https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...7b&oe=58051E9E
Printable View
வாசு,
தாமதமாக சொல்வதற்கு மன்னிக்கவும்.
மொத்தம் இரண்டு நன்றிகள்.
ஒன்று, அந்த நாள் ஞாபகம் தொடருக்கு அளித்த பாராட்டிற்கு! முன்பே சொன்னது போல் நான் விரும்பி எழுதும் தொடர். நமது தகவல்களை பயன்படுத்திவிட்டு 3-க்கு பதில் 4, தேங்காய்க்கு பதிலாக மாங்காய் என எழுதி விட்டீர்கள் [இவற்றால் எந்த உண்மை தகவலும் மாறிவிடப் போவதில்லை என்ற போதிலும்] ஆகவே வரலாறு தெரியாத நபராக நம்மை அடையாளப்படுத்த துடிப்பவர்கள் மத்தியில் உங்களைப் போன்றவர்கள் பாராட்டுவது நிரம்ப மகிழ்ச்சியளிக்ககூடியது.
இரண்டாவது நன்றி சந்தேகமென்ன? நிச்சயமாக ராஜாவிற்குதான்! தொடருங்கள்!
அன்புடன்
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு!No.1 :நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்றுவரை ஓர் நினைவு தந்தாய் ....சாந்தி !Quote:
அன்பு நேசம் காதல் பரிவு பாசம் எல்லாம் குடிபுக நினைக்கும் இடங்களே மனம் இதயம் நெஞ்சம் .....என்ன வித்தியாசம் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற இயலவில்லை. ஆனாலும் நேசம் நேராக தஞ்சம் புகும் இடமே நெஞ்சம்...அன்பு மிஞ்சும் மனமே நெஞ்சம் ...காதல் கொஞ்சும் இதயமே நெஞ்சம் ...என்று நம்புகிறேன் !
நெஞ்சம் நிறைந்த நெஞ்சத்தைத் துளைத்த நெஞ்சம் தொலைந்த நெஞ்சம் கிஞ்சித்தும் மறக்கவோன்னாத மதுர கானங்கள் ...எனது நெஞ்சிருக்கும் வரை !
பாடலின் தெளிந்த நீரோடை வரிகளாகட்டும் இசை நேர்த்தியாகட்டும் சுசீலாம்மாவின் தேனினுமினிய குரல் குழைவாகட்டும் நடிகர்திலகத்தின் சதனார் விசிலின் உதட்டுக் குவிப்பசைவாகட்டும் தேவிகாவின் எழிலாகட்டும் எனது நெஞ்சைவிட்டு நீங்காத பாடல்களில் தனியிடமே !
https://www.youtube.com/watch?v=sQpeP2lLBFg
நெஞ்சம் நிறைந்த மதுர கீதங்களின் அணிவகுப்பு!
No.2
அன்புக்கும் காதலுக்கும்தான் நெஞ்சம் என்றில்லாமல் கோபத்தின் கொள்ளிடமாகவும் அது மாறிவிடும் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பொறுமையை சோதித்திடும் போது ! நடிகர்திலகத்தின் அகக்கோபம் முகபாவத்திலே ....பராசக்தி
https://www.youtube.com/watch?v=JgUOyi2TWyo
No.3 :
எதிர்மறை எண்ணங்கள் உதிர்ந்து நேர்சிந்தனைகள் நெஞ்சிருக்கும் எங்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையைப் புகுத்தும்போதும் ....நெஞ்சிருக்கும் வரை ..
https://www.youtube.com/watch?v=NaItT2DZVXU
நெஞ்சம் மறக்கவோன்னாத மதுர கானங்களின் அணிவகுப்பு ...மரியாதை நடிகர்திலகத்துக்கு !
தமிழ்த் திரை கண்ட மிகச்சிறந்த காதல் காட்சிய்மைப்புக்களில் இதமானது !
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு கண்ணில் குடியிருக்கும் காதலியின் நிலைமை உணர்த்தும் கண்ணியமான காட்சியமைப்பு !!
No. 4 வெள்ளித்திரையோ வண்ணத்திரையோ பெண்ணின் மனமென்னும் புரியாத புதிரை உள்ளடக்கிய காதல் நெஞ்சத் திரை இரும்புத்திரையா பனித்திரையா பட்டுத் துணித்திரையா ?! ....இல்லை வெறும் மண்குதிரையா?!
https://www.youtube.com/watch?v=R5xuTfQcHeA
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி ....பாரதியின் பாரதிரும் நெஞ்சின் நிலைப்பாடு நடிகர்திலகத்தின் நெஞ்சில் தஞ்சம் !
No.5 கப்பலோட்டிய தமிழன்
https://www.youtube.com/watch?v=YtFJhQm1kBg
மனித வாழ்வில் மறதி என்னும் கசப்பு மருந்தே மனதின் ரணங்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது படைத்தவனாகிய இறைவனின் படைப்பு வினோதமே !
ஆனாலும் பழையதை மறந்து புதிய பறவையாக வட்டமிட திட்டமிடும்போது மறந்ததைஎல்லாம் நெஞ்சத்தின் நினைவில் மீட்டுக் கட்டம்கட்டிட வந்ததையாஒரு பழைய பறவை !! எந்த திரைக் கதாபாத்திரமும் இவ்வளவு நெஞ்சுவலி தரும் இன்னல்களை சந்தித்ததில்லை ! அந்த வேதனைகளை வெளிப்படுத்தியதில் உலகநடிகர் எவரும் நமது திலகத்தை மிஞ்சியதுமில்லை !
அவர் நமது இதயக் குடிலில் வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ..... மறந்ததே என்ன நெஞ்சமோ !
No. 6 : புதிய பறவை!
https://www.youtube.com/watch?v=vkMpyPk6Mss
https://www.youtube.com/watch?v=VwZc1nQTWzQ
பைலட் பிரேம்நாத் பத்திரிகைகளின் தொகுப்பு தொடர்கிறது.....
http://oi65.tinypic.com/2cwv04j.jpg