:D :ty:
Printable View
:D :ty:
:2thumbsup:Quote:
Originally Posted by bis_mala
நன்றி
கிறுக்கிக் கிறுக்கி எழுதி வைத்தாலும்
சுருக்கிக் கருத்தினை உருக்கிப் பொதிந்து
நறுக்கென நாலு நல்லவை சொல்லும்
தருக்கென ஒன்றிலா தலைப்பண் பாளர்
உஙகளுக்கு என் நன்றி.
:D
:notworthy: :ty:Quote:
Originally Posted by bis_mala
நயாகரா
நளின அலைசேர் நடையின் நதியே நயாகராஉன் ீ
கவனம் எலாம்நின் புதினம் புகழ்ந்திடும் காதலன்பால்!
புவனமிப் பூவன மாக்கிய ஆறுகள் தேவிநீயென்(று)
எவனும் விளம்புவன் என்றிடில் அஃதும் மிகையலவே!
வீழ்ச்சி அழகினை விஞ்சும் அழகும் உலகிலுண்டோ,
காய்ச்சிய வௌ்ளியை ஊற்றுதல் போல் ஒரு காட்சிதரும்,
மூச்சினை நிற்பிக்கும்் விந்்தையை ஈந்திடும் நீரிதுபோல்
பாய்ச்சும் அருவி பயக்கும் நதிதனைக்் கண்டிலனே.
கண்டிட வந்தவர் மேனி குளிரப் ப(ன்)னீர்தெளித்து
சுண்டி மனத்தினை ஈர்த்தனை சுற்றுப் புறத்திலெல்லாம்
மண்டிக் கிடக்குமிம் மக்கள் வரவினை வாழ்த்துதல்போல்
அண்டும் எனக்கும் அளித்தனை அன்பை மறக்கொணாதே!
அருவியை பார்த்ததும் அருவியாய் கவிதை!
அருமை!!!
வீழ்ந்தே வாழ்வினும் தாழ்ந்து வாழ்வதில்லை
எழுச்சியுடன் விழும் நீர்வீழ்ச்சி.
-
கிறுக்கன்
ஆறுகளின் தூய்மை:
நன்றி மேடம் மற்றும் திரு கி,! இன்னும் சில வரிகள்:
வஞ்சனை ஏதுமின்றி -- அங்கு
வாழிரு நாட்டினர் யாரும் களித்திட,
மிஞ்சும் ஒலியுடனே -- நதி
மேட்டினின்-றும் கரும் - பாறைப்பள்- ளத்தினில்
அஞ்சும் விரைவுமிகச் -- சென்றே
ஆழ்ந்தது பாய்ந்து! இது ஓய்ந்ததுண்டோ?படு
வெஞ்சினம் தீர்ந்ததுபோல் -- பின்பு
வேகமில் ஓட்டத்தில் ் வென்றதென் நெஞ்சினை!
ஐயிரண் டாயிரமாம் - ஆறும்
அன்று தொடங்கியே ஆண்டுகள் இத்தனை,
பொய் இல் வளத்தினையே - இரு்
பக்கமும் தந்து ் கருணை பொழிந்தது!
உய்ய இரக்கமுடன் -- அன்னை
உலகுக் கருளிய ஆறுகளின் தூய்மை,
நைய விடோமெனவே -- நின்று
நாளும் விடாதுபல் யாகமேற் கொள்ளுவோம்!
ஆஹா! என்ன அழகான எதுகை மோனை !