wow!!! nice one venki... vaanai alapom is really a nice one.. :clap:
Printable View
wow!!! nice one venki... vaanai alapom is really a nice one.. :clap:
ABILASH TOO PARTICIPATED IN THAT SHOW.TO KNOW MORE ABOUT MY SUCH EXPERIENCES,VISIT:
www.forumhub.mayyam.com/hub/viewtopic.php?t=7168
என் நாடு இந்தியா.
முக்கடல்கள் படை சூழ
வீற்றிருந்தாள் ஒரு நங்கை.
இமயமலை கிரீடமாயேற்றி
ஆட்சிபுரிந்தாள் இம்மங்கை.
அவள் பெயர் இந்தியா!
அவள் வாழும் இடம் இந்தியா!
இமயம் முதல் குமரிவரை
பரந்திருந்தது அவளது சிவப்பழகு மேனி.
செலவ வளத்தில் செழித்திருந்தாள்
பண்பாட்டில் வளர்ந்திருந்தாள்!
அவளுடைய அமைச்சர்களின் புகழை
சொல்லாமலிருக்க முடிய்முமோ?
வீரம் நிறைந்தவன் பஞ்சாப்
அறிவு நிறைந்தவன் வங்காளம்
அழகில் சிறந்தவன் காஷ்மீர்
சரித்திரம் படைப்போன் இராஜஸ்தான்
படிப்புதேறியவன் கேரளம்
இரும்பு உள்ளம்படைத்தவன் பீஹார்
சிலை வடிப்பவர் ஒரிசா
பால்வடியும் பிள்ளை ஹரியானா
கடமை தவறாதோன் தமிழ்நாடு!
நதிகளவர் சகோதரியர்!
அவள் செல்வவளம் கண்டு
அவளை ஆட்சி செய்யத் துணிந்ததோர்
அயல்நாட்டுப்படி.
வாளே ஆயுதமாய்க்கொண்டோர்க்கு
தோட்டா என்றதும் புரியவிலை!
திகைய்த்தனர்,திடுக்கிட்டனர்
திக்குமுக்கு தெரியாமல் தவித்தனர்.
வழியேதும் தெரியாமல்
விழித்திருந்த அவளுக்கு
பிறந்தானோர் மகன்
கதருடை சாத்திக்கொண்ட
அச்சீமான் காந்தி மகாத்மா!
என்செய்தான் அம்மாவீரன்
கத்தியெடுத்தானா?
தோட்ட நம்பினானா?
குண்டேதும் வைத்தானா?
அவன் நம்பியது அகிம்சையை,
அவனது மந்திரம் ஹேராம்!
இதுவரை யாரும்
கையாளா ஆயுதத்தால்
வந்தவர் வணங்க,வாழ்த்த
தியாக உணர்வை
தோற்கடிக்க இயலாது
விடுதலை வழங்கினான் பரங்கியன்!
இன்றோ...
நாமென்ன செய்துகொண்டிருக்கிறோம்?
விடுதலை நாளை விடுதலை நாளாகி
நட்ச்சத்திரப்பேடிகல் காணுகிறோம்!
நாட்டுக்காக படுபட்ட சிலருக்கு
சிலை வெண்டாம்,பட்டம் வேண்டாம்;
சிந்துகின்ற இருதுளி கண்ணீரால்
பல்கோடி புண்ணியம் கிட்டுமே!
"என் நாடு இந்தியா"
என்றுரையாமல்
"நம் நாடு இந்தியா"
என்ரு மனமோங்கி
இளைஞர் சரித்திரம் படைப்போம்!
- RUDHRA(mo.abilash)
kavidhaiyaga, migavum nanraga irukinradhu .... :clap:
venki :thumbsup:
சிபி,பாதசாரி எப்படி இருந்தது?
நகரம்.
தன் கட்டிடங்களைப் போல
கல்லாகிப் போன மனங்களுடன்
நரபலி மனிதர்கள் வாழும்
கான்க்ரீட் கானகம்.
வெளியே வாசனை பெர்பியூமும்
உள்ளே கழிவறைகளும் கொண்ட
கோட்-சூட் அணிந்த நரிகளாய்
யுவன்கள் யுவதிகள்.
கண்சிமிட்டும் விளக்குகளும்
குருடாகிப்போன குடிசைகளும்
ஒன்றாக காணக்கிடைக்கும்
உப்புமா உலகம்.
கண்களை அருவியாக்கி
மனங்களில் மணல் லாரி ஓட்டும்
குப்பைத்தொட்டியில் பூத்த பூவாய்
சிங்கார நரகம்.
முரண்களுக்கே முரணான
முடிச்சுகளில் முடங்கிப்போன
கம்பியூட்டர் குழந்தைகளுடன் எந்நேரமும்
தூக்கத்தில் நடக்கும் நகரமாந்தர்கள்.
:)
கிராமம்.
கோழிகள் குத்துச்சண்டை போட்டாலும்
மனங்களால் கைகொடுத்துக்கொள்ளும்
நட்பெனும் வியாதி பீடித்த
நாட்டுப்புற நாகரிகம்.
காற்றின் பாடல் கேட்டு
நாடியமாடும் வயல்களும்
தலையாட்டும் தென்னங்கீற்றுகளுடன்
சங்கீத சொர்க்ககிராமம்.
ஐயனாரே காவல்காக்கும்
நிறங்களால் நிரம்பி வழியும்
நரைக்காத கருமேகங்கள் சூழ்ந்து
விளையாடும் ஆட்டுமந்தை உலகம்.
உழுது முடித்த உணர்வுகளோடும்
நீர்பாயும் நெஞ்சங்களோடும்
அறுவடைக்கென காத்திருக்கும்
சிருங்கார சன்னியாசம்.
அம்பாரிகளில் வரும் யானைகளில்
ஒய்யார அங்குசமாய் கட்டுப்பாடும்
சீர்த்த பண்பாடு ஆலம் விழுதென வளர்ந்த
ஏழை சாம்ராஜ்யம்.
well written venki :clap:
ella kavidhaiyum romba nalla irundhudhu Venki :D :clap: :clap: :clap:
keep ur good work :thumbsup:
FAREWELL DAY
பிரிவு உபச்சாரம்.
நமக்கு மட்டும்
இருமுறை இறக்க வேண்டும்
என விதித்திருக்கிறதா?
கண்ணீரை எல்லாம் சிந்தி
விழியை வற்றிவிடாதே
வருங்காலத்திற்கு வேண்டும்
கொஞ்சம் மிச்சம் வை.
புல்லாங்குழல் வந்த காற்று
கொஞ்ச நேரம் தான் உள்ளிருக்கும்
ஆனால் அதன் இசையோ
மனத்தில் ரொம்ப காலம் குடியிருக்கும்
நம் நட்பைப் போல.
யாரோ ஒருவர்
இன்றும் absent போலிருக்கிறதே-
சந்தோஷம்!
என்ன எழுதி
என்ன பிரயோஜனம்?
பழசை எல்லாம் நினைத்து ஏங்கி
கண்ணீரால நனைத்து எல்லாவற்றையும்
அழிக்கத்தான் போகிறேனோ?
நானும் இருப்பேன்
நீயும் இருப்பாய்
நாம் தான் இருக்கமாட்டோம்
ஷாஜகான் காதலுகாக
தாஜ்மஹால் ஒன்று கட்டினான்.
நீய்ம் நானும்
சைக்கிளிலிருந்து விழுந்து
நட்புக்கும் பிரிவுக்கும்
தோல்களில் சிறிய தழும்புகளாய்
தாஜ்மஹால்கள் கட்டிக்கொண்டோம்.
எனக்கு அம்னீஷியா வரக்கூடாதா?
மேகங்களுகெல்லாம்
வயிற்றெரிச்சலாம்-
நம் விழிகளின் மேல்.
கூடுப்புழுக்கள் பட்டாம்பூச்சி ஆவதைப் பார்த்திருக்கிறென்
பட்டாம்பூச்சிகள் கூட்டுப்புழு ஆவதை இப்போதுதான் பார்க்கிறேன்.
நிழற்படங்களில் மட்டும் தான்
இனி நாம் சிரிகமுடியுமோ?
இது
வெறும் பிரிவு அல்ல
மரணம் என்ற நாடகத்திற்கான.....
ஒத்திகை.
தினமும் நான்
நட்சத்திரங்களை எண்ணிப்பார்ப்பதுண்டு -
நீ இருந்தவரை அது என் மகிழ்ச்சியின் அளவு,
நீ பிரிந்த பின்னோ
அது என் துயரத்தின் அளவு.
என் இதயம்
மௌனம் அனுஷ்டிப்பதற்குள்
வா நண்பா.....
கல்லறையிலாவது காத்திரு
பக்கத்தில் ஒரு சீட்டு போட்டு வை
வந்துவிடுகிறேன் சீக்கிரமாய்.
சுனாமி,ஹிரோஷிமா
பூஜ்,ஒரிசா வெள்ளம்,
9/11,உலக யுத்தம்
எல்லாவற்றையும் தொற்கடிக்குமளவு
இன்றொரு கணம் ஓசையில்லாமல்
கடந்துவிட்டது.
எந்த மடையன் காதலுக்கென
இதயத்தில் அம்பு குத்தியது?
அது நட்பின் சின்னமாக இருக்கக்கூடும்.
என்ன வலி தெரியுமா?
_______________________