Unavu Illamal Pasiyal Palanaal Irundadhundu. SIVAJI Unarvu Illamal Oru Nodi Irundhathillai....
In 9th Memorial Day - 21-07-2010
- Avarai Swasikkum
Printable View
Unavu Illamal Pasiyal Palanaal Irundadhundu. SIVAJI Unarvu Illamal Oru Nodi Irundhathillai....
In 9th Memorial Day - 21-07-2010
- Avarai Swasikkum
Congratulations Raghavendra sir. You deserve it.Quote:
Originally Posted by Murali Srinivas
rangan : தலைவரே, நீங்க சாகா வரம் பெற்ற கலைஞனாச்சே, அதனால எப்பவும் எங்களோடதான் இருக்கீங்கன்னு நம்பறேன். ஆனா, அதையும் மீறீ உங்க நினைவு நாளான இன்னைக்கு உங்கள நெனச்சாலே துக்கம் தொண்டைய அடைக்குது.
Barrister Rajinikath : Silly. ஏண்டா feel பன்ற, படவா. அங்க என் படங்கள் ஒழுங்கா release ஆகலைன்னா சொல்லு, கண்ணனை விட்டு bail move பன்ன சொல்றேன். எத்தன வருஷம் ஆனா என்னடா? I will always be there with you.
Chinnadurai : Correct. இவங்களப் போல நல்லவங்களோட அன்பு இருந்தா, 100 வருஷம் என்ன, 1000 வருஷம் என்ன, அதுக்கும் மேலேயும் நான் உயிரோட இருப்பேன். இந்த வாரம் Shanthi theatre வாங்க, சும்மா ஜமாய்ச்சுடலாம்.
Gopal : Oh! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? நான் இன்னைக்குத் தான் Singapore ல இருந்து Chennai க்கு கப்பல்ல வந்து இறங்கினேன். பல வருஷங்களுக்குப் பிறகு என்னோட Shanthi theatre க்கு வரப்போறேன். எல்லாரும் அவசியம் வந்துடுங்க. வரும்போது மறக்காம எனக்கு பிடிச்ச பால்-feni கொண்டு வாங்க.
Rangan : கவலைப் படாதீங்க தலைவா, சும்மா ஜமாய்ச்சுடலாம்.
Dear Ragavendar sir,
Congratulation!!!!!
நடிகர் திலகமே,
என்றென்றும் உனை நினைத்திருப்பேன்
என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன்
அன்று நான் -
இறந்திருப்பேன்
__
Dear Harish,
me too.........
மோகன்,கலக்கிடீங்க. புதிய பறவையில் சந்திப்போம்.
சாந்தி இப்போதே களை கட்ட ஆரம்பித்து விட்டது. புதிய பறவை போஸ்டர்கள் ஓட்டப்பட்டுவிட்டன. நினைவு நாளை முன்னிட்டு ஒட்டப்பட்ட போஸ்டர்களுடன் இவையும் சேர்ந்து கொள்ள பலரும் ஆர்வமாக தங்கள் செல்போனில் அதை பதிந்து கொண்டு போகிறார்கள். இவை அனைத்தும் அடங்கிய புகைப்பட பதிவுகளை இங்கே அனைவரும் கண்டு களித்திடும் வகையில் சுவாமி வழங்க இருக்கிறார்.
அன்புடன்
டியர் ராதாகிருஷ்ணன்,
தங்களின் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி. எல்லாம் அவர் செயல்.
டியர் மோகன்,
தங்களுடைய interaction with NT மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. பாராட்டுக்கள். தங்கள் பாராட்டுக்களுக்கு என் நன்றிகள்.
இன்றைய உணர்வு பூர்வமான நிகழ்ச்சியைப் பற்றி விரைவில் பம்மலார் எழுதுவார். நானும் என் பங்கிற்கு என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எழுத முயற்சிக்கிறேன்.
இடையில் புதிய பறவை பட வெளியீடு நம்மை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்த உள்ளது. சுவரொட்டிகள் மிகவும் நன்றாக உள்ளன. புதிய வடிவமைப்பில் அசத்துகின்றன. சென்னை சாந்தியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளின் படங்களைக் கீழ்க்காணும் சுட்டியில் காணுங்கள்
http://sivajimoviesinchennai2010.blogspot.com/
அன்புடன்
ராகவேந்திரன்
நடிகர் திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை நகரில் ஒட்டப் பட்டிருந்த சுவரொட்டிகளின் படங்கள் கீழ்க்காணும் சுட்டியில் காண்க
http://sivajiremembranceday.blogspot.com/
அன்புடன்
ராகவேந்திரன்
இன்று இரவு 11 மணி முதல் 12 வரை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாடல்கள்
முத்துக்களோ கண்கள் - நெஞ்சிருக்கும் வரை
மன்னிக்க வேண்டுகிறேன் - இரு மலர்கள்
அமைதியான நதியினிலே - ஆண்டவன் கட்டளை
நான் பேச நினைப்பதெல்லாம் - பாலும் பழமும்
கொடி அசைந்ததும் - பார்த்தால் பசி தீரும்
நான் என்ன சொல்லி விட்டேன் - பலே பாண்டியா
பாவாடை தாவணியில் - நிச்சய தாம்பூலம்
நல்ல இடம் நீ வந்த இடம் - கலாட்டா கல்யாணம்
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா - குலமகள் ராதை
தாமரை பூ குளத்திலே - முரடன் முத்து
சீவி முடித்து சிங்காரித்து - படிக்காத மேதை
மாதவி பொன் மயிலாள் - இரு மலர்கள்
புது பெண்ணின் மனதை தொட்டு போறவரே - பராசக்தி
அருமையாக தொகுத்து வழங்கிய இசையருவி சானலுக்கு நன்றிகள் பல.
அன்புடன்
இன்றைய விழா இனிதே நடந்தது. கடந்த இரண்டு வருடங்களாக ஜூலை 21 அன்று விழாவாக இல்லாமல் நாடகம் மற்றும் சிலை திறப்பு நிகழ்வாக இருந்தது. இம்முறை இதை நினைவு நாள் நிகழ்ச்சியாக முன்னின்று நடத்தியவர்கள் துஷ்யந்த் மன்றத்தினர். விழா மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. பேசியவர்கள் அனைவரும் உணர்வு பூர்வமாக பேசினார்கள். நமது ராகவேந்தர் சாரும் செல்வி கிரிஜாவும் நாஞ்சில் நகரத்தை சேர்ந்த ஜெகன் அவர்களும் விருது பெற்றனர். இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பெப்ஸி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் அவர்களும், இயக்குனர்கள் சங்க தலைவர் இயக்குனர் ஆர். கே.செல்வமணி அவர்களும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் சிவசக்தி பாண்டியன் அவர்களும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு பொன்னப்ப நாடார் அவர்களின் மகனும் ஜனதா தள் கட்சியில் நடிகர் திலகத்துடன் இணைந்து பணியாற்றிய பொன்.விஜயராகவனும் கலந்து கொண்டனர். இவர்களை தவிர மேடையிலே முன்னாள் வணிகவரி துறை அதிகாரியும் நடிகர் திலகத்துடன் பல வருடங்கள் நெருங்கி பழகியவருமான அருணன், திருச்சியை சேர்ந்த சந்திரசேகர், ராம்குமார், சிவாஜி மன்ற தலைவர் பூமிநாதன் ஆகியோரும் இருந்தனர்.
முதலில் நடிகர் திலகத்தின் உருவப்படம் மேடையில் திறந்து வைக்கப்பட்டது. பொன்.விஜயராகவன் அவர்கள் திறந்து வைக்க மேடையில் இருந்த அனைவரும் குத்து விளக்கின் ஒரொரு திரியை ஏற்றினார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் சால்வை அணிவிக்கும் நிகழ்ச்சி முடிந்தவுடன் விருதுகள் வழங்கப்பட்டன. முதலில் செல்வி கிரிஜா அவர்களுக்கும், அடுத்ததாக 38 முறை ரத்த தானம் செய்த நாகர் கோவிலை சேர்ந்த ஜெகனுக்கும் பிறகு நமது ராகவேந்தர் சாருக்கும் வழங்கப்பட்டது. இதன் பிறகு மேடையில் இருந்தவர்கள் பேச அழைக்கப்பட்டனர்.
(தொடரும்)
அன்புடன்