்திபன் விடுவிக்கபட்டு ராஜமோகன் குற்றப் பழிக்கு ஆளாகிறான்.
தன் கணவன் கொள்ளைக்காரன் என்பதை அறிந்த அமுதா அவனைத் திருத்த முயற்சி செய்கிறாள். ஆத்திரத்தில், அவளைக் கொல்ல முடிவு செய்த பார்த்திபன் வாராய் நீ வாராய் என்று பாட்டுப்பாடி, மலை உச்சிக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட முயற்சிக்கும் போது அவனைக் கிழே தள்ளி அமுதா கொன்றுவிடுகிறாள்
மந்திரிகுமாரியை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் பாதியில் அமெரிக்கா போய்விட்டதால் மீதமுள்ள படத்தை டி.ஆர்.சுந்தரம் இயக்கியிருக்கிறார்.
ராஜகுருவாக வரும் நம்பியாரின் வழியே சனாதன அரசியல் சுட்டிக்காட்டப்படுகிறது, காப்பியக்கதையை அன்றைய தமிழக அரசியல் நிகழ்வுகளின் எதிரொலிப்பு போல உருமாற்றியதே திரைக்கதையின் தனிப்பலம், கலைஞரின் வசனங்கள் அதற்கு கூடுதல் துணை செய்கின்றன
மந்திரிகுமாரியில் தனது முழு ஆளுமையை வெளிப்படுத்தியவர் எஸ்.ஏ.நடராஜன், அவரே திருடன் கதாபாத்திரத்தில் நடித்தவர், வராய் நீ வராய் என்ற பாடலின் வழியே அவர் தனது மனைவியைக் கொலை செய்ய அழைத்துப் போகும்போது காட்டும் முகபாவங்கள் அற்புதமானவை,
மந்திரிகுமாரி காப்பியத்தில் இருந்த பௌத்த கூறுகள் திரைப்படத்தில் பெரிதும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் பிராமண ஆதிக்கமும் அதன் எதிர்ப்பு அரசியலும் முதன்மைபடுத்தபட்டிருக்கிறது, காட்சிபடுத்தபட்ட விதம், நடிப்பு, பாடல்கள், கூர்மையான வசனங்கள் என்று பலவிதங்களிலும் மந்திரிகுமாரி முக்கியமான ஒன்றாக விளங்குகிறது
குற்றம் என்று அடையாளம் காணப்பட்டவற்றை மறுதலிக்கும் குரலை படம் முழுவதும் நாம் கேட்க முடிகிறது
ஒரு இடத்தில் ராஜகுரு தன்மகனிடம் கொள்ளை அடிப்பதை நிறுத்த சொல்கிறார், அவன் பதில் சொல்கிறார்
“கொள்ளையடிப்பது ஒரு கலை. வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
அதைக்கேட்டு ஆதங்கமாக ராஜகுரு கேட்கிறார்,
மகனே இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?
அதற்கு பார்த்திபன் உற்சாகமாக பதில் சொல்கிறான்
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.”
இப்படி கொலையைக் கலையாக்கும் காரசாரமான விவாதம் இன்றைய சமகால உண்மைகளுக்கு நெருக்கமாகவே இருக்கிறது,
நாடகமேடை கதைகளிலும் மௌனப்பட யுகத்திலும் கடவுளின் அவதாரமாக முன்னிறுத்தப்பட்ட கதாநாயகன் என்ற பிம்பத்தை இந்த படம் தன்னளவில் முழுமையாகச் சிதறடித்தது, ஒருவகையில் எதிர்நாயகனை முதன்மைபடுத்தி உருவாக்கபட்ட முதல்படம் இதுவே,
courtesy - net
••••
-
அலி பாபாவும் 40 திருடர்களும்
மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் சாகசக் கதைப் பிரியர் போலிருக்கிறது. அவர் ஆயிரத்தோர் இரவுகளிலிருந்து இந்த கதையை பிடித்திருக்கிறார். அருமையான த்ரில்லிங் கதை. கதை தெரியாதவர்கள் பார்த்தால் உண்மையிலேயே திருப்தி அடைவார்கள். மாஸ் ஹீரோவாகிக் கொண்டிருக்கும் எம்ஜிஆர், வீரப்பா, பானுமதி. ஒரு பிரமாதமான குகை. ஒன்பது முத்தான பாட்டுகள். பைசா வசூல்.
1956-இல் வந்த படம். எம்ஜிஆர், பானுமதி, பி.எஸ். வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, சாரங்கபாணி, எம்.என். ராஜம், தங்கவேலு, ஓ.ஏ.கே. தேவர் நடித்தது. பின்னாளில் புதிய வார்ப்புகளில் தொடங்கி ஒரு ரவுண்ட் வந்த கே.கே. சவுந்தரும் ஒரு சிறு ரோலில் வருவார். இசை எஸ். தக்ஷிணாமூர்த்தி. பாடல்கள் மருதகாசி. இயக்கம் டி.ஆர். சுந்தரம்.
தெரிந்த கதைதான். பணக்கார அண்ணன் காசிம் (சக்ரபாணி) மனைவி பேச்சை கேட்டு தம்பி அலி பாபா (எம்ஜிஆர்), அம்மா, தங்கை எம்.என். ராஜத்தை விரட்டி விடுவார். அலி பாபா விறகு வெட்டி பிழைப்பார். அழகான பொண்ணுதான் என்று பாட்டு பாடி பிழைப்பு நடத்தும் மார்ஜியானாவையும் (பானுமதி) அவருக்கு டோலக் வாசிக்கும் சாரங்கபானியையும் முரடர்களிடமிருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருவார். மீண்டும் ஒரு நாள் விறகு வெட்ட காட்டுக்கு போகும்போது 40 திருடர்களையும், அவர்களது ரகசிய குகையையும் பார்ப்பார். அவர்கள் போனதும் குகைக்குள் நுழைந்து கொஞ்சம் செல்வத்தை அள்ளிக் கொண்டு வருவார். தங்கக் காசுகளை என்ன முடியாது, அளக்கவோ வீட்டில் ஒன்றுமில்லை. அண்ணன் வீட்டிலிருந்து ஒரு மரக்காலை இரவலாக வாங்கி வருவார். ஏழைகளான இவர்கள் எதை அளக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள அண்ணி மரக்காலின் அடியில் கொஞ்சம் புளியை ஒட்டி அனுப்புவார். புளியோடு ஒரு தங்கக் காசு போகும். அதைப் பார்த்து தங்கக் காசுகளை மரக்காலில் அளக்கும் அளவுக்கு இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று தெரிந்து கொள்ள அலி பாபாவுக்கு காசிம் ஒரு விருந்து கொடுப்பார். அலி பாபாவை மிகவும் வற்புறுத்தி ரகசியத்தை தெரிந்து கொள்ளும் காசிம் குகைக்கு போவார். ஆனால் வெளியே வரும் கட்டளை மறந்து விடும். திருடர்கள் அவரைக் கொன்று அவர் பிணத்தை துண்டுகளாக வெட்டி குகையில் ஒரு எச்சரிக்கையாக மாட்டி வைப்பார்கள். காசிம் திரும்பி வராததால் அலி பாபா குகைக்கு செல்வார். பிணத்தை கொண்டு வருவார். யாருக்கும் விஷயம் தெரியாமல் இருக்க தையல்கார தங்கவேலுவை அழைத்து பிணத்தை தைக்க சொல்வார் மார்ஜியானா. பிணம் காணமல் போனதால் ரகசியம் தெரிந்த மனிதரை திருடர்கள் தேடுவார்கள். அவர்கள் தந்திரத்தை மார்ஜியானா முறியடிப்பார். கடைசியில் வீரப்பா தங்கவேலு மூலமாக வீட்டை தெரிந்து கொள்வார். அங்கே மாறு வேஷத்தில் வருவார். ஆனால் மார்ஜியானா அவரை அடையாளம் கண்டு கொள்வார். எண்ணை பீப்பாய்களில் இருக்கும் திருடர்களை கொன்று ஆற்றில் வீசி விடுவார். வீரப்பா மார்ஜியானவை கடத்தி செல்ல, அலி பாபா அவரை பின் தொடர்ந்து குகைக்கு செல்ல, அங்கே ஒரு த்ரில்லிங் சண்டைக்கு பின் அலி பாபா வீரப்பாவை கொன்று, மார்ஜியானாவை மணந்து, சுபம்!
ஒரிஜினல் கதையிலிருந்து சில மாறுதல்கள் இருக்கின்றன. மார்ஜியானா ஒரிஜினலாக அலி பாபாவின் அடிமைப் பெண். அவளது திறமையை மெச்சி அலி பாபா அவரை தன் அண்ணன் மகனுக்கு மனம் செய்து வைப்பார்.
இந்த படத்தில் நடிப்பு கிடிப்பு என்பதெலாம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் திரைக் கதை நன்றாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அந்த குகை அற்புதம்! அதை திறக்க ஒரு பெரிய செக்கு மாதிரி ஒன்று சுழல்வதும், உள்ளே கொதிக்கும் நீருக்கு மேல் உள்ள குறுகலான பாலமும், அற்புதமான செட். வீரப்பா மிக பொருத்தமான casting. பானுமதி, எம்ஜிஆர் கூடத்தான். அதற்காகவே பாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் காண்பியுங்கள்.
பாட்டுகள் இந்த படத்தின் ஒரு பெரிய பலம். பாட்டுகள் கொஞ்சம் quaint ஆக இருக்கும். மருதகாசியின் வரிகள் மிக நன்றாக இருக்கும். என்ன அதிர்ஷ்டமோ எல்லாமே யூட்யூபில் இருக்கின்றன. நிறைய குத்துப் பாடல்கள்தான். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு, எஸ்.சி. கிருஷ்ணன், ஜமுனா ராணி பாடிய சின்னஞ்சிறு பூவே எந்தன் சீனா கல்கண்டே பாட்டுதான். கீழே காணலாம்.
அழகான பொண்ணுதான் பாட்டு மிக பிரபலமானது.
மாசிலா உண்மைக் காதலே குத்துப் பாட்டு இல்லை.:-) படத்தில் மிக புகழ் பெற்ற பாட்டு இதுதான் என்று நினைக்கிறேன். ஏ.எம். ராஜா அபூர்வமாக எம்ஜிஆருக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
சலாம் பாபு பாட்டுக்கு ஆடுவது வஹீதா ரெஹ்மான்! அந்த காலத்து ஐட்டம் நம்பர் போல. வஹீதா ரெஹ்மான் இன்னும் பிரபலம் ஆகாத காலம் என்று நினைக்கிறேன். சமீபத்தில் திருடா திருடி படத்தில் இந்த பாட்டையே வண்டார் குழலி வண்டார் குழலி என்று காப்பி அடித்திருந்தார்கள்.
உல்லாச உலகம் உனக்கே சொந்தம் தங்கவேலு மேல் படமாக்கப்பட்டது.
நம்ம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு ஒரு நல்ல குத்துப் பாட்டு.
உன்னை விட மாட்டேன், என் ஆட்டமெல்லாம் ஒரு வேட்டைக்குத்தான், அமீர் பூபதி ஆகியவை சுமாரான பாட்டுகள். இவற்றுக்கும் யூட்யூபில் வீடியோக்கள் இருக்கின்றன.
CORTESY - RV- NET
-
குடும்பத்தலைவன் - 15.8.1962 - 55 வது ஆண்டு துவக்கம்
நீதிக்கு பின் பாசம் . 15.8.1963 - 54 வது ஆண்டு துவக்கம்
கணவன் - 15.8.1968 - 49 வது ஆண்டு துவக்கம்
-
-
-
-
உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!
அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு, அதுக்கப்பறம் மேஜையிலே பலம் யாரு காட்டறதுன்னு வைக்கும் ஸ்டெப்புகள், அப்பறம் கைநெகத்திலே கண்ணத்தை கிழிச்சு இரண்டு கட்டைவிரலை வச்சிக்கிட்டு சண்டை போட்டுக் காமிக்கும் லாவகமே தனி! அப்ப எல்லாம் இந்த மாதிரி புதுசா ஸ்டைலா சண்டை போட அவருக்கிட்ட புது ஆளுங்க வருவாங்க, அதிலே ஜஸ்டின் ஒருத்தரு, அப்பறம் எதிரியை அடிச்சி போட்டுட்டு ஓடறதுங்கிறது அவருடய வழக்கமே கிடையாது! அடிபட்டவன் திருந்தனும், அதுக்கு அடிச்சிட்டு அவனுக்கே தண்ணி எல்லாம் கொடுத்து சிகிச்சை பண்ணுவாரு!
அப்பறம் எதிரி பக்கம் நியாம் இருந்தா, அதுக்கு துணை போவாரு! இதிலேயும் அப்படிதான் அரைகுறையா ஆட சொல்லி வற்புறுத்தன ஜஸ்டினை அடிச்சிட்டு, அப்பறம் அவரு பக்கத்து நியாத்தை தெரிஞ்சு பணத்தை கொடுத்துட்டு சந்திரகலாவை மீட்டு காதலிப்பார்! இது மாதிரி ஆபத்துகள், ஆக்ஸிடண்டான கட்டங்கள்ல கதாநாயகியை காப்பாத்தி, கடைசியிலே அவங்களையே காதலிச்சி கல்யாணம் பண்ணி அவங்களுக்கு கலங்கம் எதும் வரமா பார்த்துக்கிற எம்ஜியார் ஃபார்முலாவை தான் கமலு தேவர் மகன்லேயும் செஞ்சு காமிச்சிருப்பாரு, ரேவதியை கல்யாணம் பண்ணிக்கிப்பற! ஆக இன்னைக்கு எந்த நடிகர்களா இருந்தாலும் சரி, அன்னைக்கு சில நல்ல வழி என்ற எம்ஜிஆர் போட்டு கொடுத்த ஃபார்முலாக்களை விட்டு அகன்றதே இல்லை!
அது மாதிரி காதல் கொள்வதில் அவருக்கு உண்டான பிரத்யோகமான ட்ரேட் மார்க்குகள் உண்டு! இந்த படத்திலே சந்திரகலாவை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு, அதுக்கு ஆசீர்வாதம் வாங்குகிற காட்சிகள் அமைப்பு சமுதாயத்தின் எல்லா மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும்! இந்த படத்திலே கல்யாணம் முடிச்சு ஜேசுதாஸ் வாயஸ்ல ஒரு அருமையான பாட்டுக்கு ஹாங்காங் சுத்தி போட்ல ஆடிப்பாடி காட்சிகள், அப்பறம் இந்த வெளி நாடு போன அங்கே அப்ப அதியமா இருந்த டால்ஃபின் மீன் காட்சிகள், டிஸ்னிலேன்டு, எக்ஸ்போ 70, இது எல்லாம் அப்படியே கண்ணுல ஒத்திக்கிற மாதிரி படம் புடிச்சு கொண்டு வந்தாங்க!
அப்பறம் இன்னொன்னு நம்ம மக்கள் திலகத்துக்கு எப்பவுமே புதுசா புதுசா, இளசா ஹீரோயின்கள் வேணும்! நம்ம ஊரு பத்தலைன்னு, வெளியிலே தாய்லேந்துல படம் புடிக்க வந்து அந்தவூரு பொண்ணை போட்டு கனவு காண வச்சு ஒரு துள்ளலா பாட்டு ஒன்னயும் பாடவச்சி தூள் கிளப்பி இருப்பாரு நம்ம தலைவரு!
courtesy - net
-
http://i64.tinypic.com/v8geub.jpg
ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, 'புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது' என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்... மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. 'அன்பே வா' படம் சூப்பர் டூப்பர் ஹிட்! 'இந்தப் பெருவெற்றிக்குக் காரணம், நான் அதில் நடித்திருந்ததுதான்!' என்று தமாஷாகச் சொல்வார் சாவி.
எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையான குணம் குறித்தும் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சாவி. சிம்லாவில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், எம்.ஜி.ஆரைக் காண ராணுவ வீரர்கள் சிலர் விரும்பினார்களாம். எம்.ஜி.ஆரும் அவர்களிடம் அன்பாக உரையாடி, அவர்களின் பணிகளையும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் அக்கறையோடு கேட்டறிந்தாராம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அந்த வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இங்கே தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார். அந்த வீரர், தான் இங்கே மிகவும் நலமாக இருப்பது குறித்து தன் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், தாயாருக்காக தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையை தன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு, அவசரம் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதையும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்து, அதை எப்படியாவது தன் தாயிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
"நாமாக இருந்தால் ஆகட்டும் என்று சொல்லி, அதை அத்தோடு மறந்திருப்போம். எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவை, அந்த வீரர் கொடுத்த கடிதம் ஆகியவற்றோடு தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையை வைத்துப் 'பேக்' செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவரின் தாயாரிடம் இந்த பார்சலை சேர்த்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார். அங்கே அந்த அம்மாவின் மகன் மிகவும் நலமாக இருக்கும் சேதியையும் சொல்லிவிட்டு வரும்படி சொன்னார். இந்த மனிதாபிமான பண்பை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. அவரை 'மக்கள் திலகம்' என்று அழைப்பது மிகவும் சரியே!" என்று சிலாகித்துச் சொன்னார் சாவி.
நன்றி - விகடன் இ-மேகசின்