http://i1170.photobucket.com/albums/...psazpelf6h.jpg
Printable View
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் உடல் நலம் பெற பிரார்த்திப்போம்.
"நன்றாக போய்க்கொண்டிருக்கும் திரியில் வேண்டாம் வம்பு" என்று இருக்க முடியவில்லை. என் மீது சொல்லப்பட்டிருக்கும் அவதூறுக்கு நான் பதில் சொல்லாவிடின், அவதூறு உண்மையாக்கப்படும், என்னுடைய நண்பர்களும் இந்த அவதூறு உண்மையோ என்று எண்ணக்கூடும். முந்தைய கல்நாயக்காக நான் இருந்திருந்தால் "ஆமாம் நானும் ஆதிராமும் ஒருவர்தான்" என்று சொல்லி இருந்திருப்பேன். இப்போதைக்கு நிறைய பதிவுகளை இங்கு நான் இட்ட பிறகும் அவ்வாறு தொடர விரும்ப வில்லை. எனவே இது என்னை தங்கள் நண்பனாக நினைக்கும் நண்பர்களுக்கு மட்டுமே.
ஆதிராமிற்கும், எனது ஊரைச்சேர்ந்த நண்பர் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் பிரச்சினை என்றால் அவர்களாகவே தீர்த்துக் கொள்வார்கள். நடந்திருக்கிறது. நண்பர் ஆதிராமும் கண்டிக்கப்பட்டார். முடிந்தது பிரச்சினை. இப்போது ஆதிராம் தொடர்கிறார். வாசு அவர்களை பாராட்டுகிறார். தெரிந்ததுதானே. இதில் இருந்து நான் ஆதிராம் அல்ல என்று எப்படி இவர்கள் தெரிந்து கொள்வார்கள்? யாரேனும் கேட்கலாம்.
ஆதிராம் சில அல்லது பல பெயர்களில் எழுதி இருக்கலாம். அதை அவர் ஒப்புக்கொண்டும் இருக்கிறார். அதற்காக அதில் நானும் ஒருவன் என்பதை எப்போதாவது யாராவது எந்த ஆதாரத்தொடாவது சொல்லி இருக்கிறார்களா என்றால் இல்லை. அதுமட்டுமில்லை. எங்கள் இருவரின் எழுத்துக்களை யாராவது தொடர்ந்து படித்து வந்தால் இருவரின் நடைமுறைகளை (ஸ்டைல்) கட்டாயமாக கவனிக்க முடியும். யாராவது அதை அலசி ஆராய்ந்து செய்து இருவரும் ஒருவர்தான் என்று விஞ்ஞான முறையில் நிருபித்திருக்கிறார்களா? குறை சொல்லும் அண்ணன் கொண்டுவரட்டும் அந்த நிருபணங்களை. யாரோ, எங்கோ பிதற்றுவதை இங்கே எடுத்து வந்து வாந்தி எடுப்பவரை என்னவென்று சொல்வது?
இரண்டாவதாக 'ஆதிராமும், நானும் ஒருவர்தான் என்று பலர் சொல்கிறார்கள், பலர் சொல்கிறார்கள்' என்று சொல்லி வம்பிழுக்கும் அண்ணன், நடிகர் திலகம் திரியில் திரு முரளி ஸ்ரீநிவாசன் அவர்கள் என்னைப் பற்றி சொல்லி இருந்தார் - எனது கணிப்பொறியில் இருந்து கல்நாயக் என்ற பெயரில் மட்டுமே பதிவுகள் இடப் படுகிறது என்று. அதை கவனிக்க கண்கள் கெட்டுப் போய்விட்டனவா அந்த பிரகஸ்பதிக்கு?
மூன்றாவதாக இந்த திரியில் பலரும் உற்றுக் கவனித்திருந்தால் தெரிந்திருக்கும் - நண்பர் ரவி அவர்களின் கருவின் கரு தொடரில் உருக்கமாக தாயைப் பற்றி அவர் எழுத ஆரம்பித்த போது, ஆதிராம் சொல்லியிருந்தார் - தனது தாயை நினைத்து, அவர்களை உடன் இருந்து கவனித்து கொள்வதற்காக தனது வேலையை விட்டுவிட்டு தாயகம் கூட திரும்பி வந்துவிடலாம் என்று நினைப்பதாக என்று. பின்பு நான் எழுதி இருந்தேன் - எனது தாய் மறைந்து எட்டு வருடங்களுக்கு மேலாகி விட்டன, எனது நினைவில் என்றும், எப்போதும் இருக்கிறார்கள் என்று. இதை படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும் - உண்மை எது, பொய்மை எது என்பது. இதற்கு மேலும் நானும் ஆதிராமும் ஒருவர் என்று நினைக்கும் வரதக் குமார்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நானே புதிய திரியில் சந்திக்கிறேன்.
எங்களுக்காக எழுதவந்து பல்பொடி விளம்பரத்திற்கு உதவிய எங்கள் நடிகர் திலகம் குழாம் நண்பர் கோபால் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். நான் கடலூர்காரன் என்பதை நன்றாக அறிந்தவர் வாசு. என்னை முதன் முதலில் எழுத வைத்து அழகு பார்த்தவர் அவர்தான். அவரும் உண்மைகளை நன்றாக அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன். நான் எழுதாத சமயத்தில் எனக்கு அழைப்பு விடுக்கின்ற நண்பர்கள் ரவி மற்றும் கலைவேந்தன் அவர்களுக்கும் எனது நன்றிகள். எனக்கு கவிதை எழுத கற்றுக் கொடுத்து, இங்கே நிறைய எழுத உற்சாகம் கொடுக்கும் சி.க. வை என்னால் மறக்க முடியாது. எனக்குத் தெரியாத பல விவரங்களை சொல்லி என்னைத் தேற்றிக் கொண்டிருக்கும் நண்பர்கள் ராஜேஷ் ஜி அவர்களுக்கும், திரியில் வந்து நல்ல பல விவரங்களை பகிர்ந்து கொண்டிருக்கும் கிருஷ்ணா அவர்களுக்கும், ஜுகல் பந்தி மூலம் கலக்கிக் கொண்டிருக்கும் சீனியர் ராஜ்ராஜ் அவர்களையும் நான் நினைவில் கொள்ளவேண்டி உள்ளது நன்றி சொல்வதற்கு. நடிகர் திலகம் புகழ் பரப்புவதே தன் பணி எனக்கொண்டிருக்கும் எங்கள் சீனியர் நண்பர் திரு ராகவேந்திரா அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல திரு. வினோத் அவர்களையும், மற்றும் யுகேஷ் பாபு அவர்களும்(எங்களுக்குள் முன்பு மோதல் இருந்ததால் - நாங்கள் அரிதாகவே ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வோம்.) நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒருவர் சொன்னதால் மட்டுமே இருவர் ஒருவராக முடியாத நண்பர் ஆதிராமுக்கும் எனது நன்றிகள். கல்யாணப் பரிசு தங்கவேலு எழுத்தாளர் பைரவன் போல வேடமிட்டது நினைவிற்கு வருகிறது, இவர்கள் என்னை உங்களையாக வேடமிடுவது.
இப்போது நான் அந்த மோதல் முறைகளை கைவிட்டதால் மட்டுமே இப்படி ஒரு பதிவு. இல்லை எப்போதும் போல மோதல் பதிவுகள் வேண்டுமென்றால் கொடுக்க நான் தயார். நீங்கள் தடை செய்யாமல் இருக்க வேண்டுமே. இது போதவில்லை என்றால், அண்ணன் வரதக் குமார் அவர்களே, உங்கள் பதிவை எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து எனது பதில் பதிவை கொடுக்கிறேன்.
நீண்ட பதிவாகி விட்டது. மன்னிக்கவும். அடுத்த முறை இவ்வளவு நேரம் கிடைத்தால், மற்றவர்களின் பிரத்யேக பதிவுகளை படித்து எனது கருத்துக்களை பகிர்வதுடன் எனது பூவின் பாடலுடன் வருகிறேன். அதுவரை வணக்கம்.
ரவி
ஆஹா திரையில் பக்தியே பேசுவதாக என்ன அருமையாக ஒரு கேள்வி கேட்டுள்ளீர்
சில காரணங்களால் வர இயலவில்லை. திரையில் பக்தி எங்கும் போகவில்லை. தொடரும்.
இனிய நண்பர் திரு கல் நாயக்
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் விரிவான பதிவில் என் பெயரையும் குறிப்பிட்டு இருந்ததற்கு நன்றி .நம் இருவருக்கும் என்றுமே கருத்து மோதல் வந்ததில்லையே . திரு குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உங்கள் பதில் மிகவும் நகைச்சுவையாக இருந்தது . சென்னயில் இருக்கும் நீங்கள் ஒரு முறைசென்னயில் வசிக்கும் திரு குமாரை நேரில் சந்தித்து விட்டால் எல்லோருடைய குழப்பங்களும் தீர்ந்து விடும் .செய்வீர்களா கல்நாயக் ?
எஸ்வி,
எங்கள் திரியில் எல்லோருமே கௌரவமான நபர்கள். அவர்கள் தங்கள் இருப்பை நிரூபிக்கும் அவசியம் வேண்டாதவர்கள். ஒருவர் என்ன பொய் சொன்னாலும் தாய் இல்லை என்று பொய் சொல்ல மாட்டார்கள். இனியாவது ,எங்கள் திரி சார்ந்தவர்களை அனாவசியமாக காய படுத்தாதீர்கள்.
அப்படி நிரூபணம் அவசியமானால், நான் ஒரு இடத்தில் ரிஜிஸ்தர் வைக்கிறேன். போட்டோ ஐடீ காண்பித்து ,உங்கள் திரியை சார்ந்த எல்லோரும் கையெழுத்து போட்டு விட்டு போன பிறகு(கலைவேந்தன்,ராஜா,மசானம், உட்பட) ,ஆதிராம், கல்நாயக் போன்றோர் ஒன்றாக ஒரே மேடையில் தோன்ற ஏற்பாடு செய்கிறேன்.
நன்றி ஆதிராம் சார்.
உண்மைதான். 'மாணிக்கத் தேரில்' பாடல் படப்பிடிப்பு முடிந்ததும் அலங்கார ஒளிவிளக்குகள் பொதுமக்களின் பார்வைக்காக இரண்டு நாட்கள் வைக்கப்பட்டிருந்தது.
இந்த மேலதிக தகவலை இங்கு நினைவுபடுத்தியதற்கு நன்றி!
இதற்குத்தான் நீங்கள் வேண்டுமென்பது. அருமையான சுவையான தகவல்களை தருவதில் உங்களுக்கு நிகர் நீங்களே.
'என்னதான் முடிவு? படித்து ரசித்ததற்கும் என் நன்றிகள்.
'பௌர்ணமி நிலவு' விரைவில் ஒளி வீசும்.
வேலைப்பளுவால் தாமதமான நன்றி சொல்ல வேண்டியதாயிற்று. மன்னிக்கவும்.
ராகவேந்திரன் சார்!
பதினாறு அடி பாய்கிறீர்கள். மிக அபூர்வமான 'அம்மா அப்பா' படத்திலிருந்து 'மாப்பிள்ளை நீயல்லவோ' என்ற சூப்பர் பாடல் அளித்து திக்குமுக்காடச் செய்து விட்டீர்கள். அடேயப்பா! எத்தனை நாட்கள் ஆயிற்று இந்தப் பாடலைக் கேட்டு? நிஜமாகவே அனுபவித்துக் கேட்டும், பார்த்தும் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல வார்த்தை இல்லை வேந்தரே!
என் ராட்சசியின் குரல் அல்லவா!
அதே போல அபூர்வ ஜோடியாய் ஜெய், விதுபாலா பாடும் ராசி நல்ல ராசி படப் பாடலுக்கும் நன்றி! இதுவும் மறைந்து போன ஒரு பாடலே!
'மலைச்சாரலில் ஒரு பூங்கொடி'பற்றி சொல்லவும் வேண்டுமோ!
கருவின் கரு - 114
பாகம் 2 - தந்தை
உண்மை சம்பவம் 16
(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன )
என் நண்பன் சீனு - ஒரு அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான் - அவனுடைய புத்திசாளித்தனதிர்க்கும் , செய்யும் உழைப்பிற்கும் தனியார் துறையில் வேலை செய்திருந்தால் இன்று அவன் வாழும் நிலைமை பல மடங்கு உயர்ந்திருக்கும் ........என்னவோ அவன் தன் மனதை மாற்றிக்கொள்ளவே இல்லை . அவன் என்னுடன் பேசும்போதெல்லாம் அவன் திறமையை எண்ணி வியர்ந்திருக்கிறேன் - அவன் ஆசைகள் அளவானவை - எதற்குமே அவனிடம் ஒரு எல்லை இருந்தது - அவனுக்கு இரண்டு மகன்கள் - முதல்வன் பள்ளியை முடித்துவிட்டு இன்ஜினியரிங் காலேஜ் செல்லவேண்டும் - இரண்டாவது இப்பொழுதுதான் 10வது ...... அவன் மனைவியும் அவனைப்போல - தன் குழந்தைகள் தான் அவர்கள் உலகம் - விருந்தோம்பலில் அவர்களுக்கு எந்த விதத்திலும் நான் இணயாக மாட்டேன் ..
அன்று வெள்ளிக்கிழமை - சீனுவின் வீட்டிருக்கு சென்றிருந்தேன் - அவன் மனைவி மட்டும் தான் இருந்தாள் .. " வாங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர் வந்துவிடுவார் - நீங்கள் வந்தால் இருக்கச்சொன்னார் !"
" ஆமா சீனு தனக்கு வெர்டிகோ problem என்று சொன்னானே ! இப்ப எப்படி இருக்கு ? "
" எங்க கேட்கிறார் - நேற்று பையனின் interview க்கு அவன் தூங்கின பிறகு கூட இவர் முழித்திருந்து படித்துக்கொண்டு இருக்கிறார் - laptop தான் அவருக்கு முதல் மனைவி "
சீனு வந்துவிட்டான் " ஏய் நீ எப்படா வந்த ? " - மிகவும் தளர்ந்து இருந்தான் - முகத்தில் அழிக்கமுடியாத ஒரு சோகம் . கண்கள் சரியான தூக்கத்தைப்பார்த்து பல நாட்கள் ஆகியிருக்கும் "
"சீனு ! நான் உன் உயிர் நண்பன் - என்ன problem உனக்கு - இரண்டு நாளா ஆபீஸ்க்கு கூட போகல ---- "
" அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை --- everything is fine ........ யாருக்கு என்று புரியாமல் குழம்பினேன் ....
சீனுவாக சொல்லாமல் , அவனிடம் இருந்து ஒன்றையும் கறக்க முடியாது .......
சீனுவின் மகன் மகிழ்ச்சி கலந்தும் கலக்காமலும் ஓடி வந்தான் " அங்கிள் எனக்கு சென்னை SRM இல் seat கிடைத்துவிட்டது - அப்பாவிற்கு உடம்பு முடியவில்லை - ஆஸ்பத்திரிக்கு கூடிக்கொண்டு போகிறோம் -----
நானும் கண்ணு முண்ணு தெரியாமல் சீனுவைப்பார்க்க ஓடினேன் --- பல மருத்துவர்கள் புடை சூழ நடுவில் என் சீனு படுத்திருக்கிறான் --- சீனு உனக்கு என்ன ?? உதடுகள் மனதுடன் சேர்ந்து புலம்பின ..
சில நாட்கள் ஓடின -- சீனுவை அவன் வார்டில் பார்க்கப்போயிருந்தேன் --- " என் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டான் -- " ரகு ! நான் என் மகனைப்பற்றி வெறும் கனவுகள் தான் கண்டேன் - நீ அந்த கனவுகளில் வரவில்லை - ஆனால் நீதான் என் கனவுகளுக்கு உயிர் கொடுத்தாய் - இரண்டு இலக்ஷம் யார் தருவார்கள் இந்த காலத்தில் ??? "
"சீனு -- எனக்கு பிள்ளையா குட்டியா - நான் ஒரு தனி மரம் -- இந்த உதவி கூட அதுவும் உனக்கு நான் செய்யமாட்டேனா ?? இது நமக்குள் இருக்கட்டும் - உன் மகன் நன்றாக படித்து பெரிய ஆளாக வரவேண்டும் - அதுதான் என் விருப்பமும் .... பிள்ளைகளுக்காக தன்னையே மெழுகுவர்த்தியாக பண்ணிக்கொண்டவன் சீனு - அவனுக்கு ஒரு சிறிய முறையில் உதவி செய்யக்கூடிய அந்த பாக்கியத்தை கொடுத்த இறைவனை நான் என்றுமே மறப்பதில்லை ....
இந்த பாடல் திரு ராஜ் ராஜ் அவர்களுக்கும் ராஜேஷ் அவர்களுக்கும் பிடிக்கும் பாடல் என்று நினைக்கிறேன்
https://youtu.be/VsJ-TDXJgIQ?list=PL4091AF071027ECDB