-
மதுரை 'சென்ட்ரல்'
சிங்கத்தமிழனின் "சிவகாமியின் செல்வன்"
1.4.2011 வெள்ளி முதல் 7.4.2011 வியாழன் வரையிலான ஒரு வார காலத்தில், தினசரி 4 காட்சிகளில், அள்ளி அளித்த சூப்பர்ஹிட் மொத்த வசூல் ரூ 53,412/- [ரூபாய் ஐம்பத்து மூன்றாயிரத்து நானூற்று பன்னிரெண்டு].
3.4.2011 ஞாயிறு மாலை கண்கொள்ளாக் காட்சிகள்
சிங்கத்தமிழனுக்கு சீரிய அலங்காரம்
http://i1094.photobucket.com/albums/.../scan0006a.jpg
காவியம் கண்டு களித்த நிறைவுடன் வெளியே வரும் ஜனத்திரளின் ஒரு பகுதி
http://i1094.photobucket.com/albums/...scan0004a1.jpg
பார்த்து ரசித்த மக்கள் கூட்டத்தின் இன்னொரு பகுதி
http://i1094.photobucket.com/albums/...scan0005a1.jpg
இப்புகைப்படங்களை படம்பிடித்த மதுரை அரசமரம் செவாலியே டாக்டர் சிவாஜி குரூப்ஸ் குழுவைச் சேர்ந்த ரசிக நல்லிதயம்-புகைப்படக் கலைஞர்-அன்பு நண்பர் திரு.சாந்தாராம் அவர்களுக்கும், புகைப்படங்களை அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல் வசூல் விவரங்களையும் வழங்கிய இக்குழுவின் நிர்வாகி அருமை நண்பர் திரு.ஏ.என்.குப்புசாமி அவர்களுக்கும் குதூகலமான நன்றிகள் !
அன்புடன்,
பம்மலார்.
-
கலையுலக மகானின் "திருவருட்செல்வர்"
14.4.2011 [வியாழன்] தமிழ்ப் புத்தாண்டு முதல்
சென்னை 'சாந்தி' சினிமாஸ் : தினசரி 4 காட்சிகள்
விஷுவல் விருந்து
அரங்க நுழைவாயிலின் மேல்
http://i1094.photobucket.com/albums/...lar/Thiru1.jpg
அரங்க நுழைவாயிலில் வரவேற்பு
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3549.jpg
14.4.2011 மேட்னி கண்டு களித்த மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதி
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3552.jpg
14.4.2011 மேட்னி கண்டு களித்த மக்கள் வெள்ளத்தின் இன்னொரு பகுதி
http://i1094.photobucket.com/albums/...r/GEDC3553.jpg
அன்புடன்,
பம்மலார்.
-
இன்று மாலை சாந்தியில் திருவருட்செல்வர் ரசிகர்களின் சிறப்புக் காட்சியாக மிக சிறப்பாக நடைப்பெற்றது. நமது ஹப் நண்பர்கள் புடை சூழ படத்தை ரசித்து பார்த்தோம். இந்த மாதிரியான ஒரு பக்திப் படத்தை கூட அளப்பரையோடு பார்ப்பதற்கு நமது ரசிகர்களால் மட்டுமே முடியும். மன்னவன் வில்லவன் பாத்திரத்தை ரசிகர்கள் ஆர்ப்பாட்டதோடு ரசித்தது பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் அந்த அப்பர் பாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பு இருக்கிறதே, அது அபாரம். நான் ஆண்டவன் கட்டளை ஆறு மனமே ஆறு பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி எழுதும் போது ரசிகர்களின் ரசனையை பற்றி எழுதினேன். அதையும் விஞ்சி விட்டது நாவுக்கரசருக்கு கிடைத்த கைதட்டல். அப்பர் கதாப்பாத்திரத்தின் அறிமுக காட்சி முதல் நாகர் முடி மேலிருக்கும் பாடல் காட்சி வரை நடந்த ஆர்ப்பரிப்பு அளவிட முடியாதது.
மேலும் விவரங்களுக்கு நண்பர்கள் வந்து அப்டேட் கொடுப்பார்கள். படத்தைப் பற்றிய சிந்தனைகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
-
நேற்று 17.04.2011 ஞாயிறு மாலைக் காட்சியில் நம்முடைய மய்யம் நண்பர்கள் குழுவாக அமர்ந்து திருநாவுக்கரசரின் தரிசனம் கண்டோம். பாலா சார் தம்முடைய பல அலுவல்களுக்கிடையிலும் சனி யன்று மாலைக் காட்சிக்கு வந்திருந்தார். அன்று மாலையும் சிறப்பாக இருந்தது. ஒய்.ஜி.மகேந்திரா, நம் மய்ய உறுப்பினர் மோகன் ராமன் சார், கவிதாலயா கிருஷ்ணன் உட்பட பலர் வந்திருந்தனர். அனைவரையும் விட திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி அவர்கள் தம் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் காட்சிக்கு வந்திருந்தது சிறப்பாகும். மகேந்திரா அவர்களின் சகோதரர், திருமதி மதுவந்தி அருண் என்று அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் யாவரும் வந்திருந்தனர்.
வழக்கம் போல், ஞாயிறு மாலை அளப்பரை அட்டகாசம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். 67ல் நான் சாந்தியில் பார்த்ததற்கும் நேற்று பார்த்ததற்கும் எவ்வளவு வித்தியாசம்... அப்போது விசில் ஒலி கூட வராது. கைதட்டல் தான் விண்ணை அதிர வைக்கும். ஆனால் 44 ஆண்டுகளில் ரசிகர்களின் உற்சாகமும் ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே போவது மலைக்க வைக்கிறது, வியக்க வைக்கிறது. அருகாமையில் உள்ள ஒரு உணவு நிறுவன ஊழியர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் வாய் விட்டு சொல்லியும் விட்டனர். சிவாஜிக்கு இன்னும் ரசிகர்கள் அப்படியே இருக்கிறார்கள் என்பதே அவர்களின் ஆவல்..
நம்முடைய முரளிசாரின் கைங்கரியத்தில் அவருடைய புகைப்படக் கருவியின் உபயத்தில் இதோ சில காட்சிகள் உங்கள் பார்வைக்கு.
நன்றி முரளி சார், உடனே அனுப்பி வைத்ததற்கு.
http://4.bp.blogspot.com/-3crcg7SNOo...0/TMSTVC01.jpg
http://1.bp.blogspot.com/-6xqrhMNMTU...0/TMSTVC02.jpg
http://1.bp.blogspot.com/-ij2i2CXqSv...0/TMSTVC03.jpg
http://1.bp.blogspot.com/-DDfNTF4guh...0/TMSTVC04.jpg
[IMG]http://2.bp.blogspot.com/-
அன்புடன்
-
-
Murali sir,
Your nerration about 'Sivakamiyin Selvan' is simply superb. It takes me to 26th January 1974 to Devi Paradise theatre. Additional informations by Ragavendhar sir, Saradha and Parthasarathy are are also worthful. NT-CVR-MSV combination was wonderful in SS. Another memorable thing is, the title remembers the great 'Perundhalaivar'.
Parthasarathy sir,
Excellent and brief nerration about the movie 'Gnana Oli' another milestone in NT's career. As everyone said here, it brings the movie scene by scene. Verygood effort.
Raghavendhar sir &
Pammalar sir,
Thanks a lot for the great photo session of 'Thiruvarutchelvar' at Shanti, and 'Sivakamiyin Selvan' at Madurai Central. Eager to know more about the sunday gala at Shanti.
-
திருவருட்செல்வர் நடிகர் 12 மணி , மற்றும் மாலை காட்சிக்கும் வந்திருந்தேன். மாலையில், திரு. ராகவேந்திரன், சிவாஜி சமுக சேவை தலைவர் சந்திரசேகரன், திரு.எஸ்.ராமஜெயம், சந்ததிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொபைல்போனில் சில் காட்சிகளை பதிவு செய்தேன். ஆடியோ, வீடியோ சுமாராகத்தான் இருக்கும். திருவருட்செல்வர் கடலில் இருந்து எடுத்த சில துளிகள் இங்கே :
http://abkhlabhi.blogspot.com/2011_04_01_archive.html
-
திருவருட்செல்வரைக் கண்டு களித்த அனுபவம்
ஏற்கனவே, திரு. ராகவேந்தர், திரு. முரளி மற்றும் திரு. பம்மலார் அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, ஹப் நண்பர்கள் புடை சூழ வில்லவரையும், சேக்கிழார் பெருமானையும், திருக்குறிப்புத் தொண்டரையும், சுந்தரரையும், சிகரம் தொட்ட அப்பரையும் சாந்தியில் நேற்று மாலை கண்டு, களித்து, புளகாங்கிதப்பட்டு தரிசித்தோம்.
சென்ற வருடம் சாந்தியில், புதிய பறவையைக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சி அளவிட முடியாதது என்றாலும், நேற்றைய அனுபவம் அதை விடப் பல மடங்கு சிறப்பு வாய்ந்தது. ஏனென்றால், புதிய பறவையை நான் தனியாகத்தான் பார்த்தேன். நேற்றோ, நண்பர்கள் புடை சூழப் பார்த்தேன். அதுவும், ஒத்த கருத்துகளை உடைய, நடிகர் திலகத்தின் ரசிகர்களுடன் என்னும்போது, மகிழ்ச்சிக்கு அளவேது?
நடிகர் திலகத்தை திரை அரங்கில் மக்கள் வெள்ளத்தோடு ரசிப்பதென்பது, ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் கிடைத்த பெரும்பேறு. ரொம்ப நாட்களுக்கப்புறம், இப்பேறு மறுபடியும் கிடைக்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்?
நேற்றைய காட்சியைப் பொறுத்தவரை, பெருவாரியான ரசிகர்கள் நடிகர் திலகம் என்ற அந்த மாபெரும் கலைஞனைத் திரையில் மறுபடியும் காணும் வாய்ப்பாகத் தான் எண்ணினார்கள். அவரைப் பெரிய திரையில், மக்களோடு மக்களாகப் பார்க்க ஆரம்பித்த போதே, நிலைமை எல்லை கடந்தால், அவரது அற்புத நடிப்புக்கு முன் என்னாவது? இந்த நிலையைத் தான் நேற்று கண்டோம். இப்படி ஒரு உயிர்த்துடிப்பான நடிப்பையும், அதற்கேற்ற ரசிப்புத்தன்மையையும் திரை அரங்கில் கண்டு எத்தனை நாளாகி விட்டது? மிகச் சில நாட்களுக்கு முன்தான் இந்தப் படத்தை வீட்டில், சின்னத்திரையில் பார்த்தாலும், நேற்று பெரிய திரையில் பார்த்த போது, பல இடங்களில், இது நாள் வரை காணாத, புதிய புதிய சின்னச் சின்ன அற்புதமான nuvances -ஐ தரிசிக்க முடிந்தது. சொல்ல முடியாது; நாளை மறுபடியும் பார்த்தால், இன்னும் பல புதிய கோணங்கள் தென்பட்டாலும் படும்! அது தான் நடிகர் திலகம் என்கின்ற அட்சய பாத்திரத்தின் மகிமை!!
நேற்று, நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் திலகத்தைக் கண்டபோது, நான் மறுபடியும் 1980௦-க்குச் சென்றேன். வாய்ப்பளித்த ஹப் நண்பர்களுக்கு, குறிப்பாக, திரு. முரளி அவர்களுக்கு கோடானுகோடி நன்றி - அந்த அளவிற்கு அவரைக் கடந்த சில நாட்களில் தொந்தரவு செய்திருக்கிறேன். (ஏனென்றால், அவர் மூலமாகத்தான் ஏனைய நண்பர்கள் நேற்று சாந்தியில் அறிமுகமானார்கள்.).
மீண்டும் மீண்டும், இது போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமல்லாது, பொதுவாகவும், நாம் அனைவரும் சந்தித்து, சாதாரண மாலைகளை, இனிய மாலைகளாக்க விழையும்,
அன்புடன்,
பார்த்தசாரதி
-
நேற்று 17.04.2011 ஞாயிறு மாலைக் காட்சியில் நம்முடைய hub நண்பர்கள் திரு ராகவேந்தர், திரு முரளி, திரு பம்மலார், திரு பார்த்தசாரதி, திரு ஜி.கிருஷ்ணா மற்றும் நண்பர்களோடு குழுவாக அமர்ந்து திருநாவுக்கரசரின் தரிசனம் கண்டோம். முரளி சார் கூறியது போல் ஒரு பக்திப் படத்தை கூட அளப்பரையோடு பார்ப்பதற்கு நமது ரசிகர்களால் மட்டுமே முடியும். குறிப்பாக படத்திற்கு வந்த 25 வயதிற்கு உட்பட்ட இன்றைய இளைய தலைமுறையை பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
-
i landed upon these videos
it's a telugu movie Rajaguruvu (1954) and Nt had acted in this.
i didnt see this film in the filmography too. Hero K.R.Ramaswamy & Nt acted as villain it seems
http://youtu.be/5OOxsuwpNLA