http://i157.photobucket.com/albums/t...ps2e448123.jpg
Printable View
தேவை கருதி மீண்டும்
http://i157.photobucket.com/albums/t...ps8d76dc1c.jpg
தமிழத்தில் மார்ச் 14 முதல் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்
சென்னை - மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - தியாகம்
http://i501.photobucket.com/albums/e...ps3538c803.jpg
கோவை - ராயல் - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா
http://i501.photobucket.com/albums/e...psd1ecd3a5.jpg
திருச்சி - கெய்டி - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா
http://i501.photobucket.com/albums/e...ps70750109.jpg
மதுரை - அலங்கார் - தினசரி 4 காட்சிகள் - வைர நெஞ்சம்
http://i501.photobucket.com/albums/e...psdfb50f4d.jpg
Thooththukudi - ENGA MAAMA - DAILY 4 SHOWS
http://www.youtube.com/watch?v=KR_0wPPEctc
மற்ற ஊர்களின் தகவல் கிடைத்தவுடன் பதிவு செய்யப்படும் ..!
நம் முதல்வர் நாளை வெளிவரும் படத்திற்கு புகழ் மடல் அனுப்பி உள்ளார் - அந்த படம் பல நல்ல பாடங்களை போதிப்பதாகவும் , release ஆன போது பல புரட்சிகளை எழுப்பினதாகவும் , அந்த படத்தில் நடித்ததனால் தனக்கு மிகவும் பெருமை கிடைத்ததாகவும் அந்த படம் அமைந்ததாம் - பாராட்ட வேண்டிய விஷயம் - அவருக்கு இந்த மடல் எழுத நேரம் கிடைத்தற்க்காகவும் , அந்த படத்தின் சிறப்புகளை அவர் மூலமே வர்ணனித்தர்க்காகவும்
ஒரு தலையாக அவர் செயல் புரிவது நமக்கு புதுமை அல்ல - இருந்தாலும் ஒரு முதல்வர் என்ற நிலையில் கொஞ்சமாவது தர்மம் இருக்கவேண்டும் - கர்ணன் வெளிவந்தபோது இப்படி ஒரு அறிக்கை கொடுத்திருந்தால் இப்போது அவர் கொடுத்த புகழ் மடலுக்கு ஒரு தனி பெருமை இருந்திருக்கும் - ஒரு முதல்வர் பாரபட்சம் இன்றி நடந்துகொள்கிறார் - நல்ல பாடம் கற்பிக்கும் படங்களுக்கு அவரின் பெருந்தன்மை கூடிய புகழ் மடல் என்றும் கிடைக்கும் என்று நம்பலாம் -
கர்ணனில் NT இருப்பதை சற்றே மறந்து விடுவோம். இந்த இளம் தலைமுறைக்கு எப்படி பட்ட பாடங்களை , தாக்கங்களை தந்துள்ளது - நன்றி என்றால் என்ன , நட்பு என்றால் என்ன , கொடை என்றால் என்ன ? வீரம் என்றால் என்ன ? , பணிவு என்றால் என்ன , சகோதர பாசம் என்றால் என்ன - இப்படி பல "என்ன என்ன'என்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் ஒரே படமாக அமைந்தது - இதற்கு பின்னும் ஒரு படம் வர போவதில்லை - இதற்க்கு முன்னும் ஒன்று வந்ததில்லை - கர்ணன் ஆயிரத்தில் ஒரு படம் இல்லை - பல கோடிகளில் ஒரு படம் ; இது பிரமாண்டத்தின் மகுடம் மட்டும் அல்ல - பிரமாண்டமே இதுதான் - இப்படிப்பட்ட ஒரு படத்தை முதல்வர் கண்டு கொள்ளாதது அவரின் கலை ரசனையை குறைத்தே காண்பிக்கும் - பதவியின் மேல் உள்ள மோகத்தை பல மடங்கு அதிகமாகவே காண்பிக்கும் !!!!
அன்புடன் ரவி
Breaking News அல்லது அண்மை செய்தி என்று சொல்லலாமா! நமது ஹீரோ 52 - 2014-ஐ விழாக் கோலத்துடன் வரவேற்க மதுரையம்பதி தயாராகி விட்டது என்ற செய்திதான். முன்னாட்களில் நடிகர் திலகம் நடித்த புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் இரவு படம் வெளியாகும் திரையரங்க வாசலில் ரசிகர்கள் கூடி நின்று அலங்காரம் செய்வது, பானர் அமைப்பது, மாலைகள் போடுவது, கொடி தோரணங்கள் கட்டுவது என்று பல்வேறு உற்சாகமாக ஈடுபட்டிருப்பார்கள். அதா நாள் மீண்டும் வந்ததோ என எண்ணும் வண்ணம் இன்றைய இரவு அதாவது சற்று முன்னர் வைர நெஞ்சம் வெளியாகும் அலங்கார் தியேட்டர் முன்பு சுமார் 50 ரசிகர்கள் திரண்டு கொடி, தோரணங்கள், பானர் என்று அமர்களப்படுத்தி விட்டனராம். புதிய படத்திற்கு இன்றைய முன்னணி ஹீரோ நடித்த படத்தின் பானருக்கோ அல்லது கட்-அவுட்ற்கோ கூட இத்தனை மாலைகள் போடப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! இப்போதே ஏறத்தாழ சுமார் 20 மாலைகள் அணிவிக்கப்பட்டு விட்டனவாம். சுமார் 10 பானர்கள் கட்டப்பட்டு விட்டனவாம். அலங்கார் தியேட்டர் அமைந்திருக்கும் காமராஜர் சாலையின் அந்தப் பகுதியே ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது என்று நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஏற்பாடுகளெல்லாம் சாதாரண ரசிகன் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறான் என்பதுதான். முதல் நாள் இரவே இந்த response என்றால் இனி போக போக?
இதே நேரத்தில் சென்னை ரசிகர்களும் நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று மகாலட்சுமி திரையரங்கை அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரில் பார்த்த நண்பர் ஒருவர் செய்தியை பகிர்ந்து கொண்டார். தியேட்டரின் முகப்பையே மறைத்து பிரம்மாண்ட பானர் கட்டிக் கொண்டிருக்கின்றனராம். வரும் நாட்களில் மகாலட்சுமி அரங்கமும் அதன் சுற்று வட்டாரமும் அதிரப் போவது உறுதி என்று சொல்கிறார்கள்.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும், அரங்க உரிமையாளர்களுக்கும், காண வருகை தர இருக்கும் ரசிக கண்மணிகளுக்கும் நமது வாழ்த்துகளும் நன்றிகளும்!
அன்புடன்
Thanks murali sir for sharing the latest news of decorations and preperations to welcome our HERO 72 -always hero for all of us.
my mind goes back to the most memorable golden days of NT FILM relese melas in chennai theatres. hope these days will continue to flow regularly in the days to come,
greetings to our rasigargal. we also extend warm welcome to general public and ladies.
paavam! puliyaippaarththu soodu pottukkonda poonai kadhai aagi vittadhey AO rerelease!! Karnan moolam vaarikkuviththa chokkalingam sir. this time neengal nondhulu aagamal irundhal sari.
சென்னை நிலவரம் - தியாகம்
சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் இன்று நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த சுஜாதா பிலிம்ஸ் தியாகம் திரையிடப்பட்டது, தினசரி 3 காட்சிகள்.
மதியம் காட்சி தொடங்கும் 45 நிமிடம் முன்னரே பொதுமக்களும் ரசிகர்களும் திரளாக வந்துவிட்டனர்.
திரையரங்க முகப்பு முழுவதையும் இதயவேந்தன் சிவாஜி மன்றம் பேநேர் தியாகம் என்ற பெயர் மட்டும் பெரிய அளவில் எழுதி இரண்டு பக்கமும் நடிகர் திலகம் படங்கள் பிரிண்ட் செய்யபட்டிருந்தது.
மதிய காட்சி சுமார் 389 பேர் கண்டுகளித்தனர் ! மாலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது திரையரங்கு உரிமையாளர் மொழியில் இருந்து !
மற்ற நகரங்களிலும் குறிப்பாக நம் நடிகர் திலகம் திரைப்படத்திற்கு புதிய படங்கள் பல ரிலீஸ் செய்தும், மிக சிறந்த வரவேற்ப்பு !
திரு சொக்கலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள திரைப்படம் நல்லதொரு வெற்றியடைய நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் ! பல பழைய படங்கள் மெருகேற்றி, நல்ல தரத்தில் வெளியிட்டு வரும் அந்த நிறுவனம் இளைய தலைமுறயினருக்கு தலைமுறை என்ற வரைமுறை இல்லாத கலைஞர்களை அறிமுகபடுத்துவது சிறப்பான ஒரு விஷயமாகும். !
நடிகர் திலகம் அவர்களை பற்றி தவறான அபிப்ராயம் இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் இருந்தது அதுவும் பல குரல் நிகழ்ச்சி என்ற பெயரில் nonsense தான் !
அதனை ஒரேயடியாக அடித்து நொறுக்கி கர்ணன் என்ற காவியத்தின் மூலம் சிவாஜி போன்ற ஒரு கலைஞன் எத்துனை ஆண்டுகள் கடந்தாலும் இனி வரமுடியாது என்று உணரவைத்தது !
வெளியிட்ட திரையரங்குகளில் இந்த கால கட்டத்தில் சத்தியம் திரை அரங்க வளாகத்தில் 152 நாட்களும் , எஸ்கேப் வளாகத்தில் 115 நாளும் ஓடி மாபெரும் சாதனை படைத்தது மறக்க முடியுமா ?
பார்த்ததில் பிடித்தது - 16
1959 ல் வந்த அற்புத படைப்பு தான் இந்த பதிவில் நான் எழுத போகும் படம் , 1959 என்ற உடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படம் எவர் கிரீன் வீர பாண்டிய கட்டபொம்மன் , ஆனால் நான் எழுத போகும் படம் 1959 ல் நடிகர் திலகம் நடித்து திரைக்கு வந்த முதல் படமான தங்கப்பதுமை.
6 நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளேன் , சற்றே விரிவாக ,
முதலில் படத்தின் கதையை பற்றி:
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை இது , பத்தினி கண்ணகியின் சிலை அமைத்து வழிபட நினைத்த மன்னர் தான் சேரன் செங்குட்டவன் . இந்த சிலையை செதுக்க கல் இயமமலையில் இருந்து கொண்டு வர பட்டது , அதுவும் எப்படி , கங்கையில் நீராடி , போரில் தோல்வி அடைந்த கனக விஜயன்யின் தலையில் அந்த கல்யை கருவூரில் கண்ணகியின் சிலையை நிறுவினார் சேரன்
உறையூரில் வணிகரான முத்துவேலர் , கண்ணகி தங்கத்தால் சிலை அமைத்து , அதில் யாரும் பெற முடியாத இரண்டு அபூர்வ இரத்தின கற்களை திருப்பணி செய்து வந்தார்
அவர் மகள் சிலம்பு செல்வி கண்ணகியை வழி பட்டு வந்து செல்வா செழிப்பில் வாழ்ந்து வந்தார் அங்கே பத்தினி கோட்டத்தில் நடனம் ஆடும் பொது மயங்கி விழிந்து விடுகிறார் செல்வி (பத்மினி ), அதனால் சிகிச்சை செய்ய வைத்தியர் அழைத்து வர படுகிறார் அவர் தான் மணிவண்ணன் (சிவாஜி சார் ) வைத்தியரின் மகன் , மணிவண்ணன் ஒரு அப்பாவை , உலகம் அறியாதவன் , செல்விக்கு சிகிச்சை செய்கிறான் , ஆனால் முத்துவேலர் தான் ஒரு பணக்காரன் என்ற மம்மதையில் அவரை அலட்சியம் செய்கிறார் .