தானே தன்னை பகையாது
தன்னை தானே இழியாது
தானே தனக்கு நண்பனென்று
தன்னை தானே தெரிந்தவன்
தாழான் என்றும் தரணியில்
தேனாய் இனிக்கும் அவன் இல்
https://encrypted-tbn2.gstatic.com/i...Dk7ryHPsL4zlbu
நன்றி : பகவத் கீதை
Printable View
தானே தன்னை பகையாது
தன்னை தானே இழியாது
தானே தனக்கு நண்பனென்று
தன்னை தானே தெரிந்தவன்
தாழான் என்றும் தரணியில்
தேனாய் இனிக்கும் அவன் இல்
https://encrypted-tbn2.gstatic.com/i...Dk7ryHPsL4zlbu
நன்றி : பகவத் கீதை
இல்லை என்பார்க்கு இல்லாதவன்
இருக்கிறான் என்பார்க்கு வழங்குபவன்
கண்ணால் காண முடியாதவன்
எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவன்
தலைவனுக்கு தலைவனாய் தலைமையேற்பவன்
அடிமைக்கு அடிமையாய் உழைப்பானவன்
பிறப்பும் இறப்பும் கொள்ளாதவன்
எதையும் தனக்கு கொள்ளாதவன்
எல்லா உருவும் எடுப்பானிவன்
அவனையே நாம் தேடுவோம்
நம்முள்ளே அவனை நிறுத்துவோம்
நிறுத்துவோம் ஆணின் அகங்காரத்தை
நடக்கும் அக்கிரமத்தை அடக்குமுறையை
நஞ்சாய் படிந்த அவன் அழுக்கு புத்தியை
நரகமாய் மாறிய நங்கையர் நாட்களை
இந்த நேரத்தில் இன்ன நபருடன் சென்றாய்
வன்புணர்ந்தபோது அடங்காது திமிறினாய்
அதனால் கொன்றோம் இதுவே தொடரும்
சாகக் காத்திருக்கும் விலங்கின் வாக்குமூலம்
தூக்குக்கயிறு போதாது போதவே போதாது
எப்படி நொடியில் இவனை கொல்லலாம்
எண்ணெய் கொப்பரை சுண்ணாம்பு காளவாசல்
குலை நடுங்கும் பல்வேறு சித்திரவதைகள்
தரவேண்டாமா இதயமற்ற இக்கயவர்க்கு
இதயமற்ற இக்கயவர்க் கென்ன வேண்டும்..
நான் கேட்கின்றேன்
இப்படி பலவிதமாய்
மக்களின் பணத்தை செலவு
பலவாறாய்ச் செய்கிறார்களே..
நான் கேட்கின்றேன்
ஏன் அப்படி..
நான் கேட்கின்றேன்..
பேச்சாளர் திரும்பக் கேட்டபோது
எழுந்த்து குரல்
உங்களுக்கும் வேண்டுமா பங்கு
காதில் விழுந்த்தாலோஎன்னவோ
முடித்தார் விரைவாக பேச்சை...
பேச்சைக்குறை கூறாதே குறை
எண்ணியே கூறு எதையும் ஆழமாய்
ஏச்சு வேண்டாம் என்றுமே அது பகை
மிகை வேண்டாம் வேண்டுமே புன்னகை
மற்றவரை அறிந்து உண்மையை புரிந்து
மயக்கமின்றி பேசுதல் மாந்தர்க்கு அழகு
https://encrypted-tbn3.gstatic.com/i...qc7kGPLcZcko-H
அழகுதனைக் காட்டிவிட்டே சற்றே ஓடி
...ஆடித்தான் மறைந்துவிட்டாய் நினைவி லுண்டா..
பழகுதற்கு இனியகுரல் பார்வை மட்டும்
.. பளபளத்து அங்குமிங்கும் சுற்றி ஓடும்
வளமுடனே விகசிக்கும் இளமைத் துள்ளல்
...வாகாக உடைநடையில் தெரியும் அன்றோ
கலகலப்பாய்ச் சிரித்திருந்தாய் அந்தக் காலம்
...கண்களிலே ஈரமின்று ஏனோ சொல்வாய்
என்னவெல்லாம் பேசுகிறாய் போடா போப்போ
...ஏதேனும் தெரியாமல் இருந்த காலம்
எண்ணமெலாம் சிறுவயதில் உந்தன் பின்னே
...ஏந்திழையாய்த் தொடர்ந்திருந்த காலம் நெஞ்சில்
இன்னுமின்னும் பேசத்தான் ஆசை உண்டு
... இன்றெனக்குப் பொழுதில்லை கண்ணின் ஈரம்
வண்ணமாக உனைப்பார்த்த ம்கிழ்ச்சி யால் தான்
...வாழ்வினிலே எனக்கொன்றும் குறையொன் றில்லை
குறையொன்றில்லை கண்ணா
மூதறிஞர் அழகாய் சொன்னார்
பாலையில் நடக்கையிலவன்
தோள் மீதெனை சுமக்கையில்
வாட்டமெனக்கு வருவதில்லை
வருந்தாத மனம் நிலைக்கட்டும்
நிலைக்கட்டும் என்றே நாம் நினைப்பதுண்டு
நிலைத்திட்டால் இவ்வுலகு நமக்கில்லை
நிலையானதில்லை என்ற வார்த்தையே நிலை
நிலையானதில்லை வேறொன்றுமே என அறிவோம்.
அறிவோம் போலிகளை
பொய்களை புரட்டுகளை
பாசாங்கு பேச்சுக்களை
பச்சோந்தி பிறழ்வுகளை
பொங்காத பாலாய்
போதுமா பொறுமை
பொறுமை இன்றி பித்தாய் என்றும்
பொருள் தேடி புரட்டி அலைகின்றோம்
என்றோ ஒருநாள் சாகப் போகின்றோம்
செத்தால் அன்று வேகப்போகிறோம்-ஆனால்
அனுதினமும் வெந்து வெந்து சாகிறோம்
அழுக்காறு அவா வெகுளி கொண்டே சகா !
http://www.videoinspiration.net/blog...4/11/greed.jpg