இன்று மாட்டுப்பொங்கல் http://i60.tinypic.com/16kuemf.jpg
Printable View
இன்று மாட்டுப்பொங்கல் http://i60.tinypic.com/16kuemf.jpg
RARE STILL
http://i59.tinypic.com/20qi2w2.jpg
தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறந்த தினத்தில், அவரது சிலை அருகில் - தமிழறிஞர்களை கவுரவப்படுத்தி, தமிழ் பல்கலை கழகத்தினை உருவாக்கி, உலகத் தமிழ் மாநாட்டினை நடத்தி, தமிழ் சீர் திருத்த எழுத்துக்களை நடைமுறைக்கு கொண்டு வந்த மகான், உலகத்தமிழர்களின் உண்மைத்தலைவராக உயர்ந்து நிற்கும் உன்னதமான புரட்சித்தலைவர் புகைப்படத்தை பதிவிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
http://i59.tinypic.com/1zc3bbn.jpg
விஜய் தொலைக்காட்சி நிறுவனம் இன்று ஒலி – ஒளி பரப்பிய “மன்னாதி மன்னன் எம். ஜி. ஆர்.” நிகழ்ச்சி, முன்னரே கூறியபடி, அவர்களின் வழக்கமான பாணியில், எடிட் செய்யப் பட்டும், நன்றாக இருந்ததன் காரணம் –
மக்கள் திலகத்தின் மகத்தான மகிமைகளும், அவரின் திரையுலக – அரசியல் சாதனைகளும், அவற்றையெல்லாம் தாண்டி அவரது மனிதாபிமான செயல்களும், அதை ரசிகர்களும், பக்தர்களும், முக்கிய பிரமுகர்களும், எடுத்து சொன்ன விதமும் தான்.
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் தெரிவித்த கருத்தின்படி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களின் பெயரை குறிப்பிட்டிருக்கலாம்.
மறைந்த புகழ் பெற்ற இயக்குனர் பந்துலு திருமதி பி. ஆர். விஜயலட்சுமி அவர்கள், மக்கள் திலகத்தின் மனிதாபிமானத்தையும், பந்துலு இறந்த பின்பு, தங்கள் குடும்பத்துக்கு நம் பொன்மனசெம்மல் அவர்கள் ஆற்றிய உதவிகளையும், பட்டியலிட்டு, கலங்கியது காண்போர் அனைவரின் நெஞ்சை யும் தொட்டது. 2 வருடங்களுக்கு முன்பு, திருமதி பி.ஆர். விஜயலட்சும் அவர்களை சந்தித்து, இறைவன் எம். ஜி. ஆர். பகதர்கள் குழு சார்பில், மறைதிரு பந்துலு அவர்களும், நம் புரட்சித்தலைவரும் இணைந்து நிற்கும் பெரிய படத்தினை பரிசாக அளித்து அதை அவர் தம் அலுவலகத்தில் மாட்டி வைத்ததை நினைவு கூர்ந்து தெரிவித்தது பாராட்டுக்குரியது.
சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்து வருடந்தோறும், சுமார் 2 லட்சம் பொறியாளர்களை உருவாக்கிய பெருமை புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்களை மட்டுமே சாரும் என்ற தகவலை இன்றைய மாணவ சமுதாயமும், இளம் தலைமுறையினரும் உணரும் வண்ணம், பேசியகல்வியாளர் திரு. விசுவநாதன் அவர்களுக்கு இத்தருணத்தில் நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.
திரு.ஜேப்பியாரின் மகள் மரியா, குண்டடி பட்ட பிறகு நமது இதய தெய்வம் அவர்கள் குரலை யாரும் குறை கூறக்கூடாது என்று சொன்னது, சில தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் (விஜய் தொலைக்காட்சி உட்பட) மிமிக்ரி செய்வதை சுட்டிக் காட்டி அவர்களுக்கு ஒரு குட்டு வைத்தாற் போல் இருந்தது. கோடானு கோடி எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில், இத்திரியின் மூலம் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்தது கொள்கிறோம்.
பெண்மணி ஒருவர், கடைசி வரை தலைவரைப் பார்க்க முடியவில்லையே என்று வேதனையுடன் கண்ணீர் விட்டது, நம்மையும் அழ வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அவர், மக்கள் திலகத்தின் “மாட்டுக்கார வேலன்” காவியத்தை பார்த்த சம்பவத்தை விவரிக்கும் போது நெஞ்சை நெகிழச் செய்தது.
எந்த ஒரு திட்டம் என்றாலும், அதனால் ஏழை மக்களுக்கு என்ன பயன் என ஆராய்ந்து அந்த திட்டத்தின் பலன் ஏழை மக்களுக்கு சரியாக கிட்டுகிறதா என்றுதான் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள் பார்ப்பார் என்று திரு. ஜி. விசுவநாதன் அவர்கள் கூறியதை எண்ணும்போது, இனி இது போன்ற ஏழைப்பங்காளன் கிடைப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.
திரு. மோகன்ராம் அவர்கள், தமிழ் திரையுலகிற்கு இரு ஜாம்பவான்களை ( மறைந்த இயக்குனர் கே. பாலசந்தர் மற்றும் திரு. மகேந்திரன்) நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் அறிமுகப்படுத்தியதை பெருமையுடன் சிலாகித்தார். திரு. கே. பாலச்சந்தர் அவர்கள் திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமலஹாசன் போன்றோரை தமிழ் திரையுலகில் அடையாளம் காட்டியதையும், இதற்கு மூல காரணம் எம். ஜி. ஆர். தான் என்றும் திரு. மோகன்ராம் அவர்கள் கூறியதை விஜய் தொலைக்காட்சி நிறுவனம் ஏனோ கட் செய்து விட்டனர்.
இசையமைப்பாளர் திரு. (சங்கர்) கணேஷ் அவர்கள், பொன்மனசெம்மலின் பெருமைகளை விவரித்தபோது நம் கண்களில் கண்ணீர் பனித்தது.
இயக்குனர் கரு. பழனியப்பன் தனது பேச்சில், சாலிவாகனன் திரைப்படத்தில் அங் கீகரிப்படாத ஸ்டண்ட் கலைஞர் சின்னப்ப தேவர், பின்னர் தான் கதாநாயகனாக நடித்த முதல் காவியமாகிய “ராஜ குமாரி” யில் அவருக்கு வாய்ப்பினை அளிக்குமாறு சிபாரிசு செய்து அதனை நிறைவேற்றிக்காட்டிய நினைத்ததை முடித்தவர் என்று புரட்சித்தலைவருக்கு புகழாரம் சூட்டியது, போற்றத்தக்கது. தான் கதாநயாகனாக நடிக்கும் முதல் படம் என்ற நிலையில், தனக்கே இந்த வாய்ப்பு திரிசங்கு சொர்க்கம் என்ற நிலையில், இன்னொருவருக்கு சிபாரிசு செய்த தைரியம், துணிச்சல் பற்றியும் அவர் தெரிவித்திருக்கலாம். அவர் அவ்வாறு கூறியிருந்தால், அதையும், அநேகமாக எடிட் செய்து விட்டார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
நிகழ்ச்சியின் இறுதியில், காண்பிக்கப்பட்ட, நம் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் வீடியோ காட்சிகள் வெகு அருமை.
ஏழைகளின் கடவுள் எம்.ஜி.ஆர்., மனித நேயத்தின் சின்னம் எம்.ஜி.ஆர்., அன்பு -அருள் - எம்.ஜி.ஆர்., கொடை வள்ளல் . கர்ணன் எம்.ஜி.ஆர்., பொன்மனச்செம்மல் எம்ஜிஆர்
அன்பு - அறிவு - அழகு எம்.ஜி.ஆர்., சகலகலா வல்லவர் எம்.ஜி.ஆர்., என்று ஒரு தனி மனிதரின் இத்தனை குணாதிசயங்களை கொண்டஒருவர் இருப்பது உலகில் எம்ஜிஆர்
ஒருவரே என்ற சகோதரர் திரு. சி. எஸ். குமார் அவர்களின் கருத்து மெத்த சரியே !
பொதுவாக இந்த நிகழ்ச்சி, தொலைக்காட்சி நேயர்கள் விரும்பும் வண்ணம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய திரு. கோபிநாத் அவர்களுக்கும், நிகழ்ச்சியினை ஒலி – ஒளி பரப்பிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தாருக்கும், முக்கிய விருந்தினர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் அவர்களுக்கும், வேலூர் பலகலைகழக வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களுக்கும், திருமதி பி. ஆர். எஸ். விஜயலட்சுமி அவர்களுக்கும், முருகன் திரையரங்க உரிமையாளரின் மகனும், எங்கள் அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்க கவுரவ ஆலோசகருமாகிய திரு. வி. பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், திரு. மோகன்ராமன் அவர்களுக்கும், திரு. கரு. பழனியப்பன் அவர்களுக்கும், திரு. ஞான ராஜசேகரன் அவர்களுக்கும், மற்றும் பட்டியலில் விடு பட்ட ஏனைய முக்கிய பிரமுகர்களுக்கும், நன்றி !
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று, புரட்சித்தளைவரின் புகழை பறை சாற்றிய எனதருமை மூத்த சகோதரர் பெரியவர் திரு. ஆழ்வார் திரு நகரி (தூத்துக்குடி மாவட்டம்) ராஜப்பசாமி என்கின்ற வெங்கடாச்சாரி, திரு. கலைவாணன், இறைவன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழு தலைவர் திரு. சைதை ராஜ்குமார், மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இத்திரியின் பதிவாளர்கள் திரு,. ஆர். லோகநாதன், திரு. தெனாலி ராஜன் மற்றும் மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திய இதர அன்பர்களுக்கும் நன்றி.
இன்றைய மாலைச்சுடர் தினசரியில் வெளியான செய்தி
http://i58.tinypic.com/qmyzv6.jpg
இன்றைய மாலை முரசு தினசரியில் வெளியான செய்தி
http://i58.tinypic.com/2cmtax4.jpg
இன்றைய மக்கள் குரல் தினசரியில் வெளியான செய்தி
http://i61.tinypic.com/v45tsj.jpg