.
Shifted
Printable View
.
Shifted
நிலவோடு ஒப்பிட்டு
உனை பார்க்க
இரவில் தெரியும்
உன்னழகு எனக்கு
பகலில் தெரிவதில்லை
அதனால் தான்
கோவத்தில் சிலநேரம்
மேகத்தில் மறைந்தாயோ
மாதம் ஒருமுறை
தேய்ந்து இருள்கிறாய்
என்னருகே வாராது
மறைந்து போகின்றாய்
தேய்வதும் வளர்வதும்
உன் இயல்பு
என்னாலும் இருளினில்
ஒளிதரும் உன்னன்பு..
-
கிறுக்கன்
Quote:
-
தமிழ்ப்-பண்பு நால்-வழி மாதர்-நெறி
காலத்திற்கு ஒவ்வாதோ.?
[html:ee3741d6bd]
http://i129.photobucket.com/albums/p...10/Woman1A.jpg
[/html:ee3741d6bd]நாணம்-இல்லா காமக்-களியாட்டம்...
...மிருக-நெறியா மானிட-நெறியா.?
மானிட-நாகரிக முன்னேற்றமா...
... மாதர் தம்மை இழிவு.?
மங்கை ஓர் கடைச்-சரக்கா?
கற்பும் கொள்ளையா.?
Quote:
Originally Posted by Sudhaama
கடைச்சரக்கு அத்தனையும் விற்றுப்போகும் விளம்பரத்தாலே விலை கூடQuote:
Originally Posted by pavalamani pragasam
கடைச்-சரக்கோ விளம்பரச் காட்சிப்-பொருளோ மங்கையர் விற்பனைக்கோ?
கடையரோ உத்தமப் பிறவி மாந்தர் நாகரீக முன்னேற்றம் பெயரால் மாதை
படைத்தானோ இறைவன் ஆண்களின் காமப்பசி வேட்டைக்கே இரையாக.?
இரையாகவோ மங்கை தம்மைத்தாமே மாமிசக்-கொழிப்பு வளம் திறந்து காட்டி
சிறையாகவோ தற்கொலையுறு மனப்-போக்கால் வா வா இங்கே விளையாட
திரை மறை செயல்களை நாணம் இன்றி வெளிச்சம் போட்டுக் காட்டி வசியம்
வரையிலா இழி-மோகம் ஆண் பெண்களே வெள்ளையர் அமெரிக்கா-வால்
Quote:
Originally Posted by pavalamani pragasam
.Quote:
Originally Posted by kirukan
அன்பு என்ன மனதில் ஊற்றோ
இறைக்க இறைக்க ஊறுமோ
குறையாது தினம் வளருமோ
வருந்தாது பாரம் தாங்குமோ
உறங்காது இமைக்குள் காக்குமோ
தேடாது தானாய் வந்த வரமோ
வாரமோ சாபமோ
உடல் வருத்தி
உயிர் தந்து
அவன் வளர
தான் தேய்ந்து
அவன் உயர
தான் ஓய்ந்து
ஓய்வை தேட
கொஞ்சம்
அன்பை நாட
உபத்திரம் என
உதைக்கும் பிள்ளை
வரமோ சாபமோ!!!
-
கிறுக்கன்
சாபமோ வரமோ
நீண்டுவிட்ட ஆயுள்
நரைத்த முடியும்
உதிர்ந்த பல்லும்
உளறும் சொல்லும்
சுருங்கிய தோலும்
வற்றிய முகமும்
அழகின் அழிவே
அதைவிட பெரிதே
நோயும் வலியும்
தேய்ந்த எலும்பில்
குறுகிவிட்ட குடலில்
மங்கிய பார்வையில்
மந்தமான செவியில்
முடங்கிய நிலையில்
வெறித்த அமைதியில்
ஒருவித வெறுமையில்
உள்மன தனிமையில்
வைத்திய செலவில்
வேற்றிட நிழலில்
விளங்காத கலக்கத்தில்
வரமா ஆயுள் நீழ்வது
.
Shifted
ஏது பண்டிகை என்று
என்னுள்ளே குழப்பம்
வழியெங்கும் வாழைமரம்
வீதியெல்லாம் குதூகலம்
அதற்குள் சித்திரையா
திருவிழா வந்துவிட்டதா
மெல்ல உறைத்தது அது
எந்திரன் வெளியிட்ட நாள்
ரசிகர்கள் கொண்டாட்டம்
வியப்பின் விளிம்பில் நான்
நான் என்பது
நெஞ்சில் புகாததால்தான்
நாடிதளரும் வயதிலும்
நாடுகள் கடந்து
நேசத்தை வென்றார்-நம்
சிறப்பு நட்சத்திரம்.
நட்சத்திரம் என்றால் வைரம்
குழந்தை பாடும் பாட்டிலே
பாரதிக்கோ வெறும் வைரமல்ல
கருநீலப் பட்டுப் புடவையில்
பதித்த நல் வைரமாம் அது
கண்ணம்மாவின் கரிய விழி
அதன் சுடர்தான் சூரியசந்திரர்
என்னே மயக்கமது மயக்குது
கவியின் உவமை மயக்கம்
தருதே தனிக் கிறக்கம்