-
'நாலும் தெரிந்தவன்' (1968)
http://t3.gstatic.com/images?q=tbn:A...wKr0CYvP9d4UQh
1962- இல் வெளிவந்த 'professor' என்ற ஹிந்திப் படத்தைத் தழுவி 'நாலும் தெரிந்தவன்' படம் எடுக்கப் பட்டது. ஹிந்திப் படத்தில் கதாநாயகனாக ஷம்மிகபூர் அவர்களும், கதாநாயகியாக கல்பனாவும் நடித்திருந்தனர். ஹிந்தியில் வெற்றி அடைந்த இப்படம் தமிழில் நாலும் தெரிந்தவனாக சுமாராக ஓடியது. பின்னாட்களில் இதே படம் சத்யராஜ், குஷ்பூ, கவுண்டமணி நடித்து, பி.வாசுவின் இயக்கத்தில் 'நடிகன்' என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்டது. அப்படியே frame to frame நாலும் தெரிந்தவனின் கார்பன் காப்பியாக 'நடிகன்' வெளி வந்தான்.
படம் வெளி வந்த ஆண்டு: 1968
நடிகர், நடிகைகள்: ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், அஞ்சலி தேவி, மனோகர், மனோரமா, வி.கே.ராமசாமி
இயக்கம்: ஜம்பு
ஒளிப்பதிவு: கர்ணன்
இசை: சுப்பையா நாயுடு
பாடல்கள்: கண்ணதாசன்
"நரி ஒன்று சிரிக்கின்றது"...
"நிலவுக்கே போகலாம்... வான் நிலவுக்கே..போன்ற நல்ல பாடல்கள் கேட்க இனிமையாய் இருந்தன.
ரவிச்சந்திரன் அவர்கள் நடித்த 'நாலும் தெரிந்தவன்' படத்தின் கதையையும், கதை உருவான விதத்தையும் அப்படத்தின் கதாசிரியர் திரு V.C.குகநாதன் அவர்கள் கூறுகிறார்.
http://i1087.photobucket.com/albums/...31355/1-19.jpg
http://i1087.photobucket.com/albums/...31355/2-19.jpg
குறிப்பு: 'நாலும் தெரிந்தவன்' என்று கவுண்டமணி ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளி வந்தது.
இதே போல மற்றொரு படம்.
ரவிச்சந்திரன் அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படம் பின்னாளில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் 'பொல்லாதவன்' படமாக மீண்டும் ரீமேக் ஆகி வெற்றியடைந்தது பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ரவிச்சந்திரனின் படங்கள் தமிழில் பின்னாட்களில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது அவருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விஷயமல்லவா!
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் வாசுதேவன் சார்,
நாலும் தெரிந்த தங்களை விட்டால் நாலும் தெரிந்தவன் படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக, அதுவும் படத்தோடு விவரங்கள் தர யாரால் முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. மிகவும் அருமையான பதிவு. வெளியீட்டின் போது சென்னை பாரகன் திரையரங்கில் பார்த்தது. அதற்குப் பிறகு பொதிகையில் ஒரு முறை. அவ்வளவு தான். நிலவுக்கே போகலாம் பாடல் காட்சி இருந்தால் தரவேற்றுங்கள். மிகவும் அருமையான பாடல்.
கேட்டு மகிழ
நிலவுக்கே போகலாம் - http://www.inbaminge.com/t/n/Nalum%2...galam.vid.html
நரி ஒன்று சிரிக்கின்றது - - http://music.cooltoad.com/music/song.php?id=372996
-
ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' திரைப்படத்திலிருந்து "சிலை செய்ய கைகள் உண்டு" என்ற அற்புதமான பாடல் காணொளி வடிவில்.
http://www.youtube.com/watch?feature...&v=q7NolKhpgtE
அன்புடன்,
வாசுதேவன்.
-
மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் நினைவில் நின்றவள் திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல், டி.எம்.எஸ். மற்றும் சுசீலா குரலில்.
தொட்டதா தொடாததா
http://youtu.be/feQRGYjuG3Y
-
'கலைநிலா' ரவிச்சந்திரனின் சிறந்த பாடல்கள்.
'கௌரி கல்யாணம்' "வரணும் வரணும் மகராணி" பாடல் பற்றிய சிறப்பு ஆய்வு.
http://www.buycinemovies.com/images/...0374-vcd34.jpg
11.11.1966- இல் வெளி வந்த சரவணா கம்பைன்ஸ் 'கௌரி கல்யாணம்' திரைப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் பாடுவதாக வரும் "வரணும் வரணும் மகராணி" என்ற அதியற்புத உற்சாகமான டூயட் பாடல். T.M.S அவர்களின் கம்பீரமான குரலும், பி.சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலும் இந்தப் பாடலை சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. 'கவிஞர்' கண்ணதாசனின் கல்கண்டு வரிகள் இப்பாடலுக்கு மேலும் சுவையூட்டுகின்றன. இசை எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள். இனிமைக்குக் கேக்கணுமா....கே.சங்கர் அவர்கள் இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கர்,ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். ரவியும், ஜெய்யும் சேர்ந்து நடித்த படங்களில் இதுவும் ஒன்று.
இனி பாடல்.
கணீரென்று உற்சாகத் துள்ளலாய் ஆரம்பிக்கும் பல்லவி.
"வரணும் வரணும் மகராணி...
வஞ்சியர் சங்கமம் இதே இடம்...
சரணம் சரணம்...இந்த நேரம்...
சண்டை முடிந்தது சமாதானம்"...
(இந்தப்பாடல் சென்சாருக்கு செல்வதற்கு முன் "வரணும் வரணும் மகராணி...வஞ்சியர் சங்கமம் இதே இடம்.."சரணம் சரணம் சந்நிதானம்... சண்டை முடிந்தது சமாதானம்" என்ற பல்லவியோடு டி..எம்.எஸ் குரலில் தொடங்கி சுசீலாவின் குரலில் முடியும். சென்சாருக்குப் பிறகு "சரணம் சரணம் சந்நிதானம்" என்ற வார்த்தைகள் "சரணம் சரணம் இந்த நேரம்" என்று மாற்றப்பட்டது).
இப்பாடலின் சரணத்திற்கும், பல்லவிக்கும் இடையில்
"தந்தன தந்தன தன்ன... ஹோஹோ...பம்பர பம்பர பப்ப "... ஹோஹோ...
என்ற டி.எம்.எஸ்ஸின் ஆனந்த வெள்ளம் பொங்கும் குரலும் பின் தொடரும் "ஹோஹோ"..என்ற சுசீலாவின் இனிமை குரலும் காலம் முழுதும் நம்மை கட்டிப் போட வைக்கும் சக்தி படைத்தது.
சரணத்தில் வரும்
"பள்ளியில் கோபம் உண்டானது...
பருவத்தினால் அது பெண்ணானது...
கல்லான நெஞ்சம் கனியானது...
கைகளில் ஊற்றிய தேனானது...தேனானது...தேனானது...தேனானது"...
வரிகள் டி..எம்.எஸ் குரலில் காதுகளில் தேன் பாய்ச்ச,
தொடர்ந்து சுசீலாவின் குயில் குரலில் ஒலிக்கும்
"அஞ்சாதது...பெண் என்பது...
ஆண்மையின் முன்னே என்னானது...
பொன்னானது... பூவானது...
போதையில் ஆடும் கண்ணானது...கண்ணானது...கண்ணானது...கண்ணானது"...(வரணு ம் வரணும்)
என்ற வரிகள் உண்மையிலேயே இசைபோதையை நமக்கு உண்டாக்கி விடுவது நிஜம்.
அதே போல இரண்டாவது சரணம்.
"விழி ஒரு பக்கம் பந்தாடுதே...
இடை ஒரு பக்கம் தள்ளாடுதே...
நடையோடு வாழை தண்டானதே...
நடனம் இதில் தான் உண்டானதே....உண்டானதே...உண்டானதே...உண்டானதே"
என்று ஆண்குரல் முடிக்க...
ஆண்குரல் முடித்த அதே "உண்டானதே"என்ற வார்த்தையிலேயே பெண்குரல் அடுத்த வரியைத் தொடங்குவது அற்புதம்.
"உண்டானதே... கொண்டாடுதே... ஓடிய கால்கள் மன்றாடுதே...
"உண்டானதே... கொண்டாடுதே... ஓடிய கால்கள் மன்றாடுதே...
(இரண்டாவது முறை வரும் இந்த வரியில் "கொண்டாடுதே" என்ற வார்த்தையை முதல் வரியிலிருந்து மிக வித்தியாசப்படுத்தி மிக அழகாக உச்சரித்து பாடியிருப்பார் சுசீலா).
எல்லாம் இங்கே நீ தந்ததோ...
இதுதான் சொர்க்கம் நான் கண்டதே...நான் கண்டதே...நான் கண்டதே...நான் கண்டதே" (இந்தப் பாடல் தான் சொர்க்கம் நான் கண்டதே...இது என்னுடைய வரிகள்) (வரணும் வரணும்)
எனச் சரணம் முடிந்து மறுபடி பல்லவி தொடங்கி பாடல் முடிவடைய, ஏன்தான் பாடல் முடிந்ததோ என்று நினைக்கவைத்து மறுபடி மறுபடி கேட்கத் தூண்டும் பாடலாகி விட்டது இந்தப் பாடல்.
டிரம்பெட்டும், ஷெனாயும் இழையும் இந்தப் பாடல் காலத்திற்கும் மறக்க முடியாத பாடல். மெல்லிசை மன்னர்களின் அற்புதங்களில் ஒன்று இந்தப்பாடல் என்று கூடச் சொல்லலாம்.
இந்தப் பாடலில் ரவி மிக அழகாகக் காட்சி அளிப்பதோடு, டி.எம்.எஸ் குரல் அதியற்புதமாய் தனக்குப் பொருந்த, அழகான நடன நெளிவுகளை class- ஆக செய்திருப்பார். ஜெயலலிதாவும் ரவிக்கு ஈடு கொடுத்திருப்பார். அழகான அவுட்டோரில் பார்க்கில் படமாக்கப் பட்டிருக்கும் விதமும் ரம்மியமாக இருக்கும்.
அந்த அருமையான பாடலை இப்போது கண்டு களிக்கலாம்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UaCNL7xnzeA
அன்புடன்,
வாசுதேவன்.
-
'மதராஸ் டு பாண்டிச்சேரி' திரைப்படத்தில் அழகிய தோற்றத்தில் ரவிச்சந்திரன் அவர்கள்.
http://www.kollytalk.com/wp-content/...an-dead-29.jpg
கல்பனாவுடன்
http://www.kollytalk.com/wp-content/...an-dead-28.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
-
'அதே கண்கள்' திரைப்படத்தில் ரவி மற்றும் காஞ்சனாவின் எழில் தோற்றம்.
http://www.kollytalk.com/wp-content/...an-dead-32.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
-
காலத்தால் அழிக்க முடியாத பாடல் 'அன்பே அமுதா' டி.எம்.எஸ்ஸின் அற்புதக் குரலில் 'அமுதா' திரைப்படத்தில் 'கலைநிலவு' ரவியின் நடிப்பில்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4EzyTQtXLsA
அன்புடன்,
வாசுதேவன்.
-
'நிமிர்ந்து நில்' திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல் "தேடி வரும் தெய்வ சுகம்" ரவி, பாரதியின் நடிப்பில்
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x59nqqYGWvw
அன்புடன்,
வாசுதேவன்.