-
Sivaji Peravai
கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
நடிகர்திலகம் சிவாஜி 90 -வது பிறந்தநாளையொட்டி, அகமதாபாத் தமிழ்ச் சங்கம் சார்பில், "சிவாஜியும் தமிழும்" என்ற மாபெரும் தமிழ் விழா, 28 -10 - 2017 , சனிக்கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நேரமின்மை காரணமாக "கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்" என்ற தலைப்பில் என்னுடைய உரையை முழுமையாக நிகழ்த்த முடியவில்லை.
அதனால், என்னுடைய முழுமையான உரையினை நம் ரசிக நண்பர்களுக்காக அளிக்கிறேன். அதன்மீது நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
-----------------------------------------------------------------------------------
கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
K .சந்திரசேகரன்
தலைவர்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை
------------------------------------------------------------------------------------
கலையும்> கலாச்சாரமும்தான் ஒரு நாட்டை> ஒரு மாநிலத்தை அடையாளப்படுத்தும். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில்> கலைப் பொக்கிஷமாம் நடிகர்திலகத்திற்கு அவமரியாதை நேர்ந்தது துரதிஷ்டம். நடிகர்திலகத்தின் சிலை அகற்றப்பட்டது. சரி மணிமண்டபத்தில்தானே வைக்கிறார்கள் என்று ஆறுதல் அடையலாம் என்றால்> சிங்கமென நின்றிருந்த சிலையைக் கூண்டில் அடைத்த மாதிரி> பெயரளவிற்கு ஒரு மணிமண்டபம் - ரசிகனின் மனவேதனைக்கு> அகமதாபாத் தமிழ்ச் சங்கம் இன்று மருந்து தடவியிருக்கிறது. பல்வேறு தமிழ்ச் சங்கங்கள்> சான்றோர்கள்> பெரியோர்கள் இணைந்து> தமிழும் - சிவாஜியும் என்ற தலைப்பில்> சென்னையில் விழா எடுத்து சிறப்பு செய்திருக்கிறார்கள். இவ்விழாவில் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவையும் பங்கேற்பதிலே பெருமகிழ்ச்சியடைகிறேன்.
கர்ணன் - திரையிலும் நிஜத்திலும்
இந்தத் தலைப்பில் பேசலாம் என்று அதுபற்றிய தகவல்களைத் திரட்டியபோது அனுமார் வால் போல நீண்டுகொண்டே இருந்தன.
ஆனாலும் அவற்றில் சில> உங்களுக்காக மட்டுமல்ல> புரியாமல் இன்னமும் உளறிக்கொண்டிருக்கும் சிலருக்காகவும் வெளியிடவேண்டியது எனது கடமை என்றே நினைக்கிறேன்..
திரையுலகில் சாதாரண நிலையிலிருந்த நடிகர்> நடிகைகள்> சிறிய தயாரிப்பாளர்கள்> இயக்குனர்கள் என்று பலதரப்பினரையும் பெரிய படமுதலாளிகளாக ஆக்கிய பெருமை நடிகர்திலகம் சிவாஜியையே சாரும். நடிகர்திலகத்தை நம்பி பணத்தை முதலீடு செய்தவர்கள் வாழ்ந்தார்கள்> வளர்ந்தார்கள் - இதுதான் வரலாறு.
எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்> நடிகர்திலகம் சிவாஜி ஒரு நடிகர் மட்டுமே> அவர் பணம் வாங்கிக்கொண்டு நடித்துக் கொடுத்தார்> வேறு என்ன செய்தார் என்று. அதற்கெல்லாம்> ;தற்போது விடைகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவர் ஒரு ரூபாய் கொடுத்துவிட்டு நூறு ரூபாய்க்கு விளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. அதேபோல> சம்பாதிக்கும் எல்லோரையும்போல தையல் இயந்திரம்> நோட்டுப் புத்தகம் போன்றவைகளை விழா நடத்திக் கொடுக்கவில்லை.
அண்ணல் அம்பேத்கார்> பெரியார்> மார்ஷல் நேசமணி> வீரபாண்டிய கட்டபொம்மன். திருவள்ளுவர் என்று அனைத்து பெரியோர்களுக்கும் தன செலவில் சிலைகளை நிறுவிய நடிகர்திலகம்> தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்> தான் நேசித்த பெருந்தலைவர் காமராஜருக்கு சிலைகள் அமைத்து பெருமைசேர்த்தார்.
சிவாஜி அவர்கள் அன்றைய பாரத பிரதமர் நேருவிடம் 1959-ல் மதிய உணவு திட்டத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார்.
1961-ல் தாம்பரத்தில் காசநோய் மருத்துவமனை கட்டுவதற்காக ரூபாய் ஒரு லட்சம் வழங்யுள்ளார்
1962-ல் இந்திய – சீனா போரின்போது ஒரு பெருந்தொகையை யுத்த நிதியாக வழங்கினார்.
புதுவை அரசின் பகலுணவு திட்டத்திற்கு ரூபாய் 1 லட்சம் கொடுத்தார்.
பெருந்தலைவர் காமராஜர்> பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தை அறிவித்தபோது> முதல் நபராக ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக வழங்கினார் நடிகர்திலகம்.
நேருஜி நினைவு அறக்கட்டளை நிதிக்காக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வழங்கினார்.
பெங்களூரில் நாடக அரங்கம் கட்ட ரூபாய் இரண்டு லட்சம் வழங்கினார்.
1960ல் பெருவெள்ளம் சென்னையை சூழ்ந்தபோது காமராஜர் முன்னிலையில் 1 லட்சம் உணவு பொட்டலங்களை அவரது இல்லத்தில் தயாரித்து கொடுத்ததோடு 800 மூட்டை அரிசியும் வழங்கினார்.
1968-ல் உலகத் தமிழ்மாநாடு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்றபோது சென்னை கடற்கரையில் 10 தமிழறிஞர்களுக்கு சிலை வைக்கப்பட்டது. அதிலே> திக்கெட்டும் தமிழ் பரப்பிய திருவள்ளுவருக்கு சிலை அமைத்து தந்தது சிங்க தமிழன் சிவாஜி அவர்கள். ஆனால் இன்று நடிகர்திலகம் சிலைக்கு அங்கு இடமில்லை> வைக்க அரசுக்கு மனமில்லை.
சிலையும் அமைத்து உலக தமிழ் மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 5 லட்சம் அள்ளித்தந்து அண்ணா அவர்களை அசர வைத்தவர் சிவாஜி.
1965- ல் இந்தியாவுடன் பாகிஸ்தான் போரிட்டபோது அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியிடம். திருமதி. கமலா அம்மையாரின் 400 பவுன் தங்க நகைகளையும்> பெங்களூரில் தனக்குப் பரிசாக கிடைத்த 100 பவுன் தங்க பேனாவையும். மொத்தம் 500 பவுன் கொடுத்து தேசத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் சிவாஜி.
அன்றைய முதலமைச்சர் திரு. பக்தவச்சலத்திடம் 1 லட்சம் யுத்த நிதியாக வழங்கினார்.
மீண்டும் தமிழகமெங்கும் நாடகங்கள் நடத்தி தன்னுடைய வியர்வையில் விளைந்த வெள்ளிகாசுகளாம் 17 லட்சம் ரூபாயை வாரி வழங்கி தேசம் வெற்றிபெற துணை நின்றhர்;.
வெள்ளிவிழா கண்ட பாசமலர் திரைப்படம் இந்தியில் ராக்கி என்ற பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து திரையிட்டு நாடு முழுவதும் வசூலான ஒரு நாள் தொகையை மீண்டும் யுத்த நிதியாக வழங்கி பெருமை சேர்த்தார்.
1972-ல் ராஜா திரைப்படத்தின் மூலம் வசூலான ஒரு நாள் தொகையை விமானப்படையில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார் சிவாஜி.
வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை 112 முறை தொடர்ந்து நடத்தி அதன் மூலம் வசூலான 32 லட்சத்தை பல கல்லூரிகளுக்கு வாரி வழங்கி கல்வியின் சிறப்பை உலகிற்கு உணர்த்தினார்.
1961-ல் மும்பையில் பல பகுதியில் நாடகம் நடத்தியபோது பல லட்சம் மக்கள் திரண்டனர். அதன் மூலம் கிடைத்த 5 லட்சத்தை மகாராஷ்டிரா அரசிடம் நிதியாக வழங்கினார்.
தனக்கு சொந்தமான கோடம்பாக்கம் நிலத்தை ( அன்றைய மதிப்பு பல லட்சம் இன்றைய மதிப்பு பல கோடி) நலிந்த நடிகர் நடிகைகள் வீடு கட்டிக்கொள்ள இலவசமாக வழங்கி நடிகர்களின் காவலராய் திகழ்ந்தார்.
மேலே குறிப்பிட்டுள்ளவையெல்லாம்> அவர் செய்தவற்றில் ஒரு துளிதான். இவையே இன்றைய மதிப்பில் பல நூறு கோடிகள் இருக்கும்.
சினிமா> சமுதாயத்திற்கு மட்டுமல்ல> அரசியலிலும் பல கட்சிகளுக்கு கர்ணனாகத்தான் திகழ்ந்தார் நடிகர்திலகம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பெருந்தலைவர் காமராஜருக்கு அடுத்தபடியாக> கட்சியை வளர்ப்பதற்காக> தன்னுடைய நாடகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கட்சி அலுவலகங்கள் கட்ட பெருமளவில் நிதிஉதவி அளித்தவர் சிவாஜி. கம்யூனிஸ்ட் கட்சிக்காக மயிலாடுதுறையில் கட்டபொம்மன் நாடகம் நடத்தி தோழர் ஜீவா அவர்களிடம் நிதியுதவி அளித்திருக்கிறார். இவ்வளவு ஏன், இன்று நாம் இந்த நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருவூலத்தில்> தி.மு.க வை வளர்த்தவர்கள் வரிசையில் நடிகர்திலகம் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. தி.மு.கழகத்தை வளர்ப்பதற்காக> சிவாஜி நிறைய நாடகங்களை> ஒரு பைசா கூடப் பெற்றுக்கொள்ளாமல் நடத்திக்கொடுத்து நிதி வசூல் செய்து கொடுத்திருக்கிறார் என்று கலைஞர் தனது நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி பல அரசியல் கட்சிகளுக்கும்கூட பிரதிபலன் பாராமல் உதவியவர் நடிகர்திலகம்.
நன்றியா - அது என்ன என்று கேட்கும் இவ்வுலகில்> தன்னை வைத்து முதல் படம் எடுத்த திரு. பெருமாள் முதலியார் அவர்களின் வீட்டிற்கு வருடந்தோறும் பொங்கலன்று சென்று சீர் செய்து அவர்கள் குடும்பத்திற்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை நன்றி பாராட்டியவர் நடிகர் திலகம்.
தன்னுடைய தொழில் பக்தியால்> நேரந்தவறாமையால்> திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேல் கோலோச்சிய நடிகர்திலகம் சிவாஜி> விளம்பரமில்லாமல் வாரிக் கொடுத்து> திரையில் மட்டுமல்ல நிஜத்திலும் கர்ணனாக வாழ்ந்து மறைந்தார்.
உடலால் மறைந்தாலும்> நடிகர்திலகத்தின் புகழ்> தமிழ் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.
வாய்ப்பளித்தமைக்கு நன்றி
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a9&oe=5A786079
.................................................. .................................................. ....................................
Skannan Skannan
Heart touching genorosity true messages you told our viewers. Today's peoples never know the above messages. Some peoples told Sivaji not give donations for people's. Really Sivaji is the KARNAN, no advertisement is to be given him.
.................................................. ............................
Sampath Murugan
நடிகர்திலகம் அவர்களை பற்றிய அவதூறு பிரச்சாரத்தைத் தவிடுபொடியாக்க தலைவர் சந்திரசேகரன் அவர்கள் கொடுத்துள்ள இந்தத் தகவல்களை அனைவருக்கும் பகிர்ந்து செய்தியை உலகம் அறியச் செய்யவேண்டும்.
.................................................. .................
Neelakantan Subramani
1968ஆம் ஆண்டு வேலூர் அரசு மருத்துவமனை பொன்விழா நினைவு கட்டிடத்திற்காக வியட்நாம் வீடு நாடகம் நடத்தி வசூல் தொகை ஒருலட்சம் கொடுத்தார் முதல் முதலாக அவரையும் அவர் நடித்த நாடகத்தையும் ஒருசேர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது
.................................................. ..................
-
அற்புத நடிகரின் நவம்பர் மாத வெளியீடுகள்
1) ரங்கூன்ராதா 1 / 11 /1956
2) இருமலர்கள் 1 /11 /1967
3) ஊட்டிவரை உறவு 1 /11 /1967
4) லட்சுமி வந்தாச்சு 1 / 11 /1986
5) வைரநெஞ்சம் 2 /11 /1975
6) டாக்டர் சிவா 2 /11 /1975
7) முரடன் முத்து 3 /11 /1964
8) நவராத்திரி 3 /11 /1964
9) வெள்ளை ரோஜா 4 / 11 /1983
10) கண்கள் 5 /11 /1953
11) விஷ்வரூபம் 6 /11 /1980
12) காத்தவராயன் 7 /11 /1958
13)கப்பல் ஓட்டிய தமிழன் 7 /11 /1961
14) சிவந்த மண் 9 /11 /1969
15) அண்ணன் ஒரு கோயில் 10 / 11 /1977
16) பெம்புடு கொடுகு (தெலுங்கு) 11 /11 /1953
17) செல்வம் 11 /11 /1966
18) படிக்காதவன் 11/ 11 /1985
19) கள்வனின் காதலி 13 /11 /1955
20) அன்பைத்தேடி 13 /11 /1974
21)பரிட்சைக்கு நேரமாச்சு 14 /11 1982
22) ஊரும் உறவும் 14 /11 /1982
23) அன்னை இல்லம் 15 /11 /1963
24) லட்சுமி கலியாணம் 15 /11 /1968
25) ஆலயமணி 23 /11 /1962
26) பாதுகாப்பு 27 /11 /1970
27) உயர்ந்த மனிதன் 29 /11 /1968
-
-
-
-
-
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
34 வது வெற்றிச்சித்திரம்
ரங்கோன் ராதா வெளியான நாள் இன்று
ரங்கோன் ராதா 1 நவம்பர் 1956
https://upload.wikimedia.org/wikiped...goon_Radha.jpg
https://i.ytimg.com/vi/kTYi8iuB1kc/hqdefault.jpg
-
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
116 வது வெற்றிச்சித்திரம்
இருமலர்கள் வெளியான நாள் இன்று
இருமலர்கள் 1 நவம்பர் 1967
https://s-media-cache-ak0.pinimg.com...00d1b385d0.jpg
https://upload.wikimedia.org/wikiped...u_Malargal.jpg
இதே நாளில் ஊட்டிவரை உறவு படமும் வெளிவந்தது
இரண்டு படங்களும் 100 நாட்களை கடந்து சாதனை
படைத்தன
http://oi65.tinypic.com/2ugmjx1.jpg
-