-பூங்காத்தே பூங்காத்தே
போனவளை பூங்குயிலை பார்த்தியா
தாங்காம தவிச்சேனே
சின்னவளை என்னிடத்தில் சேர்ப்பியா
கண்ணாலே பார்த்தது கனவாக தோணுது
கண்ணுக்குள்ளே கண்ணீர் வற்றி போனது...
-வான் பறவை தன் சிறகினை எனக்குத் தந்தால்
பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால்
வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே
காதலை வாழ வைப்பேன்
அழுத முகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன்...