-
இயல்பாக மட்டுமே காட்சி அமைந்தால் அது கலைப்படம் !
வெகு ஜனங்கள் ரசிக்க மாட்டார்கள் !
இயல்பாகவும் வெகு ஜனங்கள் ரசிக்கும்படியான நடிப்பு இருந்தால் அது புரட்சிகரமான நடிப்பு இதைத்தான் நம் மக்கள் திலகம் தன் படங்களில் கையாள்வார் இப்பாடல் காட்சியை பாருங்கள் மென்மையான காதல் காட்சி இருவரின் முகபாவங்களையும் குரும்புகளையும் ரசித்து கொண்டே இருக்கலாம் இதிலும் தன் வீரத்தையும் தமிழையும் விடவில்லை பாடலின் ஆரம்ப காட்சியில் வழக்கும் தண்ணீரையும் பொருட்படுத்தாமல் இரண்டு பெரிய பைப்பை பிடித்து ஒரே ஜம்பில் ஏறுவார் டபுள் பார் அடிப்பவருக்கே இது சாத்தியம் !
குளிர் காற்று கிள்ளாத மலர் அல்லவோ !
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ !
நிழல் மேகம் தழவாத நிலவல்லவோ !
நெஞ்சோடு நீ சேர்த்த பொருளல்லவோ !
மலர் மேனி தனைக் கண்டு மகிழ்ந்தாடவோ !
மணக்கின்ற தமிழ் மண்ணில் விளையாடவோ !... Thanks whatsapp friends...
-
👌🏼வாழ்த்துக்கள்.....சிறிய வேண்டுகோள்! முடிந்தவரை 'லோக்கல்' நடிகர்களையும்,அரசியல்வாதிகளையும் அழைக்காமல் இருப்பதே நமக்கு நலம்....நாங்கள் சொல்லவரும் 'ஒரு சில நடிகர்களால்' பல,பல பிரச்சனைகள்தான் உண்டாகுமேயொழிய, நண்மை பயப்பது, யாதொன்றுமில்லை! உதாரணத்திற்கு ஒரே ஒரு சம்பவம்....சமீபத்தில் 'நாடோடிமன்னன்' Digital Releaseல்....படத்தின் ஆரம்பத்தில் ஒரு நடிகரை(நாகரீகம் கருதி பெயரை தவிர்த்திருக்கிறோம்) காட்டியதற்கு ஏற்பட்ட எதிர்ப்பும்,அதனால் 2 நாட்களில் அதை நீக்கியதும்,அனைவரும் அறிந்த ஒன்றே! அம்மாதிரி ஏதும் ஏற்படாவண்ணம்,மக்கள் திலகத்தின் உயிராய் இருக்கும் மக்களை நம்பினாலே, இம்மாபெரும் விழா உலகளவில் பேரும்,புகழும் பெறும் என்பது மக்கள் திலகத்தின் உண்மை ரசிகர்கள்,வழிவந்தவர்கள்,மற்றும் அனைத்து பொது மக்களின் அன்பு வேண்டுகோளாய் விடுக்கிறோம்.....நன்றி.....அன்பன் , ரசிகன்...
-
எம்ஜிஆர்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த சமயம் ,காலை சிற்றுண்டி அருந்திவிட்டு ,வெளியே கிளம்ப தயாராகிறார் . அப்பொழுது அவரை அடிக்கடி சந்திக்கும் செல்வாக்கு உள்ள ஒருவர் தன் நண்பர் முருகேசன்(பெயர் உறுதியாக தெரியவில்லை) என்பவருடன் தலைவரை பார்க்க வந்துள்ளார் . அவரை பார்த்த மக்கள் திலகம் , முதலில் சாப்பிட சொல்கிறார் . பின் உதவி ஏதாவது செய்யனுமா என்று தலைவரே கேட்டுள்ளார் .
வந்தவர் சொன்னார் ,"அண்ணே இவர் பெயர் முருகேசன் ; தேனாம்பேட்டை சிக்னல் அருகே பீடா கடை நடத்திவருகிறார் . அதில் ஒரு சிக்கல் ,கடை சற்று ஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது ,இதை காரணமாக வைத்துக்கொண்டு , இவருக்கு ஆகாத சிலர் அதிகாரிகளை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் . இந்த கடையை நம்பி தான் இவரது குடும்பமும் உள்ளது . வேறுவழியில்லாமல் உங்களிடம் அழைத்துவந்தேன் . " என்றார் .
தலைவர் சில நொடி யோசித்துவிட்டு ,புன்னகையுடன் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார் .
அதன் பின் மூன்று நாட்கள் ,கோட்டையிலிருந்து வீட்டிற்கு தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே செல்கிறார் .போகும்பொழுது பீடா கடையை கவனித்துக்கொண்டே செல்கிறார் .ஆக்கிரமிப்பு இருந்தாலும் பீடா கடையினால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் இல்லை என்று அறிந்த மக்கள் திலகம் , முதல்வராக இருந்துகொண்டு ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக அதிகாரிகளுக்கு உத்தரவு எப்படி போடமுடியும் என்பதையும் உணர்ந்தே வைத்திருந்தார் .
அடுத்த நாளும் தேனாம்பேட்டை சிக்னல் வழியாகவே எம்.ஜி.ஆர் செல்கிறார் . பீடா கடை அருகே வந்ததும் , பத்துமீட்டர் தொலைவிலேயே காரை நிறுத்த சொல்கிறார். அதிகாரிகளுக்கோ குழப்பம் , திடீரென்று நிறுத்த சொல்கிறாரே என்று. பின் காரின் கதவை தானே திறந்துகொண்டு , பீடா கடையை நோக்கி வேகமாக தனக்கே உரித்தான அந்த கம்பீர நடையில் நடக்கிறார் .
தலைவர் நம்ம கடையை நோக்கி வர்றாரே என்று முருகேசனுக்கும் குழப்பம் .செய்வதறியாது நிற்கிறார். பீடா கடையை அடைந்த தலைவர் , "என்ன முருகேசா , இப்போல்லாம் தோட்டத்து பக்கம் ஆளையே காணம் . தொழில் லாம் எப்படி போகுது ? என்று ரொம்ப நாள் பழகிய நண்பன் போல் முருகேசனுடன் உரையாடுகிறார் . முருகேசன் எந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் உளறுகிறார் .
"சரி ஏதாவது உதவி வேணும்ன்னா தோட்டத்துக்கு வா "என்று சொல்லிவிட்டு மீண்டும் காரில் ஏறி , கோட்டைக்கு சென்றுவிடுகிறார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
அவர் சென்ற அடுத்த நொடியே விஷயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. முருகேசன் தலைவருக்கு வேண்டப்பட்டவரா ? அவரே இறங்கி வந்து முருகேசன்கிட்ட பேசுனாரா ? சின்ன வயசுல இருந்தே ரெண்டு பேரும் நண்பர்களாம் என்று ஆளாளுக்கு தாங்கள் கேள்விப்பட்டதை பரப்பிவிடுகிறார்கள் .தொல்லை கொடுத்த அதிகாரிகள் பலருக்கும் பயம் தலைக்கேறியது . வேண்டாதவர்கள் என்று சொல்லப்பட்ட பலரும் முருகேசனை பார்த்து சலாம் போட்டதுடன் ,பின்னாளில் அவர் கிட்டேயே ரெக்கமன்ட் க்கு வந்தது வேறு விஷயம்
#தலைவர் நினைத்திருந்தால் , தொல்லை கொடுத்தவர்களை போனில் மிரட்டியிருக்கலாம் , அதெல்லாம் ஒரு முதல்வருக்கோ , தலைவருக்கோ தகுதியான குணமல்ல .வேறு யாராக இருந்திருந்தால் , இதெல்லாம் ஒரு விஷயமா என்று மறந்தே போயிருப்பார்கள் ,இல்லையெனில் ,போனில் மிரட்டியிருப்பார்கள் . அதிகாரிகளுக்கும் சொல்லாமல் , ஆக்கிரமிப்பை அகற்றவும் சொல்லாமல் அந்த பீடா கடைக்காரருக்கு உதவிய வல்லமை நம் கலியுகக் கர்ணனுக்கு மட்டுமே உண்டு . இன்னும் எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் அவரின் பெயர் தான் தமிழ்நாட்டை ஆளும்... நன்றி...
-
#திருமதி.#சீதாலட்சுமி எழுதிய "வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்கள்" கட்டுரையிலிருந்து...
எல்லாத் திட்டங்களையும் விட இந்தியாவே ஏன் உலகமே புகழும் ஓர் திட்டம் என்று ஒன்று என்றால் அது திரு. எம்ஜிஆர் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட சத்துணவுத் திட்டமாகும். குழந்தைகளின் பசி தீர்க்க வந்த திட்டம். எல்லா கிராமங்களிலும் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைப் பார்த்து மற்ற மாநிலங்களிலும் குழந்தைகள் நலத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சத்துணவுத் திட்டத்தைப் பிரித்து தனித் துறையாக ஆக்கும் முயற்சி நடந்தது. ஆனால் நான் முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து அது பற்றிக் கூறியவுடன்... “#தாயையும் #சேயையும் #பிரிக்க #மாட்டேன்” என்று கூறி தடுத்துவிட்டார்.
எம்ஜிஆர் சினிமா உலகில் ஓர் நிர்வாகியாய் வலம் வந்தவர். அவருடைய ரசிகர்கள் தான் அவரது கட்சித் தொண்டர்கள். முதல்வரான பிறகு மற்றவர் மனம் புண்பட குத்தலாக அவர் என்றுமே பேசிய தில்லை. யாருடைய நம்பிக்கைகளையும் விமர்சிக்கவில்லை. அண்ணா அவர்கள் அறிஞர். படித்தவர். ஓர் இயக்கத்தில் இருந்து போராடி வந்தவர். அவர் சீக்கிரம் மறைந்தது ஒரு குறை.
ஆனாலும் "எம்ஜிஆர் அவர்கள் இது கட்சி கொள்கை என்று சாதீய உணர்வுகளை எழுப்பவில்லை..." எல்லோரும் அவரை விரும்பினார்கள்.
அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல, மற்றவர்களும் விரும்பினாகள். அவர் உடல் நலம் பாதிக்கப்படவும் எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடுகள் நடத்தினார்கள் என்பது உலகறிந்த உண்மை.
சில கொள்கைகளுக்காக இயக்கங்கள், கட்சிகள் ஆரம்பிக்கலாம். ஆனால் ஓர் பொறுப்பில் வந்தவுடன் அங்கே துலாக்கோலைப் போல எல்லோருக்கும் நன்மை செய்ய நினைக்க வேண்டும். பிரிவினைகளை வளர்க்கக் கூடாது. காழ்ப்பு உணர்ச்சியைத் தூண்டக் கூடாது. இந்த விஷயத்தில் அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு திரு எம் ஜி ஆர் அவர்கள் எல்லோரையும் அரவணைத்தார்...
எம்,ஜி. ஆர் அவர்கள் ஓர் சினிமாக்காரர்தான். அவர் மிக நல்ல மனிதர். மிகச்சிறந்த மனிதநேயர். அரசியல் உலகில் காலில் வீழும் கலாச்சாரத்தைக் கிண்டல் செய்கின்றவள் நான். #ஆனால் #நானே #என்னை #மறந்து #ஒருவரை #வணங்கினேன் #என்றால் #அது #எம்ஜிஆர் #அவர்களைத் #தான்.
பன்னாட்டுத் தொழிற்சங்கத்தில் மகளிர் நலக் குழுவிற்கு என்னை நியமித்திருந்தார்கள். இது ஓர் தொழில் சங்கம். அரசின் பரிந்துரையல்ல. ஒருவரின் சாதனைகளை வைத்து தேர்ந்தெடுப்பார்கள். ஆசியாக் கண்டத்திற்கும் பசிபிக் பகுதிக்கும் என்னைப் பொறுப்பாளராக்கி இருந்தார்கள்.
இந்த செய்தியைக் கூறப் போயிருந்த பொழுது அவர் என்னை வாழ்த்தினார். #அந்த #தெய்வீகமுகமும் #குரலும் #என்னை #அவரை #வணங்கவைத்தது. #தாய்க்குலத்தை #மதிக்கும் #அவர் #குரலில் #அன்று #தாய்மைப்பரிவை #உணர்ந்தேன். யாரையும் புகழ்ந்து எனக்கு இப்பொழுது எந்தக் காரியத்தையும் சாதிக்க வேண்டியதில்லை. என் உணர்வுகளை எழுதுகின்றேன்.
#மனிதநேயம் #உள்ளவர்கள்தான் #மனிதம் #காப்பாற்றுகின்றார்கள்..... Thanks...
-
புரட்சித் தலைவரின் புகழ் பரவ
அவர் மலரும் நினைவுகள்
பதிவுகளை பகிரும்
பெருமையோடு
மக்கள் திலகம் எம்ஜிஆர் ஒரு அமுத சுரபி
உலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்களில் மக்கள் திலகம் ஒருவரின்
புகழ் மட்டுமே அமுத சுரபி போல வந்து கொண்டே இருக்கிறது . அவரை பற்றிய செய்திகள் பலரால் தினமும் நினைவு கூறப்படுகிறது .மக்கள் திலகத்தின் அழியாப்புகழ் ஒரு வரலாற்று சாதனையாகும் .
ஒரு தனி மனிதரின் இயக்கம் 41 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி நடை போடுவதும் மக்கள் திலகத்தின் படங்கள் தொடர்ந்து 50 ஆண்டுகளாக திரை அரங்கில் ஓடிக்கொண்டிருப்பது ,
சின்ன திரையில் அவருடைய படங்கள் , பாடல்கள் காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருவது
மூலம் எம்ஜிஆரின் புகழ் அறியப்படுகிறது .
எம்ஜிஆரின் மனித நேயம்- அவரால் பயன் அடைந்தவர்கள் - பலரும் இன்று நினைவு கூர்கிறார்கள் .
மக்கள் திலகத்தின் பெயரை சொல்லிக்கொண்டு வெற்றி பெற்ற எல்லா தரப்பு கட்சி உறுப்பினர்கள்
பாராளுமன்ற - சட்ட மன்ற - மாநகராட்சி மன்ற - உறுப்பினர்கள் முதல் கொண்டு கட்சி நிர்வாகிகள்
தலைமை கழகம் வரை நன்றி மறந்தவர்கள் கூடாரமாக , முதுகெலும்பு இல்லாத மனிதர்களாக
இருட்டடிப்பு செய்யும் இவர்களை நாடு நன்கறியும் .
பதவியில் உள்ளவர்கள் மறந்தாலும் உலகில் உள்ள உண்மையான மக்கள் திலகத்தின் ரசிகர்கள்
என்றென்றும் அவரின் நினைவால் வாழ்வார்கள் .
புரட்சித் தலைவர் ரசிகர்கள்...
-
என்னுடைய 21000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் தெரிவித்த பின்வரும் அனைத்து நல் இதயங்களுக்கு இதயங்கனிந்த நன்றி.
திரு.வினோத்,
திரு.சி.எஸ். குமார், ,பெங்களூரு
திரு.கலியபெருமாள், புதுவை ,
திரு.எஸ். குமார், மதுரை,
திரு.தமிழ் நேசன், மதுரை,
திரு.ராஜா, நெல்லை .
திரு.சேகர், கோவை.
திரு.கமலக்கண்ணன், கோவை.
திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
திரு.குமரவேல், திண்டுக்கல் .
திரு.மலரவன், திண்டுக்கல் .
திரு.ஏ.பி.பாபு, பெங்களூரு .
திரு.ராஜு, உரிமைக்குரல் ஆசிரியர் ,
திரு. சேர்மக்கனி , விநியோகஸ்தர் ,
திரு.சொக்கலிங்கம்,திவ்யா பிலிம்ஸ்
திரு.மேஜர் தாசன் , குமுதம் ஆசிரியர் ,
திரு.கலைவேந்தன், தமிழ், இந்து
திரு.ஜேம்ஸ், (பிரேசில் நாடு )
திரு.சுந்தரதாஸ், சிட்னி,ஆஸ்திரேலியா
திரு.வெங்கடேச பெருமாள் ,
திரு.முருகன்
திரு.எஸ். விஜயன், இதயக்கனி ஆசிரியர் ,
திரு.பாஸ்கரன், கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்
திரு.இளவேனில் , எம்.ஜி.ஆர். 100 ஜெயா டிவி
திரு.ராமு, தங்கசாலை, எம்.ஜி.ஆர். பக்தர்
திரு. சுந்தர், மடிப்பாக்கம்
திரு.ஜெகன், ஆரணி .
திரு.ரவி, ஆரணி .
திரு.ஒம்பொடி பிரசாத்
திரு.சுகாராம் .
திரு.மாரிமுத்து
திரு.ஈ.பாண்டியராஜ்
திரு.இளங்கோ .
http://i65.tinypic.com/33p8xoo.jpg
-
கடந்த 3/7/18 முதல் சென்னை பாட்சாவில் , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள் (3 நாட்கள் மட்டும் _ திரையிடப்பட்டது .
http://i63.tinypic.com/2qkihj7.jpg
-
இன்று முதல் (6/7/18) கோவை ராயலில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/i529eh.jpg
-
வியாழன் முதல் (5/7/18) மணப்பாறை இந்திராவில்(புதிய அரங்கில் ), மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட வெற்றிப்படமான டிஜிட்டல் "அடிமைப்பெண் " தினசரி 4 காட்சிகளில் வெளியாகியுள்ளது .
http://i64.tinypic.com/2hn9m9y.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா.
-
இன்று முதல் (6/7/18) நெல்லை கணேஷில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கலாக நடித்த டிஜிட்டல் "எங்க வீட்டு பிள்ளை " 4 மாத இடைவெளியில் மீண்டும் திரைக்கு வந்துள்ளது .
http://i64.tinypic.com/ve7mro.jpg
தகவல் உதவி : நெல்லை பக்தர் திரு.வி.ராஜா .