Piravi payan
Printable View
Piravi payan
அப்படியெல்லாம் சொல்லி சோர்ந்து போகக் கூடாது- இரவும் பகலும் மாறி மாறி வருவது இயற்கை. இன்பமும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இணைந்திருப்பது இயல்பு. The night is darkest when the dawn is nearest.
உயிரற்று போனபின்னே
உன்பெயர் கூட உனதில்லை
இனமேது ஆனாலும் நீ
பிணமன்றி வேறில்லை
உடல் உறுதியாய் இருந்தும்
உயிரற்று கிடத்திட்டால்
உடல் ஊதி புழுத்திடும்
ஊர் தூற்ற நாரிடும்
உயிரற்ற உடல் கண்டும்
உன் மனமின்னும் மாறலியோ
உயிரில்லா பொருள்மீது
உன் மோகம்தான் தீரலியோ?
-
கிறுக்கன்
ம்ம்ம்....:(
இன்னல் இல்லா இதயம் இல்லை
இருள் இல்லா இரவும் இல்லை
ஊடல் இல்லா உறவும் இல்லை
மோதல் இல்லா மேகமும் இல்லை
உன்னை விடவும் நொந்தார் உண்டு
நினைத்து பார்த்து நிம்மதி நாடு.
-
கிறுக்கன்
ஆம், படியில்லா வீட்டு வாசலில்லை; நிழலில்லா உருவமில்லை;நிழலின் அருமை அறியத்தானோ வெயிலின் கொடுமை?
உன்னை நான் பார்த்ததில்லை
உன்னை நான் கேட்டதுமில்லை
உன்னை எனக்கு தெரியவும் தெரியாது
பின்பு எப்படி மயக்கினாய் என்னை
மண்டை புடைத்த பின்தான் தெரிந்தது
தன்னிலை மறந்து மயங்கினால் வரும்
விபரீதம் என்னவென்று....
:lol::clap:
இதயத்தின் துயர் துடைக்க
இறைவனை துதித்தேன்
உள்வலி துறக்க
வெளிவலி தந்தான் போலும்
உள்வலி மறைக்கும்
வெளிவலியும் இன்பமே....
Written in 2010 HUB Magazine --for backup
கருத்துடன் நின்று
காவல் புரிந்தவனே
போய் வருகிறேன்
--கதவு
மிதித்த போதும்
மிருதுவாய் சுமந்தவனே
போய் வருகிறேன்
--தரை
வெறித்த போதெல்லாம்
வெள்ளந்தியாய் சிரித்தவனே
போய் வருகிறேன்
--மேற்கூரை
இடைவெளி உணர்த்த
இடையில் நின்றவனே
போய் வருகிறேன்
--சுவர்
அழுக்குற வரும்போதெல்லாம்
அழகுற செய்தவனே
போய் வருகிறேன்
--குளியல் அறை
சிறிதுநேரம் இருந்தாலும்
சாந்தியைத் தந்தவனே
போய் வருகிறேன்
--பூஜை அறை
இருளை அகற்ற
இரவெல்லாம் விழித்தவனே
போய் வருகிறேன்
--மின்விளக்கு
அயர்ச்சியாய் வரும்போதெல்லாம்
அமைதி தந்தவனே
போய் வருகிறேன்
--படுக்கைஅறை
உன்னுடன் இருந்த நாட்களை
உதிரத்தில் சுமந்திருப்பேன்
விடைகொடு வாடகை வீடே...
அருமை!:clap:
உடல்வலி உன்னிடம்
உணர்தியது என்ன
இம்சை வலி உனை
இம்சிக்க அல்ல
இருக்கும் இன்னலை
உனக்கு உணர்த்த
இன்னல் பாராது
வலிக்கு மருந்திடல்
இன்னலை இரட்டிக்கும்
வலியை வாழ்வாக்கும்
உன் சுற்றம் தரும்
வலியும் இவ்வகையே!!!
-
கிறுக்கன்
பயமில்லா பகட்டில்லா பக்தி பெற்றிடும்
பரவசநிலை யெனும் முக்தி.
-
கிறுக்கன்
:yes:
இன்பம் துன்பம் இரண்டும் அடுத்தவர்
தினிப்பன்று அவரவர் நினைப்பே.
-
கிறுக்கன்
:exactly:
பரிட்சைக்கு பின் பாடம் புகட்டும்
பண்பட்ட ஆசிரியர் அனுபவம்.
-
கிறுக்கன்
ம்ம்ம்...
அமைதிக்கு நோபல் பரிசு
கிறுக்கனின் பார்வையில்
ஆராய்ந்து பார்த்தேன்
அதிர்ந்து போனேன்
இல்லாததை தெரிவிப்பதற்கோ
தெரியாததை தெளிவிப்பதற்கோ
புதியதை படைப்பதற்கோ
கொடுக்கும் விருது அமைதிக்கோ
அமைதி இல்லாமல் போனதோ
தெரியாமல் போனதோ
புதியதாய் ஆனதோ
இல்லை இன்றுதான் இப்படியோ
எந்த காலமாயினும்
இதுதான் நிலைமை
தொன்றுதொட்டு சமூகத்தில்
தொடரும் பயங்கரவாதம்
அன்று கொடுத்திருந்தால்
ஔவையாரும்
பின்பு கொடுத்திருந்தால்
புத்தரும் வாங்கியிருப்பர்
-
கிறுக்கன்
மிக சரியாக சொன்னீர்கள்!
என்ன கொடுமை
கடமை தவறிய
கொடுமை மறப்பரோ
காலம் கடந்த
தீர்ப்பை வெறுப்பரோ
சட்டத்தின் கடமை
கடுமையாயின் கலங்குவோரே
கடமை தவரின்
கலங்கடிப்பர்
சிறுபிழை செய்தாரை
வெறுக்கும் சமூகம்
பெரும்பிழை செய்தோரை
பொறுப்பதும் ஏனோ
விளங்குவதில்லை இவர்களின்
விளக்கங்கள்
சட்டங்கள் சமமாகுமோ
சாதுர்யமாய் சதிராடுவோரிடம்
-
கிறுக்கன்
ஹூம்ம்ம்...
அசுரன் வீழ்ந்த விழாவை
அனுசரிக்கும் மக்களை
அசுரராய் மாற்றும் மதுவை
அரசே முடுக்கிவிடல் முறையோ!!!
-
கிறுக்கன்
முறையேயில்லை! முறையிடுவது யாரிடமோ?
இடம்கொடுத்த என்னை
இம்சை செய்கிறாயே
என்னை முடக்க நினைத்தால்
உன்னை அடக்கிடுவேன்
என் இனிய வலியே.....
-
கிறுக்கன்
ஆஹா! :-d
திருமணநாள்!!!!!
புதிரான பயணத்தின்
புனித ஆரம்பம்
வாழ்க்கை சிறப்பாவதும்
இல்லை சிறையாவதும்
இருமன கலவையின்
வேதிப் பயனே
இல்லரம் இனிக்க
மந்திரம் ஏதுமில்லை
அன்பைத் தந்திடு
ஆசையைப் பகிர்ந்திடு
இடைவெளி புரிந்திடு
ஈருயிர் கலந்திடு
உழைப்பைத் தட்டிகொடு
ஊடலில் விட்டுகொடு
எல்லை உணர்ந்திடு
ஏக்கம் தவிர்த்திடு
ஐக்கம் வளர்த்திடு
ஒடுக்கம் களைந்திடு
ஓருயிராய் மிளிர்ந்திடு....
-
கிறுக்கன்
அருமையான ஆத்திச்சூடி!
:clap: beautiful....for all ages
//hello nga K....nalama?
PP nga nalla irukeengala ?? //
Vangaka romba naal achu namma pakkam vanthu....udal manam soukiyama....
புரிந்த பிரியங்கள் பிரிந்திடின் புரிதலை
புரிய வைக்கும் பிரிவு.
-
கிறுக்கன்
ஆமாம்!
# 511 so true nga kk:-D
Naan nalam hope all is well with u too :-D
சலனமில்லா உடல் சவம் எனில்
மனமோ சிவ மாகும்.
-
கிறுக்கன்
mmm...
// hello nga K & PP nga.....Puthu varuda vaazthukal :-) //
iyarkai pathi oru rendu vari podunga onga style la K ;-)
என்ன நடக்குமோ என்ற பயத்தினால்
எள்ளளவும் பலன் இல்லை.
-
கிறுக்கன்
தன்னை தகர்க்கும் செயற்கைக்கும் கருப்பொருள்
தந்து உதவும் இயற்க்கை.
-
கிறுக்கன்
கனவை கருக வைத்து குடும்பத்தை
கலங்க வைக்கும் கருச்சிதைவு.
-
கிறுக்கன்