அன்பு கார்த்திக் சார்,
'நீதி' நினைவலைகளை நீங்கா நினைவலைகளாய் ஆக்கி விட்டீர்கள். உங்கள் அபார நினைவாற்றலுக்கு என்னுடய ஒரு 'நீதி' (தேங்க்ஸ் )சல்யூட். அற்புதமான பதிவு. நாங்கள் கடலூரில் கொட்டும் மழையில் (ஒரே வெள்ளக்காடு) அதைவிட பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் மூழ்கி டிக்கட் முத்தை எடுத்து, நீந்தி, நீதியை நியூசினிமா திரை அரங்கில் கண்டு களித்தது உங்கள் பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்து விட்டது. அடாது மழையிலும் விடாமல் அரங்கு ஐந்தே நிமிடங்களில் நிரம்பி விடும். கிட்டத் தட்ட ஒரு மாதம் ஓடி வசூல் மழை பொழிந்து அபார வெற்றி கண்டது நீதி. அந்தக் காலங்களெல்லாம் நமக்கு குப்தர்களின்....... போல.
'நீதி' மற்றும் 'மனிதரில் மாணிக்கம்' பதிவுகளுக்காக தங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு என்னுடைய மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அன்புடன்,
வாசுதேவன்.