நிறைவேறுமா பொல்லாத ஆசைகள்
நிறமில்லாத சாரமில்லாத கனவுகள்
சூரியன் மேற்கே உதிக்காது
கடல்நீர் கரிக்க மறக்காது
கோழி கூவிட முடியாது
கருவை ஆணும் சுமப்பானா
வரம்பில்லா ஆசைகள் தீது
வரைமுறையோடு விளையாடு
Printable View
நிறைவேறுமா பொல்லாத ஆசைகள்
நிறமில்லாத சாரமில்லாத கனவுகள்
சூரியன் மேற்கே உதிக்காது
கடல்நீர் கரிக்க மறக்காது
கோழி கூவிட முடியாது
கருவை ஆணும் சுமப்பானா
வரம்பில்லா ஆசைகள் தீது
வரைமுறையோடு விளையாடு
.
.
விளையாட்டே வாழ்க்கை என்றான் மனோதத்துவ விஞ்ஞானி
இளைஞர் உணர்வு செய்யும் எவ்வயதிலும் மனதால் விளையாட்டு
துளைக்காத இன்பம் வேண்டின் அன்புறு வாழ்-நெறியே செயல்பாட்டு
கிளைவிட்டு கிளை தாவும் குரங்கு மாந்தர்க்கு எடுத்துக்காட்டு
திளைத்து-இன்பம் விளையாடுவோர் காண்போர் இரு பாலார்க்குமே
வளைத்து வரம்பு-இட்டார் வகை வகையாய் பெயர் கேம் ஸ்போர்ட்சாம்.!
அளைந்து நீரில் குதித்து நீந்தி இன்பம் மாந்த வயது ஓர் வரம்பாமோ.?
களை கட்டும் வாழ்க்கையிலே பயன் பொழுது போக்க கவலை தீர்க்க
தளை நீக்கும் தரணியிலே உல்லாசம் எவரெவரோ புது நண்பர்
விளைவு இன்பம் புத்துணர்ச்சி அறிவுக்கும் உடலுக்கும் மனதிற்கும்
முளை விடும் முத்தே முதிர் இன்பம் கணவர் மனைவி படுக்கையிலே
சுளை சுளையாய் உள் மறைந்த முள்-பழத்தை உரித்தாலே பலா
இளைக்காத உடல் வேண்டின் ஆரோக்கியம் மாந்தர்காள்
விளையாடு என்றாரே வைத்தியரும் நடந்து ஓடி பல்வகையாய்
சளைக்காத லீலை என்றே பெயரிட்டு ஈசரும் புவி பிறந்தார்.!
விளையாட்டே வாழ்க்கை என்றார் இறைவர் ஞான-நெறியுமே
.
நெறியுமே நேரான கோலோ
முறியுமோ ராமன் வில்லாய்
நடத்துமோ நல்வழியினில்
மதித்து நடந்த மக்களை
.
Quote:
Originally Posted by pavalamani pragasam
மக்களை மதித்து நடந்து காட்டினான் ராமன் மன்னன்
தக்க மானிட நெறியதுவே தகைமைக்கு இலக்கணமாகும்
பக்கபாதம் ஏதும் இல்லா பாங்காய் தன்னடக்க முன்னோடி
எக்காலத்தும் ஏற்ற சால்பே மாந்தர் வாழ் வள நல்வழியே
நல்வழி நடத்தும் பிறரும் பெற்றதே பிரதியாய் விழைய
வெல்வழி வேந்தன் எனினும் கொடுத்து வாங்கு சால்பு வசமே
செல்வழி எங்கும் செயிக்கும் சேல்விழியாளையும் மயக்கும்
பல்வழி அனைத்தின் சீராய் எதிரியரையும் எளிதே முறிக்கும்
முறியுமே ராமன் வில்லாய் சவாலின் எல்லையும் மீறி
குறியுமே தப்பாது எங்கும் இயல்வது கரவா திறமை
செறிவுறு-வலமை பிறர்-முன் மன்னனாய் தலை-நிமிர் நடையே
நெறியே தன்னைத் தானே பிறரையும் நேராய் ஆளும் கோலே.
.
கோலே ஆட்டுவிக்குது குரங்கை
வீட்டுப்பாடம் எழுதும் குழந்தையை
இசைக்கின்ற ஒரு வாத்திய குழுவை
இடையர் மேய்க்கும் கால்நடையை
காவலரிடம் மாட்டிய கயவாளியை
கோலே வழி நடத்துது குருடரை
கூடிப் பாடி மகிழும் குமரியரை
உண்டோ அது போல் நல்ல கருவி
.
நல்ல கருவி கோலால் சைகை-மொழி கோல்மொழியே பல்வேறுQuote:
Originally Posted by pavalamani pragasam
சொல்லாது உணர்த்தும் மௌனமொழி குரங்கு, குழந்தை, இசைக்குழுவும்
புல் மேயும் கால்நடை, காவலர், குருடர், குமரியர் எழுவகையாம் பாரினிலே
எல்லா நலம் பயிற்சி பயன் ஆள்பவர் எளிதே குறிப்பாய் காட்டு பொருள்
பொருள் சைகை-ஆணை ஆட்டுவிக்கும் வாயில்லாப்பிராணி குரங்கையே
அருமை கல்வியின் அறியாத குழந்தைக்கு கண்டிப்பு காட்டி பாடம் ஊட்ட
திருடர் தீயரை அடித்து பயம்-உறுத்தி அடக்கி இருத்தி உண்மை கறக்க
குருடர்க்கு மூன்றாம் கால் கையுமே கைக்கோல் நடை-துணை வழிகாட்டி
காட்டி-வழி அன்பால் தட்டி ஆயர் கால்-நடை மேய்க்க வரம்பு மீறா செலுத்த
ஆட்டு-மொழியே கோல் லயம் இசைக்குழுவின் ஒருங்கு-இணை சைகை-குறி
பாட்டுத்துணையே தாளம் கோலாட்டம் மாதர் குழு கூட்டு கொண்டாட்டம்
நாட்டு மொழியே நீதி காக்கும் மன்னன் செங்கோல் செலுத்து மாண் கருத்தே
.
.
.
கருத்தே இல்லாத கதைகள்
கற்பனை வற்றிய புனைவுகள்
குணம்கெட்ட பல போக்குகள்
காண்பீர் காகிதக்குப்பைகள்
.
Quote:
Originally Posted by pavalamani pragasam
குப்பையிலும் குந்துமணி குடும்பத்தின் தலைநிதியே
தொப்பைக் கருவிலே திருவுடையாய் தாயே கருத்தாயே
.
.
தாயே உன் தலையில் அணிய தொப்பிகள் எத்தனை
தாரமானாய் கணவனானான் உன் முதல் குழந்தை
பதவி உயர்வுகள் பல பெற்றபின்னும் வளர்கிறாய்
தோழியாய் தாதியாய் ஆசானாய் ஆலோசகனாய்
ஆலமரமாய் நீ குடை விரிக்கிறாய் அந்நிழலிலே
சுற்றம் மொத்தமும் அங்கே சுகமாய் சுவாசிக்குதே
.
கவிதைக்கு கவிதை மற்றும் பாட்டுக்குப் பாட்டு.
இழைத் தலைப்பின் கருத்துக்கும், நோக்கத்திற்கும் பொருத்தமாக...
--- எளிய நடை சொல்-கருத்து அந்தாதி.
(யாப்பு இலக்கண-மரபு வரம்புக்கு உட்பட்டது அல்ல)
கவிதைத்-தலைப்புக்கள் ஒவ்வொன்றும் பல்வேறு கருத்துக்களாய் ---
--- ஆறு வெவ்வேறு வகை உதாரணங்கள்.
இன்னும் எத்தனை வேண்டும் கூறுங்கள் அன்பர்களே.!
ஆழ்பொருள் மிக்க மேற்குறித்த கவிதைக்கு மேல் கவிதையாக இன்னும் நூறு வகை கவிதைகள் உங்களாலும் இயலும்.!
பல்வகை நுண்-கருத்து பொதிந்த பல்சுவையாய் பற்பல கவை தந்த--
--திருமதி பவளமணியார்க்கு மிக்க நன்றி.! பாராட்டுக்கள்.!!!!
Quote:
Originally Posted by pavalamani pragasam
(1)
வாசிக்கும் பாடம் இது தாயே தான் முதல் தெய்வம்
காசி ராமேஸ்வரம் போய் வேண்டிச் சுமந்து பெற்று
போசித்து சேய் வளர்த்து ஊண் உறக்கம் தனை துறந்து
நேசிக்கும் வாழ்-நெறி அன்பே தாய் தரும் முதல் பாடம்
பாடமே பகுத்தறிவு கொண்டோர் மாந்தரே உயர் பிறவி
லாடமே கட்டிக் கொண்டு குடும்பத்தின் மாடாய் உழைக்கும்
சேடராய் அனைவர்க்கும் தொண்டு புரியும் மாண் தாயே
ஓடமாய் வாழ்-நதி குடும்பம் தாங்கும் உனை கணவன் ஓட்ட
ஓட்டுகின்றார் தாயே இவ்வுலகத்தோர் உன்னையே மாடாக
வாட்டுகின்றார் தாய்மை பெண்மையே அடிமை ஆக்கி அடக்கி
ஆட்டுகின்றாரே ஆண் கைப்பொம்மையோ போகக்-கருவியோ நீ
காட்டு நீ தாயே தரணியர்க்கு நீயும் வாழப்பிறந்த மாந்தர் என்றே
என்றென்றும் எவரெவர்க்கோ உடல் காட்டி நாணம் விட்டு
கொன்று மானிடப்பண்பு தற்கொலை மாக்களினும் இழி வாழ்வு
தின்று கொழிக்க ஆண்கள் உன் கௌரவம் மரியாதை மாமிசமோ.?
வென்று தலை நிமிர்ந்து வாழ வா மங்கை நாற்-பண்பு நெறியாலே
================================================== ================
(2)
சிக்குதே மனிச சீலமோ சீராளா பகுத்தறிவு மிகு பிறவி
விக்குதே விக்கு விக்கு பல தொப்பி பொய்-முகம் பெருத்து
விக்கு பொய்-முடியாலே வழுக்கைத்-தலை மறைத்து தீயொழுக்கம்
திக்குத் தெரியாதே திரிகின்றாயே தின்று கொன்று தாழ்ந்து மாந்தே
சிக்கிக்கிட்டாயோ தானேயே செஞ்ச தற்கொலை வாழ்-நெறியாலே.?
================================================== ===============
(3)
சுவாசமே பாரதத்தாய் மூச்சாய் சுதேச விடுதலைக்கே
விவாதத் தலைப்பு பல மானிடத் தமிழ்ப்-பண்பின் வடித்தாயே
அவா மிகக்கொண்டு புது ஆத்திச்சூடி படைத்தாயே பாலர்க்கு
குவா குவா பருவத்து முன்னே கருவிலே திருவுடையாய்
கருவிலே திருவுடையார் தமிழ் நான்முக கவிஞர் யார்.?
சிறு வயதில் காசி வளர்ந்து வாழ்-பொருள் கற்றது ஒருமுகமே
திருவருள் கீதைப் பொருள் இறை பலர் போற்றியது ஒரு முகமே
அரும் தமிழ் எளிமை பாரத தேச பக்தி பாடியது ஒரு முகமே
வறுமை மிகு கொடுமை மனைவியுடன் கண்டது மறு முகமே
செறுமையுறு உலக மாந்தன் மாண்பரே மகா கவி பாரதியார்.
================================================== =============
(4)
சுவாசமோ தற்கால மாந்தர்க்கு மூச்சோ உலகு-எங்கும் இதே பேச்சோ.?
திவாகரன் கதிரவன் ஒளி போல இன்றியமையா வாழ்-துணையோ.?
துவாரகைக் கண்ணனோடும் கண்காணா தொலைத்தொடர்பு முன்னேற்றம்.?
அவா அனைவர்க்கும் சிறுவர், காதலர் அலுவலக பணியாளர் நல்ல கருவி
நல்ல கருவி ஐயா நானிலத்தோர் பேசியே பொழுது-போக்க இராப்பகலாய்
வல்ல விஞ்ஞானம் தந்தது இந்த கை-பேசி பேச்சு மட்டுமா எங்கெங்கும்.?
சொல்லவொண்ணா தொல்லை-பேசி இந்தத் தொலை-பேசி அம்மம்மா
எல்லையில்லா பல வசதி எவரையும் படம்பிடிக்க மறைந்திருந்தே
செல்லமாட்டா இடத்தும் ஒளிந்திருந்தே வெடியால் பாழ் செய்யவுமே
கொல்லவும் கண்காணாதே பணம் பறிக்க கொடியோர் துணை- கருவி
பொல்லாக்கருவி இது போதும் சாமி முன்னேற்றம் பெயரால் மாநரகம்.!
================================================== ===============
(5)
சுவாசிக்கத் தெரியும் முன்னே என்னெ வயத்துலே சொமந்தாயே
சிவான்னு வேண்டி என்னே பெத்தாயோ நீ தான் தாயோ.?
குவா கத்தற கொழந்தைக்கும் அம்மேன்னு கூவுற எனக்கும்
திவாகரன் உதிக்கும் முன்னே பசி தீர்க்கும் கருத்தாயோ.?
கருவிலே சொமந்ததாலே என் தாய் நீயோ அம்மே
உருவிலே என்னெப்போல் இருப்பதாலே தான் தாயோ.?
தருவதாலே பாலூட்டி நீ தான் தாயோ தெரியல்லையே.!
அருமையா தேனுன்னு கொஞ்சும் அம்மா என் தாயோ.?
சிறு குரலே ஒரு ராவுலே ஞான் கத்தினேனே அம்மேன்னு
அறுத்து கட்டுத்தறி ஓடிவந்து பால் ஊட்டினயே நீ தாயோ.?
புருபுருன்னு உறிஞ்சி மிதமிஞ்சி குடிச்சாலும் பொறுக்காதெ
விறுவிறுன்னு ஒடிவந்து பிரிச்சுக் கட்டி வெச்சா அவ தாயோ.?
மறு நிமிசம் வயறு-ஊதி உயிர் ஊசலாட கிடந்தேனே மூச்சு முட்டி
ஒரு நொடியும் ஒறங்காதெ மருந்து- ஊட்டி பிழைக்க வெச்சவ தாயோ.?
திருட்டுத்தனமா எனக்கு பால் கொடுத்து நோய் செஞ்ச நீ தாயோ.?
அருத்தம் இப்போ புரிஞ்சிக்கிட்டேன் அம்மே தாயின்னா என்னான்னு
பொறுமையா ராப்-பகலா காக்கும் எசமானி அம்மா தான் என் தாயே.!!!
================================================== ==================
(6)
தேரு வடம் பிடிக்க வீட்டிலே ஆள் இல்லே
சோறு போட வருமானம் ஈட்ட ஒரு நாதியில்லே
ஊரு வாழ குடும்பமோ தாயோ ஒரு கருவில்லே
கருவடையவில்லே கருவுறும் மாது இல்லே
மருமக வரவில்லே திருமணமே ஆகவில்லே
கருப்பாயி பேத்தி பெயர் இட்டாரே முதல் முன்னம்.!
================================================== ====================
.