புன்னகை முகத்தின் வளைகோடு
நேராக்கும் பல புரிதல் சிக்கல்
எங்கும் வளம் வரும் குறியீடு
எளிதாய் இலகுவாகும் சவால்
Printable View
புன்னகை முகத்தின் வளைகோடு
நேராக்கும் பல புரிதல் சிக்கல்
எங்கும் வளம் வரும் குறியீடு
எளிதாய் இலகுவாகும் சவால்
சவாலாய்த் தானிருக்கிறது..
வெந்தயம் நீர்மோர் வெறும் வயிற்றில் குடித்தல்
நன்னா வெங்காயத்தை
உப்புப் போட்டுபிசிறி தயிர் விட்டுடு
பின் அரை மணி நேரம் கழிச்சு சாப்பிடு சரியாகும்..
இள நீர் குடிக்கலாம்..
அடிக்கடி வாட்டர் குடி..ஐஸ் வாட்டர் இல்லை..
அப்ப தான் வேர்வைல போனது நேராகும்..
அப்புற்ம்
நல்லக்ரீம் முகத்துக்குப் போட்டுக்கோ
வீகோ ஓகே ஏன்னா அது ஹெர்பல்..
ரொம்ப முக்கியம்
குளிர்ந்த நீரில் அதாவது கோல்ட் வாட்டர்ல
முகத்த ரின்ஸ் பண்ணு.. அடிக்கடி
ம்ம் நிறைய அட்வைஸ்
அம்மா பாட்டி சொன்னது
உபயோகப் படுத்தினாலும்
உடல் எரியத்தான் செய்கிறது..
ஒரே ஒரு கேள்வி..
எப்போ ஓ நீ போவாய் வெயிலே!
வெயிலே நிழலின் அருமை கண்டேன்
இருளே ஒளியின் பெருமை அறிந்தேன்
வலியே சுகத்தின் பொருள் உணர்ந்தேன்
ஒன்றால் ஒன்றின் மகிமை கூடியதே
கூடியதே சந்தோஷம் கொஞ்ச மில்லை
...குட்டியிதழ்ச் சிரிப்பினிலே கொள்ளை கொண்டு
தேடியதே சில்வண்டுக் கண்கள் எல்லாம்
..திகைத்தபடி அன்னையினை எங்கே என்று
மூடியதே வாயங்கு சிரிப்பை விட்டு
..முணுக்கென்றே கண்ணீரும் எட்டிப் பார்க்க
நாடிவந்தாள் மருமகளும் பேரன் வாங்கி
..நல்லமுது தான் தரவும் சிரிப்பு அங்கே..
அங்கே எதுவும் தப்புவதில்லை
ஆண்டவன் தீர்ப்பில் ஈரமில்லை
தப்புக்கள் எலாம் தண்டிக்கப்படும்
தலைமுறை தாண்டியும் மறவாது
முற்பகல் செய்திட்ட பாவங்கள்
பொழுது சாயுமுன் கழிக்கப்படும்
நின்று கொல்வதில்லை என்பதை
நிச்சயமாய் காணலாம் இக்காலத்தில்
இக்காலத்தில் எல்லாமே
சுலபம்
அதனாலேயே சிறிசுகளுக்கு
பெரியவர்களின் மதிப்பு தெரிவதில்லை
என பாட்டியிடம் இருந்து
எனக்கு வந்தது இ-மெயில்
இ-மெயில் பரிமாற்றம்
தொடர்பு நுட்ப மாற்றம்
மனித வாழ்வில் ஏற்றம்
பழகாதிருப்பது குற்றம்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
அந்தக்காலம்..
இன்று
குற்றம் பார்த்தாலும்
பார்க்காவிட்டாலும்
சுற்றம் இருக்கிறது
சற்றுத் தள்ளி
தனித் தனித் தீவுகளில்
தீவுகளில் தனிக்காட்டு ராணிகள்
மழலை சிந்தும் முத்துக்கள்
அள்ளுவதோ பல தாதிகள்
தாம்பத்யத்தில் இடைவெளிகள்
இதிலென்ன திறமைகள்
இவைதானா சாதனைகள்
பதித்ததெங்கே தடங்கள்
வாழாத பாலைவனங்கள்
பாலை வனங்கள் வறண்டுவிட
..பாழும் வெயிலில் சுருண்டுவிட
சோலை வனமாய் நீருற்றாய்
,..சொர்க்கம் போலே வந்தாய்நீ
காலைக் கதிரோன் வந்ததிலே
..களிப்புக் கொண்ட மலர்கள்போல்
வேலை செய்யும் நெஞ்சமும்தான்..
..விம்மும் மகிழ்வில் நித்தமும்தான்..