-
விளக்கம் தேட அகராதி வேண்டுமோ
வார்த்தை எதுவும் உதிராமல் புரியும்
விழியின் விரிப்பும் சிகப்பும் சிரிப்பும்
வாயின் குவிப்பும் சுழிப்பும் பழிப்பும்
வெட்டும் கழுத்தின் சாடையும் அழைப்பும்
விரல்கள் பத்தின் சேட்டையும் சைகையும்
வளைந்த இடையும் புருவமும் பாதமும்
வளையாத வகிடும் நாசியும் நடையும்
வண்ண மயிலவள் ஒவ்வொரு அசைவும்
வடிப்பதெல்லாம் எழுத்தில்லா காவியம்
-
.
எழுத்து-இல்லா காவியமே வாழ்க்கை
எழுத்து-இல்லா காவியமே வாழ்க்கை எழுவாய் மனத்தால்
பழுதிலா பண்பு இன்றி பயனிலை பார்-வாழ்க்கை வாழவே
தொழுது மேலோன் உணர்வாய் மாந்தே செயப்படுபொருள்
அழுகையற எழுவாய் பயனிலை செயப்படுபொருள் தெளி
தெளிவே வாழ்வின் ஒளி என்றால் பொருள் யாது.?
தெளிவு மிகு தென்றலாய் தேனமுதாய் தெவிட்டாத
தெளிவுறு தமிழ்-கவிதை சிற்சிலவும் இங்கு முன்னம்
தெளிவில்லா சுக்கு நூறு சிதறலும் அந்தாதி பற்பலவாய்.?
பற்பலவே பால் கருத்து பார் விருந்து இக்கனி மேடையிலே
நற்கவிஞர்காள் நவில்கின்றேன் விண்ணப்பம் கேட்டருளீர்
பொற்பெரும் தமிழ் அமுது படைக்கின்றீர் பாராட்டு நன்றி
சொற்கவிதை அந்தாதியாய் முன்பின் தொடர்பில்லா துணுக்கோ.?
தொடர்பில்லா சிதறலாய் இதுகாறும் அந்தாதி நொந்தேன்
அடர் நிறை ஆழ்பொருள் கருத்து பல படைத்தும் சங்கிலியாய்
தொடர் சொற்-பொருள் அந்தாதி அன்றோ பல்லோர் சிந்தனை
சுடர் மிகு உங்கள் மன-வளம் அறிவாற்றல் இணை சுவையே.!
சுவை-மிக அரிதே முதன்-முதலாய் இன்று கண்டேன் அன்பர்காள்
சுவைபட சொற்பொருள் கூடி இணை அந்தாதி இரு வகையும்
கவை இட்டார் "ஜானகிஜனர்" அன்பர், தொடர்கின்றீர் சங்கிலியாய்
இவையே தொடர்க ஆழ்பொருள் சொற்-கருத்து மாலை அந்தாதி
.
-
அந்தாதி தொடருது
பந்து கைமாறுது
கூடுது விறுவிறுப்பு
உண்டோ முடிவிதற்கு
-
.
- எழுத்து-இல்லாக் காவியமே.!
உண்டோ முடிவு இதற்கு விந்தை இது சொல் மட்டும் அந்தாதி.?
வண்டமிழ் விருந்து படைத்து-வரும் தமிழினியோரே கேட்டருளீர்
செண்டுகள் பலவோ இது காறும் நீவிர் எறிந்தது எங்கேங்கோ
தண்டமிழ் கவிதை ஒவ்வொன்றும் காட்டில் காயும் நிலவோ.?
நிலவிதுவோ சிதறலோ? குருடர் மேல் பாயும் வீண் ஒளியோ.?
பலப்பலவே ஆழ்கருத்து படைக்கின்றீர் எனினும், பின் தொடர்வோர்
கலப்படமோ முன் கவி கருத்து தொடராது ஏனையோர் காணாது
புலப்படா துண்டு துண்டாய் கருத்துச்-சங்கிலி அந்தாதி தொடர்பறவே.?
தொடர் முன்-பின் மலராய் அடுத்தடுத்து தொடுப்பதே பூமாலை
அடர் பொருள் முந்தைய கவிமலரது் கருத்தின் மேல் கருத்தாய்
சுடர்-ஒளியாய் மன வளமும் கவியமுது அறிவாற்றல் மிக்கோரே
குடத்தினுள் ஒளி-விளக்காய் நற்கருத்தை சிறை-இருளில் அடைக்காதீர்.!
அடைவோம் நாம் யாவருமே கூடி ஆனந்தம் தமிழ் அமுதே
தடையில்லா தங்கு தடுப்பில்லா சொற்பொருள் மாலை அந்தாதி
படைப்பீரா இனியேனும் துண்டுபடா தொடர் மாலை கருத்து இசைய
விடை பலவாய் பல கருத்து ஒரு தலைப்பு அந்தாதி மாலை மலை.?
மலை மாலை முதல் பூ இதோ தந்தார் பவளமணியார் பின் தொடர்ந்தேன்
தலைப்புக்குப் பொருத்தமாய் கவிதைக்கு கவிதை, பாட்டுக்குப் பாட்டு
சிலை ஒன்றின் பல கோணக் கருத்து-அமுதாய் படைப்போமே நாம் கூடி
மலைக்காதீர் அன்பர்காள் உம்மாலும் இயலும் தகு விருந்து தந்து பெற
நிலைத்த ஒரே தலைப்பு ஒரு வாரம் “எழுத்து-இல்லாக் காவியமே”
================================================== =================
.
-
காவியமே பிறக்கும்
கற்பனையும் கவிநயமும்
சொல்வளமும் அணியழகும்
அருவியாய் கொட்டும்
உருப்படியாய் படியாத
எழுத்தாற்றல் இல்லாத
இளவயது மாந்தர்தாம்
காதல் வயப்பட்டபோது
-
போது விடிஞ்சிருச்சு ராவெல்லாம் ஒறக்கம் இல்லே
காது குளிர்ஞ்சிருமோ கனிச் சேதி தாங் வருமோ.?
தோதுப்படலை ஆத்தா வேளை வரலை சாமி
ஏது நிம்மதி என் மச்சாங் எப்போ வாரானோ?
வாராதெ வந்த மச்சாங் எங்க ஊர் மருதை
பாராதே தலை தூக்கி நாங் குனிஞ்சவ நிமிராமே
சீராளா எங் கழுத்து தாலி முடிஞ்சாயெ
ஆராரோ நம் குஞ்செ பாக்க வா பாடிக்கிட்டு
பாடிக்கிட்டே வா, பாடி கிட்டே வா,
ஆடி விளையாடி பாட்டுக்குப் பாட்டெடுத்து
கோடி புண்ணியமாம் யாராச்சும் சொல்லுங்க
ஓடி ஒடி ஒழச்சதெல்லாம் போதும் ஐயா பணம்
பணம் சேக்க நாடு விட்டு நாடு தேங் ஏதுக்கு.?
கொணம் ஒன்னெப்போலே கொழந்தெ மொகம் நீயே
மணம் வாழ்க்கை எளமை மீண்டு தேங் வந்திடுமா.?
ரணம் போலெ வேதனையெ மறக்கேன்யா பாட்டாலே
பாட்டுக்குப் பாட்டெடுத்து நீயும் நானும் பாடுறதெ
வீட்டுக்கு வீடு சனம் கூடியெ ஆடுறதெ
காட்டுவமே நம் குஞ்சுக்கு சிரிப்பே ஆனந்தங்
நாட்டுவமே குடும்ப சொகம் எழுத்தில்லாக் காவியமே
.
.
-
காவியமே கவிநயமே
கனிரசமே கன்னல்சாறே
சித்திரமே சிங்காரமே
செதுக்காத சிற்பமே
தவமென்ன செய்தேன்
தேனான வாரிசுக்கு
-
சுக்கு அளவு சிறிதாயின் சுகம்
பெருகின் பண்டம் பாழ்.
-
கிறுக்கன்
-
பாழ் ஆனது பொன் மாலைப் பொழுது
பகல் போல் காய்ந்த முழு நிலவு
பஞ்சணையும் மல்லிகை பூமணமும்
பனிப்போராய் ஊடல் உலவியதால்
-
.
உலவு தென்றல் தண் காற்றும் கூட தணலாய் வெம்மையாமா.?
நல-உல்லாச மணம் பூஞ்சோலை ஊடலால் ஏறு மாறலாமா.?
நில சந்தன நன்மணமும் கூட கெடு நாற்றம் மாறுபடலாமா.?
பலமே காதல் ஓங்க மென்மேல் ஊடலால் நெருக்கம் கூடுமாமா.!
உலக இயல்பு அன்பு கொடுக்கல் வாங்கல் எதிர்-பார்ப்பு பரிமாற்றமா.?
வலமே உயர் காதல் பக்தி நட்பு பண்பும் ஒரு வகையே மாந்தர் ராமா.!
இலமே நினைவு வேறு உனது உடைமை என்னைக் கொள் காதல் ஆ.! மா.!
உலகில் ஊடல் எங்கும் உண்டு காதலர் இடையில் மட்டும் தானா சும்மா?
அலர் காமத்துக்கும் இன்பம் ஊடலால் ஆடவர் நட்பு சேமத்திற்குமே மா மா
நல கருத்து-ஒருமித்து ஆதரவு பட்டது இன்பம் ஆண் நட்பிலும் வேண்டாமா.?
மல-மனமுடைய மாக்கள் அல்லோம் மக்கள் மாந்தர் மாண்புறு பிறவியரே மா.!
சில தருணம் ஒருவரொருவர் புரிந்திடா நிலை மௌன கோபம் ஊடலாகுமாமா
திலக நண்பர் இடையும் கூட நட்பு ஊடல் கண்டதில்லையோ சுதாமா.?
புலமை-பண்பர் பவளமணி கிறுக்கர் உனை-எதிர் சேம்-சைடு கோல் போடலாமா.?
பலபல வகை ருசி கொள்கை நாட்டம் அறிவாற்றல் கொண்டோர் பூ மா
கலகம் போல கருதி உந்தன் நோக்கம் கவனியார் கண்டு நீ புண்படலாமா.?
நலமே ஒன்றே நானில மாந்தர் சால்பு கருதும் நீயே வருந்தலாமா.?
உலகம் அனைவர் இன்ப நோக்கம் அல்லாது வேறு-ஒன்றும் நினையா சுதாமா
நலம்-உள்ளதே சொல்லி நல்லது செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் தாமா
நல-காலம் கனியும் பொறு புரிவர் நண்பர் பண்பர் அறிவாளி இங்குளரே ஆ மா
பலபல பணி நமது கவலைக்கிடையே காலம் பொன்னை வீணே கழிக்கலாமா.?
உலக மன்றம் இங்கு வந்தோம் கூடி குளிர அனைவர் ஓங்க பயன் கை கூடுமா.?
புலர் புதுமை இன்பம் மாந்த உள்ளுவதெல்லாம் உயர் நினைவே கொள்ளுவோமா.?
பலகை ஒன்றில் பல கை கூடி பாட்டுக்கவிதை தமிழ் இன்சுவையே வரைவோமா.?
நலமுறவே நண்பர் நாம் அனைவர் பொலிக வாழ இறையருள் நிறைவேறுமா.?
.
.
.