Dear all chennai people,i join your prayer to the God of nature to show some considerations to us.
Printable View
Dear all chennai people,i join your prayer to the God of nature to show some considerations to us.
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.
இயற்கையை அழிக்க நினைத்தால் நாம் அழிந்து விடுவோம். இதுவே இந்த மழை நமக்கு கற்று தந்த
பாடம்
டியர் சென்னை நண்பர்கள்
இந்த இக்கட்டான சூழலில் உங்கள் அனைவருக்கும் ஆண்டவன் நல்ல மனதையும்
தைரியத்தையும் , உடல் நலத்தையும்
உதவும் உள்ளதையும் தர பிரார்த்தனை செய்கிறேன்
இறைவன் அருளாலும் மனிதநேயமிக்கவர்களின் நல்வாழ்த்துக்களாலும் சென்னையில் மழையின் வேகம் குறையத் தொடங்கி இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்லத் திரும்புகிறது. என்றாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எத்தனை நாட்களாகுமோ தெரியவில்லை. அவர்கள் அனைவரும் இந்த இடரிலிருந்து விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வரை நம்முடைய பிரார்த்தனைகள் தொடரும்.
எங்கள் திருவல்லிக்கேணி பகுதியைப் பொறுத்த மட்டில் பார்த்தசாாரதி பெருமாள், மஹான் ராகவேந்திரர், மற்றும் அனைத்து மதக் கடவுள்களின் ஆசியாலும் பாதிப்பு அதிகமின்றி நலமாயுள்ளோம். அக்கறையோடும் கவலையோடும் நலம் விசாரித்த உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. கைப்பேசி மூலம் விடாமல் முயற்சி செய்து இணைப்புக் கிடைத்து விசாரித்த நண்பர் வினோத் அவர்களுக்கும் உளமார்ந்த நன்றி.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...e2&oe=56D87985
தங்கப் பதக்கம் - கதை வசனம் .. லாங் பிளே இசைத்தட்டின் மேலுறை
From Facebook
இதோ ஒரு சிறு மலரும் நினைவு...
1955ம் வருடம் டிசம்பர் மாதம் காமராஜ் முதல்வராய் இருந்த காலம் தென் மாவட்டங்களில் திடீரென்று புயலும் பேய் மழையும் தாக்கின. வானம் பார்த்த சீமை எனப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் பலர் வீடிழந்தனர். தங்கள் உடமைகளை எல்லாம் இழந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேவையில் துடித்தனர்.
அப்போது முதல்வர் காமராஜ் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஆறுதல் கூறவும் வந்தார். ஒரு கிராமத்தை முற்றிலும் நீர் சூழ்ந்து கொண்டது, வெளி தொடர்பே அற்றுப்போனது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் பட்டினியால் தவித்தனர்.
அதைக் கேள்விபட்ட காமராஜ், அவர்களுக்கு நிவாரணம் வழங்க அதிகாரிகளோடு புறப்பட்டார். ஆனால் ஊசாலிடிக் கொண்டிருந்த பாலமும் உடைந்து போனது. அதிகாரிகள் காமரஜிடம் “அய்யா இதற்கு மேல் கார் செல்லாது, அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை நாங்கள் சில பேர் கவனித்துக் கொள்கிறோம். நீங்கள் வேறு இடத்துக்கு செல்லுங்கள்” என்றார்கள். ஆனால் காமராஜ் “அதிகாரிகளே எல்லாத்தையும் கவனிக்கச் சொல்லி கோட்டையிலிருந்தே நான் உத்தரவு போடலாமே. மக்கள் கஷ்டத்தை நான் நேரடியாப் பாக்கணும். தேவையானா நிவாரணத்துக்கு உடனே ஏற்பாடு செய்யனும். அவங்களுக்கு ஆறுதல் சொல்லணும். அதனால்தான் நானே வந்தேன்” என்று சொலியபடியே வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு தண்ணீரில் இறங்கிவிட்டார். சாரக் கயிரை பிடித்துக் கொண்டு மார்பளவு நீரில் கால்வாயைக் கடந்து மறு கரைக்கு சென்றார்.
முதல்வரே தணணீரில் இறங்கி விட்டதால், அதிகாரிகளும் வேறு வழியின்றி அவரைப் பின் தொடர வேண்டியதாயிற்று. மறுநாளும் காமராஜ் திட்டமிட்டபடியே செயல்பட்டுக் கொண்டிருந்தார். பெருந்தலைவரின் இந்த சேவையைப் பாராட்டி பேரறிஞர் அண்ணா (கவனிக்கவும்..... அன்று அறிஞர் அண்ணா எதிர் கட்சி)
திராவிட நாடு இதழில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். “சேரிகள் பாட்டாளிகளின் குடிசைக்கள், உழவர் உழன்று கிடக்கும் குச்சுகள். இவை யாவும் நாசமாகிவிட்டன. வீடில்லை, வயலில்லை, உள்ளத்தில் திகைப்பின்றி வேறில்லை.
ஆனால் தம்பி, நமது முதலமைச்சர் காமராசர் அந்த மக்கள் மத்தியில் இருக்கிறார். பெருநாசத்ததுக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக் ஈடுபட்டிருக்கிறார் என்பதை என்னும் போது இதோ எமக்கு ஆறுதல் அளிக்க எமது முதலமைச்சர் வந்துள்ளார். எமது கண்ணீரை காணுகிறார். தமது கண்ணீரை சிந்துகிறார். ஆறுதலை அள்ளித் தருகிறார். கோட்டையிலே அமர்ந்து கொண்டு உத்தரவுகள் போடும் முதலமைச்சர் அல்ல இவர். மக்களை நேரில் சந்திக்கும் தலைவர் என்று மக்கள் வாழ்த்துகின்றனர். தம்பி! சொல்லித்தானே ஆக வேண்டும் முதலமைச்சர் காமராசரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம்.”
மாணிக்கங்களையும்!!!!!!! முத்துக்களையும்!!!!!!! தூக்கி எறிந்துவிட்டு.........
மற்றவர்களை ஆட்சி செய்ய சொன்னால் இப்படித்தான் இருக்கும்........????
இது அரசியல் பதிவல்ல. ஆக்ரோசப்பதிவு...
இன்னல்படும் மக்களின் பதிவு...
ஈகை இல்லா கல் நெஞ்சங்களை ஆளவிட்ட நம் தமிழ் உணர்வின் பதிவிது.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...a3fcdcbf25a188
First time on internet. Enga Oor Raja original Song Book Cover. The unique design made waves at the time of release of the film. The sliding of the wrapper on front produced two images and the book was a craze then.
Sharing for the benefit of new generation to know how much pains did a producer and the unit of the film took to take the film to the masses.
சிவாஜி ரசிகன்
பட வரிசை தொடர்ச்சி
http://i1065.photobucket.com/albums/...pssgvbybhq.jpg