HATS OFF TO MR. ROOP SIR, your messages, articles about puratchithalaivar- so enthusiasm type contents... makkalthilagam got several positive attitude kinds... A-Z expansions of letters too cheerful, smart, distinction aspects...
Printable View
HATS OFF TO MR. ROOP SIR, your messages, articles about puratchithalaivar- so enthusiasm type contents... makkalthilagam got several positive attitude kinds... A-Z expansions of letters too cheerful, smart, distinction aspects...
எம்.ஜி.ஆருக்கு நினைவஞ்சலி!
திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர். 'தனது பாணி' என்று தனி முத்திரையைப் பதித்தவர். சினிமாவை எடுத்துக்கொண்டால் அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.
அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே! தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்தபோது, 'நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது' என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலிலேயே தி.மு.க.வை தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆகிவிட்டார்!
பிறகு இந்திரா காந்தி அவரது ஆட்சியைக் கலைத்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று தப்புக்கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ, தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதல் அமைச்சர் ஆனார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக்கொண்டு வாகை சூடியவர் அவர்.
ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபிறகும் அவருக்கு பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் வெடித்ததையும் எதிர்கொண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும், கட்சித்தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள்முன் வெறும் செல்லாக்காசாக்கிக்காட்டினார்.
அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்டபோதும் தனது அரசியல் வாரிசு யார் என்பதை அவர் சொல்ல மறுத்தார். 'தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசு அரசியல் நியமிக்க என்று சொல்லாமல் சொன்னார்.
இதையெல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு புதிர், அவர் ஒரு தனி சாதனையாளர், அவர் ஒரு அதிசயம் என்றுதான் எடைபோட முடிகிறது.
எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம்தான் என்ன? உண்மையில் யுகப்புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப்போல, அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.
உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர். தோன்றமுடியாது!
{1987 ல் எம்.ஜி.ஆர் இறந்தபோது 03.01.1988 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம் இது)
திருவாளர்கள் as. பிரகாசம், சத்யராஜ் கூறியிருப்பது நூற்றுக்கு,நூறு சதவீதம் சரியானது- என்ற உண்மை மக்கள்திலகம் அவர்களோடு சம்பந்த பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் தொடர்பு இல்லாதவர்களுக்கும் இது நடைபெற்ற உண்மை தகவல் என நம்பிக்கை கொள்ளவதே புரட்சி நடிகரின் மாண்பு தான்...வைரத்தை எத்தனை பக்கம், பக்கமாக பட்டை தீட்டினாலும் தீட்சணியமான ஒளியை தரும் என்பது ஆன்றோர் அனைவரும் அறிந்ததே!!! புத்தகம் வாங்க போன இடத்தில கூட அவர் எத்தகைய அணுகுமுறையை தயவு - தாட்சணியமன்றி கடை பிடித்திரிகிறார் - என அறியும்பொழுது எழும் வியப்பானது அடங்கவே வெகு நேரம் பிடிக்கும்...
திரை உலக வரலாற்றை ஆழ்ந்து நோக்கும்பொழுது சில, பல ஆச்சரிய, அதிசய, விசித்திர, வினோத தகவல்கள் பல்துறை நிபுணர்களாலும் வர பெற்றிருக்கிறோம் ! - அவற்றில் புதிய திரை படங்கள் வெளிவரும்பொழுது percentage - terms, minimum guarantee system- ( MG.,), fixed hire system- ( FH .,), theatre lease or rental , என பல வகை முறையில் படங்களை திரையெடுகின்றனர் ...இதில் முதல் வாரம் பட விநியோகஸ்தருக்கு 75% or 70% - திரை அரங்க உரிமையாளருக்கு 25% or 30% என விகிதம் பிரித்து கொள்ளப்பட்டு அவ்வாறே ஒரு வாரம், வாரமாக சதவிகிதம் ஒருபக்கம் குறைந்து ஒரு பக்கம் கூடி கொண்டு வரும்... இதில் மறு வெளியீடு என்று பார்த்தால் - மக்கள்திலகம் நடித்த திரை படங்களே அதிக விலையோ or terms 60% இக்கு குறையாமல் எல்லா இடங்களிலும் திரையிட பட்டுள்ளதே - MGR படத்துக்குள்ள மவுஸ்--- வெளிபடுகிறது !!!
மக்கள் திலகத்தின் மறைவைத் தொடர்ந்து ஆனந்த விகடனில் வெளி வந்த தலையங்கம் வரலாற்று உண்மையை சுருக்கமாக எடுத்து கூறியது.
பதிவுக்கு நன்றி எம்ஜிஆர் ரூப் ஸார்.
[FONT=Arial][SIZE=5]அழகெனும் ஓவியம் இங்கே. இலக்கிய காவியம் இங்கே; என்றும் இளமை மாறாமல் வாழும் சரித்திரமே - நீ எந்தன் தலைவன் என்றெண்ணும் எண்ணம் இனித்திடுமே. ஒன்றா இரண்டா என்னாசை சொல்லில் வருவதில்லை - நான் உன்னால் அடையும் பேரின்பம் அந்த சொர்க்கம் தருவதில்லை. புத்தனின் முகமோ உலகின் தலைசிறந்த தத்துவ சுடரோ. http://i40.tinypic.com/20kyyc0.jpg
எம்ஜிஆர் போல் நடனம் ஆடுவது மிகவும் சிரமம். எவ்வளவு கடினமான நடனம் என்றாலும் அதைக்கற்றுகொண்டு திறம்பட ஆடக்கூடியவர் என்று அவரை இயக்கிய நடன இயக்குனர்களே கூறுகின்றனர். உதாரணமாக மன்னாதி மன்னன், கன்னித்தாய், தனிப்பிறவி, குடியிருந்த கோயில், கலங்கரை விளக்கம், அன்பே வா, ரிக்ஷாக்காரன், நேற்று இன்று நாளை என பெரும்பாலான படங்களில் தன்னுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தியவர். பெரிய இடத்துப்பெண்ணில் மேலை நாட்டு நடனத்தில் அசத்தி தொடர்ந்து தெய்வத்தாய் உள்ளிட்ட பல படங்களில் அதைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர். குடியிருந்த கோயில் திரைப்படத்தில் அவர் ஆடிய பஞ்சாபி நடனத்தின் சிறப்பும் அழகும் இன்றுவரை திரையில் காணமுடியவில்லை
http://i39.tinypic.com/2m3sbir.jpg
http://i43.tinypic.com/351etme.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
courtesy: Idhayakkani magazine
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் படத்தில் இடம் பெற்ற ''ஆயிரம் நிலவே வா '' மிகவும் புகழ் பெற்ற பாடல் .
புலவர் புலமை பித்தனின் இலக்கிய நயத்துடன் தூய தமிழில் காதலர்களின் உணர்வுகளை பிரதிபலித்த
காவிய பாடல் .அறிமுகபாடகர் திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம்- சுசீலா இருவரின் தேன் குரலில் வெளியான இந்த
பாடல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் திலகத்தின் ரசிகர்கள் என்றென்றும் விரும்பி கேட்கிற பாடல் .
மேடை கச்சேரிகளில் உலகமெங்கும் இந்த பாடல் பல முறை இசைக்கப்பட்டுள்ளது .
வெளிநாட்டில் நடந்த இந்த மேடை கச்சேரியில் பாடலை பாடும் பாடகர்கள் தங்களை மறந்து , அனுபவித்து
பாடும் மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் பாடல் .............
http://youtu.be/04e3FUSzRxA