நீதி
பசுங்கன்று பரிதவிக்க
பசும்பாலைக் கறப்பவன்
கொசுவிடம் குருதி இழந்து
தண்டிக்கப் படுகின்றான்;
அண்டங்கள் படைத்தவன்
அனைத்தும் அறிந்தவனே.
Printable View
நீதி
பசுங்கன்று பரிதவிக்க
பசும்பாலைக் கறப்பவன்
கொசுவிடம் குருதி இழந்து
தண்டிக்கப் படுகின்றான்;
அண்டங்கள் படைத்தவன்
அனைத்தும் அறிந்தவனே.
நிலவு தலை குனிந்தது
தினம் தினம் காத்து நிற்பேன்.. அந்த
வானம் தொடும் நிலவிற்கு...
அதை கண்டவுடன்
என் கைவிரல்களும் ஆகாசம் தொட்டுவிடும்...
மனதில் ஆயிரம் ஆயிரம் வானவில்கள் வளைந்துவிடும்...
இதயம் இமயத்தின் சுமை காணும்...
என் உயிரும் தனி சுகம் கொள்ளும்..
சொல்ல தெரியவில்லை நான் உணர்ந்த உலகத்தை...
நாட்கள் கடந்தாலும் திங்கள் தந்த இனிமை அடங்கவில்லை...
நிலவை பார்த்து...
சிரித்தேன்...
கண் அடித்தேன்..
கவிதை கிறுக்கல் நடத்தினேன்...
ஏன்?.. நான் ஒரு ஆண் என்பதை மறந்து வெக்கப்பட்டேன்....
இதை தெரிந்தும் தெரியாதது போல் நிலவு பாசாங்கு செய்தது...
பொறுத்து பொறுத்து பார்த்த நிலவு ஒருநாள் என்னுடன் தர்க்கம் போட வந்தது.
நிலவு கேட்டது..
ஆயிரம் ஆயிரம் கவிகள் சொல்லாத கவிதையா சொல்லிவிட்டாய்?
பல கோடி உயிர்கள் கண்ட ஏக்கமா கண்டு விட்டாய்?
என் மேல் பல உயிர்கள் காதல் கொண்டுவிட்டன...
மனிதன் நீ மட்டும் இல்லை... ஐந்தறிவு ஜீவன்களும்தான்.. என் மேல் மோகம் கொள்கின்றன...
உனக்கு மட்டும் நான் கிடைப்பேன் என்று எதிர்பார்க்காதே மூடனே.. என்று
நிலவு என்னை பழித்தது...
நான் குறுநகை கொண்டு பதில் தந்தேன்.. அந்த கர்வம் கொண்ட நிலவிற்கு...
நிலவே..
நான் செய்யும் ஒவ்வொரு செயலும்...
நான் புனையும் ஒவ்வொரு கவிதையும்...
நான் காணும் ஒவ்வொரு இன்பகணங்களும்....
முட்டாள் நிலவே உன்னை பார்த்து அல்ல...
உன்னில் தெரியும் என் அழகு தேவதையின் வதன முகத்தை பார்த்தே..
நிலவு தலை குனிந்தது....
அழகிய கற்பனை
அழகிய கவிதை.
மிக்க நன்று.
கணக்கினில் புகழ் மணக்க
கலைபிற களைக என்பார்;
கணக்கையே கற்று மூளை
காய்ந்துதோற் றோரும் பல்லோர்;
இணக்குபெண் ணாசை நீக்கின்
இறையுணர்வு உண்டாம் என்றார்'
உணக்கினும் ஈரம் நீங்கா
தொழிந்துமாய்ந் தோரும் கோடி.
கருத்து: ஒன்றை விடுவதனால் மற்றொன்றில் சிறப்பு எய்திவி-
ட முடியும் என்று எண்ணலாமே தவிர, அச்சிறப்பு உறுதியாய்-
க் கிட்டும் என்று சொல்வதற்கில்லை.
இணக்கு: இணங்கு என்பதன் பிற வினை. உணக்கு: காயவை(த்தல்.
.)
சிறுவருக்குப் பாடலொன்று
புனைவதென்றால் எளிதென்று
சொல்லற் கில்லை;
சிறுவருக்கென் றெழுதியபின்
ஒருவருக்கும் வேண்டாவேல்
என்ன செய்வோம்?
முறுவலிக்கும் தோழியரே
வாய்திறக்க வேளையன்றே
என்று சொன்னால்
பெறலரிய நும்கருத்தைப்
பின்நாளில் சொன்னாலும்
தக்க தொன்றே.
வீட்டிற்குள் அங்குமிங்கும் அஞ்சி ஓடும்
வீட்டெலியேன் காட்டெலியாய் மாறவில்லை?
பூட்டிவைத்த அடுக்களைக்குள் இந்தத் துன்பம்
பூரிப்பின் முன்வரவாய் எண்ணும் நோயோ?
போட்டுவைத்த உணவைத்தான் தின்பதின்றி
புடவைதுணி மணியெல்லாம் பொத்தல் போட்டு
ஆட்டிவைத்த மாவினையும் தட்டி விட்டு
அன்முறையும் வன்முறையும் செய்வ தென்ன?
வேரற்ற எலிவாழ்க்கை வாழும் மாக்கள்
விடுதலையில் விருப்பின்றிக் கரந்து வாழ்வர்;
ஊரற்ற நாடோடி என்று வாழ்வோர்
ஒருவாறு மேலான உலக வாழ்நர்;
சீரற்ற எலிக்கென்ன ! காட்டிற் சென்று
செழுமை சேர் சூழலிலே வாழ்க! இன்றேல்
ஊரற்ற வாறலைக! இனிமேல் பூனை
உள்வந்து என்வீட்டில் காவல்தானே.
பூனையும் வீட்டுள் புகல்வேண்டா சுண்டெலிஎன்
ஆணைக்காட் பட்டுநின் றால்.
நல்ல கவிதை எழுதிடுவோம் -- நம்
நற்றமிழ் ஓங்க உதவிடுவோம்,
சொல்லில் சிக்கனம் தேடிடுவோம் -- வேண்டாச்
சொற்களை நீக்குதல் நாடிடுவோம்.
வேண்டாப் பலசொல் விதைப்பீரேல் -- அதை
வேண்டிப் படிப்போர்க் கிடர்ப்பாடே,
யாண்டும் நதியின் ஒழுக்கினைப்போல் -- மதி
தூண்டும் அழகில் இழுக்குளதோ?
எழுதுவதைத் துணிவோடும் எழுத வேண்டும்
"எனதுகவி யாப்பியலைத் தொழுத தன்றே!
பழுதுதனைப் பார்க்காதீர்!"எனவோர் பாணி
பாவலரும் அல்லவரும் பதியத் தக்க,
வழுதுணையே அன்றெனவே சொலவே வேண்டும்,
"வனிதை இவள் மனையறத்தின் வரம்பில் இல்லை!
பொழுதுகழி வுறும்பொருளே " எனும்படிக் கின்று
புகன்றுவிட்டுத் தொட்டணைத்த கதையாம் என்பேன்!
குறிப்பு:
இஃது இங்குள்ள யாரையும் குறித்து எழுதப்பட்டதன்று.
:clap: :exactly:
:D
:ty: :ty: :ty: