அதிகமா பேசாதே
அதிகமா சாப்பிடாதே
அதிகமா விளையாடாதே
அதிகமா படம் பார்க்காதே
அதிகமா படி
என்றெல்லாம் சொன்ன அம்மாவின் வார்த்தைகள்
பிற்காலத்தில் தான் புரிந்தது
வேலைகிடைத்த பிறகு..
ம்ம்
எக்காலத்திலும்
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்..
Printable View
அதிகமா பேசாதே
அதிகமா சாப்பிடாதே
அதிகமா விளையாடாதே
அதிகமா படம் பார்க்காதே
அதிகமா படி
என்றெல்லாம் சொன்ன அம்மாவின் வார்த்தைகள்
பிற்காலத்தில் தான் புரிந்தது
வேலைகிடைத்த பிறகு..
ம்ம்
எக்காலத்திலும்
மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்..
அமிர்தம் கடைந்தெடுக்க
அசுரர் உதவிடவேண்டும்
அதில் பங்கு மட்டுமில்லை
அநீதியின் அமரத்துவம்
அமரத்துவம் அடைந்தார் என வரும்
அபிச்சுவரி எனத் தமிழில் வரும்
நீத்தார் நினைவுகள் விளம்பரங்களில் வரும்
புகைப்படத்தில் இருக்கும் சிரிப்பு
மட்டும்
பல சேதிகள் சொல்வதாக
எனக்குப் படுகிறது
எனக்குப் படுகிறது இதெல்லாம் தவறென்று
ஒத்துக்கொள்ளவில்லையே இவ்வுலகம்
தின்னக்கூடாததை தினம் தின்கிறார்கள்
செய்யக்கூடாத பலவும் செய்கிறார்கள்
இத்தலைமுறையின் அறிவில் மயக்கம்
இதை சொல்லிட எனக்கில்லை தயக்கம்
தயக்கம் கொள்ளுகின்றேன் எனக்கு தெரிந்தததையும் பேசிடவே
வியப்பும் அடைகின்றேன் சிலர் தமக்கு தெரியாததையும் பேசிடவே!!!
சாத்தியம் ஆனது இவரால் எவ்வாறு, என்னால் முடியாதபோது
பாத்தியம் கொண்டாடிட முடியாது எவரும் இத்திறமைக்கே.
இத்திறமைக்கே ஆசைப்பட்டேன்
கை வரத்தான் அது மறுக்கிறதே
செடியில்லை நீர் விட்டு வளர்க்க
ஆடில்லை இலை தழை கொடுக்க
எப்படித்தான் நான் வளர்ப்பேன்
வக்கணையாய் கவிதை வடிப்பேன்
கவிதை வடிப்பேன் என்றேதான்
…காகி தத்தைப் பிடித்தாலும்
நவில மறுக்கும் குழந்தையென
… நன்றாய் ஏதும் வாராமல்
தவித்துத் துடித்து யோசித்தே
..சற்றே நேரம் கண்மூட
குவிந்த மலராய்க் கற்பனைகள்
…கூட்டித் தொடுத்தேன் நெஞ்சத்தில்..
நெஞ்சத்தில் பக் பக்
துடிக்குது திக் திக்
பிள்ளைகள் நச் நச்
தாங்காமல் செக் செக்
காய்ந்த வயிறுடன் செல்
என்ன தெரியுமோ சொல்
அறிவுரையும் ட்விட்டரும்
சொல்லத்தான் துடிக்குது மனம் அனு தினம்
சொல்லியே ஆகவேண்டும் அது என் குணம்
நல்லதாய் சொன்னால் தரும் அது நறு மணம்
அல்லதாய் சொன்னாலோ தர்ம அடி என்றும் ரணம்
* முதல் கவிதை. குற்றம் குறை பொறுத்துக் கொள்ள வேண்டும் !
ரணம் ஆறாவிட்டால் நெஞ்சில் வலிமிகும்
பணம் செலவழித்து தேடு நீ மருத்துவம்
குணம் ஆகாவிட்டால் உடலையது வருத்தும்
பிணம் ஆகும்வரை உன்னிடம் வடு இருக்கும.
***முரளிதரன், முதல் கவிதையே மிக அருமை. இதற்கு போய் ஏன் மன்னிப்பு?