Awesome pair of NT and Padmini. Wonderful Songs. Totally a Fantastic family
Entertainer.
Printable View
Awesome pair of NT and Padmini. Wonderful Songs. Totally a Fantastic family
Entertainer.
சமீபகாலமாக நடிகர்கள் படபிடிப்பில் பிரியாணி சமைத்து இயக்குனர் மற்றும் இதர நண்பர்களுக்கு பரிமாறுவது பெரிய செய்தியாக மீடியாக்கள் பறைசாற்றுகின்றனர்.
நல்ல விஷயம் தான் என்றாலும் இவை தான் முதல் முதலாக திரை உலகில் நடப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். ஓரளவு அந்த மாயை வெற்றியும் அடைகிறது இந்த கால தலைமுறையினர் பொறுத்தவரை.
நடிகர்கள் சமைத்து பரிமாறுவது ஒன்றும் இன்று நேற்று நடந்த விஷயமல்ல , இதை நம் நடிகர் திலகம் அவர் நடிக்கும் காலத்திலயே செய்திருக்கிறார்.
இயக்குனர் rv உதயகுமார் அவர்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் பாருங்கள் !
இதுபற்றி உதயகுமார் கூறியதாவது:-
"கிழக்குவாசல்" படப்பிடிப்பையும், "உறுதிமொழி" படப்பிடிப்பையும், ஒரே நேரத்தில் இரவும் பகலுமாக நடத்தினேன்.
அப்போது தேக்கடிக்கு எங்களுடன் சிவாஜி சார் குடும்பத்துடன் வந்து தங்கினார்.
எங்கள் அனைவருக்கும், அவரது கையாலேயே அயிரைமீன் குழம்பு சமையல் செய்து பரிமாறினார். அதை இன்றைக்கும் மறக்கமுடியாது.
Thiru Kannadasan avargal our kaval deivam poster i parthavudan sumar 15 nimidangal karai niruthivittu poster i vaitha kan vangamale parthu vittu selvaram.oru kavi arasanukke ippadi endral?
Siva(ji)rathiri valthukkal to our hub members.
பார்த்ததில் பிடித்தது -13
நான் எழுதியதை சற்று திரும்பி பார்த்தல் , அதில் பல படங்கள் நடிகர் திலகத்தின் பிற பகுதி படங்களை மட்டுமே அதிகமாக இருந்தது . அந்த monotony யை , கொஞ்சம் உடைத்து , நடிகர் திலகத்தின் முதல் சில வருடங்களில் வந்த படத்தை பற்றி தான் இந்த 13 ம் பதிவு
தங்கமலை ரகசியம்
இந்த படத்தை ரொம்ப நாளாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை , ஆனால் பார்க்க சந்தர்பம் கிடைக்க வில்லை , இந்த திரியில் திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் , சன் லைப் தொலைகாட்சியில் இந்த படம் ஒலிபரப்பபட்டது என்று எழுதி இருந்தார்
அது தான் turning பாயிண்ட் , இந்த முறை பார்க்க வேண்டும் என்று முயன்றேன் , வெற்றியும் பெற்றேன் , நான் ரசித்த படத்தை , உங்கள் அனைவருடனும் சேர்ந்து அசை போட வேண்டும் ஆசையில் தான் இந்த பதிவு , மிக நீள பதிவு என்பதினால் கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் என்று கேட்டு கொளுகிறேன்
படம் வந்த வருடம் 1957, 1952 ல் தமிழ் திரை உலகில் புரட்சியை ஏற்படுத்திய நடிகர் திலகம் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் நடித்து உள்ள படம் தான் இது
படத்தின் நீளம் இந்த காலத்தை காட்டிலும் மிகவும் அதிகம் கிட்ட தட்ட 3 மணி நேரம் மொத்தம் 11 பாடல்கள்
படத்தை பற்றி அனைத்தயும் எழுதி உள்ளேன் , மிக பழிய படம் என்பதினால் , படத்தில் நடித்த சில நடிகர் நடிகைகளின் பெயர் தெரிய வில்லை மன்னிக்கவும்
படத்தின் பெயர் போட்டு முடிந்த உடன் ஒரு மரத்தின் உச்சியில் 2 கிளிகள் இருக்கிறது அடுத்த காட்சியில் இரு குழந்தைகள் விளையாடி கொண்டு இருக்கிறது , அந்த இரண்டு குழந்தைகளும் அரசரின் குழந்தைகள் அந்த கிளிகள் அங்கே வந்த உடன் , அரசி (அதாவது அந்த இரு குழந்தைகளின் தாய்) , அந்த இரு குழந்தைகளிடமும் அந்த கிளிகளின் கதையை பற்றி சொல்லுகிறார்
கதை FLash back காட்சிகளில் செல்லுகிறது
மங்களபுரி இளவரசி நந்தினியை ( TR ராஜகுமாரி ) பெண் பார்க்க வருகிறார் சொர்ணபுரி மன்னன் ஆதித்யன் (MN நம்பியார் )
வந்த இடத்தில கடை வீதிக்கு செல்லலாம் என்று எண்ணி இளவரசி என்று எண்ணி அவரின் தோழியை(மவ் ராஜம்மா ) காதலிக்கிறார் , சுயம்வரம் நாள் அன்று , தான் காதலித்து ராணியை அல்ல தோழியை என்று அறிந்த உடன் அதிர்ச்சி அடைகிறார் , ஆனால் அந்த தோழிக்கு மாலை சூட்டி மணம் முடிக்கிறார் மன்னர் ஆதிதியன்.
மங்களபுரி இளவரசி நந்தினி மிகவும் திமிர் பிடித்த பெண் , தன் தோழி மனிப்பு கேட்டும், அதை அலட்சிய படுத்தி விடுகிறார்
ஆதிதியன். தன் மனைவி , மற்றும் சகோதரன் (TR ராமசந்திரன்) உடன் சந்தோசமாக வாழுகிறார்
இந்த நேரத்தில் ஆதிதியன் தந்தை ஆகுகிறார் , மங்களபுரி இளவரசி நந்தினியின் தந்தை காலமாகிறார் , இளவரசி யின் நிலைமையை நினைத்து வருதும் அவர் தோழி , அவரை , தன் நாட்டுக்கு அழைத்து வந்து விடுகிறார் , தன் தோழியை பழி வாங்க சந்தர்பத்தை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறார் , முதலில் , ஆதிதியன் யின் தம்பியை காதல் வலையில் விழ வைத்து , சதி செய்கிறார் , அது பலிக்காமல் போகவே , நந்தினி தன் நம்பிக்கைக்கு உரிய ஒரு பெண்ணை அழைத்து வந்து , இளவரசன் விக்ரமன் யை கடத்துகிறார் ,
நந்தினியின் தோழி (அங்கமுத்து / தனம் (பெயர் தெரிய வில்லை )) தன் அண்ணன் மகேந்திரன் (PSV ) 5 மாத்திரைகளை ஒரு மந்திரவாதி யிடம் இருந்து திருடி வந்து விடுகிறார் , அந்த மருந்தை சாபிட்டால் , எந்த உருவத்தை விரும்பினாலும் அதை அடையாளம் . 5 மாத்திரைகளில் ஒரு மாத்திரையை டெஸ்ட் செய்து பார்த்து விட்டு அடுத்த திட்டத்தை தீட்டுகிறார்
அரசன் மற்றும் அவரின் மனைவி இருவரிடமும் , நந்தினி ஒரு சாமியாரை பற்றி சொல்லி , அங்கே சென்றால் அவர்களின் மகனை பற்றி அறியலாம் என்று சொல்லி , ஒரு குகைக்கு அழைத்து செல்லுகிறார்
4 மாத்திரைகளில் , ஒரு மாத்திரையை தானே வைத்து கொண்டு , 3 மாத்திரைகளை 3 கோப்பைகளில் கலந்து விடுகிறார்
ஒரு கோப்பை மன்னர் அருந்திய உடன் அவரை முத்துமாலை ஆகும் படியும் , அவரின் தோழியை பிச்சகாரி ஆகும் படியும் செய்து விடுகிறார் , மகேந்திரன் அந்த மாத்திரையை எடுத்து கொண்டு , ஆதித்தியன் ஆகி விடுகிறார் , நந்தினி மட்டும் தான் அதே உருவத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார் (பொய் சொல்லி விடுகிறார் )
ஊருக்கு வரும் ஆதித்தியன் (PSV ) தன் மனைவி இருந்து விட்டதாக கதை கட்டி விடுகிறார் , நந்தினி மற்றும் ஆதித்தியன் இருவரும் காந்தர்வ திருமணம் செய்து கொண்டதாக இன்னும் ஒரு பொய் சொல்லி விடுகிறார் .
ஆதித்தியன்( மகேந்திரன் )க்கு தன் முதல் மனைவி மூலம் ஒரு பெண் குழந்தை உள்ளது , அதின் பெயர் அமுதா
தொலைந்து போன விக்ரமன் காட்டில் மிருகங்கள் உடன் வாழுகிறார் (TARZAN )
வருடங்கள் நகர நகர அமுதா இப்பொழுது ஒரு அழகிய இளவரசியாக வாழ்ந்து வருகிறார் , மகேந்திரன் மற்றும் அவர் சகோதரி இருவரும் , நந்தினியின் கொடுமையை சகித்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் கழித்து தான் tarzan வளர்ந்து , பெரிய வீரராக வளம் வருகிறார் , ஒரு நாள் காட்டுக்கு வரும் அமுதாவை காப்பாத்தி அவரின் அன்புக்கு பாதிரமாகிறார்
அமுதா தன் தந்தை மற்றும் சிட்டியின் எதிர்ப்பையும் மீறி அந்த
டார்சன் யை தன் கூடவே வைத்து கொண்டு அவருக்கு நாகரிகம் , கல்வி , அறிவு அனைத்தையும் போதிக்கிறார்
இந்த தோழமை காதலாக மாறுகிறது , tarzan க்கு அமுதா கஜேந்திரன் என்று பெயர் வைக்கிறார் , இந்த காதலை ஏற்க மறுக்கிறார் அமுதாவின் தந்தை மற்றும் சித்தி. கஜேந்திரன் மீண்டும் காட்டுக்கே வந்து விடுகிறார்
அமுதா அவரை தேடி வந்து , கஜேந்திரன் யை கல்யாணம் செய்து கொள்ளுகிறார் ,
கஜேந்திரன் தன் தாய் மற்றும் தந்தை இருவரையும் தேட ஆரம்பிக்கிறார் ,(அமுதாவின் தந்தை அவரை அனாதை என்று சொன்னதினால் தேட ஆரம்பிக்கிறார் )
கஜேந்திரனின் தாய் , தன் கணவர் உடன் அதான் முத்துமாலை உடன் செல்லும் பொது , முத்துமாலையை பரி கொடுக்கிறார்
திருடு போன முத்துமாலையை அந்த திருடன் விற்று விடுகிறார் , அந்த நேரம் பார்த்து , அங்கே வரும் கஜேந்திரன் மற்றும் அமுதா இருவரும் அந்த மாலையை பார்த்து , அதை வாங்கி அணிந்து கொண்டு விடுகிறார்
கஜேந்திரனின் தந்தை இப்பொழுது அவர் கழுதில்
அப்போ அங்கே வரும் கஜேந்திரனின் தாய்யை பைத்தியம் என்று அனைவரும் கிண்டல் செய்ய , கஜேந்திரன் அவர் உடன் அழைத்து சென்று விடுகிறார் (யார் என்று தெரியாமல் தான் )
கஜேந்திரன் தாங்கும் அறை , விக்ரம்ஆதித்தியன் தங்கிய அறை , அவர் உறங்கும் கட்டில்க்கு பக்கத்தில் இரு பொம்மைகள் பேசி கொண்டு இருப்பதை கேட்டு விடுகிறார் கஜேந்திரன் , அந்த இரு பொம்மைகளும் தன் தாய் தான் இப்போ பிச்சகாரியாக இருப்பதும் , அவரின் தந்தை தான் இப்போ தன் கழுத்தில் இருபதையும் , இதற்கு தீர்வு கோளிமலையில் இருக்கும் தங்கமலை ரகசியம் தான் என்று சொல்லி அதை அடையும் வழிகளையும் சொல்லுகிறது
கஜேந்திரன் தன் தாய் , மற்றும் மனைவி உடன் தங்கமலை ரகசியத்தை அறிந்து கொள்ள அந்த காட்டுக்கு செல்லுகிறார்
முதலில் கஜேந்திரன் ஒரு ராட்சசனை சந்திக்கிறார் , அவர் உடன் சண்டை இட கூடாது என்பது விதி , அதனால் கெஞ்சுகிறார் ,அந்த ராட்சசன் அதை சட்டை செய்யாமல் நடந்து கொண்டு செல்வதால் , ரத்தகாயம் ஆகிறது , ஒரு பாடல் பாடி அவரை சமாதான படுத்துகிறார் , முடிவில் அந்த ராட்சசன் தன் சாபம் விலகி ஒரு தேவராக மாறுகிறார் , அவர் அந்த தங்கமலை ரகசியத்தை அடைய அடுத்த கட்ட யுக்தி யை கஜேந்திரன்க்கு சொல்லிவிடுகிறார்
அடுத்த சவால் கஜேந்திரன் அழகிய 2 மோகினிகளை எதிர்கொண்டு வெற்றி பெரும் சமயத்தில் , அந்த இரண்டு பெரும் , அடுத்த யுக்தி யை சொல்லும் முன்பு கஜேந்திரன் யின் இளமை , அழகு இரண்டையும் கேட்க , கஜேந்திரன் அதை ஒத்துக்கொண்டு , வயசானவராக மாறுகிறார்.
இதற்கு இடையில் , அலகபுரியில் , மகேந்திரன் மற்றும் நந்தினி இருவரையும் கண்காணிக்கிறார் அமைச்சர் சாரங்கபாணி ,அதன் மூலம் உருவம் மாறும் மாத்திரை யை மகேந்திரன் சாப்பிடும் படி செய்து விடுகிறார் , மீதி உள்ள மருந்தை , tr ராமசந்திரன் அறிந்தி பெரிய காது உடன் வளம் வருகிறார் , மாத்திரையை சாபிட்ட மகேந்திரன் மீண்டும் தன் உருவத்தை அடைந்து விடுகிறார் , இதனால் நந்தினி மற்றும் மகேந்திரன் இருவரையும் சிறை வைத்து விடுகிறார்
கஜேந்திரன் வயோதிகர் ஆனதினால் அவர் மனைவி மீதி ரகசியத்தை தெரிந்து கொள்ள முயற்சிக்கும் நேரத்தில் , (ரகசியத்தை சொன்னால் சிலையாகி விடுவார்கள் ) கஜேந்திரனின் சந்தேகத்தினால் சிலையாகி விடுகிறார்
கஜேந்திரன் அந்த மலைக்கு வந்து சேரும் நாள் பௌர்ணமி (, அந்த நாளில் அவரின் தாய் , தந்தை உருவம் மாறாவிட்டால் , பிறகு எப்போதும் மாறது ) கஜேந்திரன் அங்கே ஒரு சாமியாரை சந்திக்கிறார் , அவர் தான் மகேந்திரனின் குரு , மகேந்திரன்க்கு மந்திரம் சொல்லி தரவில்லை என்ற காரணத்தினால் அவரை பாதி கலாக மாத்தி விடுகிறார் , கஜேந்திரன் க்கு அவர் அந்த மந்திர கோளை எப்பிடி அடைவது என்று சொல்லி விடுகிறார்
மகேந்திரன் சிறையில் இருந்து தப்பித்து வந்து விடுகிறார்
இருவரும் சண்டை போட்டு , முடிவில் மகேந்திரன் தோல்வி அடைகிறார்
அந்த சாமியாரின் உதைவினால் அனைவரும் (கஜேந்திரன் , அவர் மனைவி அமுதா , அவர் தந்தை ஆதித்தியன் (mn நம்பியார் ), அவர் மனைவி ராஜம்மா ) தங்கள் சொந்த உருவத்தை அடைகிறார்கள்
இத்தனை கேடுகளை செய்த நந்தினி மற்றும் மகேந்திரன் இருவரையும் கிளிகளாக மாற சபித்து விடுகிறார் அந்த சாமியார்
ஆம் , அந்த இரு குழந்தைகளும் தன் தாத்தா , பாட்டி உடன் விளையாடுகிறது
சுபம்